Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
3 posters
Page 1 of 1
மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
ஹட்டன், பதுளை தினகரன் விசேட நிருபர்கள்
மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் கிaஸ் மனிதனின் நடமாட்டம் காணப்படுவதாக தகவல்கள் பரவியுள்ளதனால் பொதுமக்கள் பீதியும் பரபரப்புமடைந்துள்ளனர்.
அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டதாக கூறப்படும் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தையடுத்து அப்பகுதியெங்கும் மக்கள் பதற்றமடைந்துள்ளதுடன், இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவுள்ள கிaஸ் மனிதர்களை மடக்கிப் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில் அப்புத்தளைப் பகுதியைச் சேர்ந்த தம்பேதன்னை பெருந்தோட்டத்தில் நடமாடிய இனம் தெரியாத நான்கு இளைஞர்களை, தோட்ட இளைஞர்கள் நையப்புடைத்து, அவர்களை 9.8.2011 அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் நடமாடுவதாகக் கிடைத்த தகவலினடிப்படையில் தோட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி, இனம் தெரியாத நான்கு இளைஞர்களைப் பிடித்து, நையப் புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக் கப்பட்ட நான்கு இளைஞர்கள் தீவிர புலன் விசாரணைகளு க்குட்படுத்தப்பட்ட போது, அவ் இளைஞர்கள் காலி பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், அப்புத்தளைப் பகுதியின் லிப்டன் சுற்று வட்டத்தை பார்வையிடுவதற்காகவே, வந்தவர்களென்றும் தெரிய வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.பிரியங்கர குமார மேற்கொண்டுள்ளார்.
அப்புத்தளை, பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை போன்ற பகுதிகளில் கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் உலாவுவதாகக் கிடைத்து வரும் தகவல்களையடுத்து, அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்துடனும் பீதியுடனும் காணப்பட்டு வருகின்றனர். இதனால் மேற்குறிப்பிட்ட இடங்களில் தோட்டங்கள் மற்றும் கிராமங்களின் மக்கள் வெளியில் நடமாடாமல் வீடுகளுக்குள்ளே தஞ்சமடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.
இதனால் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.பசறைப் பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டத்தில் மர்ம மனிதர்கள் உலாவி வருவதாக, தொழிலாளர்கள் பசறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, மர்மமனிதனின் தாக்குதலால் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று பத்தனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் நேற்று முன்தினம் (08.08.11) பகல் 12.30 மணியளவில் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 05 இலக்க மலையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த திலகவதி (வயது 42) என்ற பெண்ணே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படு வதாவது, மேற்படி பெண் கொழுந்து பறித்துக் கொண்டு இருக்கும் போது தனது கொழுந்து பையினை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த மர்மமனிதன் இப்பெண்ணின் தலையில் உள்ள துணியினை இழுத்துள்ளான் பெண் கூச்சலிட கையிலிருந்த ஏதோ ஒரு திரவத்தினை முகத்தில் தெளித்து ஓடியுள்ளான். பின் மயக்கமுற்ற நிலையில் பெண் கொட்டகலை மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் மேற்படி பெண்ணின் உடம்பில் காயங்களோ, திரவம் தெளித்ததற்கான தடயங்களோ கிடையாது என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வெலிஓயா பிரதேசத்திலிருந்து தனது பெரியம்மா வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் மர்மமனிதன் என எண்ணி தாக்கப்பட்டு வட்டவலை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டு வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தினால் மலையகத்தில் உள்ள பல தோட்டங்களில் பதற்ற நிலை நிலவிவருவதுடன், தோட்டத்துறையும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது.
ஹட்டன், பதுளை தினகரன் விசேட நிருபர்கள்
மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் கிaஸ் மனிதனின் நடமாட்டம் காணப்படுவதாக தகவல்கள் பரவியுள்ளதனால் பொதுமக்கள் பீதியும் பரபரப்புமடைந்துள்ளனர்.
அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டதாக கூறப்படும் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தையடுத்து அப்பகுதியெங்கும் மக்கள் பதற்றமடைந்துள்ளதுடன், இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவுள்ள கிaஸ் மனிதர்களை மடக்கிப் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில் அப்புத்தளைப் பகுதியைச் சேர்ந்த தம்பேதன்னை பெருந்தோட்டத்தில் நடமாடிய இனம் தெரியாத நான்கு இளைஞர்களை, தோட்ட இளைஞர்கள் நையப்புடைத்து, அவர்களை 9.8.2011 அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் நடமாடுவதாகக் கிடைத்த தகவலினடிப்படையில் தோட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி, இனம் தெரியாத நான்கு இளைஞர்களைப் பிடித்து, நையப் புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக் கப்பட்ட நான்கு இளைஞர்கள் தீவிர புலன் விசாரணைகளு க்குட்படுத்தப்பட்ட போது, அவ் இளைஞர்கள் காலி பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், அப்புத்தளைப் பகுதியின் லிப்டன் சுற்று வட்டத்தை பார்வையிடுவதற்காகவே, வந்தவர்களென்றும் தெரிய வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.பிரியங்கர குமார மேற்கொண்டுள்ளார்.
அப்புத்தளை, பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை போன்ற பகுதிகளில் கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் உலாவுவதாகக் கிடைத்து வரும் தகவல்களையடுத்து, அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்துடனும் பீதியுடனும் காணப்பட்டு வருகின்றனர். இதனால் மேற்குறிப்பிட்ட இடங்களில் தோட்டங்கள் மற்றும் கிராமங்களின் மக்கள் வெளியில் நடமாடாமல் வீடுகளுக்குள்ளே தஞ்சமடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.
இதனால் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.பசறைப் பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டத்தில் மர்ம மனிதர்கள் உலாவி வருவதாக, தொழிலாளர்கள் பசறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, மர்மமனிதனின் தாக்குதலால் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று பத்தனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் நேற்று முன்தினம் (08.08.11) பகல் 12.30 மணியளவில் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 05 இலக்க மலையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த திலகவதி (வயது 42) என்ற பெண்ணே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படு வதாவது, மேற்படி பெண் கொழுந்து பறித்துக் கொண்டு இருக்கும் போது தனது கொழுந்து பையினை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த மர்மமனிதன் இப்பெண்ணின் தலையில் உள்ள துணியினை இழுத்துள்ளான் பெண் கூச்சலிட கையிலிருந்த ஏதோ ஒரு திரவத்தினை முகத்தில் தெளித்து ஓடியுள்ளான். பின் மயக்கமுற்ற நிலையில் பெண் கொட்டகலை மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் மேற்படி பெண்ணின் உடம்பில் காயங்களோ, திரவம் தெளித்ததற்கான தடயங்களோ கிடையாது என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வெலிஓயா பிரதேசத்திலிருந்து தனது பெரியம்மா வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் மர்மமனிதன் என எண்ணி தாக்கப்பட்டு வட்டவலை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டு வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தினால் மலையகத்தில் உள்ள பல தோட்டங்களில் பதற்ற நிலை நிலவிவருவதுடன், தோட்டத்துறையும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
இப்படி நாடு முழுவதும் இவனுகளின் நடமாட்டம் காணப்படுகிறதாக சொல்கிறீர்கள். இதற்க்கு அந்நாட்டு அரசாங்கம் அதனைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கவில்லையா?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
அரசாங்கத்தின் வேலையாகத்தான் இருக்கும் என மக்கள் சந்தேகப்படுகின்றனர் என்ன வென்று இன்னமும் தெரியவில்லை
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு _
» நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம் ?
» யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்
» நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம் ?
» யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|