சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

கவிப்புயலின் பல இரசனை கவிதை Khan11

கவிப்புயலின் பல இரசனை கவிதை

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 5 Aug 2016 - 6:58

எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!

உணவு 
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!

சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும் 
உன் பரம்பரையை... !!!

பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்....... 
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 5 Aug 2016 - 7:12

தாய் வயிற்றில் ....
சுமக்கிறார் .....!!!

தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!

மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!

காதலன் 
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!

தொழிலாளி மூடையை 
சுமக்கிறான்  ....!!!

நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!

காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 5 Aug 2016 - 7:25

தெரு .....
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது  ...!!!

தொடரூந்தில் 
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!

எங்கள் 
நிறமே  பச்சை ...
நாங்கள் மட்டும் 
இறந்துகொண்டிருக்கிறோம் 
மரங்களின் கண்ணீர் கதை ...!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 5 Aug 2016 - 7:45

எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?

சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!

எத்தனை முறைதான் -காதல் 
குற்றவாளியாவது ...?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by சே.குமார் Fri 5 Aug 2016 - 7:49

கவிதைகள் அருமை...
வாழ்த்துக்கள் கவிஞரே...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Aug 2016 - 16:10

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ 
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!

உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று  பேசாமல் இருக்க‌....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்-  நீ...!!!

ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌.....
ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!

^
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Aug 2016 - 16:27

வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம் 
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும் 
கும்பிடுறாங்க ..சாமி 
என்கிறாங்க ...!!!

ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!

என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை... 
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்.... 
இந்த உலகம் ...!!!

^
வாழ்க்கை கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Aug 2016 - 16:54

பசுவிடம் சாந்தம் உண்டு.....
யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா  என்று .....?

^
வாழ்க்கை தத்துவ கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Aug 2016 - 17:09

எனக்கே வேண்டும் ...
எல்லாம்  வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!

எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம் 
தானாகதோன்றும் ....!!!

வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!

நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....

எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!

^
பொருளாதார கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Aug 2016 - 17:34

வளைந்து நிற்பது ...
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!

பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!

பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!

பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!

நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!

^
தன்னம்பிக்கை கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Aug 2016 - 17:50

குழந்தை பருவத்தில்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!

இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!

முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!

^
மனசுக்கு ஒரு  கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Aug 2016 - 18:01

இதயம் வலித்தால் 
கண்ணீர்.......!!!

இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!

இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!

இதயம் சிறுக்கினால் 
ஓவியம் .......!!!

இதயம்  முணுமுணுத்தால்
வார்த்தை......!!!

இதயம் காண்பது.....
கனவு......!!!

இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!

இதயம் அழுவது .....
பிரிவு.......!!!

இதயம் இறப்பது....
தோல்வி.....!!!

இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!

^
இதயத்துக்கு ஒரு கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by நண்பன் Mon 15 Aug 2016 - 16:33

கவிப்புயல் இனியவன் wrote:எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!

உணவு 
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!  

சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும் 
உன் பரம்பரையை... !!!

பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்....... 
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by நண்பன் Mon 15 Aug 2016 - 16:33

கவிப்புயல் இனியவன் wrote:தாய் வயிற்றில் ....
சுமக்கிறார் .....!!!

தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!

மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!

காதலன் 
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!

தொழிலாளி மூடையை 
சுமக்கிறான்  ....!!!

நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!

காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by நண்பன் Mon 15 Aug 2016 - 16:34

கவிப்புயல் இனியவன் wrote:எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?

சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!

எத்தனை முறைதான் -காதல் 
குற்றவாளியாவது ...?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 15 Aug 2016 - 16:42

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?

சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!

எத்தனை முறைதான் -காதல் 
குற்றவாளியாவது ...?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீண்ட காலம் காணவில்லையே ...?
என்ன நடந்தது ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 15 Aug 2016 - 16:48

மாட்டு.... 
வண்டியில் போன சுகம்....
மாருதியில் இல்லையடா ....!!!

பாட்டி ....
சொன்ன நம் ஊரைப்போல்.....
பட்டணம் இல்லையடா ....!!!

நாட்டு .....
நடப்பு எல்லாவற்றையும்...
நாழிகையில் சொல்லும் தாத்தா...
நாளிதழை திறந்து பார்த்தால்.....
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!

தெருவோர தாக சாந்தி....
தேர் திருவிழாவை....
சிறப்படையும் வைக்கும்....
இப்போ -தெருவுக்கு தெரு....
கோயில் வந்ததால்.....
தெருவோரத்தை காணோமடா ...!!!

சமுதாய முன்னேற்றம்.....
ஒரு சாண் ஏறினால்...
சமூக சீரழிவு முழம் கணக்கில்.....
ஏறுதடா .......!!!

^
சமூக புலம்பல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 3 Sep 2016 - 16:24

காற்றோடு போராடுவது 
பஞ்சின் வாழ்க்கை .....!!!

நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!

பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!

பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!
 
கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!

சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!

சூரிய ஒளியோடு போராடுவது 
பனித்துளியின் வாழ்க்கை ....!!!

தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!

&
கவிப்புயல் இனியவன் 
கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 3 Sep 2016 - 17:04

பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 3 Sep 2016 - 17:23

மயில் இறகின் மத்தியில்.....
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!

^^^

காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?

^^^

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 Sep 2016 - 18:39

நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!

வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..! 

மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!

காதலில் இத்தனை ....
வலிகளா ..............?

^
கவிப்புயல் இனியவன் 
பல ரசனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 Sep 2016 - 18:45

நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!

வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..! 

மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!

காதலில் இத்தனை ....
வலிகளா ..............?

^
கவிப்புயல் இனியவன் 
பல ரசனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 Sep 2016 - 18:54

இதயம் துடித்து.... 
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!

^
கவிப்புயல் இனியவன் 
பல ரசனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 Sep 2016 - 19:17

நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் .. 
மறக்கக் கூடாது... 
நாம் மறைந்த பின்பு 
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!

&
கவிப்புயல் இனியவன் 
தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 22 Sep 2016 - 19:39

பூக்களுக்கு .....
ஒரு நாள்.. 
தான் ஆயுள்.... !!!

அதனை ரசிக்க தெரியாத .. 
மனிதன் .. 
அதை பறித்து 
பூஜை செய்கிறான் ......!!!

தனது ஆயுள் ... 
நூறு வருடங்கள் .. 
இருக்க வேண்டி ..!!! 

&
கவிப்புயல் இனியவன் 
தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயலின் பல இரசனை கவிதை Empty Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum