Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
தலிபான்களுடன் ஆப்கான் அரசு சவு+தியில் சந்திப்பு: அமெரிக்கா நேரடிப் பேச்சு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தலிபான்களுடன் ஆப்கான் அரசு சவு+தியில் சந்திப்பு: அமெரிக்கா நேரடிப் பேச்சு
தலிபான்களுடன் ஆப்கான் அரசு சவு+தியில் சந்திப்பு: அமெரிக்கா நேரடிப் பேச்சு
ஆப்கானில் அமைதியை ஏற்படுத்தும் முதல் முயற்சியாக தலிபான் அமைப்புக்கும் ஆப்கான் அரசுக்கும் இடையில் சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இரு தரப்புக்கும் இடையிலான இந்த சந்திப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக தலிபான் அமைப்பு கட்டாரில் அலுவலகத்தை அமைப்பதற்கு முன்னர் ஆப்கான் அரசு மற்றும் தலிபான் அமைப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிகிறது.
எனினும் தலிபான் அமைப்பு ஏற்கனவே ஜனாதிபதி ஹமீத் அல் கர்சாயியின் அரசை ஆப்கானின் உத்தியோகபூர்வ அரசாக ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தலிபான் அமைப்பு ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்ததாக அரச உயர் அதிகாரி ஒருவர் பி. பி. சி. தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பில் தலிபான் அமைப்பு எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.
இது தொடர்பில் ஆப்கான் அரசின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறும் போது, தலிபான் அமைப்பு கட்டாரில் அலுவலகம் திறந்தால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளிடம் இருந்து ஆப்கான் அரசுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும். குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளிடம் இருந்து எமக்கு அழுத்தங்கள் ஏற்படும்.
கடந்த காலங்களில் ஆப்கான் விவகாரத்தில் சவூதி முக்கிய பங்கு வகித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு சமாதான செயற்றிட்டங்களில் சவூதியிடம் இருந்து தொடர்ந்தும் ஆதரவைப் பெற முயற்சிப்போம் என்றார்.
தலிபான் அமைப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கட்டாரில் அலு வலகம் அமைக்க அமெரிக்கா தன்னிச்சையாக செயற்பட்டதாகவும் அது தொடர்பில் ஆப்கான் அரசிடம் ஆலோசனை பெறவில்லை எனவும் ஜனாதிபதி ஹமீத் கர்சாயி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கட்டாருக்கான ஆப்கான் தூதுவரை கடந்த டிசம்பர் மாதம் ஆப்கான் அரசு திரும்ப அழைத்துக்கொண்டது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை நிவர்த்திக்கும் முயற்சியாக கட்டார் தூதுக்குழு ஒன்று காபுலுக்கு செல்லவுள்ளதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, ஒரு சில தலிபான் அதிகாரிகள் ஏற்கனவே கட்டாருக்கு சென்றுள்ளதாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கட்டார் சென்றுள்ள தலிபான் அதிகாரிகளில் தலிபான் அமைப்பின் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் ஷெர் மொஹமட் ஸ்தான்சி, சவூதிக்கான முன்னாள் தலிபான் தூதுவர் ஷபுதின் டில வாரி, தலிபான் தலைவர் முல்லா ஒமருடன் நெருங்கி செயற்படும் தயிப்அகா ஆகியோர் உள்ளடங் குவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கட்டாரில் நிரந்தர அலுவலகம் திறக்கும் திட்டம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் தலிபான் - அமெரிக்க அரசுக்கிடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘தி நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அப்பத்திரிகை கூறியிருப்பதாவது:- பேச்சுவார்த்தைக்காக ஓர் அலுவலகத்தை அமைப்பதற்காக, பாகிஸ்தானில் இருந்து எட்டு தலிபான்கள், கட்டார் சென்றனர். குவான்டனமோ சிறையில் இருந்து தலிபான் கைதிகளை ஆப்கானுக்கு கொண்டு செல்வது என்ற நிபந்தனை அடங்கிய, நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முதற்கட்ட பேச்சு அமைந்தது.
தலிபான் அரசில் அமைச்சராக இருந்த மவுலவி கலாமுதீன் இதுபற்றிக் கூறுகையில்:- “சிறைக் கைதிகள் பற்றித் தான், தற்போது பேச்சு நடக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை’ என்றார். அமெரிக்கா- தலிபான் அமைப்புகளுக்கு இடையிலான இந்த நேரடிப் பேச்சுவார்த்தை ஆப்கான் அரசை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
ஆப்கானில் அமைதியை ஏற்படுத்தும் முதல் முயற்சியாக தலிபான் அமைப்புக்கும் ஆப்கான் அரசுக்கும் இடையில் சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இரு தரப்புக்கும் இடையிலான இந்த சந்திப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக தலிபான் அமைப்பு கட்டாரில் அலுவலகத்தை அமைப்பதற்கு முன்னர் ஆப்கான் அரசு மற்றும் தலிபான் அமைப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிகிறது.
எனினும் தலிபான் அமைப்பு ஏற்கனவே ஜனாதிபதி ஹமீத் அல் கர்சாயியின் அரசை ஆப்கானின் உத்தியோகபூர்வ அரசாக ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தலிபான் அமைப்பு ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்ததாக அரச உயர் அதிகாரி ஒருவர் பி. பி. சி. தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பில் தலிபான் அமைப்பு எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.
இது தொடர்பில் ஆப்கான் அரசின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறும் போது, தலிபான் அமைப்பு கட்டாரில் அலுவலகம் திறந்தால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளிடம் இருந்து ஆப்கான் அரசுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும். குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளிடம் இருந்து எமக்கு அழுத்தங்கள் ஏற்படும்.
கடந்த காலங்களில் ஆப்கான் விவகாரத்தில் சவூதி முக்கிய பங்கு வகித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு சமாதான செயற்றிட்டங்களில் சவூதியிடம் இருந்து தொடர்ந்தும் ஆதரவைப் பெற முயற்சிப்போம் என்றார்.
தலிபான் அமைப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கட்டாரில் அலு வலகம் அமைக்க அமெரிக்கா தன்னிச்சையாக செயற்பட்டதாகவும் அது தொடர்பில் ஆப்கான் அரசிடம் ஆலோசனை பெறவில்லை எனவும் ஜனாதிபதி ஹமீத் கர்சாயி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கட்டாருக்கான ஆப்கான் தூதுவரை கடந்த டிசம்பர் மாதம் ஆப்கான் அரசு திரும்ப அழைத்துக்கொண்டது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை நிவர்த்திக்கும் முயற்சியாக கட்டார் தூதுக்குழு ஒன்று காபுலுக்கு செல்லவுள்ளதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, ஒரு சில தலிபான் அதிகாரிகள் ஏற்கனவே கட்டாருக்கு சென்றுள்ளதாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கட்டார் சென்றுள்ள தலிபான் அதிகாரிகளில் தலிபான் அமைப்பின் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் ஷெர் மொஹமட் ஸ்தான்சி, சவூதிக்கான முன்னாள் தலிபான் தூதுவர் ஷபுதின் டில வாரி, தலிபான் தலைவர் முல்லா ஒமருடன் நெருங்கி செயற்படும் தயிப்அகா ஆகியோர் உள்ளடங் குவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கட்டாரில் நிரந்தர அலுவலகம் திறக்கும் திட்டம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் தலிபான் - அமெரிக்க அரசுக்கிடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘தி நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அப்பத்திரிகை கூறியிருப்பதாவது:- பேச்சுவார்த்தைக்காக ஓர் அலுவலகத்தை அமைப்பதற்காக, பாகிஸ்தானில் இருந்து எட்டு தலிபான்கள், கட்டார் சென்றனர். குவான்டனமோ சிறையில் இருந்து தலிபான் கைதிகளை ஆப்கானுக்கு கொண்டு செல்வது என்ற நிபந்தனை அடங்கிய, நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முதற்கட்ட பேச்சு அமைந்தது.
தலிபான் அரசில் அமைச்சராக இருந்த மவுலவி கலாமுதீன் இதுபற்றிக் கூறுகையில்:- “சிறைக் கைதிகள் பற்றித் தான், தற்போது பேச்சு நடக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை’ என்றார். அமெரிக்கா- தலிபான் அமைப்புகளுக்கு இடையிலான இந்த நேரடிப் பேச்சுவார்த்தை ஆப்கான் அரசை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தலிபான்களுடன் பேச்சு: பாகிஸ்தான் அரசு மறுப்பு
» தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்
» உலகம் பூராவும் எதிர்பார்க்கும் சந்திப்பு : ஒபாமா - ஹூ பேச்சு பலன் தருமா?
» தலிபானுடனான பேச்சுவார்த்தைக்கு கட்டாரில் இணைப்பு அலுவலகம் ஆப்கான் அரசு நிபந்தனையுடன் ஏற்பு
» நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்! 29 ஆம் திகதி ஒபாமாவுடன் சந்திப்பு
» தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்
» உலகம் பூராவும் எதிர்பார்க்கும் சந்திப்பு : ஒபாமா - ஹூ பேச்சு பலன் தருமா?
» தலிபானுடனான பேச்சுவார்த்தைக்கு கட்டாரில் இணைப்பு அலுவலகம் ஆப்கான் அரசு நிபந்தனையுடன் ஏற்பு
» நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்! 29 ஆம் திகதி ஒபாமாவுடன் சந்திப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|