Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
மூணாறுக்கு சுற்றுலா அழைத்து சென்று சென்னை பெண்,கழுத்தை இறுக்கி படுகொலை
Page 1 of 1
மூணாறுக்கு சுற்றுலா அழைத்து சென்று சென்னை பெண்,கழுத்தை இறுக்கி படுகொலை
மூணாறுக்கு சுற்றுலா அழைத்து வந்து, கழுத்தை இறுக்கி சென்னை பெண்
படுகொலை செய்யப்பட்டார். அவருடன், தங்கி இருந்த வாலிபரை போலீசார் தேடி
வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பழைய மூணாறு பார்வதி அம்மன்
கோவில் அருகில், தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த
விடுதிக்கு கடந்த 7ந்தேதியன்று இரவு 7 மணி அளவில் சுமார் 28 வயது
மதிக்கத்தக்க ஒரு ஆணும், சுமார் 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும்
வந்தனர்.
தங்களை கணவன் மனைவி என்று
அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள் தங்களது பெயர் மகேஷ், சியாமளா என்றும்,
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் விடுதி ஊழியர்களிடம்
தெரிவித்தனர். மூணாறில் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க வந்திருப்பதாக
கூறி ஒரு அறையை வாடகைக்கு எடுத்தனர். கடந்த 3 நாட்களாக மூணாறில் உள்ள
பல்வேறு சுற்றுலா தலங்களை அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.
நேற்று
முன்தினம் மாலையில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 2 பேரும் சாப்பிட்டு இரவு 7 மணி
அளவில் அறைக்கு வந்து விட்டனர். அதன்பின்னர் நேற்று அதிகாலை 3.40 மணி
அளவில், அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாலை நேரத்தில் அவர்கள் போட்ட சத்தத்தை
கேட்ட விடுதி ஊழியர்கள் திடுக்கிட்டு விழித்தனர். சிறிது நேரத்தில் சத்தம்
எதுவும் கேட்கவில்லை. வழக்கமாக மகேசும், சியாமளாவும் காலை 6.30
மணிக்கெல்லாம் எழுந்து விடுவார்கள். ஆனால் நேற்று காலை 9 மணி வரை அறைக்கதவு
திறக்கப்படவில்லை.
இதனால் தங்கும் விடுதி
ஊழியர்கள் அறையின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது அறையின் படுக்கையில்
ரத்த வெள்ளத்தில் சியாமளா பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி
அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அறைக்கதவை உடைத்து
உள்ளே சென்றனர். அந்த அறையில் சியாமளா கழுத்து இறுக்கப்பட்டும், கழுத்து
நரம்புகள் அறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தார். போலீசார் அந்த அறையை
சோதனை போட்டபோது சியாமளாவின் கைப்பை சிக்கியது. அதில் ஒரு தனியார்
கம்பெனியின் லெட்டர்பேடு மற்றும் சியாமளாவின் புகைப்படம் இருந்தது.
அந்த
லெட்டர்பேடில், மேடி அசிஸ்ட் இந்தியா டி.பி.ஓ. லிமிடெட், பெங்களூர் என்று
இருந்தது. இதைத்தொடர்ந்து பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்துக்கு போலீசார்
தொடர்பு கொண்டனர். அப்போது, சியாமளா அங்கு பணிபுரிந்தது தெரியவந்தது.
மேலும் சியாமளாவின் முகவரியை போலீசார் அந்த நிறுவனத்திடம் இருந்து கேட்டு
வாங்கினார்கள். அந்த நிறுவனத்தில் 18, கோவிந்தராஜ் தெரு, முளவூர்புரம்,
ரெங்கராஜபுரம் மெயின்ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை என்ற முகவரியை கொடுத்து
சியாமளா பணிபுரிந்து வந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து
மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை அந்த முகவரியில் சியாமளா
வசித்து வந்ததாகவும், தற்போது அவர் அங்கு குடியிருக்கவில்லை என்பதும்
தெரியவந்தது. சென்னைக்கு போலீஸ் விரைந்தது சியாமளாவை சுற்றுலா செல்வது போல
அழைத்து வந்த மகேஷ், அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது விசாரணையில்
தெரியவந்தது. சியாமளாவை மகேஷ் கொலை செய்ததற்கான காரணம் புரியாத புதிராக
உள்ளது.
இதற்கிடையே தப்பி ஓடிய மகேசை பிடிக்க
தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை
புறப்பட்டு சென்றனர். இந்தநிலையில் மகேசின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் காதல்
திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர், மகேசை
ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்கிடையில் மகேசும், கொலை
செய்யப்பட்ட சியாமளாவும் கணவன் மனைவி இல்லை என்றும், இவர்கள் 2 பேரும்
கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
சியாமளாவை மூணாறுக்கு திட்டமிட்டே மகேஷ் அழைத்து வந்து கொலை
செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட சியாமளா
பயன்படுத்திய செல்போனை காணவில்லை. சுற்றுலா சென்ற இடங்களில் எல்லாம்
அவர்கள் இருவரும் ஜோடியாக நின்று போட்டோ எடுத்திருக்கிறார்கள். அந்த
கேமராவும் மாயமாகி விட்டது. போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக
சியாமளாவின் செல்போன், கேமரா ஆகியவற்றை கொலையாளி மகேஷ் எடுத்து
சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே
மகேஷ் பற்றி தங்கும் விடுதி ஊழியர்கள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கேரளா
முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழக கேரள
எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு
சென்னையை சேர்ந்த வித்யாலட்சுமி என்ற பெண், தனது கணவரை மூணாறுக்கு சுற்றுலா
அழைத்து வந்து காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டினார். அதேபோல தற்போது
சென்னையை சேர்ந்த பெண்ணை அவரது காதலர் மூணாறுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து
வந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுகொலை செய்யப்பட்டார். அவருடன், தங்கி இருந்த வாலிபரை போலீசார் தேடி
வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பழைய மூணாறு பார்வதி அம்மன்
கோவில் அருகில், தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த
விடுதிக்கு கடந்த 7ந்தேதியன்று இரவு 7 மணி அளவில் சுமார் 28 வயது
மதிக்கத்தக்க ஒரு ஆணும், சுமார் 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும்
வந்தனர்.
தங்களை கணவன் மனைவி என்று
அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள் தங்களது பெயர் மகேஷ், சியாமளா என்றும்,
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் விடுதி ஊழியர்களிடம்
தெரிவித்தனர். மூணாறில் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க வந்திருப்பதாக
கூறி ஒரு அறையை வாடகைக்கு எடுத்தனர். கடந்த 3 நாட்களாக மூணாறில் உள்ள
பல்வேறு சுற்றுலா தலங்களை அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.
நேற்று
முன்தினம் மாலையில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 2 பேரும் சாப்பிட்டு இரவு 7 மணி
அளவில் அறைக்கு வந்து விட்டனர். அதன்பின்னர் நேற்று அதிகாலை 3.40 மணி
அளவில், அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாலை நேரத்தில் அவர்கள் போட்ட சத்தத்தை
கேட்ட விடுதி ஊழியர்கள் திடுக்கிட்டு விழித்தனர். சிறிது நேரத்தில் சத்தம்
எதுவும் கேட்கவில்லை. வழக்கமாக மகேசும், சியாமளாவும் காலை 6.30
மணிக்கெல்லாம் எழுந்து விடுவார்கள். ஆனால் நேற்று காலை 9 மணி வரை அறைக்கதவு
திறக்கப்படவில்லை.
இதனால் தங்கும் விடுதி
ஊழியர்கள் அறையின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது அறையின் படுக்கையில்
ரத்த வெள்ளத்தில் சியாமளா பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி
அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அறைக்கதவை உடைத்து
உள்ளே சென்றனர். அந்த அறையில் சியாமளா கழுத்து இறுக்கப்பட்டும், கழுத்து
நரம்புகள் அறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தார். போலீசார் அந்த அறையை
சோதனை போட்டபோது சியாமளாவின் கைப்பை சிக்கியது. அதில் ஒரு தனியார்
கம்பெனியின் லெட்டர்பேடு மற்றும் சியாமளாவின் புகைப்படம் இருந்தது.
அந்த
லெட்டர்பேடில், மேடி அசிஸ்ட் இந்தியா டி.பி.ஓ. லிமிடெட், பெங்களூர் என்று
இருந்தது. இதைத்தொடர்ந்து பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்துக்கு போலீசார்
தொடர்பு கொண்டனர். அப்போது, சியாமளா அங்கு பணிபுரிந்தது தெரியவந்தது.
மேலும் சியாமளாவின் முகவரியை போலீசார் அந்த நிறுவனத்திடம் இருந்து கேட்டு
வாங்கினார்கள். அந்த நிறுவனத்தில் 18, கோவிந்தராஜ் தெரு, முளவூர்புரம்,
ரெங்கராஜபுரம் மெயின்ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை என்ற முகவரியை கொடுத்து
சியாமளா பணிபுரிந்து வந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து
மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை அந்த முகவரியில் சியாமளா
வசித்து வந்ததாகவும், தற்போது அவர் அங்கு குடியிருக்கவில்லை என்பதும்
தெரியவந்தது. சென்னைக்கு போலீஸ் விரைந்தது சியாமளாவை சுற்றுலா செல்வது போல
அழைத்து வந்த மகேஷ், அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது விசாரணையில்
தெரியவந்தது. சியாமளாவை மகேஷ் கொலை செய்ததற்கான காரணம் புரியாத புதிராக
உள்ளது.
இதற்கிடையே தப்பி ஓடிய மகேசை பிடிக்க
தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை
புறப்பட்டு சென்றனர். இந்தநிலையில் மகேசின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் காதல்
திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர், மகேசை
ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்கிடையில் மகேசும், கொலை
செய்யப்பட்ட சியாமளாவும் கணவன் மனைவி இல்லை என்றும், இவர்கள் 2 பேரும்
கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
சியாமளாவை மூணாறுக்கு திட்டமிட்டே மகேஷ் அழைத்து வந்து கொலை
செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட சியாமளா
பயன்படுத்திய செல்போனை காணவில்லை. சுற்றுலா சென்ற இடங்களில் எல்லாம்
அவர்கள் இருவரும் ஜோடியாக நின்று போட்டோ எடுத்திருக்கிறார்கள். அந்த
கேமராவும் மாயமாகி விட்டது. போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக
சியாமளாவின் செல்போன், கேமரா ஆகியவற்றை கொலையாளி மகேஷ் எடுத்து
சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே
மகேஷ் பற்றி தங்கும் விடுதி ஊழியர்கள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கேரளா
முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழக கேரள
எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு
சென்னையை சேர்ந்த வித்யாலட்சுமி என்ற பெண், தனது கணவரை மூணாறுக்கு சுற்றுலா
அழைத்து வந்து காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டினார். அதேபோல தற்போது
சென்னையை சேர்ந்த பெண்ணை அவரது காதலர் மூணாறுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து
வந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்
» கோவையில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
» மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு
» வீதியில் சென்று கொண்டிருந்த காரின் மீதேறி கண்ணாடியை உடைத்த நிர்வாண பெண்
» இலங்கைக்கு சுற்றுலா சென்ற போலந்து நாட்டுப் பெண் கடலில் மூழ்கி உயிரிழப்பு
» கோவையில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
» மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு
» வீதியில் சென்று கொண்டிருந்த காரின் மீதேறி கண்ணாடியை உடைத்த நிர்வாண பெண்
» இலங்கைக்கு சுற்றுலா சென்ற போலந்து நாட்டுப் பெண் கடலில் மூழ்கி உயிரிழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|