சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

உணவு சேமிப்பே உலகைக் காக்கும் Khan11

உணவு சேமிப்பே உலகைக் காக்கும்

Go down

உணவு சேமிப்பே உலகைக் காக்கும் Empty உணவு சேமிப்பே உலகைக் காக்கும்

Post by ahmad78 Tue Oct 28, 2014 7:56 pm

உணவு சேமிப்பே உலகைக் காக்கும் Kalams_2174009f
உணவில் பாதியை உண்டு, மீதியை வீணாக ஒதுக்குவது இன்று நாகரிக அடையாளமாக மாறியுள்ளது. மனதிற்குப் பிடிக்காமல் உணவை வெறுத்து ஒதுக்குபவர்களும் உண்டு. அதேசமயம் உணவின் மணத்திலேயே பசியாறுபவர்களும் உண்டு. உணவு கிடைக்காமல் உலகில் அலைபவர்கள் எண்ணிக்கை, வீணாக்கப்படும் உணவின் அளவைவிட நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும்.
மிதமிஞ்சி நாம் ஒதுக்கும் ஒரு பிடி உணவு, பலருக்கு ஒருவேளை உணவாக இருக்கிறது. இந்த விழிப்புணர்வைப் பள்ளிகளில் இருந்து தொடங்கினால் பெரிய மாற்றம் கிடைக்கும் என ஆதங்கத்துடன் பேசுகிறார் ஸ்பைஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனீஸ்.
அனைத்துப் பள்ளிகளிலும்..
கோவையில் ஸ்பைஸ் அமைப்பு உணவு வீணாக்கு தலுக்கு எதிரான இயக்கத்தைக் கையில் எடுத்துள்ளது.
2014-ல் வெவ்வேறு கல்லூரி களில் பொறியியல் முடித்த 17 பட்டதாரிகளால் உருவானது இந்த அமைப்பு. சமூகத்துக்கும், மாணவர் உலகத்திற்கும் ஏதேனும் கற்றுக் கொடுக்க வேண்டுமென ஒரு மாற்றத்தை நோக்கிக் களம் இறங்கியுள்ளனர் இந்த இளைஞர்கள்.
அக்.16 முதல் நவ.14 வரை கோவையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உணவு சேமிப்பு குறித்த விழிப்புணர்வு உரைகள், போட்டிகள், மாரத்தான், மனிதச் சங்கிலி எனப் பல போட்டிகளைத் திட்டமிட்டுள்ளனர். இறுதியாக அதைச் சாதனை முயற்சியாக மாற்றும் சவாலையும் ஏற்றுள்ளனர்.
இந்த அமைப்பின் நிர்வாகி பத்மநாபன் கூறுகையில், மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கியது தான் ஸ்பைஸ் அமைப்பு. ஏன், எதற்காக என எந்தக் கேள்வியும் இல்லாமல் வெறும் பாடமாகப் பொறியியலைப் படிக்கும் மாணவர்களுக்கு, எங்களது செய்முறைப் பயிற்சி வகுப்பு நல்ல பலனைக் கொடுத்தது. அந்த ஊக்கம் தான் சமூக நோக்கமுள்ள அடுத்த முயற்சிக்கு எங்களை நகர்த்தியது என்கிறார் அவர் .
தேவைப்படுபவர்களுக்கு..
மேலும் இதுபற்றி அவர் கூறும்போது “உற்பத்தி செய்யப்படுவதில் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது. விளைவு எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் வீணாக்குகிறோம். இதனைச் சரிசெய்வது எப்படி என யோசித்தபோது, பள்ளிகளிலிருந்து திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்ற யோசனை கிடைத்தது. ஒரு நாளைக்கு ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 20 கிலோ உணவுப்பொருள் வீணாகிறது. கோவையில் உள்ள 300க்கும் அதிகமான பள்ளிகளை இந்தக் கணக்கில் சேர்த்தால், ஒரு நாளில் வீணாகும் உணவு மட்டும் 6000 கிலோவைத் தாண்டும். தேவையில்லை என ஒதுக்கும் உணவைத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிலும் மிஞ்சுகிறது என்றால், அதனை உயிரி எரிபொருளாக, உயிரி வாயுவாக மாற்ற வேண்டும்.
அழைப்புகளை ஏற்கும் பள்ளிகளைப் பதிவு செய்து, அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பள்ளி மாணவர்களைத் தன்னார்வலர்களாகக் குழு அமைத்து எங்களது முயற்சியால் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிப்போம்.அதில் எங்களது முயற்சியின் வெற்றி தெரியவரும். மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்குக் கருத்துகளைக் கொண்டு செல்ல மராத்தான் ஓட்டம், மனிதச் சங்கிலி என நடத்துகிறோம். பதிவுசெய்த பள்ளிகளில் இறுதி நாளன்று உணவு வீணாக்குதலே இல்லை என்ற இலக்கை நோக்கிய முயற்சியை எடுக்கிறோம். அதாவது தேவைக்கு அதிகமாக உணவு இருந்தால் அது தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்கப்படும். அதையும் மீறி வீணாகும் உணவுப் பொருட்களை உயிரி உரங்களாக மாற்றி சாதனை முயற்சியும் பதிவுசெய்யப்படுகிறது.
பொறியியல் பட்டதாரிகள் என்பதால் தேவையான கருவிகளையும் நாங்களே தயாரிக்கிறோம். முழுமையாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடிக்கும் போது உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் ஓரளவுக்காவது பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் புரிந்திருக்கும்.” என்கிறார் அவர்.
கோவையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதனை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். சிறிய இடைவெளியிலேயே ஒரு மாற்றம் கிடைக்கும் என்பது இவர்களது எண்ணம். இதேநிலைத் தொடரும்பட்சத்தில் வருங்காலத்தில் உணவின் அவசியம் உணர்ந்த பலர் உருவாக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6536049.ece


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum