Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
குஜராத்தின் “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
3 posters
Page 1 of 1
குஜராத்தின் “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
-
“ராணி-கி-வாவ்’ படித்துறை கிணறு.
குஜராத்தில் உள்ள 11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணற்றை சர்வதேச புராதனச் சின்னமாக ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் நீர்வளப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ராணி-கி-வாவ் கிணற்றுக்கு சர்வதேச புராதனச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்திருப்பது அதற்கு கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் நடைபெற்றுவரும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கமிட்டி கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. பிரளயத்தின் காரணமாக சரஸ்வதி நதி அழிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தக் கிணறும் பூமிக்குள் புதையுண்டது.
-
இந்திய தொல்லியல்துறையினர் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 700 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
-
7 அடுக்குகள் கொண்ட ராணி-கி-வாவ் படித்துறை கிணற்றின் கட்டுமான அமைப்புகள் தற்போதும் உறுதியாக உள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் கலைநயத்துடன் கூடிய அழகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரூ-குர்ஜாரா வம்சத்தினரால் அமைக்கப்பட்ட ராணி-கி-வாவ் கிணறு அந்த காலகட்டத்தில் கட்டடத்துறை சிறப்பாக விளங்கியதை எடுத்துக் காட்டுகிறது.
-
நாட்டில் ஏற்கெனவே யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 30 உலகப் பாரம்பரியச் சின்னங்கள் உள்ளன. இதில் 24 கலாசார தலங்களும், 6 இயற்கை தலங்களும் அடங்கும். தற்போது ராணி-கி-வாவ் கிணற்றுக்கும் அந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
-
மேலும், கத்தாரில் நடைபெறும் உலகப் பாரம்பரிய கமிட்டி கூட்டத்தில் ,ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள இமயமலை தேசிய பூங்காவையும் உலகப் புராதனச் சின்னமாக அறிவிப்பது குறித்து திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
மோடி பாராட்டு: ராணி-கி-வாவ் கிணற்றை உலகப் புராதனச் சின்னமாக தேர்ந்தெடுத்த யுனெஸ்கோ அமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நன்றி: தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186
Re: குஜராத்தின் “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
நல்ல செய்தி இம்மாதிரி பல புரதான வரலாற்று சான்றுகள் இந்திய தேசம் முழுதும் இன்னும் புதைந்துதான் கிடக்கின்றன
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: குஜராத்தின் “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
jasmin wrote:நல்ல செய்தி இம்மாதிரி பல புரதான வரலாற்று சான்றுகள் இந்திய தேசம் முழுதும் இன்னும் புதைந்துதான் கிடக்கின்றன
இலங்கையில் இந்த தொல்லியல் விடயத்தைக் கூறி...
தொல்லை கொடுக்கின்றனர்.....
அகதி வாழ்கையை அவலப்படுத்துகின்றனர்....
வாழ்வியல் அலங்கோலத்தை அரங்கேற்றுகின்றர்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» ராணி..மகாராணி…ராஜ்ஜியத்தின் ராணி……!
» மந்திரக் கிணறு!
» இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
» இந்தியாவில் பேய்களால் கட்டப்பட்ட கிணறு ( படங்கள் இணைப்பு
» தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்.....
» மந்திரக் கிணறு!
» இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
» இந்தியாவில் பேய்களால் கட்டப்பட்ட கிணறு ( படங்கள் இணைப்பு
» தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|