Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
முதல்வர் சாண்டி கோரிக்கை மறுப்பு; கருத்துக் கூற பன்சால் தயக்கம்
Page 1 of 1
முதல்வர் சாண்டி கோரிக்கை மறுப்பு; கருத்துக் கூற பன்சால் தயக்கம்
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் மூலமாக தீர்வு காண்பது காலதாமதத்தை ஏற்படுத்தும். கேரள அரசுடன் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைக்குத் தீர்வு காண, தமிழக அரசு முன்வர வேண்டும். இரு மாநில அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளைத் தொடங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்தார். ஆனால் இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்றதற்கான அறிகுறி ஏதும் இல்லை.
கேரள அரசின் இந்த நெடுநாளைய கோரிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை, சாண்டி நேற்று முன்தினம் சந்தித்தபோது மீண்டும் வலியுறுத்தினார். சாண்டியின் இந்த கோரிக்கையை பன்சால் கேட்டுக்கொண்டார். ஆனால் சந்திப்பிற்கு பிறகு மத்திய அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மாநாடு, ஜெய்ப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு திருவனந்தபுரம் திரும்பும் வழியில், நேற்று முன்தினம் சாண்டி டில்லிக்கு வந்தார். காலை 12 மணிக்கு, ஷ்ரம் சக்தி பவனில் மத்திய நீர்வள அமைச்சர் பன்சாலை சந்தித்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.
பிறகு கேரள இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சாண்டி கூறியதாவது, சமீபத்தில் கேரள அமைச்சரவையில் முல்லைப் பெரியாறு புதிய அணை சம்பந்தமாக எடுத்த முடிவுகள் குறித்து பன்சாலிடம் விளக்கினேன். கேளர அமைச்சரவையின் முடிவின்படி புதிய அணையின் உரிமை, கட்டுப்பாடு ஆகியவை கேரள அரசிடமே இருக்கும். தமிழகத்தோடு நீர் பங்கீடு குறித்து, இரு மாநில அரசுகளின் பிரதிநிதிகளின் கூட்டுக்குழு முடிவு செய்யும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசே, 1979 ஆண்டில் ஒத்துக்கொண்டது. புதிய அணை கட்டுவதற்குதமிழக பொறியாளர்கள் ஒத்துக்கொண்டது குறித்த ஆவணங்கள், கேரள அரசிடம் உள்ளது.
புதிய அணை கட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக ஆரசுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளேன். அதில் ஒரு கடிதத்திற்குதான் பதில் வந்தது. மத்திய அரசு, இரு மாநில முதல்வர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து, தனது தீர்ப்பை தெரிவித்த பிறகு இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் உபயோகமாக இருக்குமா என்ற கேள்விக்கு, உடனடியாக பதில் தர முடியாது. நீதிமன்ற தீர்ப்பு, வருவதற்கு காலதாமதமாகும். அணை உடைந்துவிடுமோ என்ற பீதியில் கேரளமக்கள் அதுவரை இருப்பதை எனது அரசு விரும்பவில்லை.
இவ்வாறு சாண்டி தெரிவித்தார். திரும்பத் திரும்ப புதிய அணை குறித்து வலியுறுத்தும் முதல்வர் சாண்டி பெரியாறு அணை விடயத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண விரும்புவதாக இப்போது கருத்து தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இந்த விடயத்தில், தீவிர கவனம் செலுத்தும் நேரத்தில் இம்மாதிரி அடுத்த கருத்தை தெரிவித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பன்சால் இது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
முல்லைப் பெரியாறு பாதுகாப்பு குறித்து, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த நிலைய மனுக்களை, கேரள மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து, கேரள மேல் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் நேற்று முன்தினம் கேரள மேல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி பி. ஆர். ராமச்சந்திரமேனன் ஆகியோர் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. இதில், அச்சுதானந்தன் தனது மனுவில், அணைக்கட்டுக்கு ஆபத்து நேரிட்டால், இராணுவ பொறியிய லாளர்களை அழைக்க உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார். மனுதாரர்கள் கருத்துக்களை பதிவு செய்து கொண்ட ‘டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகள் கூறியதாவது; முல்லைப் பெரியாறு அணைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, கடந்த மாதமே மாநில அரசு அறிக்கை அளித்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், விரைவில் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கிவிடும். கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் எங்களுக்கு திருப்தி உள்ளது. தற்போது, பொதுமக்களிடம் இது குறித்து கவலைகள் குறைந்து விட்டன. எனவே, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரள அரசின் இந்த நெடுநாளைய கோரிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை, சாண்டி நேற்று முன்தினம் சந்தித்தபோது மீண்டும் வலியுறுத்தினார். சாண்டியின் இந்த கோரிக்கையை பன்சால் கேட்டுக்கொண்டார். ஆனால் சந்திப்பிற்கு பிறகு மத்திய அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மாநாடு, ஜெய்ப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு திருவனந்தபுரம் திரும்பும் வழியில், நேற்று முன்தினம் சாண்டி டில்லிக்கு வந்தார். காலை 12 மணிக்கு, ஷ்ரம் சக்தி பவனில் மத்திய நீர்வள அமைச்சர் பன்சாலை சந்தித்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.
பிறகு கேரள இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சாண்டி கூறியதாவது, சமீபத்தில் கேரள அமைச்சரவையில் முல்லைப் பெரியாறு புதிய அணை சம்பந்தமாக எடுத்த முடிவுகள் குறித்து பன்சாலிடம் விளக்கினேன். கேளர அமைச்சரவையின் முடிவின்படி புதிய அணையின் உரிமை, கட்டுப்பாடு ஆகியவை கேரள அரசிடமே இருக்கும். தமிழகத்தோடு நீர் பங்கீடு குறித்து, இரு மாநில அரசுகளின் பிரதிநிதிகளின் கூட்டுக்குழு முடிவு செய்யும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசே, 1979 ஆண்டில் ஒத்துக்கொண்டது. புதிய அணை கட்டுவதற்குதமிழக பொறியாளர்கள் ஒத்துக்கொண்டது குறித்த ஆவணங்கள், கேரள அரசிடம் உள்ளது.
புதிய அணை கட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக ஆரசுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளேன். அதில் ஒரு கடிதத்திற்குதான் பதில் வந்தது. மத்திய அரசு, இரு மாநில முதல்வர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து, தனது தீர்ப்பை தெரிவித்த பிறகு இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் உபயோகமாக இருக்குமா என்ற கேள்விக்கு, உடனடியாக பதில் தர முடியாது. நீதிமன்ற தீர்ப்பு, வருவதற்கு காலதாமதமாகும். அணை உடைந்துவிடுமோ என்ற பீதியில் கேரளமக்கள் அதுவரை இருப்பதை எனது அரசு விரும்பவில்லை.
இவ்வாறு சாண்டி தெரிவித்தார். திரும்பத் திரும்ப புதிய அணை குறித்து வலியுறுத்தும் முதல்வர் சாண்டி பெரியாறு அணை விடயத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண விரும்புவதாக இப்போது கருத்து தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இந்த விடயத்தில், தீவிர கவனம் செலுத்தும் நேரத்தில் இம்மாதிரி அடுத்த கருத்தை தெரிவித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பன்சால் இது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
முல்லைப் பெரியாறு பாதுகாப்பு குறித்து, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த நிலைய மனுக்களை, கேரள மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து, கேரள மேல் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் நேற்று முன்தினம் கேரள மேல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி பி. ஆர். ராமச்சந்திரமேனன் ஆகியோர் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. இதில், அச்சுதானந்தன் தனது மனுவில், அணைக்கட்டுக்கு ஆபத்து நேரிட்டால், இராணுவ பொறியிய லாளர்களை அழைக்க உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார். மனுதாரர்கள் கருத்துக்களை பதிவு செய்து கொண்ட ‘டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகள் கூறியதாவது; முல்லைப் பெரியாறு அணைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, கடந்த மாதமே மாநில அரசு அறிக்கை அளித்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், விரைவில் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கிவிடும். கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் எங்களுக்கு திருப்தி உள்ளது. தற்போது, பொதுமக்களிடம் இது குறித்து கவலைகள் குறைந்து விட்டன. எனவே, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகள் தெரிவித்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிறப்பு முகாமில் 3 வது நாளாக செந்தூரன் பட்டினிப் போராட்டம். முதல்வர் தலையிட கோரிக்கை!
» இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
» புதிய அணை கட்டினால் இந்த பிரச்சினை தீரும் உம்மன் சாண்டி
» தயக்கம் வேண்டாம்
» அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: ஹிலாரியை நெருங்கும் டிரம்ப்
» இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
» புதிய அணை கட்டினால் இந்த பிரச்சினை தீரும் உம்மன் சாண்டி
» தயக்கம் வேண்டாம்
» அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: ஹிலாரியை நெருங்கும் டிரம்ப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|