சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பான் கார்டு பெறுவதின் நன்மைகள் Khan11

பான் கார்டு பெறுவதின் நன்மைகள்

2 posters

Go down

பான் கார்டு பெறுவதின் நன்மைகள் Empty பான் கார்டு பெறுவதின் நன்மைகள்

Post by rammalar Mon 19 May 2014 - 15:57

"முதலீடு பற்றி சொல்வதெல்லாம் இருக்கட்டும்;
எந்த முதலீட்டுக்குப் போனாலும் பான் கார்டு
இருக்குதானு கேட்கறாங்களே என்ன பண்றது?
-
போற போக்கைப் பார்த்தால் ஒரு கிலோ அரிசி
வாங்கனும்னாக்கூட பான் கார்டு வேணும்னு
சொல்வாங்க போல இருக்கு. எதுக்கு இந்த பான்
கார்டு தொந்தரவு..?' என்று சலிப்போடு சொன்னார்
வாக்கிங் செல்லும் வழியில் சந்தித்த பெரியவர்
ஒருவர்.
-
"தெனாலிராமன்' வடிவேலு பாணியில் "எல்லாம்
நன்மைக்கே!' என்றேன்.
-
பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார் அந்தப்
பெரியவர், "எது சார் நன்மை? போனவாரம், என்
பையன் பேர்ல பணம் போட பேங்குக்கு போனேன்.
ஐம்பதாயிரம் ரூபா அவசரமா வேணும்னு
கேட்டிருந்தான். பிள்ளைக்கு என்ன அவசரமோனு
அடிச்சுப் புடிச்சு பேங்குக்கு போனா உங்க பான்
நம்பர் என்னன்னு கேட்கிறாங்க.
-
என் புள்ளைக்கு நான் பணம் அனுப்பறதுக்கு
எதுக்குங்க நம்பர் எல்லாம் சொல்லணும்? அதுவும்
ஒளிச்சு மறைச்சு நான் கொடுக்கப் போறதில்லை.
என் மகனோட பேங்க் அக்கவுண்ட்லதான் கட்ட
போறேன். அதுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடி?' என்று
அவர் கேட்டபோது, பான் கார்டு என்ற விஷயம்
அவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளை
உணர முடிந்தது.
-
பான் கார்டு பற்றி நம்மில் பலருக்கு இருக்கும்
புரிதல் இதுதான். அது ஏதோ நம்மைக் கண்
காணிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கி இருக்கும்
சிஸ்டம்; நம்முடைய பணப் பரிமாற்றங்களைக்
கண்காணித்து வரி பிடிக்க செய்யப்பட்டிருக்கும்
ஏற்பாடு என்பதுதான் பலருடைய மனதில் இருக்கும்
எண்ணம்.
-
உண்மை அதுதானே? நீங்கள் எந்த அடிப்படையில்
எல்லாம் நன்மைக்கேனு சொன்னீங்க...? என்று
கேட்கிறீர்களா! வாங்க உட்கார்ந்து டீடெய்லா
பேசலாம்.

பெரிவருக்குச் சொன்ன விஷயங்களை உங்களுக்கும்
சொல்கிறேன்.
-
தன் மகனுக்காக ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டச்
சென்ற அந்தப் பெரியவர் அந்தப் பணத்தை யாரிடம்
இருந்து திருடிக் கொண்டு வரவில்லை. பொய்யான
வழியில் சம்பாதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது
இது என் பணம் என்று சொல்வதில் அவருக்கு என்ன
தயக்கம் வேண்டியிருக்கிறது?

அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால்
அவரால் வெளிப்படையாக தைரியமாகச் சொல்ல
முடியும் என்கிறபோது அதைச் சொல்வதில் என்ன
கஷ்டம்?

சரி, இப்படி யோசித்துப் பாருங்கள். அந்தப் பெரியவர்
ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டி விடுகிறார். மகனும்
அந்தப் பணத்தை எடுத்து தன் தேவைக்குப் பயன்
படுத்திக் கொள்கிறார். இந்தச் சூழலில் மகன் மீது
ஓர் ஊழல் குற்றச்சாட்டு வருகிறது. அதாவது ஒரு
நபரிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாயை லஞ்சமாக
வாங்கிவிட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறார்.

குற்றச்சாட்டைச் சொன்ன நபர், அந்த மகனுடைய
வங்கிக் கணக்கை பரிசோதித்துப் பாருங்கள் என்று
சொல்ல, வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் வரவு
வைக்கப்பட்ட விவரம் இருக்கிறது. உண்மையில்
அந்தப் பணம் அந்தப் பெரியவர் தன் மகனுக்காக
கொடுக்கப்பட்ட பணம். ஆனால் வங்கியைப்
பொறுத்த அளவில் யார் வேண்டுமானாலும் பணம்
கட்டலாம்.

சந்தேகம் வரக்கூடாது என்பதால் அப்பாவின்
பெயரில் அவர் ஊருக்கே போய் லஞ்சப் பணத்தை
வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று
குற்றம் சாட்டியவர் சொன்னால் நம்பித்தான் ஆக
வேண்டும். இதுவே, பெரியவர் தன் பான் கார்டு
எண்ணுடன் டெபாசிட் செய்திருந்தால் அது ஓர்
ஆதாரமாக இருந்திருக்கும்.
-
இதைச் சொன்னதும் அந்தப் பெரியவர் ஆடிப்
போய்விட்டார். "இதில் இவ்ளோ விஷயம் இருக்கா?'
என்றார். "பான் கார்டை வாங்கிவிட்டால் ஆண்டு
தோறும் வருமான வரி கட்ட வேண்டி வந்துவிடுமே,
அதுதான் பயமாக இருக்கிறது' என்று சொல்பவர்களா
நீங்கள்? நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். பான்
கார்டுக்கும் வருமான வரிக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
-
உங்களிடம் பான் கார்டு இருந்தால் நீங்கள் வரித்
தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
பான் கார்டு என்பது உங்களுடைய நிதி தொடர்பான
விஷயங்களை வரையறுத்துக் கொள்வதற்கான
ஏற்பாடுதான். அதனால் எல்லாருமே பான் கார்டு
வாங்கிக் கொள்வது நல்லது.
-
பான் கார்டு எல்லாருடைய வாழ்க்கையிலும்
முக்கியமான ஆதாரம். ஆமாம், நாங்கள் ரயில்வேயில்
பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு ஆதாரமாக
அதைத்தான் காட்டுவோம் என்கிறீர்களா? அ
-
அது ரயில்வே ஆதார அட்டை இல்லை. அதற்கான
பலன்களே வேறு! நிதி தொடர்பான தேவைகளுக்குப்
பயன்படுத்த வேண்டிய எண் அது.
-
மாத வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தால்
பரவாயில்லை. அது இல்லாமல் சேவைக்கான
பணத்தைப் பெறுபவராக இருந்தால் பணம் கொடுக்கும்
நிறுவனம் ட்டி.டி.எஸ் எனபபடும் அந்த
வருமானத்துக்கான வரியைப் பிடித்துக் கொள்ளும்
நடைமுறை இருக்கிறது.

-

அந்தத் தொகையை நம்முடைய கணக்கில் போட்டு
வைக்க வேண்டும். அதற்கு பான் கார்டு எண்தான்
உதவியாக இருக்கும். அப்படி பிடித்தம் செய்யப்பட்ட
தொகை எவ்வளவு என்பதை அறிய நமக்கு பான்
எண் அவசியம்.
-
இதோ வருமான வரி பற்றிய கருத்து வந்துவிட்டதே
என்று சொல்கிறீர்களா? உண்மைதான்! ஆனால்,
இது பெரிய அளவில் வருமானம் ஈட்டுபவர்களுக்கான
கருத்து. எவ்வளவு சம்பாதித்தாலும், வருமான வரிக்கு
பயந்து முறையாக கணக்கு காட்டாமல் சிலர்
இருப்பார்கள். அவர்களை வளைத்துக் கொண்டு
வருவதற்கான இந்த ஏற்பாடு. நிறுவனங்கள்
சம்பளமாகவோ சன்மானமாகவோ கொடுத்தால்
அதற்கான ட்டி.டி.எஸ். தொகையை பிடித்தம் செய்து
கட்டிவிட வேண்டும்.

சம்பளம் அல்லது சன்மானம் பெறுபவர் தன்
வருமான கணக்கைக் காட்டி அந்தத் தொகையை
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
-
ஆக, எப்படியாக இருந்தாலும் பான் கார்டு வாங்க
வேண்டும் என்பது முடிவாகிவிட்டது.
-
----------------------
- சி. முருகேஷ் பாபு
நன்றி: குமுதம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பான் கார்டு பெறுவதின் நன்மைகள் Empty Re: பான் கார்டு பெறுவதின் நன்மைகள்

Post by Nisha Mon 19 May 2014 - 17:00

அவசியமான பதிவு.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum