Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமர்சிங் உட்பட மூவர் கைது
2 posters
Page 1 of 1
அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமர்சிங் உட்பட மூவர் கைது
அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமர்சிங் உட்பட
மூவர் கைது
புதுடில்லி;
எம்.பி க்களுக்கு இலஞ்சம் கொடுத்த வழக்கில் மாநிலங்களவை உறுப்பினரும் சமாஜவாதி
கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான அமர்சிங், பா.ஜ.க முன்னாள் எம்.பிக்கள்
இருவர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களது பிணை மனுக்களை தள்ளுபடி செய்த டில்லி நீதிமன்றம், மூவரையும் 14 நாள்
காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
2008ம் ஆண்டு மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு இலஞ்சம்
கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக டில்லி பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணை மந்தமாக நடப்பதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, இந்த
விவகாரத்தில் தொடர்புடையதாக அமர்சிங் உள்ளிட்டோர் மீது டில்லி பொலிஸார்
குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று
அமர்சிங், பாஜக முன்னாள் எம்.பிக்கள் ஃபாக்ன் சிங், குலஸ்தே மகாவீர் சிங் பகோரா
ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இவர்கள் மூவரும் டில்லி
நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர். தமது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு
தாம் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று அமர்சிங் சார்பில்
வாதிடப்பட்டது. குலஸ்தே, பகோரா ஆகியோரும் தங்களுக்கு பிணை கோரி மனுதாக்கல் செய்தனர்.
ஆனால் இந்த மனுக்களை நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தள்ளுபடி செய்தார்.
டில்லி பொலிஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.
அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
முன்னதாக தமக்கு பிணை கோரிய அமர்சிங், அண்மையில்தான் தமக்கு சிறுநீரக மாற்று அறுவைச்
சிகிச்சை நடந்ததாகவும், தொடர்ந்து தமக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பு
தேவைப்படுவதாகவும் கூறினார்.
என்னுடைய இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இப்போது மாற்றுச் சிறுநீரகங்களின்
துணையுடன் தான் உயிர்வாழ்ந்து வருகிறேன். பொதுவான இடங்களில் பல நச்சு மாசுக்கள்
இருக்கின்றன. எனது சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்றுகள் இருப்பதால், அவை
சிறுநீரகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் வாதிட்டார்.
அமர்சிங்குக்கு இடைக்கால பிணை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவரது
வழக்குரைஞர்கள் அமரேந்திர சரண், ஹரிகரன் ஆகியோர், அமர்சிங் மீதான குற்றங்கள்
நிரூபிக்கப்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அவர் ஆதாரங்களை
அழிப்பதற்கோ, தலைமறைவாகவோ எந்த முகாந்திரமும் இல்லை என்றனர். ஆனால் இதை நீதிபதி
ஏற்கவில்லை. ‘இந்த மனுக்கள் மீது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். அமர்சிங்,
குலஸ்தே, பகோரோ ஆகிய மூவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும். வரும்
19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார். பிணை மனுக்கள்
தொடர்பாக பதிலளிக்குமாறு டில்லி பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து
அவர்கள் மூவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மூவர் கைது
புதுடில்லி;
எம்.பி க்களுக்கு இலஞ்சம் கொடுத்த வழக்கில் மாநிலங்களவை உறுப்பினரும் சமாஜவாதி
கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான அமர்சிங், பா.ஜ.க முன்னாள் எம்.பிக்கள்
இருவர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களது பிணை மனுக்களை தள்ளுபடி செய்த டில்லி நீதிமன்றம், மூவரையும் 14 நாள்
காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
2008ம் ஆண்டு மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு இலஞ்சம்
கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக டில்லி பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணை மந்தமாக நடப்பதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, இந்த
விவகாரத்தில் தொடர்புடையதாக அமர்சிங் உள்ளிட்டோர் மீது டில்லி பொலிஸார்
குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று
அமர்சிங், பாஜக முன்னாள் எம்.பிக்கள் ஃபாக்ன் சிங், குலஸ்தே மகாவீர் சிங் பகோரா
ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இவர்கள் மூவரும் டில்லி
நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர். தமது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு
தாம் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று அமர்சிங் சார்பில்
வாதிடப்பட்டது. குலஸ்தே, பகோரா ஆகியோரும் தங்களுக்கு பிணை கோரி மனுதாக்கல் செய்தனர்.
ஆனால் இந்த மனுக்களை நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தள்ளுபடி செய்தார்.
டில்லி பொலிஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.
அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
முன்னதாக தமக்கு பிணை கோரிய அமர்சிங், அண்மையில்தான் தமக்கு சிறுநீரக மாற்று அறுவைச்
சிகிச்சை நடந்ததாகவும், தொடர்ந்து தமக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பு
தேவைப்படுவதாகவும் கூறினார்.
என்னுடைய இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இப்போது மாற்றுச் சிறுநீரகங்களின்
துணையுடன் தான் உயிர்வாழ்ந்து வருகிறேன். பொதுவான இடங்களில் பல நச்சு மாசுக்கள்
இருக்கின்றன. எனது சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்றுகள் இருப்பதால், அவை
சிறுநீரகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் வாதிட்டார்.
அமர்சிங்குக்கு இடைக்கால பிணை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவரது
வழக்குரைஞர்கள் அமரேந்திர சரண், ஹரிகரன் ஆகியோர், அமர்சிங் மீதான குற்றங்கள்
நிரூபிக்கப்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அவர் ஆதாரங்களை
அழிப்பதற்கோ, தலைமறைவாகவோ எந்த முகாந்திரமும் இல்லை என்றனர். ஆனால் இதை நீதிபதி
ஏற்கவில்லை. ‘இந்த மனுக்கள் மீது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். அமர்சிங்,
குலஸ்தே, பகோரோ ஆகிய மூவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும். வரும்
19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார். பிணை மனுக்கள்
தொடர்பாக பதிலளிக்குமாறு டில்லி பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து
அவர்கள் மூவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» 53 தங்கக் கட்டிகளுடன் மூவர் மன்னாரில் கைது
» சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது.
» துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் எம்.பி பாரத லக்ஷ்மன் உட்பட மூவர் பலி (இணைப்பு 2) _
» வங்கி மோசடியில் மூவர் கைது
» 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவக உதவியாளர் கைது
» சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது.
» துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் எம்.பி பாரத லக்ஷ்மன் உட்பட மூவர் பலி (இணைப்பு 2) _
» வங்கி மோசடியில் மூவர் கைது
» 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவக உதவியாளர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|