சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Khan11

சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

4 posters

Go down

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Empty சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

Post by Nisha Wed 12 Mar 2014 - 2:52

சிறுவர்களுக்கான கதை

பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும்

பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் நண்பர்களாம், ஒருநாள் பட்டிக்காட்டு எலி தன் பட்டணத்து சினேகிதனை தன் ஊருக்கு விருநதுக்கு அழைத்தது. விருந்துக்கு வந்த பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் சேர்ந்து அங்கிருந்த வயல் வெளிகளில் வளர்ந்திருந்த நெற்கதிர்களையும் ,காய்கனிகளையும் கொறித்து தின்று பயமில்லாமல் தம் இஷ்டம் போல் ஓடி விளையாடியது. . 

அப்போது பட்டணத்து எலி சொல்லியது... இதெல்லாம் ஒரு விருந்தா? சுவையே இல்லை!
வா உடனே பட்டணத்துக்கு... விருந்தென்றால் என்னவென்று காட்டுகிறேன் என்று தான்  இருந்த பட்டணத்துக்கு வரும்படிஅழைத்தது!

பட்டிக்காட்டு எலியும் சந்தோஷமாக பட்டிக்காட்டை விட்டு பட்டணம் புறப்பட்டு பட்டணத்து எலி ஒருபெரிய வீட்டிற்கு பின்னால் இருந்த பொந்தில வாழ்வதால் பட்டிகாட்டு எலியும் அங்கே போனது!
 
பட்டிக்காட்டு எலியை வா வா என மகிழ்ச்சியோடு வரவேற்ற பட்டணத்து எலி தனனை தேடி வந்த பட்டிக்காட்டு எலிக்கு விருந்து கொடுக்க அந்த பெரிய  வீட்டுக்குள் போய் வெண்ணெய் கேக்கு துண்டுகள் ரொட்டித்துண்டுகள் எல்லாம் திருடிக்கொண்டு   வந்ததும் ரெண்டு எலியு்மாக சேர்ந்து சாப்பிட உட்காநதது. அப்போது தீடீரென மியாவ் மீயாவ் என்று சத்தம் வரவே இரண்டு எலியும் பயந்து போய் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு ஓடி ஒளிந்தது்!

பூனை அந்தப்பக்கமா போனதும் திரும்பி வந்து சாப்பிட  அமர்வதும்   பூனை மியாவ் மியாவ் என வரும் போது  எலிகள் ஒளிவதுமாக நிம்மதியில்லாமலேபயந்து பயந்து மெதுவாக  சாப்பிட்டது!

கடைசியாக அந்தப்பக்கமா வந்த பூனை எலிகள் சாப்பிட்டுகொண்டிருந்த  பக்கமாக வந்து அங்கிருந்த சாப்பாட்டையெல்லாம் சாப்பிட்டே முடித்து விட்டது

எலிகளுக்கோகஷ்டப்பட்டு்திருடியும் சாப்பாடுகிடைக்கவில்லை  பசியோடிருந்த  பட்டிக்காட்டுஎலி சொல்லியது!

என் ஊர் சாப்பாடு பால் சீஸ் பிரெட்  போல் சுவையில்லாம இருந்தாலும். நிம்மதியாக சாப்பிடலாம் உன்னைப்போல பயந்து பயந்து சாப்பிட வேணாம். இதை பார்த்தா என் பட்டணம் பெரிது என்றாய்! சுதந்திரமில்லாமல் யாருக்கோ  பயந்து பயந்து வாழும் உன் வாழ்வும் ஒரு வாழ்வா..!
 நான் என் ஊருக்கே போகிறேன் என்று  வந்த அன்றே  தன் ஊரைத்தேடி  ஓடியே போயிற்றுதாம்.  !* 

இது நமக்கு என்ன  சொல்வது என்ன..

சொர்க்கமாயிருந்தாலும்  நம்மூரு போல வருமான்னு நீங்க  நினைக்கிறிங்க தானே!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Empty Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

Post by Nisha Thu 15 May 2014 - 10:32

குடியானவனும் நாரையும்.

ஒரு ஊரிலே ஒரு விவசாயக்குடியானவன் வசித்து வந்தான். அவனுக்கு அவன் நிலத்துக்கு பக்கத்திலிருந்த காட்டிலிருந்து வரும் பறவைகளால் பெரும் தொல்லை ஏற்பட்டது.அக்காட்டில் பறவைகள் அதிகம் இருந்ததனால் குடியானவன் வயலில் விதைகளை விதைத்து விட்டு அப்பால் சென்றதும் பெரும் கூட்டமாக பறந்து வரும் பறவைகள் அவனுடைய வயலில் உட்கார்ந்து மண்ணைக்கிளறி விதைக்கப்பட்ட விதைகளை கொத்தித்தின்று விடும்.

குடியானவன் பறவைகளை துரத்திதுரத்தி க்ளைத்து போனான்.அநேகமாக எல்லா விதைகளையும் பழங்களையும் பறவைகள் தினமும் வந்து தின்பதனால் அவன் மறுபடியும் நிலத்தை உழுது புது விதைக்ளை விதைக்கும் படியாகி விட்டது. அதற்கு முன்பாக குடியானவன் சமயோசிதமாக பறவைளை பிடிக்க எண்ணி பெரிய வலை கொண்டு வந்து வயலில் விரித்து விட்டான்.

மறு நாள் மீண்டும் பறவைகள் பறந்து வந்து வயலில் உட்கார்ந்தன. அதன் கால்கள் வலையில் சிக்குப்பட்டதனால் அத்தனை பறவைகளும் வலையில் சிக்கிக்கொண்டன். பறவைகளோடு கூட ஒரு நாரையும் சிக்கிக்கொண்டது.

குடியானவன் வலையில் அகப்பட்ட பறவைகளை பிடிக்க தொடங்கியவுடன் நாரை வேடனிடம்....நீங்கள் எனக்கு கருணை காட்டுங்கள்.நான் உங்களுக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை,நான் கோழியோ, கொக்கோ அல்லது விதைகளைத்தின்னும் பறவையோ இல்லை, நான் நாரை,வயல்களுக்கு தீங்கு விளைவிக்கும் புழுக்களை மட்டுமே சாப்பிடுவேன், என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சியது.

குடியானவன் தாங்க முடியாத கோபத்தோடு நீ சொல்வது சரிதான்,ஆனால் நீ இன்று பறவைகளோடு பிடி பட்டிருக்கிறாய். எனது விதைகளை தின்ற பறவைகளின் தோழன் தானே நீயும் நீ இவைகளுடன் வந்ததனால் இவைகளுடனான தண்டனையை நீய்ம் அனுபவி என்றான்.

பறவைகளோடு சேர்ந்து வசித்ததினால் நாரையும் தண்டனையை அனுபவித்தது.

இக்கதை நமக்கு சொல்வது என்ன தெரியுமா...
ஒரு மனிதன் தான் சார்ந்துள்ள மனிதர்களை கொண்டே கணிக்கப்படுகின்றான்.அவனையும் அவன் உடன் ஒத்தவர்கள் போன்றே மதிப்பிடுகின்றனர்.,கெட்டவர்களுடன் வசிப்பதால் கெடுதல் செய்யாதவர்களுக்கும் தண்டனையும் கெட்ட பெயரும் ஏற்படுகின்றது. அதனால் தான் தொல்லை தந்த பறவைகளுடன் நல்லது செய்யும் நாரையும் சேர்ந்து தண்டனை அடைந்தது போல் பல மனிதர்கள் வாழ்விலும் நடக்கிறது.நாம் சேரும் இடம் அறிந்து சேர வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Empty Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 May 2014 - 11:15

இது அனைவருக்கும் படிப்பினையான கதை நிச்சயமாக நாம் சார்ந்து வாழும் சமுகத்தை நல்லதாக தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் நாம் தவறு செய்யாவிட்டாலும் செய்பர்களுடன் இருந்தால் அது நாமும் செய்வதாக கருதப்படும்


சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Empty Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

Post by பானுஷபானா Thu 15 May 2014 - 15:27

நாரை கதை சூப்பர்.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Empty Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

Post by ந.க.துறைவன் Fri 16 May 2014 - 9:01

சிறுவர் கதை அருமை நிசா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Empty Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

Post by Nisha Wed 21 May 2014 - 8:38

நன்றிகள் பானு,
நன்றிகள் துறைவன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Empty Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

Post by Nisha Wed 21 May 2014 - 8:40

நன்றி கெட்ட மான்

ஒரு காட்டில் கலை மான் ஒன்று இருந்தது. அங்கு நிறைய புலவெளிகள் இருந்தன. அவற்றை உண்டு அம்மான் சுகமாக வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் அங்கு வந்த வேடன் ஒருவன் அம்மானைக்கண்டான்.அக்கொழுத்த மானை கொல்ல விரும்பினான். அம்புடன் அதைத்துரத்தினான். இது கண்டு பயந்த மான் வேகமாக ஓடி ஒரு பெரிய புதருக்குபின்னே மறைந்து கொண்டது.

மானைத்துரத்தி வந்த வேடன் தீடீரென் மான் மறைந்ததை கண்டு ஆச்சரியப்பட்டான்.இங்கும் அங்கும் அலைந்து தேடினான். மானைகாணாமல் அருகில் உள்ள பெரிய மரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறினான்.

மறைந்து ஒளிந்திருந்த மான் வேடனைக்காணாமல் தனது அபாயம் நீங்கியது என்று எண்ணியது. ஓடி வந்த களைப்பால் அதற்கு அதிகப்பசியாய் இருந்தது. தன்னை மறந்து அப்புதரிலுள்ள இலைகளை தின்று தீர்த்தது. அதனால் அம்மானை மறைத்த புதர் காலியாகி அது இருக்கும் இடம் வெளியில் நன்றாக தெரிந்தது. தற்செயலாய் அப்பக்கம் திரும்பிய வேடன் மானைக்கண்டான். உடனே அம்பால் அதைகொன்றான்.


இறக்கும் தருவாயில் மான் என் உயிரைகாப்பாற்றிய புதரின் இலைகளை நன்றி கெட்டு நான் தின்றதால் எனககு இத்தீங்கு வந்தது என தனக்குள் நினைத்த படியே உயிரை விட்டது.


இக்கதை நமக்கு சொல்வதென்ன.

நமக்கு உதவி செய்தவர்களை நாம் எப்போதும் மறக்ககூடாது.
நன்றி மறப்பது நல்லதல்ல.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Empty Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

Post by Nisha Fri 30 May 2014 - 23:44

அழகும் ஆபத்தும்

ஒரு குளத்தில் பல வகையான மீன்கள் வாழ்ந்து வந்தன. அவற்றின் குஞ்சுகள் கரையோரம் கூடி எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அதே போல் ஒரு நாள்;

ஏய் சிண்டு... என்னைப் பிடி பார்க்கலாம்.

என்கிட்டேயே சவாலா? இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன்.

அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருந்தது.

ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான்.

அவன் குரலை நீ கேட்டிருகிறாயா? அருவருப்பாக இருக்கும்.

அவன் நம்மைப் பார்த்தால் கொன்று விடுவான். வா போய்டலாம் என்று ஒரு குட்டி மீன் சொன்னதும், அனைத்தும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன.

உள்ளே செல்லும் போது ஒரு பெரிய மீன் கேட்டது; பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க?

கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு ? அதான்...

காகத்தாலே எந்த ஆபத்தும் இல்லே. உருவத்தை மட்டுமே வெச்சு ஒருத்தரைப் பற்றி தப்பா நினைக்கக் கூடாது.

உடனே மீன் குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம்.

அடுத்த நாள் வந்தது;

,குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது; அதை பார்த்த மீன் குஞ்சுகள்,
" ஏய் அங்கே பாரு வெள்ளையா... "

அட! என்ன பறவை அது?

வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா கச்சிதமா இருக்கு.

அடடே! அதனோட நடையைப் பாரேன்.

மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள்; அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா?

கொக்கு; ஓ! தொட்டுப் பாரேன்.

ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டினியா? என்றது.

மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. அது அசர வில்லை.

இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்தினுள் சென்றன.

அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.

மற்ற மீன் குஞ்சுகள் ; தாத்தா சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியடுத்து கொண்டன.

அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன.

இக்கதை நமக்கு சொல்வது என்ன தெரியுமா...
அழகுக்கு பின்னால் ஆபத்தும் இருக்குமாம். ஒய்யாரக்கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுவர் கதைகள்..   அழகும் ஆபத்தும் Empty Re: சிறுவர் கதைகள்.. அழகும் ஆபத்தும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum