Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
3 posters
Page 1 of 1
மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
மரம் வளர்ப்பதால் மாசுகுறையும், மரம் வளர்ப்பதை சமுதாயக் கடமையாக ஆக்க வேண்டும். மரம் வளர்ப்பதால் மழைவரும், மண்கரையாமல் பூமியோடு பிடித்து உறுதி செய்யும், மரங்கள் கார்பன் வாய்வை உள்வாங்கி, பிராணவாயுவை வெளியிடுகிறது. வளர்ந்து செழித்து நிற்கும் மரம் பறவைகளின் சரணாலயமாகும்.
மரம் நட்டால் மட்டும் போதாது, அதை தினமும் பேணி பாதுகாக்க வேண்டும். மரக்கன்று நடும்போது நல்ல மண்வளத்தை உருவாக்க வேண்டும், ஒருமரம் வளர 4 அடி அகலமும், 4அடி நீளமும் இடம் இருந்தால் போதுமாது. வீட்டின் ஓரத்தில் மரம் வளர்த்தால் சுற்றுச் சூழல் மாசுபடாமல் தடுக்க முடியும். மர வளமே மனித சுகம் என்பதை அறிந்துகொள்.
சாலை ஓரத்தில் மரம் வளர்க்க சொல்கிறார்கள். சாலை ஓர மேலே மின்கம்பி, தொலைபேசி கம்பி இடையூராக இருப்பதாக கூறி மரம் வளர்க்க சொன்ன அரசே அதன் கிளைகளை வெட்டுகிறது. சாலை ஓரப்பகுதியில் தொலைபேசி வயர்கள், குடிநீர் குழாய்கள் போடும் போது பள்ளமாக்கி மரவேர்கள் அருந்து மரம் சாய்ந்து விடும் ஆபத்து ஏற்படுகிறது.
எங்கெல்லாம் மரம் வளர்க்கலாம்?
மரங்கள் வீட்டு தோட்டத்திலும், தொழிற்சாலை முன் பின் பகுதிகளிளும், பள்ளி, கல்லூரியை சுற்றிய பகுதிகளிலும், விளையாட்டு திடலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பள்ளிவாசலின் முன் பின் பகுதியில் காலி இடங்களிலும், கோவில், சர்ச் இவைகளை சுற்றிலும் மரம் வளர்க்கலாம். சுடுகாடு, முஸ்லிம் மையவாடி, அடக்கஸ்தலங்களிலும், அரசு, தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் இடமெல்லாம் மருத்துவ மூலிகை வேம்பு போன்றவைகளை வளர்க்கலாம்.
ஒரு மரம் வளர்த்தால் இரண்டு டிகிரி வெப்பம் குறையும். மரம் வளர்ப்பதால் பூமி வெப்பம் அடைவது குறையும். மரம் வளர்க்க நேரமில்லை என்ற வார்த்தை மனிதனை சோம்பேறி ஆக்குகிறது. துணிச்சல் இருந்தால் நேரம் தானாக வரும் மேற்கண்ட இந்த செய்தியை தினமணி கதிர் 12.06.2011-ல் மரம் முறிந்தால் மார்க்க உண்டு என்ற கட்டுரையிலிருந்து எடுத்தவை.
நாட்டை நேசிக்கின்றவர் மரம் வளர்க்க வேண்டுமா?
நாட்டுக்கு தேவை, பயிர் செழிக்க மழை - மழையை அழைப்பது மரம் அதனால் எல்லோரும் மரம் வளர்ப்போம். நாட்டை செழிப்பாய் வளச்சியடைய செய்வோம். நமதூரை பொறுத்தவரை வீட்டுத் தோட்டத்தில் மரம் வளர்ப்பதை கவனிக்காமல் காலம் தள்ளுகின்றனர். சிலரது வீட்டுத் தோட்டத்தில் மரம் வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் ஊற்ற வேளையால். அவர்கள் சரியாக தண்ணீர் பாச்சினார்களா செடி, கொடி, மரம் நன்றாக வளர்ந்துள்ளதா - சத்துள்ள மரம் போடப்பட்டதா? வைத்த மரம் பூவிட்டதா - காய்த்து கனிந்ததா? என்று பலர் கவனிப்பதில்லை. பிள்ளையை பெற்றால் கண்ணீரு, தென்னையை பெற்றால் இளநீர் என்று கவிஞர் சும்மவா பாடினார்.
நம்வீட்டு தோட்டத்து மணலை முதலில் பரிசோதனை செய்து பின் நமக்கு அன்றாட தேவையான தக்காளி, வெண்டை, மிளகாய், கத்திரி, புடலை, பாகை, பீக்கு, கருவேப்பிலை போன்ற செடிகளையும், கொடிகளையும் வளர்த்து நாம் பயனடையலாம்.
லட்சக்கணக்கில் வருவாய்தரும் மரம்!
விவசாய பண்ணை அதிகாரியின் ஆலோசனைபடி நம் வீட்டு தோட்டத்தில் தேக்கு கன்று ஐந்தடி இடைவெளிவிட்டு வளர்க்கலாம், 30 நாற்பது வருடங்களுக்கு பின் ஒவ்வொரு தேக்கும் பலன் தரும் இன்று ஓய்வு பெற்ற 65 வயதானவர்கள் வீட்டு தோட்டத்தில் தேக்கு வளர்த்தால் தனது வாரிசுகளுக்கு பின் கோடிகணக்கில் முதலீடு தரும்.
மூலிகைச்செடி வளர்க்கலாம் :
அழிந்து வரும் தூதுவாளை, கண்டங்கத்தரி, சீந்திக்கொடி, கீழா நெல்லி, ஓமம், துளசி, தும்பை, அவரி, நாவரி போன்றவைகளை நம்வீட்டு தோட்டத்தில் விளையாட்டாக வளர்த்து பணம் சம்பாதிக்கலாம். இது மட்டுமல்லாது முருங்கை, எழுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மா, பப்பாளி போன்றவைகளையும் அதிகமாக பயிற்செய்தால் அருகிலுள்ள தெருகடைக்காரர்களிடம் விற்க முடியும்.
ஆனால் ஒன்று மட்டுமே நினைவில் வையுங்கள் (செடி வளர்க்காவிடிலும் பராவாயில்லை மரங்களை வெட்டாதீர்) மரம்தான் மழை அழைக்கும், நாடு செழிக்க வைக்கும். மரம் வளர்ப்போம் என்ற அமைப்பை ஓர் பொது அமைப்பு சகோதரியுடன் சிறிய அளவில் துவங்கி உள்ளேன். அதுபற்றி விரிவான விளக்கம் இதே இணையதளத்தில் மரம் பற்றி பயனுள்ள தகவல் எழுதும் போது உங்களிடம் இன்ஷாஅல்லாஹ் கூற ஆசைப்படுகிறேன்.
ஒவ்வொரு வரும் மரம் வளர்க்க வேண்டும் அதன் அவசியத்தை புரிந்துகொள்வீர். உங்கள் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தும் காய்கறி தோல், முட்டை ஓடு, வெங்காயத்தோல், பூண்டுத் தோல் இவைகளை தினமும் வீட்டுத் தோட்டத்தில் ஓர் குழியில் போட்டு மண் தூவி 48 நாட்கள் பின் மக்கிய இயற்கை உரமாக ஆக்கி பயனடையலாம். பயிர் நன்றாக செழித்து வளரும்.
உங்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில் சம்பாதித்து அசையாத வாடகை தரும் சொத்து வாங்குவது போல, மண்வளமிக்க தோட்டப்பகுதியில் நிலம் வாங்கி அதில் தென்னை, வாழை, நெல்லி, தேக்கு இன்னும் பல மரங்கள் வளர்க்கலாம். செய்வீர்களா?
விவசாயம் சம்பந்தமாக பசுமை விகடன், நவீன வேளாண்மை போன்ற இதழ்களை நமதூர் அரசு நூலகத்தில் வந்து படியுங்கள். விதை, மூலிகைசெடி, உரம், மரம் வாங்கும் இடங்களை தெளிவாக அறிவதோடு தோட்டபயிருக்கு அரசு தரும் மான்யம் பெறலாம். விழித்தெழுங்கள் மரம் வளர்க்க வருவாய் பெற!!
இவன் : O.L.முஹம்மது ஆரிப்
கொழும்பு ஸ்ரீ லங்கா
மெயிலில் வந்தவை
மரம் வளர்ப்பதால் மாசுகுறையும், மரம் வளர்ப்பதை சமுதாயக் கடமையாக ஆக்க வேண்டும். மரம் வளர்ப்பதால் மழைவரும், மண்கரையாமல் பூமியோடு பிடித்து உறுதி செய்யும், மரங்கள் கார்பன் வாய்வை உள்வாங்கி, பிராணவாயுவை வெளியிடுகிறது. வளர்ந்து செழித்து நிற்கும் மரம் பறவைகளின் சரணாலயமாகும்.
மரம் நட்டால் மட்டும் போதாது, அதை தினமும் பேணி பாதுகாக்க வேண்டும். மரக்கன்று நடும்போது நல்ல மண்வளத்தை உருவாக்க வேண்டும், ஒருமரம் வளர 4 அடி அகலமும், 4அடி நீளமும் இடம் இருந்தால் போதுமாது. வீட்டின் ஓரத்தில் மரம் வளர்த்தால் சுற்றுச் சூழல் மாசுபடாமல் தடுக்க முடியும். மர வளமே மனித சுகம் என்பதை அறிந்துகொள்.
சாலை ஓரத்தில் மரம் வளர்க்க சொல்கிறார்கள். சாலை ஓர மேலே மின்கம்பி, தொலைபேசி கம்பி இடையூராக இருப்பதாக கூறி மரம் வளர்க்க சொன்ன அரசே அதன் கிளைகளை வெட்டுகிறது. சாலை ஓரப்பகுதியில் தொலைபேசி வயர்கள், குடிநீர் குழாய்கள் போடும் போது பள்ளமாக்கி மரவேர்கள் அருந்து மரம் சாய்ந்து விடும் ஆபத்து ஏற்படுகிறது.
எங்கெல்லாம் மரம் வளர்க்கலாம்?
மரங்கள் வீட்டு தோட்டத்திலும், தொழிற்சாலை முன் பின் பகுதிகளிளும், பள்ளி, கல்லூரியை சுற்றிய பகுதிகளிலும், விளையாட்டு திடலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பள்ளிவாசலின் முன் பின் பகுதியில் காலி இடங்களிலும், கோவில், சர்ச் இவைகளை சுற்றிலும் மரம் வளர்க்கலாம். சுடுகாடு, முஸ்லிம் மையவாடி, அடக்கஸ்தலங்களிலும், அரசு, தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் இடமெல்லாம் மருத்துவ மூலிகை வேம்பு போன்றவைகளை வளர்க்கலாம்.
ஒரு மரம் வளர்த்தால் இரண்டு டிகிரி வெப்பம் குறையும். மரம் வளர்ப்பதால் பூமி வெப்பம் அடைவது குறையும். மரம் வளர்க்க நேரமில்லை என்ற வார்த்தை மனிதனை சோம்பேறி ஆக்குகிறது. துணிச்சல் இருந்தால் நேரம் தானாக வரும் மேற்கண்ட இந்த செய்தியை தினமணி கதிர் 12.06.2011-ல் மரம் முறிந்தால் மார்க்க உண்டு என்ற கட்டுரையிலிருந்து எடுத்தவை.
நாட்டை நேசிக்கின்றவர் மரம் வளர்க்க வேண்டுமா?
நாட்டுக்கு தேவை, பயிர் செழிக்க மழை - மழையை அழைப்பது மரம் அதனால் எல்லோரும் மரம் வளர்ப்போம். நாட்டை செழிப்பாய் வளச்சியடைய செய்வோம். நமதூரை பொறுத்தவரை வீட்டுத் தோட்டத்தில் மரம் வளர்ப்பதை கவனிக்காமல் காலம் தள்ளுகின்றனர். சிலரது வீட்டுத் தோட்டத்தில் மரம் வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் ஊற்ற வேளையால். அவர்கள் சரியாக தண்ணீர் பாச்சினார்களா செடி, கொடி, மரம் நன்றாக வளர்ந்துள்ளதா - சத்துள்ள மரம் போடப்பட்டதா? வைத்த மரம் பூவிட்டதா - காய்த்து கனிந்ததா? என்று பலர் கவனிப்பதில்லை. பிள்ளையை பெற்றால் கண்ணீரு, தென்னையை பெற்றால் இளநீர் என்று கவிஞர் சும்மவா பாடினார்.
நம்வீட்டு தோட்டத்து மணலை முதலில் பரிசோதனை செய்து பின் நமக்கு அன்றாட தேவையான தக்காளி, வெண்டை, மிளகாய், கத்திரி, புடலை, பாகை, பீக்கு, கருவேப்பிலை போன்ற செடிகளையும், கொடிகளையும் வளர்த்து நாம் பயனடையலாம்.
லட்சக்கணக்கில் வருவாய்தரும் மரம்!
விவசாய பண்ணை அதிகாரியின் ஆலோசனைபடி நம் வீட்டு தோட்டத்தில் தேக்கு கன்று ஐந்தடி இடைவெளிவிட்டு வளர்க்கலாம், 30 நாற்பது வருடங்களுக்கு பின் ஒவ்வொரு தேக்கும் பலன் தரும் இன்று ஓய்வு பெற்ற 65 வயதானவர்கள் வீட்டு தோட்டத்தில் தேக்கு வளர்த்தால் தனது வாரிசுகளுக்கு பின் கோடிகணக்கில் முதலீடு தரும்.
மூலிகைச்செடி வளர்க்கலாம் :
அழிந்து வரும் தூதுவாளை, கண்டங்கத்தரி, சீந்திக்கொடி, கீழா நெல்லி, ஓமம், துளசி, தும்பை, அவரி, நாவரி போன்றவைகளை நம்வீட்டு தோட்டத்தில் விளையாட்டாக வளர்த்து பணம் சம்பாதிக்கலாம். இது மட்டுமல்லாது முருங்கை, எழுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மா, பப்பாளி போன்றவைகளையும் அதிகமாக பயிற்செய்தால் அருகிலுள்ள தெருகடைக்காரர்களிடம் விற்க முடியும்.
ஆனால் ஒன்று மட்டுமே நினைவில் வையுங்கள் (செடி வளர்க்காவிடிலும் பராவாயில்லை மரங்களை வெட்டாதீர்) மரம்தான் மழை அழைக்கும், நாடு செழிக்க வைக்கும். மரம் வளர்ப்போம் என்ற அமைப்பை ஓர் பொது அமைப்பு சகோதரியுடன் சிறிய அளவில் துவங்கி உள்ளேன். அதுபற்றி விரிவான விளக்கம் இதே இணையதளத்தில் மரம் பற்றி பயனுள்ள தகவல் எழுதும் போது உங்களிடம் இன்ஷாஅல்லாஹ் கூற ஆசைப்படுகிறேன்.
ஒவ்வொரு வரும் மரம் வளர்க்க வேண்டும் அதன் அவசியத்தை புரிந்துகொள்வீர். உங்கள் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தும் காய்கறி தோல், முட்டை ஓடு, வெங்காயத்தோல், பூண்டுத் தோல் இவைகளை தினமும் வீட்டுத் தோட்டத்தில் ஓர் குழியில் போட்டு மண் தூவி 48 நாட்கள் பின் மக்கிய இயற்கை உரமாக ஆக்கி பயனடையலாம். பயிர் நன்றாக செழித்து வளரும்.
உங்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில் சம்பாதித்து அசையாத வாடகை தரும் சொத்து வாங்குவது போல, மண்வளமிக்க தோட்டப்பகுதியில் நிலம் வாங்கி அதில் தென்னை, வாழை, நெல்லி, தேக்கு இன்னும் பல மரங்கள் வளர்க்கலாம். செய்வீர்களா?
விவசாயம் சம்பந்தமாக பசுமை விகடன், நவீன வேளாண்மை போன்ற இதழ்களை நமதூர் அரசு நூலகத்தில் வந்து படியுங்கள். விதை, மூலிகைசெடி, உரம், மரம் வாங்கும் இடங்களை தெளிவாக அறிவதோடு தோட்டபயிருக்கு அரசு தரும் மான்யம் பெறலாம். விழித்தெழுங்கள் மரம் வளர்க்க வருவாய் பெற!!
இவன் : O.L.முஹம்மது ஆரிப்
கொழும்பு ஸ்ரீ லங்கா
மெயிலில் வந்தவை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
நன்றி ...நல்ல பதிவு... :here: @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» மரம் வளர்ப்போம் - ஹைகூ
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» மரம் வளர்ப்போம் - ஹைகூ
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|