சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

நபிகளாரின் பணிவு Khan11

நபிகளாரின் பணிவு

2 posters

Go down

நபிகளாரின் பணிவு Empty நபிகளாரின் பணிவு

Post by நண்பன் Fri 10 May 2013 - 0:32

நபிகளாரின் பணிவு

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிக நற்குணமுடையவராக பூரண தோற்ற முடையவர்களாக இருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தது போன்று நபியவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது. (நூல் : முஸ்லிம்)

“நிச்சயமாக நான் நற்குணங்களை பூர்த்தியாக்கவே அனுப்பப் பட்டுள்ளேன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

நபியவர்களின் பணிவுத் தன்மைகளில் உள்ளதுதான். அதிகப்புகழ், அளவு கடந்த பாராட்டுதல் போன்றவைகளை விரும்ப வில்லை. உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், மர்யமுடைய மகன் ஈஸாவைப் புகழ்ந்தது போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நிச்சயமாக நான் ஓர் அடியானே. எனவே, என்னை அல்லாஹ்வின் அடியான், அவனது தூதர் என்றே கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவுத்)

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: சில மனிதர்கள், நபியவர்களை அல்லாஹ்வின் தூதரே! எங்களது நல்லவரே’ எங்களது நல்லவரின் மகனே! எங்களது தலைவரே! எங்களது தலைவரின் மகனே! என அழைத்தனர். அதற்கு நபியவர்கள்: மனிதர்களே! உங்களது வழமையான சொல்லால் அழையுங்களே தவிர ஷைத்தான் உங்களை வழி கெடுக்கத் தேட வேண்டாம். நான் முஹம்மத், அல்லாஹ்வின் அடியான், அவனது தூதர், அல்லாஹ் எனக்குக் கொடுத்த அந்தஸ்துக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்து வதை நான் விரும்பவில்லை எனக் கூறினார்கள்” (நூல் : அந்நஸாயி)

சில மனிதர்கள் நபி (ஸல்) அவர்களை அளவு கடந்து புகழ்கின்றனர். நபியவர்கள் மறைவானவற்றை அறிபவர், நலவும், தீங்கும் அவர்களின் கரங்களில் உள்ளது, தேவைகளை நிறைவேற்றுபவர், நோய்களைக் குணப்படுத்துபவர் எனக் கொள்கையாகவே கொண்டுள்ளனர். ஆனால் அல்லாஹ் இவைகளை நிராகரித்து கூறுகிறான். “நபியே! நீர் கூறும், அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு யாதொரு நன்மையையோ அல்லது தீமையையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன். மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன். (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டிராது. (அல்குர்ஆன் : 07:188)

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், எந்தவொரு மனிதனும், அவர்களிடத்தில் நபியவர்களை விட மிக விருப்பமானவர் எவருமில்லை. இவர்கள், நபியவர்களைக் கண்டு எழுந்து நிற்பதை நபியவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை அறிந்திருந்த காரணத்திற்காக எழுந்து நிற்கவுமாட்டார்கள். (நூல் : அஹ்மத்)

நபியவர்களின் பணிவு மென் மேலும் எடுத்துக்கூறப்படுவதை அவதானியுங்கள். நபியவர்களிடம் ஒரு பெண் வந்து, உங்களிடம் எனக்கு ஒரு தேவையுண்டு எனக் கூறினாள். அதற்கு நபியவர்கள், நீர் விரும்பும் மதீனாவின் எப்பாதையிலாவது அமர்ந்து கொள்! நானும் அமர்கிறேன். உனது கோரிக்கையை செவிமடுக்கிறேன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் பணிவுடையவர்களுக்கு இலக்கணமானவர்களாகத் திகழ்ந்தார்கள். அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஓர் ஆட்டின் விலா அல்லது காளை அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் விடையளிப்பேன். ஓர் ஆட்டின் விலா அல்லது கால் எனக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டாலும் அதை நான் பெற்றுக்கொள்வேன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)

ஒவ்வொரு காலத்திலும், நேரத்திலும் இடத்திலும் பெருமைக் காரர்களுக்கு தடையாக அவர்களின் பெருமையை, அவர்களின் உயர்வை கீழிறக்கும் நபி மொழிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. “எவருடைய உள்ளத்தில் கடுகளவேனும் பெருமை இருக்குமோ அவர்கள் சுவனம் நுழையமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

கடுகளவு பெருமை, கர்வம் இருந்தாலும் சரியே, அது நரகத்தின் பாதையாகவே இருக்கிறது. தனது நடையில் கர்வம் கொண்ட தற்பெருமையானுக்குரிய தண்டனையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முற்காலத்தில் ஒரு மனிதன் தனக்குப் பிடித்த ஆடையை அணிந்து கொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தவனை திடீரென அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்து விட்டான். அவன் மறுமை நாள் அவ்வாறே பூமிக்குள் குலுங்கிய படி அழுத்திச் சென்று கொண்டேயிருப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்கள் : புகாரி, முஸ்லிம்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிகளாரின் பணிவு Empty Re: நபிகளாரின் பணிவு

Post by Muthumohamed Fri 10 May 2013 - 10:32

நபிகளின் சந்ததியர் ஆனது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum