சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா? Khan11

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

2 posters

Go down

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா? Empty விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

Post by rammalar Sun 17 Mar 2013 - 17:59


“வாரம் ஒரு நாளோ, மாதம் ஒரு நாளோ விரதம் இருப்பது உடலுக்கு நல்லது’

-
– இந்தியாவில் இருக்கும் பல கோடி மக்களின் நம்பிக்கை இதுதான். ஆனால் அதில்
உள்ள நன்மை, தீமைகளைப் புரிந்து கொள்ளாமலே பலர் விரதம் இருக்கிறார்கள்.
நோஞ்சானாக இருப்பார். “நான் இன்னைக்கு பச்சைத் தண்ணி கூட குடிக்க
மாட்டேன்.. விரதம் இருக்கேன்’ என்பார். யார் யார்? எது எதற்கு? எப்படி?
விரதம் இருப்பது? என்ற முறை உள்ளது.
-
அது தெரியாமல், உடல் ஆரோக்கியத்திற்கு
உலை வைக்கும் அளவிற்கு கண்மூடித்தனமாக விரதம் இருக்கிறார்கள். அது பெரிய
ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.
-
ஒரு நாள் வயிறைக் காயப் போட்டால் உடல் உறுப்புகளில் உள்ள கழிவுகள்
சுத்திகரிக்கப்படும். ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுத்தால் உடல்
புத்துணர்ச்சி பெறும் என்பது உண்மைதான். ஆனால் அது முறைப்படி விரதம்
இருப்பவர்களுக்குதான்.
-
எந்த வயதினர் விரதம் இருக்கலாம்?

-
15 வயதுக்குக் குறைவானவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள், கடுமையான உடல்
உழைப்பு உள்ளவர்கள், வெளியூரில் வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள்
தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் எந்த வகையான விரதமும்
இருக்கக் கூடாது. விரதம் இருக்கும் போது, நம் உடலில் உள்ள உயிரி ரசாயனங்கள்
வயிற்றுக்குக் கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகளும் முதியவர்களும்
இறந்து போக வாய்ப்பு உண்டு.
-
நீண்ட நாட்கள் விரதம் இருந்தால் என்னாகும்?

-
நாம் உண்ணும் உணவானது முதலில் குளூக்கோஸாகவும் கொழுப்பாகவும் அமினோ
அமிலமாகவும் பிரித்து எடுக்கப்பட்டு விடும். இதில் குளுக்கோஸ்தான் மிக
முக்கியம். நம் உடலுக்குத் தேவையான சக்தி இதிலிருந்துதான் எடுக்கப்படுகிறத.
இப்போது நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். சிறிது நேரத்தில் சோர்வு தட்டும்.
அதாவது சக்தி இழக்க நேரிடும். அந்த சக்தியை உடல் சேமித்து வைத்துள்ள
குளுக்கோஸை கரைத்துத்தான் உடலானது எடுத்துக் கொள்ளும்.
-
குளுக்கோஸை தீர்ந்த
பின்னர் உடலில் உள்ள கொழுப்பை எடுத்துக் கொள்ளும். இவை இரண்டும் தீர்ந்த
பின்னர் அதீத பசி எடுக்கும். அப்போதும் உணவு உண்ணாமல் விரதத்தைத்
தொடர்ந்தால் தசைகள் வளர்சிதை மாற்றமடைந்து, தோல் சுருங்கி முகம் வாடத்
தொடங்கிவிடும்.
உடலில் எலக்ட்ரோலைட் குறைந்தவிடும். இதனால் இதயம் வேகமாகத் தாறுமாறாக
துடிக்கத் தொடங்கும். சிறுநீரகம் சரிவர வேலை செய்யாமல் போய்விடும். மேலும்
பட்டினி தொடர்ந்தால் மரணம் கூட சம்பவிக்கும்.
-
விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

-
கொழுப்பையும் இரத்தத்தையும்ண சுத்திகரிக்க விரதம் இருப்பத நல்லது என்றே
இப்போது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் புற்றுநோய், இதய நோய்,
நீரிழிவு நோய், நோய் எதிர்ப்புக் குறைபாடு ஆகிய குறைகளை நிவர்த்தி
செய்யலாம் என்கிறார்கள்.
-
உடல் எடையைக் குறைக்க விரதம் இருக்கிறார்களே அது சரியா?

-
உடல் எடையைக் குறைக்க விரதம் இருப்பது சரியல்ல. உணவு சாப்பிடாத அந்த
நாட்களில் அவர்கள் கோபப்படுவதும் எரிச்சலடைவதும்தான் அதிகரிக்கும் இதனால்
உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. விரதம் முடிந்த பின்னர் பசியை
அடக்க அதிகளவு உணவை உண்ணத் தொடங்கிவிடுகிறார்கள். அது அவர்களை மேலும் உடல்
எடையைக் கூட்ட வைக்கிறது.
-
சரி, விரதம் எப்படி இருந்தால் நல்லது?

-
1. குறைந்தளவு உணவு அதாவது ஒருவேளை அல்லது இரு வேளை சாப்பிடாமல் விரதம்
இருப்பது நல்லது. இதனால் உடலின் இன்சுலின் சுரப்பது, கொழுப்புச் சத்து
குறைவது, எடை குறைவது ஆகிய நன்மைகள் ஏற்படும்.
-
2. மன அழுத்தம், சோர்வு நீங்க குறைந்தபட்ச அளவில் வயிற்றைப் பட்டினி போடுவது நல்லது.
-
3. தண்ணீர் கூட குடிக்காமல், விரதம் இருக்கக் கூடாது. உடலில் உள்ள கழிவுகளை
அகற்றும் பணியை தண்ணீர்தான் செய்யும். தண்ணீர் குடிக்காமல் விரதம்
இருந்தால், கழிவுகள் உடலிலேயே தங்கிவிடும்.
-
4. பெண்கள் மதம், பக்தி, நம்பிக்கை அடிப்படையில் அடிக்கடி விரதம் இருப்பது
கூடாது. அது ரத்தசோகை நோயை உண்டாக்கும். சிலருக்கு சர்க்கரை நோய் வர
அதுவும் ஒரு காரணமாகிவிடும்.
-
5. வாரமோ மாதமோ ஒருநாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம்
இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடையச் செய்யும்.
பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும். அதனால் இளமையுடன் இருக்க முடியும்
என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
-
————————–
- இரா. மணிகண்டன்
நன்றி: குமுதம் செய்திகள்:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா? Empty Re: விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 22:47

சிறந்த தகவலுக்கு நன்றி அண்ணா தொடருங்கள் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum