Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
மரப்பெஞ்சு தந்த போதை…
4 posters
Page 1 of 1
மரப்பெஞ்சு தந்த போதை…
இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது என்று பெருமையடித்துக் கொள்ளும் அதே வேளையில் சென்ற மாதம் நடந்த இரு நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தால் யாருக்குமே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று மதுரை அருகில் உள்ள பள்ளி மாணவர்களின் செயல். மற்றொன்று அரசு மருத்துவமனை மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன தகவல்கள்.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்த்துவிட்டு இன்றைய அரசும், மக்களும் எத்தகைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சீர்தூக்கிப் பாருங்கள்.
மதுரை அருகில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்கள் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். அன்று சிலபேர் போதை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். கையில் காசு இல்லை. காசுக்காக யோசித்த போது அவர்கள் கண்களில் பட்டது அவர்கள் அமர்ந்து பாடம் கற்றுக்கொள்ளும் மரப்பெஞ்சு. பள்ளி விட்டு அனைவரும் போன பின்னர், மரப்பெஞ்சை துண்டாக உடைத்து, மரத்துண்டுகளை அருகில் உள்ள விறகுக் கடையில் விற்று டாஸ்மாக் கிறக்கத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் 12ம் வகுப்பு மாணவர்கள்.
கோவையில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டுவந்த போது இறந்துவிட்டார். அவருக்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் ஆண், பெண் என்று இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இப்போது மனைவியும், குழந்தைகளும் பராமரிக்க வசதியற்ற நிலையில் இருக்கிறார்கள். சாலை விபத்துக்குக் காரணம் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதுதான்.
மருத்துவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர், ஆண்டுதோறும் இந்தியாவின் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் மரணமடைகின்றார்கள். அவர்களில் 70% பேர் மது போதையிலேயே விபத்துக்குள்ளானவர்கள். எங்கள் மருத்துவமனைக்கு தினசரி 10 முதல் 15 பேர் தலையிலும், தண்டுவடத்திலும் அடிபட்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் அவர்கள் 40% பேர் போதையில் விபத்துக்குள்ளானவர்கள். பெரும்பாலும் அவர்கள் மயக்கநிலையில் தான் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்” என்றார்.
நான் இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்வதில் மிகுந்த பெருமை அடைகிறார்களோ இல்லையோ, “நான் குடிக்கும் மகன்” என்று சொல்வதில் மிகுந்த பெருமை அடைகிறார்கள். இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், எல்லாவற்றிலும் சம உரிமை கேட்கும் பெண்கள், குடிப்பதற்கும் சம உரிமை எடுத்துக் கொண்டு ஆண்களுக்கு நிகராக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக, ஒரு மனிதன் பிறக்கும்போதே எந்த ஒரு பழக்கத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. தான் பார்த்து வளரும் சூழ்நிலைகளும், சுற்றியுள்ள மனிதர்களும் தான் ஒருவனுக்கு பல விசயங்களைக் கற்றுத் தருகிறது. அப்படிப் பார்க்கும்போது இன்றைய நிலையில் மனிதர்களும், சூழ்நிலைகளும் மிக மோசமாகவே இருக்கிறது.
அரசுக்கு வருமானத்தைத் தருகிறது என்பதற்காக அரசு விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மதுக்கடைகளை ஒரு தெரு பாக்கியில்லாமல் திறந்துள்ளனர். மக்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள், பள்ளிகள், கோயில்கள், பெண்கள் அதிகம் கூடும் இடங்கள் என்ற பாகுபாடை அரசு கண்டுகொள்வதில்லை. அதன் பயன்தான் இன்று பள்ளியில் மரப்பெஞ்சை மாணவர்கள் விற்று சரக்கு வாங்கி அரசு வருமானத்தை உயர்த்தும் அளவிற்குப் போயுள்ளது. இது போன்று மக்களைக் கெடுத்து வாழ்வை இழக்க வைக்கும் சம்பாத்தியம் அரசுக்குத் தேவையா? இப்படிக் காசு பண்ணும் அரசுக்கும், குடிகெடுக்கும் கந்துவட்டிக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
இன்றைய திரைப்படங்கள் இப்பழக்கத்திற்கான வரவேற்பை பலப்படுத்துவதைப் போல, மிகப்பிரபலமான, இளசுகளின் மனங்கவர்ந்த நடிகர்கள் தங்கள் படங்களில் தவறாமல் மது அருந்தி ஆட்டம் போடுவதும், அப்பாவுடன் சேர்ந்து மது அருந்துவதும், அதை நியாயப்படுத்தி பேசுவதும் நம் வளரும் தலைமுறையினரின் மனதில் மது அருந்துவதை நியாயப்படுத்துகிறது. அதுபோன்ற காட்சிகளைக் காசுக்காக வைக்கும் இயக்குநர்கள், பணத்துக்காக அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் காசுக்காக தெருதோறும் மதுபானக்கடைகளைத் திறக்கும் அரசுக்கும் காசுக்காகத் தன்னை கொடுப்பவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
எத்தனையோ குடும்பங்களை மட்டுமின்றி, நம் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் இந்த மது போதை தேவை தானா??? “மது விற்பவன் கார் சீட்டில், மது அருந்துபவன் தார் ரோட்டில்” என்பதற்கேற்ப தான் இந்த நாடு இருக்க வேண்டுமா??? முடிவு உங்கள் கையில்…
நன்றி:தன்நம்பிக்கை
இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்த்துவிட்டு இன்றைய அரசும், மக்களும் எத்தகைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சீர்தூக்கிப் பாருங்கள்.
மதுரை அருகில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்கள் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். அன்று சிலபேர் போதை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். கையில் காசு இல்லை. காசுக்காக யோசித்த போது அவர்கள் கண்களில் பட்டது அவர்கள் அமர்ந்து பாடம் கற்றுக்கொள்ளும் மரப்பெஞ்சு. பள்ளி விட்டு அனைவரும் போன பின்னர், மரப்பெஞ்சை துண்டாக உடைத்து, மரத்துண்டுகளை அருகில் உள்ள விறகுக் கடையில் விற்று டாஸ்மாக் கிறக்கத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் 12ம் வகுப்பு மாணவர்கள்.
கோவையில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டுவந்த போது இறந்துவிட்டார். அவருக்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் ஆண், பெண் என்று இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இப்போது மனைவியும், குழந்தைகளும் பராமரிக்க வசதியற்ற நிலையில் இருக்கிறார்கள். சாலை விபத்துக்குக் காரணம் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதுதான்.
மருத்துவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர், ஆண்டுதோறும் இந்தியாவின் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் மரணமடைகின்றார்கள். அவர்களில் 70% பேர் மது போதையிலேயே விபத்துக்குள்ளானவர்கள். எங்கள் மருத்துவமனைக்கு தினசரி 10 முதல் 15 பேர் தலையிலும், தண்டுவடத்திலும் அடிபட்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் அவர்கள் 40% பேர் போதையில் விபத்துக்குள்ளானவர்கள். பெரும்பாலும் அவர்கள் மயக்கநிலையில் தான் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்” என்றார்.
நான் இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்வதில் மிகுந்த பெருமை அடைகிறார்களோ இல்லையோ, “நான் குடிக்கும் மகன்” என்று சொல்வதில் மிகுந்த பெருமை அடைகிறார்கள். இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், எல்லாவற்றிலும் சம உரிமை கேட்கும் பெண்கள், குடிப்பதற்கும் சம உரிமை எடுத்துக் கொண்டு ஆண்களுக்கு நிகராக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக, ஒரு மனிதன் பிறக்கும்போதே எந்த ஒரு பழக்கத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. தான் பார்த்து வளரும் சூழ்நிலைகளும், சுற்றியுள்ள மனிதர்களும் தான் ஒருவனுக்கு பல விசயங்களைக் கற்றுத் தருகிறது. அப்படிப் பார்க்கும்போது இன்றைய நிலையில் மனிதர்களும், சூழ்நிலைகளும் மிக மோசமாகவே இருக்கிறது.
அரசுக்கு வருமானத்தைத் தருகிறது என்பதற்காக அரசு விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மதுக்கடைகளை ஒரு தெரு பாக்கியில்லாமல் திறந்துள்ளனர். மக்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள், பள்ளிகள், கோயில்கள், பெண்கள் அதிகம் கூடும் இடங்கள் என்ற பாகுபாடை அரசு கண்டுகொள்வதில்லை. அதன் பயன்தான் இன்று பள்ளியில் மரப்பெஞ்சை மாணவர்கள் விற்று சரக்கு வாங்கி அரசு வருமானத்தை உயர்த்தும் அளவிற்குப் போயுள்ளது. இது போன்று மக்களைக் கெடுத்து வாழ்வை இழக்க வைக்கும் சம்பாத்தியம் அரசுக்குத் தேவையா? இப்படிக் காசு பண்ணும் அரசுக்கும், குடிகெடுக்கும் கந்துவட்டிக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
இன்றைய திரைப்படங்கள் இப்பழக்கத்திற்கான வரவேற்பை பலப்படுத்துவதைப் போல, மிகப்பிரபலமான, இளசுகளின் மனங்கவர்ந்த நடிகர்கள் தங்கள் படங்களில் தவறாமல் மது அருந்தி ஆட்டம் போடுவதும், அப்பாவுடன் சேர்ந்து மது அருந்துவதும், அதை நியாயப்படுத்தி பேசுவதும் நம் வளரும் தலைமுறையினரின் மனதில் மது அருந்துவதை நியாயப்படுத்துகிறது. அதுபோன்ற காட்சிகளைக் காசுக்காக வைக்கும் இயக்குநர்கள், பணத்துக்காக அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் காசுக்காக தெருதோறும் மதுபானக்கடைகளைத் திறக்கும் அரசுக்கும் காசுக்காகத் தன்னை கொடுப்பவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
எத்தனையோ குடும்பங்களை மட்டுமின்றி, நம் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் இந்த மது போதை தேவை தானா??? “மது விற்பவன் கார் சீட்டில், மது அருந்துபவன் தார் ரோட்டில்” என்பதற்கேற்ப தான் இந்த நாடு இருக்க வேண்டுமா??? முடிவு உங்கள் கையில்…
நன்றி:தன்நம்பிக்கை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மரப்பெஞ்சு தந்த போதை…
எவ்வளவு சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மரப்பெஞ்சு தந்த போதை…
இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும்
விஷயங்கள்...பெரிதுபடுத்த தேவையில்லை...!!!
-
தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியால்,
ஊடகங்கள் மூலம் நமக்கு உடனுக்குடன் விபரங்கள்
தெரிய வருகின்றன...அவ்வளவே...!
-
அமெரிக்காவில் மாணவன் கையில் துப்பாக்கி
ஏந்தி ஆசிரியரகளையே சுட்டுத் தள்ளுகிறான்...
-
அந்த அளவில் இந்தியா எவ்வளோ மேல்...!!!)*
விஷயங்கள்...பெரிதுபடுத்த தேவையில்லை...!!!
-
தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியால்,
ஊடகங்கள் மூலம் நமக்கு உடனுக்குடன் விபரங்கள்
தெரிய வருகின்றன...அவ்வளவே...!
-
அமெரிக்காவில் மாணவன் கையில் துப்பாக்கி
ஏந்தி ஆசிரியரகளையே சுட்டுத் தள்ளுகிறான்...
-
அந்த அளவில் இந்தியா எவ்வளோ மேல்...!!!)*
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|