Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
2 posters
Page 1 of 1
சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
புகைப்படம்எடுக்கப்படுவதில்லை...உருவாக்கப்படுகிறது! - இதுதான் நான் போட்டோகிராபியில் கற்ற முதல் பாடம் என்கிறார் சென்னையில் பிறந்து வளர்ந்த சுபாஷிணி ஸ்ரீகுமார்.
சிறுவயதிலிருந்தே சூரிய ஒளி மீதும் வண்ணங்களின் மீதும் ஆர்வம் இருந்தாலும், கேமராவைத் தொட்டுத் தூக்கியதே இரண்டு வருடங்களுக்கு முன்புதான் என்பதை நம்புவது சிரமமாக இருக்கிறது - சுபா எடுக்கிற படங்களைப் பார்க்கும் போது!
வெளிப்புறங்களில் நிறைய ஒளிப்படங்கள் எடுத்திருந்தாலும் கூட இன்டோர் போட்டோகிராபியிலேயே இவருக்கு அதிக லயிப்பு. அதில் ஒளியைக் கையாளுவது சவாலான விஷயம். பொதுவாகவே எல்லாவற்றிலும் நேர்த்தியை எதிர்பார்க்கும் தன் இயல்பே, தனது படங்களிலும் ஒரு இயல்பான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நினைக்கிறார் சுபா. அதிகாலையில் சூரிய ஒளியைப் பார்க்கும்போதெல்லாம் கேமராவைத் தேடுமாம் இவரது மனம்.
எப்போதும் ஒளி மற்றும் ஃப்ரேமிங்கில் மிக கவனமாக இருப்பது சுபாவின் வழக்கம். ‘‘என் வீட்டின் மீதான நேசம் எனது ஒளிப்படங்களிலும் பிரதிபலிக்கின்றன. வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களிலும் அக்கறை செலுத்துகிற குணமும், நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் ரசிக்கிற மனோபாவமும் கூட புகைப்படங்களின் கருக்களுக்கும் நேர்த்திக்கும் காரணிகள் என நம்புகிறேன்’’ என்கிற சுபா, தொடக்கத்தில் கேனன் டிஜிட்டல் கேமராவையே பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இப்போது நிகான் ரூ5100க்குத் தாவி விட்டார். சில மாதங்களுக்கு முன் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 35னீனீ லென்ஸ் வாங்கி, அடுத்த கட்டத்துக்குத் தன் கேமராவை நகர்த்தியிருக்கிறார். “புகைப்படக்கலையில் பல பிரிவுகள் இருந்தாலும், என்னை ஈர்ப்பது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் படங்களே. நான் எடுக்கும் படங்களில் ஒன்றுகூட பார்ப்பவர் மனதை வாடச் செய்யவோ, சோக உணர்ச்சியை எழுப்பும்படி இருக்கவோ கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்துவேன்.
ஃப்ளிக்கர் இணைய தளத்தில் மற்றவர்கள் எடுக்கிற படங்களை ஆழ்ந்து கவனித்துக் கற்றுக்கொள்ளவே எனக்கு 6 மாதங்கள் ஆனது. அதன் பிறகே என் படங்களை அத்தளத்தில் பதிவேற்றினேன். ஃப்ளிக்கர் நண்பர்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமுமே என்னுள் இருந்த புகைப்படத் திறனை வெளிக் கொண்டு வந்தன. என் ஆர்வத்தை அதே அளவு ஆர்வத்துடன் உற்சாகப்படுத்திய கணவரும் பெரிய பக்க பலமாக இருந்தார்.
அன்றாட வாழ்வில், என் வீட்டிலேயே நான் பார்க்கும் காட்சிகளை, என் மனதில் அந்த நொடியில் தோன்றும் எண்ணத்தின் அடிப்படையில் பதிவு செய்வது பிடித்தமான விஷயம். இயல்பான அழகுணர்ச்சியும் விடாமுயற்சியும் ஒரு நல்ல புகைப்படம் எடுக்க இன்றியமையாதது. துறை குறித்து நிறைய புத்தகங்கள் படிப்பதும் அவசியமானது” என அனுபவங்களைப் பகிர்கிறார் சுபா.
பத்துக்கும் அதிகமான இவரது படங்கள் ஃப்ளிக்கரில் ‘எக்ஸ்ப்ளோர்’ ஆகியிருப்பதும், இவர் எடுத்த சில படங்களை Getty Images தேர்ந்தெடுத்து விற்பனைக்கு வைத்திருப்பதும், சுபாவின் படைப்பாற்றலுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள். “நான் புகைப்படங்களை நேசிப்பதற்கு முக்கிய காரணம், அவை எனக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதுதான்” என மகிழ்ச்சி பொங்கச் சொல்லும் சுபாவின் ஒளிப்படங்களை இங்கே ரசிக்கலாம்...
சிறுவயதிலிருந்தே சூரிய ஒளி மீதும் வண்ணங்களின் மீதும் ஆர்வம் இருந்தாலும், கேமராவைத் தொட்டுத் தூக்கியதே இரண்டு வருடங்களுக்கு முன்புதான் என்பதை நம்புவது சிரமமாக இருக்கிறது - சுபா எடுக்கிற படங்களைப் பார்க்கும் போது!
வெளிப்புறங்களில் நிறைய ஒளிப்படங்கள் எடுத்திருந்தாலும் கூட இன்டோர் போட்டோகிராபியிலேயே இவருக்கு அதிக லயிப்பு. அதில் ஒளியைக் கையாளுவது சவாலான விஷயம். பொதுவாகவே எல்லாவற்றிலும் நேர்த்தியை எதிர்பார்க்கும் தன் இயல்பே, தனது படங்களிலும் ஒரு இயல்பான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நினைக்கிறார் சுபா. அதிகாலையில் சூரிய ஒளியைப் பார்க்கும்போதெல்லாம் கேமராவைத் தேடுமாம் இவரது மனம்.
எப்போதும் ஒளி மற்றும் ஃப்ரேமிங்கில் மிக கவனமாக இருப்பது சுபாவின் வழக்கம். ‘‘என் வீட்டின் மீதான நேசம் எனது ஒளிப்படங்களிலும் பிரதிபலிக்கின்றன. வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களிலும் அக்கறை செலுத்துகிற குணமும், நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் ரசிக்கிற மனோபாவமும் கூட புகைப்படங்களின் கருக்களுக்கும் நேர்த்திக்கும் காரணிகள் என நம்புகிறேன்’’ என்கிற சுபா, தொடக்கத்தில் கேனன் டிஜிட்டல் கேமராவையே பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இப்போது நிகான் ரூ5100க்குத் தாவி விட்டார். சில மாதங்களுக்கு முன் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 35னீனீ லென்ஸ் வாங்கி, அடுத்த கட்டத்துக்குத் தன் கேமராவை நகர்த்தியிருக்கிறார். “புகைப்படக்கலையில் பல பிரிவுகள் இருந்தாலும், என்னை ஈர்ப்பது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் படங்களே. நான் எடுக்கும் படங்களில் ஒன்றுகூட பார்ப்பவர் மனதை வாடச் செய்யவோ, சோக உணர்ச்சியை எழுப்பும்படி இருக்கவோ கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்துவேன்.
ஃப்ளிக்கர் இணைய தளத்தில் மற்றவர்கள் எடுக்கிற படங்களை ஆழ்ந்து கவனித்துக் கற்றுக்கொள்ளவே எனக்கு 6 மாதங்கள் ஆனது. அதன் பிறகே என் படங்களை அத்தளத்தில் பதிவேற்றினேன். ஃப்ளிக்கர் நண்பர்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமுமே என்னுள் இருந்த புகைப்படத் திறனை வெளிக் கொண்டு வந்தன. என் ஆர்வத்தை அதே அளவு ஆர்வத்துடன் உற்சாகப்படுத்திய கணவரும் பெரிய பக்க பலமாக இருந்தார்.
அன்றாட வாழ்வில், என் வீட்டிலேயே நான் பார்க்கும் காட்சிகளை, என் மனதில் அந்த நொடியில் தோன்றும் எண்ணத்தின் அடிப்படையில் பதிவு செய்வது பிடித்தமான விஷயம். இயல்பான அழகுணர்ச்சியும் விடாமுயற்சியும் ஒரு நல்ல புகைப்படம் எடுக்க இன்றியமையாதது. துறை குறித்து நிறைய புத்தகங்கள் படிப்பதும் அவசியமானது” என அனுபவங்களைப் பகிர்கிறார் சுபா.
பத்துக்கும் அதிகமான இவரது படங்கள் ஃப்ளிக்கரில் ‘எக்ஸ்ப்ளோர்’ ஆகியிருப்பதும், இவர் எடுத்த சில படங்களை Getty Images தேர்ந்தெடுத்து விற்பனைக்கு வைத்திருப்பதும், சுபாவின் படைப்பாற்றலுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள். “நான் புகைப்படங்களை நேசிப்பதற்கு முக்கிய காரணம், அவை எனக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதுதான்” என மகிழ்ச்சி பொங்கச் சொல்லும் சுபாவின் ஒளிப்படங்களை இங்கே ரசிக்கலாம்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
வாவ்..அப்ப சூரியனை பார்த்திக்கொண்டே இருப்பேன்..
நல்ல யோசனை தம்பி...
நல்ல யோசனை தம்பி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
சூரியனை பார்த்திருந்தால் சேனையில் உலா வர முடியாது அதனால் இங்கு வாருங்கள்.அச்சலா wrote:வாவ்..அப்ப சூரியனை பார்த்திக்கொண்டே இருப்பேன்..
நல்ல யோசனை தம்பி...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
சூரியனை பகைத்துக்கொள்ள கூடாது..அப்பரம் இருளில் இருக்க நான் வரல..*சம்ஸ் wrote:சூரியனை பார்த்திருந்தால் சேனையில் உலா வர முடியாது அதனால் இங்கு வாருங்கள்.அச்சலா wrote:வாவ்..அப்ப சூரியனை பார்த்திக்கொண்டே இருப்பேன்..
நல்ல யோசனை தம்பி...
நான் ஒரு சூரியனைப்போன்று என்றும் ஒளிரும் ஒரு அற்புத பெண்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
» காய்கறிகளை கண்டாலே தூரம் ஓடும் குழந்தைகளுக்கு
» உற்சாகம்-
» காலையில் உற்சாகம்… ஏன்?
» உற்சாகம்! சிறுகதை) -
» காய்கறிகளை கண்டாலே தூரம் ஓடும் குழந்தைகளுக்கு
» உற்சாகம்-
» காலையில் உற்சாகம்… ஏன்?
» உற்சாகம்! சிறுகதை) -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|