Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
இயற்கையோடு இணைந்து.
3 posters
Page 1 of 1
இயற்கையோடு இணைந்து.
பரிணாம ஏணியின் மேல் படியில் இருக்கும் மனிதகுலம் மூட நம்பிக்கைகளிலும் அறியாமையிலும் மூழ்கி, குழந்தை வளர்க்கத் திணறுவது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது.
இயற்கையோடு இணைந்து இயல்பாகக் குழந்தை வளர்ப்பதே சரியான செயல். எல்லா விலங்குகளும் குட்டிகளுக்குத் தாய்ப்பால்தான் தருகின்றன. மனிதர்களும் அதைத்தான் செய்ய வேண்டும். அப்படியின்றி முதலில் சர்க்கரை கலந்த தண்ணீர் புதிதாய்ப் பிறந்த குழந்தைக்குக் கொடுப்பது இயற்கைக்கு மாறானது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் குழந்தை பிறந்தவுடன் கழுதைப்பால் கொடுத்தால் குழந்தைகள் கழுதையைப் போல் குரல் வளத்துடன் வளரும் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது மிகவும் ஆபத்தான செயல். சுகாதாரமின்மை காரணமாக மிகமோசமான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
அடுத்ததாக, குழந்தைகள் குளிப்பதாலும் தலையில் தண்ணீர் படுவதாலும் சளி பிடிக்கும் என்று பரவலான கருத்து இருக்கிறது. இது அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கையாகும். மனிதகுலம் திமிங்கலம், டால்பின், யானை வால்ரஸ் போன்று நீரில் வாழ்ந்து பரிணாம வளர்ச்சியடைந்ததாக அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினம் தலையுடன் சேர்த்துக் குளிப்பதால் உடல் தூய்மையடையும். தலையில் படும் தண்ணீர் எவ்வகையிலும் தோல், மண்டை ஓடு போன்றவற்றைத் தாண்டி உள்ளே செல்ல முடியாது. ஆகவே குளித்ததனால் தலையில் நீர் இறங்கி விட்டது என்று சொல்வது ஓர் அபத்தமான கருத்தன்றி வேறல்ல. ஆகவே, குழந்தைகள் பிறந்த அடுத்தநாளிலிருந்து தூய்மையான நீரில் தினம் குளிக்க வேண்டும். குளித்தபின் காது, மூக்கு போன்றவற்றில் பெரியவர்கள் வாயினால் ஊதுவது நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கு வாய்ப்பை உருவாக்குகிறது. இந்தத் தவறான செயலால் தான் குழந்தைகளுக்குக் குளித்தவுடன் சளியும் காதுவலியும் ஏற்படுகிறது. இது போலவே குளித்தவுடன் சாம்பிராணி புகை போடுவதும் தவறு. சாம்பிராணியில் இருக்கும் ரசாயனங்கள் பலவித ஒவ்வாமையை ஏற்படுத்தி ஆஸ்துமா நோய் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் பலர் ஜாதிக்காய், மாசிக்காய், கோரோசனை போன்ற பொருட்களை உரசி சில சொட்டுகள் வாயில் கொடுக்கிறார்கள். இதனால் ஆபத்தான வயிற்றுப்போக்கு ஏற்படும். மாசிக்காய் நீர் புரை ஏறுவதால் நிமோனியா ஏற்பட வாய்ப்பு அதிகம்.
குழந்தைகளுக்குப் பெரியவர்களைவிட உணவு செரிமான சக்தி அதிகம். இதை உணராத பலர் கிரைப் வாட்டர், போனிசான் நூபான் என்று பலவகையான ரசாயனக் கலவைகளை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் மென்மையான வயிற்றைக் கெடுக்கிறார்கள்.
சளி பிடிப்பதைத் தடுக்கும் என்ற தவறான நம்பிக்கையால் பலர் வேப்ப எண்ணெய்யை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறார்கள். இதனால் கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் ஏற்பட்டு பல குழந்தைகள் மரணத்தைத் தழுவியுள்ளன.
சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமலிருக்க நிறைய பழங்கள் கொடுக்க வேண்டும். பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என்பது அறிவியல் அடிப்படையற்றது. மாம்பழம், பப்பாளிப்பழம் போன்றவை சூடு என்றும் ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் குளிர்ச்சி என்றும் அறிவியல் ஆதாரமின்றி பயப்படுகிறார்கள். எல்லா காலநிலைகளிலும் எல்லாவித பழங்களும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இயற்கையான உணவுகளையும் எளிய வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாகரிக மனிதர்கள் பேபி பவுடர்(Baby Powder) என்றும் பேபி ஆயில்(Baby Oil), பேபி லோஷன்(Baby Lotion) என்றும் பலவித வாசனைப் பொருட்களை போலியான விளம்பரங்களைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் தோலின் ஆரோக்கியம் பாதிப்படைவதுடன் தாய்ப்பால் சுரப்பதும் குறைந்து விடும்.
குழந்தையும், குழந்தையின் தாயும் குறைந்தது ஒரு வருட காலமாவது எவ்வித வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்குச் சில மணி நேரத்திலேயே தனது மோப்ப சக்தியால் தாயை அடையாளம் காணும் திறமையை எலி, பூனை, நாய், மனிதன் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் இயற்கை அளித்துள்ளது. குழந்தை அல்லது தாய் பவுடர், லோஷன் போடுவதால் குழந்தையின் மோப்ப சக்தி குழப்பமடைந்து அது சரியாகப் பால் குடிப்பதில்லை. இதனால் தாய்ப்பால் சுரப்பது குறைந்து, விரைவில் அதுவும் நின்று விடும். இதனால்தான் விவரமறிந்த நமது முன்னோர்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தலையில் வாசமுள்ள பூ எதுவும் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.
மேலும் பேபி ஆயில், பேபி லோஷன் என்பவை உண்மையில் என்ன என்பதை ஆங்கிலம் படிக்கத் தெரிந்த பெற்றோர்கள் பூதக்கண்ணாடி உதவியுடன் அந்தப் பாட்டில்களில் எழுதியிருப்பதைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய எழுத்தில் "மினரல் ஆயில்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மினரல் ஆயில் என்றால் தமிழில் "மண் எண்ணெய்" என்று பொருள்படும். அதாவது குரூட் ஆயிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித ரசாயன எண்ணெய். இதனைப் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தோலின் மிருதுத் தன்மை பாதிக்கப்படும். ஆகவே, பரம்பரை பரம்பரையாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய தேங்காய் எண்ணெயே போதுமானது.
மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் பலருக்கும் வேர்க்குருவும் கட்டிகளும் ஏற்படும். இதற்கும் பலவித விளம்பரங்களைப் பார்த்து வேர்க்குரு பவுடர்களை குழந்தைகளின் உடல் முழுவதும் பூசிவிடுகிறார்கள். உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்து நம் உடலின் வெம்மையைக் குறைக்க உதவுகிறது. வியர்வைச் சுரப்பிகளின் வாய் தூசி படிந்து அடைத்துக் கொள்வதால் வேர்க்குரு தோன்றுகிறது. வேர்க்குரு சீழ் பிடிப்பதால் கட்டிகள் வருகின்றன. இதைத் தடுப்பதற்குக் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முகம் கழுவ வேண்டும். இதற்கு மாறாகப் பலவித வேர்க்குரு பவுடர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதால் வியர்வை நாளங்களின் வாய் அடைபட்டு அதிகப்படியான வேர்க்குருவும், வேனல் கட்டிகளும் உருவாகும். ஆகவே, வெயில் காலத்தில் எவ்வித பவுடர்களும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை இயற்கையோடு இணைந்து வளர்ப்பதே மிகச்சிறந்தது.
இயற்கையோடு இணைந்து இயல்பாகக் குழந்தை வளர்ப்பதே சரியான செயல். எல்லா விலங்குகளும் குட்டிகளுக்குத் தாய்ப்பால்தான் தருகின்றன. மனிதர்களும் அதைத்தான் செய்ய வேண்டும். அப்படியின்றி முதலில் சர்க்கரை கலந்த தண்ணீர் புதிதாய்ப் பிறந்த குழந்தைக்குக் கொடுப்பது இயற்கைக்கு மாறானது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் குழந்தை பிறந்தவுடன் கழுதைப்பால் கொடுத்தால் குழந்தைகள் கழுதையைப் போல் குரல் வளத்துடன் வளரும் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது மிகவும் ஆபத்தான செயல். சுகாதாரமின்மை காரணமாக மிகமோசமான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
அடுத்ததாக, குழந்தைகள் குளிப்பதாலும் தலையில் தண்ணீர் படுவதாலும் சளி பிடிக்கும் என்று பரவலான கருத்து இருக்கிறது. இது அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கையாகும். மனிதகுலம் திமிங்கலம், டால்பின், யானை வால்ரஸ் போன்று நீரில் வாழ்ந்து பரிணாம வளர்ச்சியடைந்ததாக அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினம் தலையுடன் சேர்த்துக் குளிப்பதால் உடல் தூய்மையடையும். தலையில் படும் தண்ணீர் எவ்வகையிலும் தோல், மண்டை ஓடு போன்றவற்றைத் தாண்டி உள்ளே செல்ல முடியாது. ஆகவே குளித்ததனால் தலையில் நீர் இறங்கி விட்டது என்று சொல்வது ஓர் அபத்தமான கருத்தன்றி வேறல்ல. ஆகவே, குழந்தைகள் பிறந்த அடுத்தநாளிலிருந்து தூய்மையான நீரில் தினம் குளிக்க வேண்டும். குளித்தபின் காது, மூக்கு போன்றவற்றில் பெரியவர்கள் வாயினால் ஊதுவது நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கு வாய்ப்பை உருவாக்குகிறது. இந்தத் தவறான செயலால் தான் குழந்தைகளுக்குக் குளித்தவுடன் சளியும் காதுவலியும் ஏற்படுகிறது. இது போலவே குளித்தவுடன் சாம்பிராணி புகை போடுவதும் தவறு. சாம்பிராணியில் இருக்கும் ரசாயனங்கள் பலவித ஒவ்வாமையை ஏற்படுத்தி ஆஸ்துமா நோய் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் பலர் ஜாதிக்காய், மாசிக்காய், கோரோசனை போன்ற பொருட்களை உரசி சில சொட்டுகள் வாயில் கொடுக்கிறார்கள். இதனால் ஆபத்தான வயிற்றுப்போக்கு ஏற்படும். மாசிக்காய் நீர் புரை ஏறுவதால் நிமோனியா ஏற்பட வாய்ப்பு அதிகம்.
குழந்தைகளுக்குப் பெரியவர்களைவிட உணவு செரிமான சக்தி அதிகம். இதை உணராத பலர் கிரைப் வாட்டர், போனிசான் நூபான் என்று பலவகையான ரசாயனக் கலவைகளை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் மென்மையான வயிற்றைக் கெடுக்கிறார்கள்.
சளி பிடிப்பதைத் தடுக்கும் என்ற தவறான நம்பிக்கையால் பலர் வேப்ப எண்ணெய்யை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறார்கள். இதனால் கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் ஏற்பட்டு பல குழந்தைகள் மரணத்தைத் தழுவியுள்ளன.
சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமலிருக்க நிறைய பழங்கள் கொடுக்க வேண்டும். பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என்பது அறிவியல் அடிப்படையற்றது. மாம்பழம், பப்பாளிப்பழம் போன்றவை சூடு என்றும் ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் குளிர்ச்சி என்றும் அறிவியல் ஆதாரமின்றி பயப்படுகிறார்கள். எல்லா காலநிலைகளிலும் எல்லாவித பழங்களும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இயற்கையான உணவுகளையும் எளிய வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாகரிக மனிதர்கள் பேபி பவுடர்(Baby Powder) என்றும் பேபி ஆயில்(Baby Oil), பேபி லோஷன்(Baby Lotion) என்றும் பலவித வாசனைப் பொருட்களை போலியான விளம்பரங்களைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் தோலின் ஆரோக்கியம் பாதிப்படைவதுடன் தாய்ப்பால் சுரப்பதும் குறைந்து விடும்.
குழந்தையும், குழந்தையின் தாயும் குறைந்தது ஒரு வருட காலமாவது எவ்வித வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்குச் சில மணி நேரத்திலேயே தனது மோப்ப சக்தியால் தாயை அடையாளம் காணும் திறமையை எலி, பூனை, நாய், மனிதன் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் இயற்கை அளித்துள்ளது. குழந்தை அல்லது தாய் பவுடர், லோஷன் போடுவதால் குழந்தையின் மோப்ப சக்தி குழப்பமடைந்து அது சரியாகப் பால் குடிப்பதில்லை. இதனால் தாய்ப்பால் சுரப்பது குறைந்து, விரைவில் அதுவும் நின்று விடும். இதனால்தான் விவரமறிந்த நமது முன்னோர்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தலையில் வாசமுள்ள பூ எதுவும் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.
மேலும் பேபி ஆயில், பேபி லோஷன் என்பவை உண்மையில் என்ன என்பதை ஆங்கிலம் படிக்கத் தெரிந்த பெற்றோர்கள் பூதக்கண்ணாடி உதவியுடன் அந்தப் பாட்டில்களில் எழுதியிருப்பதைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய எழுத்தில் "மினரல் ஆயில்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மினரல் ஆயில் என்றால் தமிழில் "மண் எண்ணெய்" என்று பொருள்படும். அதாவது குரூட் ஆயிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித ரசாயன எண்ணெய். இதனைப் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தோலின் மிருதுத் தன்மை பாதிக்கப்படும். ஆகவே, பரம்பரை பரம்பரையாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய தேங்காய் எண்ணெயே போதுமானது.
மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் பலருக்கும் வேர்க்குருவும் கட்டிகளும் ஏற்படும். இதற்கும் பலவித விளம்பரங்களைப் பார்த்து வேர்க்குரு பவுடர்களை குழந்தைகளின் உடல் முழுவதும் பூசிவிடுகிறார்கள். உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்து நம் உடலின் வெம்மையைக் குறைக்க உதவுகிறது. வியர்வைச் சுரப்பிகளின் வாய் தூசி படிந்து அடைத்துக் கொள்வதால் வேர்க்குரு தோன்றுகிறது. வேர்க்குரு சீழ் பிடிப்பதால் கட்டிகள் வருகின்றன. இதைத் தடுப்பதற்குக் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முகம் கழுவ வேண்டும். இதற்கு மாறாகப் பலவித வேர்க்குரு பவுடர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதால் வியர்வை நாளங்களின் வாய் அடைபட்டு அதிகப்படியான வேர்க்குருவும், வேனல் கட்டிகளும் உருவாகும். ஆகவே, வெயில் காலத்தில் எவ்வித பவுடர்களும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை இயற்கையோடு இணைந்து வளர்ப்பதே மிகச்சிறந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இயற்கையோடு இணைந்து.
சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
://:-: :!@!:
://:-: :!@!:
Re: இயற்கையோடு இணைந்து.
முனாஸ் சுலைமான் wrote:சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
://:-: :!@!:
நன்றி சார் மறுமொழிக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இயற்கையோடு இணைந்து.
("மினரல் ஆயில்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மினரல் ஆயில் என்றால் தமிழில் "மண் எண்ணெய்" என்று பொருள்படும். அதாவது குரூட் ஆயிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித ரசாயன எண்ணெய்- புதியதாக அறிந்து கொண்டேன் .) - நல்ல பகிர்வு பாராட்டுகள்
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Similar topics
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.01
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
» இயற்கையோடு ஒரு நிமிடம்.
» இயற்கையோடு பழகி வர தேக்கடி
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.01
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
» இயற்கையோடு ஒரு நிமிடம்.
» இயற்கையோடு பழகி வர தேக்கடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|