Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
பான் கார்டு பெறுவதின் நன்மைகள்
2 posters
Page 1 of 1
பான் கார்டு பெறுவதின் நன்மைகள்
"முதலீடு பற்றி சொல்வதெல்லாம் இருக்கட்டும்;
எந்த முதலீட்டுக்குப் போனாலும் பான் கார்டு
இருக்குதானு கேட்கறாங்களே என்ன பண்றது?
-
போற போக்கைப் பார்த்தால் ஒரு கிலோ அரிசி
வாங்கனும்னாக்கூட பான் கார்டு வேணும்னு
சொல்வாங்க போல இருக்கு. எதுக்கு இந்த பான்
கார்டு தொந்தரவு..?' என்று சலிப்போடு சொன்னார்
வாக்கிங் செல்லும் வழியில் சந்தித்த பெரியவர்
ஒருவர்.
-
"தெனாலிராமன்' வடிவேலு பாணியில் "எல்லாம்
நன்மைக்கே!' என்றேன்.
-
பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார் அந்தப்
பெரியவர், "எது சார் நன்மை? போனவாரம், என்
பையன் பேர்ல பணம் போட பேங்குக்கு போனேன்.
ஐம்பதாயிரம் ரூபா அவசரமா வேணும்னு
கேட்டிருந்தான். பிள்ளைக்கு என்ன அவசரமோனு
அடிச்சுப் புடிச்சு பேங்குக்கு போனா உங்க பான்
நம்பர் என்னன்னு கேட்கிறாங்க.
-
என் புள்ளைக்கு நான் பணம் அனுப்பறதுக்கு
எதுக்குங்க நம்பர் எல்லாம் சொல்லணும்? அதுவும்
ஒளிச்சு மறைச்சு நான் கொடுக்கப் போறதில்லை.
என் மகனோட பேங்க் அக்கவுண்ட்லதான் கட்ட
போறேன். அதுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடி?' என்று
அவர் கேட்டபோது, பான் கார்டு என்ற விஷயம்
அவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளை
உணர முடிந்தது.
-
பான் கார்டு பற்றி நம்மில் பலருக்கு இருக்கும்
புரிதல் இதுதான். அது ஏதோ நம்மைக் கண்
காணிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கி இருக்கும்
சிஸ்டம்; நம்முடைய பணப் பரிமாற்றங்களைக்
கண்காணித்து வரி பிடிக்க செய்யப்பட்டிருக்கும்
ஏற்பாடு என்பதுதான் பலருடைய மனதில் இருக்கும்
எண்ணம்.
-
உண்மை அதுதானே? நீங்கள் எந்த அடிப்படையில்
எல்லாம் நன்மைக்கேனு சொன்னீங்க...? என்று
கேட்கிறீர்களா! வாங்க உட்கார்ந்து டீடெய்லா
பேசலாம்.
பெரிவருக்குச் சொன்ன விஷயங்களை உங்களுக்கும்
சொல்கிறேன்.
-
தன் மகனுக்காக ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டச்
சென்ற அந்தப் பெரியவர் அந்தப் பணத்தை யாரிடம்
இருந்து திருடிக் கொண்டு வரவில்லை. பொய்யான
வழியில் சம்பாதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது
இது என் பணம் என்று சொல்வதில் அவருக்கு என்ன
தயக்கம் வேண்டியிருக்கிறது?
அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால்
அவரால் வெளிப்படையாக தைரியமாகச் சொல்ல
முடியும் என்கிறபோது அதைச் சொல்வதில் என்ன
கஷ்டம்?
சரி, இப்படி யோசித்துப் பாருங்கள். அந்தப் பெரியவர்
ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டி விடுகிறார். மகனும்
அந்தப் பணத்தை எடுத்து தன் தேவைக்குப் பயன்
படுத்திக் கொள்கிறார். இந்தச் சூழலில் மகன் மீது
ஓர் ஊழல் குற்றச்சாட்டு வருகிறது. அதாவது ஒரு
நபரிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாயை லஞ்சமாக
வாங்கிவிட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறார்.
குற்றச்சாட்டைச் சொன்ன நபர், அந்த மகனுடைய
வங்கிக் கணக்கை பரிசோதித்துப் பாருங்கள் என்று
சொல்ல, வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் வரவு
வைக்கப்பட்ட விவரம் இருக்கிறது. உண்மையில்
அந்தப் பணம் அந்தப் பெரியவர் தன் மகனுக்காக
கொடுக்கப்பட்ட பணம். ஆனால் வங்கியைப்
பொறுத்த அளவில் யார் வேண்டுமானாலும் பணம்
கட்டலாம்.
சந்தேகம் வரக்கூடாது என்பதால் அப்பாவின்
பெயரில் அவர் ஊருக்கே போய் லஞ்சப் பணத்தை
வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று
குற்றம் சாட்டியவர் சொன்னால் நம்பித்தான் ஆக
வேண்டும். இதுவே, பெரியவர் தன் பான் கார்டு
எண்ணுடன் டெபாசிட் செய்திருந்தால் அது ஓர்
ஆதாரமாக இருந்திருக்கும்.
-
இதைச் சொன்னதும் அந்தப் பெரியவர் ஆடிப்
போய்விட்டார். "இதில் இவ்ளோ விஷயம் இருக்கா?'
என்றார். "பான் கார்டை வாங்கிவிட்டால் ஆண்டு
தோறும் வருமான வரி கட்ட வேண்டி வந்துவிடுமே,
அதுதான் பயமாக இருக்கிறது' என்று சொல்பவர்களா
நீங்கள்? நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். பான்
கார்டுக்கும் வருமான வரிக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
-
உங்களிடம் பான் கார்டு இருந்தால் நீங்கள் வரித்
தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
பான் கார்டு என்பது உங்களுடைய நிதி தொடர்பான
விஷயங்களை வரையறுத்துக் கொள்வதற்கான
ஏற்பாடுதான். அதனால் எல்லாருமே பான் கார்டு
வாங்கிக் கொள்வது நல்லது.
-
பான் கார்டு எல்லாருடைய வாழ்க்கையிலும்
முக்கியமான ஆதாரம். ஆமாம், நாங்கள் ரயில்வேயில்
பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு ஆதாரமாக
அதைத்தான் காட்டுவோம் என்கிறீர்களா? அ
-
அது ரயில்வே ஆதார அட்டை இல்லை. அதற்கான
பலன்களே வேறு! நிதி தொடர்பான தேவைகளுக்குப்
பயன்படுத்த வேண்டிய எண் அது.
-
மாத வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தால்
பரவாயில்லை. அது இல்லாமல் சேவைக்கான
பணத்தைப் பெறுபவராக இருந்தால் பணம் கொடுக்கும்
நிறுவனம் ட்டி.டி.எஸ் எனபபடும் அந்த
வருமானத்துக்கான வரியைப் பிடித்துக் கொள்ளும்
நடைமுறை இருக்கிறது.
-
அந்தத் தொகையை நம்முடைய கணக்கில் போட்டு
வைக்க வேண்டும். அதற்கு பான் கார்டு எண்தான்
உதவியாக இருக்கும். அப்படி பிடித்தம் செய்யப்பட்ட
தொகை எவ்வளவு என்பதை அறிய நமக்கு பான்
எண் அவசியம்.
-
இதோ வருமான வரி பற்றிய கருத்து வந்துவிட்டதே
என்று சொல்கிறீர்களா? உண்மைதான்! ஆனால்,
இது பெரிய அளவில் வருமானம் ஈட்டுபவர்களுக்கான
கருத்து. எவ்வளவு சம்பாதித்தாலும், வருமான வரிக்கு
பயந்து முறையாக கணக்கு காட்டாமல் சிலர்
இருப்பார்கள். அவர்களை வளைத்துக் கொண்டு
வருவதற்கான இந்த ஏற்பாடு. நிறுவனங்கள்
சம்பளமாகவோ சன்மானமாகவோ கொடுத்தால்
அதற்கான ட்டி.டி.எஸ். தொகையை பிடித்தம் செய்து
கட்டிவிட வேண்டும்.
சம்பளம் அல்லது சன்மானம் பெறுபவர் தன்
வருமான கணக்கைக் காட்டி அந்தத் தொகையை
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
-
ஆக, எப்படியாக இருந்தாலும் பான் கார்டு வாங்க
வேண்டும் என்பது முடிவாகிவிட்டது.
-
----------------------
- சி. முருகேஷ் பாபு
நன்றி: குமுதம்
எந்த முதலீட்டுக்குப் போனாலும் பான் கார்டு
இருக்குதானு கேட்கறாங்களே என்ன பண்றது?
-
போற போக்கைப் பார்த்தால் ஒரு கிலோ அரிசி
வாங்கனும்னாக்கூட பான் கார்டு வேணும்னு
சொல்வாங்க போல இருக்கு. எதுக்கு இந்த பான்
கார்டு தொந்தரவு..?' என்று சலிப்போடு சொன்னார்
வாக்கிங் செல்லும் வழியில் சந்தித்த பெரியவர்
ஒருவர்.
-
"தெனாலிராமன்' வடிவேலு பாணியில் "எல்லாம்
நன்மைக்கே!' என்றேன்.
-
பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார் அந்தப்
பெரியவர், "எது சார் நன்மை? போனவாரம், என்
பையன் பேர்ல பணம் போட பேங்குக்கு போனேன்.
ஐம்பதாயிரம் ரூபா அவசரமா வேணும்னு
கேட்டிருந்தான். பிள்ளைக்கு என்ன அவசரமோனு
அடிச்சுப் புடிச்சு பேங்குக்கு போனா உங்க பான்
நம்பர் என்னன்னு கேட்கிறாங்க.
-
என் புள்ளைக்கு நான் பணம் அனுப்பறதுக்கு
எதுக்குங்க நம்பர் எல்லாம் சொல்லணும்? அதுவும்
ஒளிச்சு மறைச்சு நான் கொடுக்கப் போறதில்லை.
என் மகனோட பேங்க் அக்கவுண்ட்லதான் கட்ட
போறேன். அதுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடி?' என்று
அவர் கேட்டபோது, பான் கார்டு என்ற விஷயம்
அவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளை
உணர முடிந்தது.
-
பான் கார்டு பற்றி நம்மில் பலருக்கு இருக்கும்
புரிதல் இதுதான். அது ஏதோ நம்மைக் கண்
காணிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கி இருக்கும்
சிஸ்டம்; நம்முடைய பணப் பரிமாற்றங்களைக்
கண்காணித்து வரி பிடிக்க செய்யப்பட்டிருக்கும்
ஏற்பாடு என்பதுதான் பலருடைய மனதில் இருக்கும்
எண்ணம்.
-
உண்மை அதுதானே? நீங்கள் எந்த அடிப்படையில்
எல்லாம் நன்மைக்கேனு சொன்னீங்க...? என்று
கேட்கிறீர்களா! வாங்க உட்கார்ந்து டீடெய்லா
பேசலாம்.
பெரிவருக்குச் சொன்ன விஷயங்களை உங்களுக்கும்
சொல்கிறேன்.
-
தன் மகனுக்காக ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டச்
சென்ற அந்தப் பெரியவர் அந்தப் பணத்தை யாரிடம்
இருந்து திருடிக் கொண்டு வரவில்லை. பொய்யான
வழியில் சம்பாதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது
இது என் பணம் என்று சொல்வதில் அவருக்கு என்ன
தயக்கம் வேண்டியிருக்கிறது?
அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால்
அவரால் வெளிப்படையாக தைரியமாகச் சொல்ல
முடியும் என்கிறபோது அதைச் சொல்வதில் என்ன
கஷ்டம்?
சரி, இப்படி யோசித்துப் பாருங்கள். அந்தப் பெரியவர்
ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டி விடுகிறார். மகனும்
அந்தப் பணத்தை எடுத்து தன் தேவைக்குப் பயன்
படுத்திக் கொள்கிறார். இந்தச் சூழலில் மகன் மீது
ஓர் ஊழல் குற்றச்சாட்டு வருகிறது. அதாவது ஒரு
நபரிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாயை லஞ்சமாக
வாங்கிவிட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறார்.
குற்றச்சாட்டைச் சொன்ன நபர், அந்த மகனுடைய
வங்கிக் கணக்கை பரிசோதித்துப் பாருங்கள் என்று
சொல்ல, வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் வரவு
வைக்கப்பட்ட விவரம் இருக்கிறது. உண்மையில்
அந்தப் பணம் அந்தப் பெரியவர் தன் மகனுக்காக
கொடுக்கப்பட்ட பணம். ஆனால் வங்கியைப்
பொறுத்த அளவில் யார் வேண்டுமானாலும் பணம்
கட்டலாம்.
சந்தேகம் வரக்கூடாது என்பதால் அப்பாவின்
பெயரில் அவர் ஊருக்கே போய் லஞ்சப் பணத்தை
வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று
குற்றம் சாட்டியவர் சொன்னால் நம்பித்தான் ஆக
வேண்டும். இதுவே, பெரியவர் தன் பான் கார்டு
எண்ணுடன் டெபாசிட் செய்திருந்தால் அது ஓர்
ஆதாரமாக இருந்திருக்கும்.
-
இதைச் சொன்னதும் அந்தப் பெரியவர் ஆடிப்
போய்விட்டார். "இதில் இவ்ளோ விஷயம் இருக்கா?'
என்றார். "பான் கார்டை வாங்கிவிட்டால் ஆண்டு
தோறும் வருமான வரி கட்ட வேண்டி வந்துவிடுமே,
அதுதான் பயமாக இருக்கிறது' என்று சொல்பவர்களா
நீங்கள்? நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். பான்
கார்டுக்கும் வருமான வரிக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
-
உங்களிடம் பான் கார்டு இருந்தால் நீங்கள் வரித்
தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
பான் கார்டு என்பது உங்களுடைய நிதி தொடர்பான
விஷயங்களை வரையறுத்துக் கொள்வதற்கான
ஏற்பாடுதான். அதனால் எல்லாருமே பான் கார்டு
வாங்கிக் கொள்வது நல்லது.
-
பான் கார்டு எல்லாருடைய வாழ்க்கையிலும்
முக்கியமான ஆதாரம். ஆமாம், நாங்கள் ரயில்வேயில்
பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு ஆதாரமாக
அதைத்தான் காட்டுவோம் என்கிறீர்களா? அ
-
அது ரயில்வே ஆதார அட்டை இல்லை. அதற்கான
பலன்களே வேறு! நிதி தொடர்பான தேவைகளுக்குப்
பயன்படுத்த வேண்டிய எண் அது.
-
மாத வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தால்
பரவாயில்லை. அது இல்லாமல் சேவைக்கான
பணத்தைப் பெறுபவராக இருந்தால் பணம் கொடுக்கும்
நிறுவனம் ட்டி.டி.எஸ் எனபபடும் அந்த
வருமானத்துக்கான வரியைப் பிடித்துக் கொள்ளும்
நடைமுறை இருக்கிறது.
-
அந்தத் தொகையை நம்முடைய கணக்கில் போட்டு
வைக்க வேண்டும். அதற்கு பான் கார்டு எண்தான்
உதவியாக இருக்கும். அப்படி பிடித்தம் செய்யப்பட்ட
தொகை எவ்வளவு என்பதை அறிய நமக்கு பான்
எண் அவசியம்.
-
இதோ வருமான வரி பற்றிய கருத்து வந்துவிட்டதே
என்று சொல்கிறீர்களா? உண்மைதான்! ஆனால்,
இது பெரிய அளவில் வருமானம் ஈட்டுபவர்களுக்கான
கருத்து. எவ்வளவு சம்பாதித்தாலும், வருமான வரிக்கு
பயந்து முறையாக கணக்கு காட்டாமல் சிலர்
இருப்பார்கள். அவர்களை வளைத்துக் கொண்டு
வருவதற்கான இந்த ஏற்பாடு. நிறுவனங்கள்
சம்பளமாகவோ சன்மானமாகவோ கொடுத்தால்
அதற்கான ட்டி.டி.எஸ். தொகையை பிடித்தம் செய்து
கட்டிவிட வேண்டும்.
சம்பளம் அல்லது சன்மானம் பெறுபவர் தன்
வருமான கணக்கைக் காட்டி அந்தத் தொகையை
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
-
ஆக, எப்படியாக இருந்தாலும் பான் கார்டு வாங்க
வேண்டும் என்பது முடிவாகிவிட்டது.
-
----------------------
- சி. முருகேஷ் பாபு
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: பான் கார்டு பெறுவதின் நன்மைகள்
அவசியமான பதிவு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|