சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Khan11

"நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

5 posters

Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Nisha Tue 28 Oct 2014 - 15:23

"நீதிக்கதை"

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். 

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

நீதி : பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்


படித்ததும் பிடித்தது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by ahmad78 Tue 28 Oct 2014 - 15:34

நல்ல கதை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by சுறா Tue 28 Oct 2014 - 19:18

உண்மைதான் பயம் ஒருவனை முட்டாள் ஆக்கிவிடும். பெரியவர் செய்த காரியத்தால் அவன் அடுத்து என்ன செய்யவேன்டும் என்று கற்றுக்கொண்டான்.

அறிவுள்ள கதை. மிக்க நன்றி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Nisha Mon 5 Jan 2015 - 1:24

காடு வழியே பயணம் மேற்கொண்டிருந்த ஒருவனுக்கு நெடுந்தூரம் பயணித்த களைப்பில் ஓய்வு தேவைப்பட்டது. உடனே ஒரு பரந்த விரிந்த ஆலமரத்தின் கீழ் துண்டை விரித்துப்போட்டு படுத்தான்.அந்த மரத்துக்கு பக்கத்திலேயே ஒரு பூசணிச் செடி படர்ந்து விரிந்து பசுமையாக காட்சியளித்தது. மிகப்பெரிய பூசணிக்காய்  ஒன்றும் அதில் காய்த்து தரையைத்தொட்டபடி கிடந்தது.  

ஆலமரத்தின் கீழே படுத்தவனுக்கு தீடிரென ஒரு சிந்தனை! "இத்தனை பெரியஆலமரத்தின்  பழம்  சின்னதாய் இருக்கின்றதே..  சிறியதாய் தரையோடு படர்ந்த பூசணிச்செடியில் எத்தனை பெரிய பூசணிக்க்காய் காய்த்திருக்கின்றது.  

கடவுளுக்கு ஏன் இத்தனை ஓரவஞ்சனை என நினைத்தானாம். 

பெரிய மரம்னா சின்ன பழம். சின்ன செடின்னா பெரிய பழம்..." எத்தனை விந்தை என்று யோசித்த படியே தூங்கிப் போனான். 

சற்று நேரத்தில் வீசிய காற்றில் ஆல மரத்திலிருந்து உதிர்ந்த ஒரு சின்ன பழம்  கீழே படுத்திருந்தவன் மீது "சொத்'தென்று விழுந்தது. பதறி  எழுந்தவனுக்கு  திடீரென தன் அறியாமை பற்றி ஞானம் வந்தது.

" அடடா கடவுளை  திட்டி விட்டேனே!... இந்த சின்ன பழம் விழுந்ததுக்கேமுகம் வலித்ததே இவ்ளோ பெரிய  பூசணிக்காய்  விழுந்திருந்தால்  என்ன ஆகி இருப்பேன்! .கடவுளே மன்னி த்து விடு என்றபடியே கடவுளுக்கு நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்தான்!


பல நேரம் நாமும் அப்படித்தான்! ஏன் எதுக்கு என ஆராயாமல் சட்டென  முடிவெடுப்போம். கடவுளை வெறுப்போம்! ஆனால் கடவுள் எதைச்செய்தாலும் அதற்கு காரணம் இருக்கும். கரணம் இல்லாமல் அவர் எதையும் அனுமதிப்பதில்லை!  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Nisha Mon 5 Jan 2015 - 1:30

ஆலமரமும், பனை மரமும் அருகருகே இருந்து ஆலமரமே நிழலையும் குளிர்ச்சியையும் தந்தாலும் ஆலமரம் தற்காலிக வதிவிடம் தான். 

பனைமரத்தின் கீழ் நிற்க இடமில்லாமல்  போனாலும் அதன் ஓலை நீடித்து நிலைத்து வீட்டுக்கு ஓலையாக நிலையாய் நிற்கும்  நிலைப்பிடம் தான். 

 பார்வைக்கு  கம்பீரமாய் , அழகாய், அமர்த்தலாய் இருக்கின்றதே என ஆலமரத்தை போற்றுதலும் நெட்டையாய்  அழகின்றி  ஓங்கி வளர்ந்ததென பனை பனை மரத்தை தூற்றுதலும்  மனிதர் வாழ்விலும் உண்டே! 

வெளித்தோற்றத்தினை மட்டும் வைத்து முடிவெடுக்காமல்  உள்ளான இதயத்தினை ஆராய்ந்து நல்லது கெட்டதை உணர்வோம். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by பானுஷபானா Mon 5 Jan 2015 - 14:09

அனைத்தும் அருமையான கதை பகிர்வுக்கு நன்றி நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Nisha Wed 16 Sep 2015 - 19:03

ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் 

குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? 

இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு.

 உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே என்றான் 

அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம் 

மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு 

அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான். 

குரு கேட்டார் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் மேலும் சிறிது நீரை ஊற்றினால்... குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான். 


குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். 


உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது என்றார் குரு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 19:09

முதல்க் கதை அருமையான கதை பயம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு முட்டாள் ஆக்குறது என்பது எவ்வளவு உண்மை அருமையான கதை அக்கா நன்றி அன்ட் சாரி தாமதான பின்னூட்டத்திற்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by சுறா Thu 17 Sep 2015 - 15:47

டெக்னிக்கலான சிஷியன் தான்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

"நீதிக்கதை"   நடப்பதெல்லாம் நன்மைக்கே! Empty Re: "நீதிக்கதை" நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum