சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

எது மூட நம்பிக்கை Khan11

எது மூட நம்பிக்கை

2 posters

Go down

எது மூட நம்பிக்கை Empty எது மூட நம்பிக்கை

Post by rammalar Sat 7 Sep 2013 - 18:11

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும்
நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும்
பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள்
 எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய
 நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள்
கருதுகிறார்கள்.
--
நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை,
குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும்
கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே
ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை
ஏது?
-
நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக
ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார்
பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது?
திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்
அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள்.
அதன் கதி என்ன?
-
நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்
படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம்.
அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை
நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால்
மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.
-
ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப்
பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன்
மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை
எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆ
னால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே
மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.
-
தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே
ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு
கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி
பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.
-
"ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்'' என்பது
மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி
 வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ
நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று
சொல்வார்களானால், "நான் ஒரு மூடன்' என்று சொல்லிக்
கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.
-
முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில்
இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் "ஒன்றுமே
இல்லை' என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே
இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு
மயிர்க்காலையும் பார்த்து, ""இது அதுவாக இருக்குமோ?
என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச்
சாகிறான்.
-
"சுடு' என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று
பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி
தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள்
பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்... பகுத்தறிவு
மிஞ்சும்... நாடு மிஞ்சாது!
-
போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக்
கண்ணன் அதைத்தான் சொன்னான்.
-
"போர்' என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி
வெற்றிக்கு உதவாது' என்றான். கடைசியில் கண்ணன் மீது
மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத்
தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.
-
கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை
வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை
வலியுறுத்துகிறது.
கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.
தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.
-
"மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர்
 வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான
தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை
மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்த
வில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான்
வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு
இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!
-
------------------------------------------------------
By கவிஞர் கண்ணதாசன்
நன்றி: தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எது மூட நம்பிக்கை Empty Re: எது மூட நம்பிக்கை

Post by Muthumohamed Sun 8 Sep 2013 - 22:43

இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான்
வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு
இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!

அனைத்தும் அவன் செயல் நல்ல  பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum