சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் Khan11

ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம்

Go down

ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் Empty ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம்

Post by *சம்ஸ் Sun 15 Jan 2012 - 6:29

இது சமூக வலைத்தளத்திலே நண்பரொருவர் பகிர்ந்திருந்த புகைப்படம். அந்த சுவரிலே எழுதப்பட்டிருக்கும் வாசகத்தின் உண்மையைச் சிந்தித்தபடியே மன அலைகள் பயணித்தன. கணப்பொழுதிலே கடல் கடந்து தேசங்கள் கடந்து சென்று ஒரு இடத்திலே போய் முட்டி மோதி நின்றன.
ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் World-5ஒரு காலத்திலே ஸ்பானிய, பிரெஞ்சு காலனித்துவத்திற்குட்பட்ட நாடுகளிலேயே முதன்மையாய் புகழுடன் திகழ்ந்த செல்வச் செழிப்பு மிக்க தேசம் அது. ஆனால் இன்றோ, மேற்கரைக் கோளத்தின் வறுமையான நாடுகளுள் முதன்மையாய் நிற்கிறது. அது வேறெந்த தேசமுமில்லை. பூகம்ப அழிவுகளையும் வறுமையையும் உள் நாட்டு முரண்பாடுகளையும் அடையாளமாகக் கொண்ட ஹெயிட்டி தான் அந்த செல்வச் செழிப்பான தேசம் ஹெயிட்டிக்கு அத்தகைய பிரகாசமான வரலாறு ஒன்று இருந்தது என்பது இன்றைய இளஞ்சந்ததியினருக் குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கரீபிய நாடுகளுள் ஒன்றான ஹெயிட்டியின் சனத் தொகையிலே 80 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களாவர். இந்த வறுமை ஹெயிட்டியுடன் கூடவே இருந்ததல்ல. அதன் இயற்கைச் சூழல் பாழ்பட்டமையாலும் நாட்டில் உருவாகிய ஸ்திரமற்ற நிலைமையினாலுமே ஹெயிட்டியை இந்த வறுமை நிலை ஆட்கொண்டது எனலாம். ஹெயிட்டியின் இயற்கைச் சூழல் பாழ்ப்பட்டமைக்குக் காரணம் என்ன தெரியுமா?

செல்வச் செழிப்பு மிகுந்த அந்த தேசத்தில் தூர நோக்கின்றி பல்வேறுபட்ட காரணங்களுக்காக, காடுகள் அழிக்கப்பட்டமையே இன்று மிடிமை மிகுந்த தேசமாக ஹெயிட்டி மாறுவதற்குக் காரணமாகியது. ஹெயிட்டியின் பெரும்பான்மை நிலப்பகுதி மலைப்பாங்கானது. விவசாயத்துக்கு ஏற்ற சமதரைப் பகுதி மிகவும் குறைவு. அதே வேளை சுண்ணாம்புக் கல்லின் ஆதிக்கம் நிலப்பகுதிகளில் மிக அதிகமாகும். அத்துடன் சம தரைப் பகுதியில் மேல் மண்ணும் வளமும் குறைந்தது.
ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் World-7
ஆனாலும் இயற்கை குறை வைக்கவில்லை மலைப்பாங்கான பகுதிகள் அடர் காடுகளாகக் காணப்பட்டன. வானளாவிய மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. ஆனால் இயற்கை தந்த செல்வத்தை மிகையாகப் பாவித்து அதிக வருமானத்தை ஈட்ட முயன்ற ஹெயிட்டிக்கு இயற்கையே பாடம் புகட்ட முயன்றதோ என்றும் சில வேலைகளில் எண்ணத்தோன்றும்.

ஹெயிட்டியில் வகைதொகையின்றி மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு தான் அதன் இன்றைய மிடிமைக்கான பிரதான காரணமாகும். காடுகள் அழிக்கப்பட நாட்டின் பிரதான தேவைகளான சக்தியும் விவசாயமும் கேள்விக்குறியாகின. மலைப்பாங்கான நிலத்தில் காடுகள் அழிக்கப்பட மண்சரிவுகளும் மண்ணரிப்பும் தொடர்ந்து ஏற்பட்டன. இருந்த கொஞ்ச நஞ்ச விவசாய நிலமும் பாழ்படத் தொடங்கியது. மக்கள் தமது எரிபொருள் தேவைக்காக நம்பியிருந்த விறகும் நிலக்கரியும் கூடக் கிடைப்பது அரிதானது.

பெருந்தோட்டத் தேவைகளுக்காக ஹெயிட்டிக்குள் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சமுதாயத்தால் சனத்தொகைப் பெருக்கம் ஏற்பட்டது. நெருக்கம் அதிகரித்தது. வளங்கள் அருகின. வறுமை தலைவிரித்தாடியது. மக்கள் அகதிகளாக புலம்பெயரத் தலைப்பட்டார்கள். சூழல் அகதிகள் என்ற புதிய தரப்பினர் உருவாகினர்.

ஆனால் அகதிகள் உருவாக சுற்றுச் சூழல் மட்டும் காரணமாக அமைந்து விடவில்லை. ஹெயிட்டி கொண்டிருக்கும் ஊழல் கறை படிந்த வரலாறும் கொடிய ஆட்சியும் கூட மக்களின் புலம்பெயர்வுக்குக் காரணமாகியிருந்தன.
ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் World-6
1957 தொடக்கம் 1986 வரையான காலப் பகுதியிலே அடிமைகளுக்கு நடந்த கொடூரங்கள் அந்தக் கறை படிந்த வரலாற்றைத் தோற்றுவித்திருந்தன. அதே கொடூரங்கள் தாம் ஹெயிட்டியில் இன்று காணப்படும் வன்முறைக் கலாசாரத்துக்கு வித்திட்டவை எனலாம். சுற்றுச்சூழல் சீர்கெட்டபடியே சென்று கொண்டிருந்த நிலையில், ஆட்சி செய்த அரசு அதைக் கவனத்தில் எடுக்கவில்லை. அதே நேரம் வறுமை தலை விரித்தாடியது. அரசின் அலட்சியப்போக்கு காரணமாக ஹெயிட்டிக்கு நிதி உதவிகள் கிடைக்கவில்லை. ஒரு வேளை அத்தகைய உதவிகள் கிடைத்திருந்தால் சுற்றுச் சூழலை சீர் கெடாமல் பேணும் அதே வேளை மரங்களை வளர்த்து வர்த்தகம் செய்வதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிமுறைகளும் கூட ஹெயிட்டியில் உருவாகியிருக்கும்.

கிராமிய மட்டத்திலே மக்கள் வேறு விதமாக யோசித்தனர். உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயப் பயிர்களா? அல்லது நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் மரங்களா என்ற போது விவசாயப் பயிர்களே அம்மக்களின் தெரிவாக இருந்தது. மரங்களை நாட்டுவதில் அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது.

2006 ஆம் ஆண்டுக்கான தரவுப்படி, ஹெயிட்டியில் 10 சதவீதமான மக்களுக்கே மின்சாரம் கிடைத்தது. இன்றும் கூட ஹெயிட்டியின் பிரதான சக்தித் தேவையை விறகுகள் தான் பூர்த்தி செய்கின்றன என்பது தூரதிஷ்டமான தோர் விடயமாகும். காடழிப்பு பெற்றுவிடவில்லை. உலக வங்கித் திட்டமொன்றின் கீழ் முதல் போகிறது. மலைப்பாங்கான பகுதிகளிலே காடுகள் அழிக்கப்பட பெய்யும் மழை நீரின் அளவு, வேகம் காரணமாக பாரிய நிலச்சரிப்புகள் ஏற்படத்தொடங்கின அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கானவை.

புயல் நிலச்சரிவு தொட்டு பூகம்பம் வரை இயற்கை அனர்த்தங்களின் அச்சுறுத்தல் ஹெயிட்டியில் அதிகமாகவே இருக்கிறது. காடுகள் அழிக்கப்பட்டதன் பின்விளைவுகள் தான் அந்த அச்சுறுத்தலுக்குக் காரணம் என்றால் எவரும் மறுக்க மாட்டார்கள். இன்றும் கூட மக்கள் டொமினிக்கன் குடியரசு ஐக்கிய அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளுக்கு மக்கள் படகுகளிலே பயணித்து அந்த நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி நிற்கின்றனர்.
ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் World-4
சூழல் அகதிகளை உருவாக்கிய முதல் நாடு என்ற பெயரை மட்டும் பெற்று விடவில்லை. உலக வங்கித் திட்டமொன்றின் கீழ் முதன் முதலாக சுற்றுச்சூழல் கடன் பெற்ற நாடும் ஹெயிட்டி தான் சுற்றுச் சூழல் பிரச்சினைகளால் சீரழிந்த நாடுகளை மீளக்கட்டி யெழுப்பும் சுற்றுச்சூழல் கடன் திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டு 22.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஹெயிடடிக்குக் கிடைத்தது. ஆனால் அந்த நிதியைச் சரியான முறையிலே பயன்படுத்துவதற்கான திட்டங்களை அரசு ஏற்படுத்தியிருக்கவில்லையாதலால் உலக வங்கிப்பணத்தை வழங்கவில்லை.

அக்கடனுதவியின் மூலம் சுற்றுச் சூழல் மேம்படுவதற்குச் சாதகமான போக்கு அங்கு காணப்படவில்லை என்பதுடன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இல்லை. என்பதும் தான் உலக வங்கியின் குற்றச்சாட்டுகளாகும். நவீன செய்மதிப்படங்களின் படி ஹெயிட்டியின் நிலப்பரப்பில் ஒரு சதவீத காடுகள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. இது தான் ஹெயிட்டியின் தற்போதைய நிலை. உலகிலேயே சுற்றுச் சூழல் மிக மோசமாகப் பபாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றாக ஹெயிட்டியை ஐ. நா. வரையறுக்கிறது. இங்கு ஹெயிட்டியைப் பற்றிக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. ஒரு காலத்தில் செல்வச் செழிப்பில் மிதந்த நாடு தன் தூர நோக்கற்ற போக்கால் எப்படி மாறியிருக்கிறது என்று சந்திக்க முடிகிறதல்லவா?

எம் போன்ற வளர்முக நாடுகளுக்கு ஹெயிட்டி ஒரு நடைமுறை உதாரணம். ஹெயிட்டி விட்ட தவறை நாம் ஒருபோதும் விடலாகாது. சுற்றுச் சூழலுக்கு அநீதி நேரும் போது அதைத் தட்டிக் கேட்கும் நிலையில் ஹெயிட்டி மக்கள் இல்லை. அவர்கள் அடிமைப் படுத்தப்பட்ட நிலையிலே உள்ளவர்கள் ஆனால் எமது நிலை வேறானது இங்கு நாம் சகல சுதந்திரங்களும் வழங்கப்பட்டவர்கள் ஆனால் போதிய விழிப்புணர்வில்லாததால் கண்ணிருந்தும் குருடராக வாயிருந்தும் ஊமைகளாக காதிருந்தும் செவிடராக காலத்தைக் கழிக்கிறோம்.

அண்மைக்காலங்களில் எமது மலை நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுகளுக்கான அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா? மரங்கள், காடுகள் பல்வேறு அபிவிருத்தித் தேவைகளுக்காகவும் சட்ட விரோதமாகவும், அழிக்கப்பட்டமையேயாகும் இதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்?

அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதற்காகவே பிதுறுதலாகாலை, போன்ற சில குறிப்பிட்ட மலைப்பாங்கான பகுதியிலுள்ள காடுகள் தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலே காடழிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமானால் அது வன்னிப் பகுதியில் மட்டும் தான் சாத்தியமாகும். ஏனெனில் அங்கு தான் காடுகளின் சதவீதம் அதிகம் என் பேராசிரியர் ஒருவர் தன் விரிவுரையிலே குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பகுதியில் தான் இன்று சட்டவிரோத காடழிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வைர மரங்கள் வெட்டப்படுகின்றன. இவை தொடர்பிலே நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இயற்கையின் சகிப்புத்தன்மை ஒரு எல்லை வரை மட்டுமே சாத்தியம் என்பதை நாம் உணர வேண்டும். இயற்கை தனது எல்லையை மீறினால், விளைவுகள் கொடூரமாக இருக்கும். அதைத் தான் ஹெயிட்டியும் நமக்கு உணர்த்த்தியது. 2004 இன் சுனாமி அனர்த்தம் கூட அதைத் தானே உணர்த்தி இருக்கிறது. பூமியின் வளங்களை எப்படி அழித்தாலும் பூமி சாதுவாக நிலைத்திருக்கும் என நாம் மூடத்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் எப்போதுமே மனிதனை கட்டுப்படுத்துவது இயற்கை என்பதையும் வெற்றி பெறுவது பூமி தான் என்பதையும் நாம் என்று மனதால் உணர்ந்து செயலில் காட்டுகிறோமோ, அன்று தான் எம் வாழ்வில் சுபீட்சம் நிலைக்கும்.

குழலி...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum