Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
ஜீரண மண்டலம் பிரச்னைகளும் தீர்வும்!
Page 1 of 1
ஜீரண மண்டலம் பிரச்னைகளும் தீர்வும்!
நன்றி குங்குமம் டாக்டர்
-
ஜீரண மண்டலம் என்பது மாபெரும் உறுப்புகளின் சங்கமம்.
சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், கல்லீரல், கணையம்,
சிறுநீரகங்கள் எனப் பல உறுப்புகளோடு தொடர்புடைய மிகப்
பெரிய உடலியற் செயல்பாட்டையே நாம் ஜீரண மண்டலம்
என்கிறோம்.
இதில் வரச் சாத்தியமான சில முக்கியமான பிரச்னைகளை இங்கு
பார்க்கலாம்.
ஏப்பம், வயிறு உப்புசம்
அதிக காற்றை விழுங்குதல், சாதாரணமாக விழுங்கும் காற்றை
உடல் சரிவர வெளியேற்றாமல் இருப்பது, இரைப்பையில்
ஜீரணமாகாத உணவு பெருங்குடலுக்குச் செல்லும்போது வாயு
உற்பத்தியாவது, உடலில் இயற்கையாகவே சாதாரண அளவுக்கு
உற்பத்தியாகும் வாயுவைக்கூட சிலரால் பொறுக்க முடியாது போவது
போன்ற பல காரணங்களால் இவை ஏற்படும்.
சிலர் எந்தவிதக் காரணமும் இன்றி தாங்களாகவே ஏப்பம் விடுவதை
ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொள்ளுவர். வேறு சிலர் ஆரம்பத்தில்
வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தைச் சரி செய்ய ஏப்பம்விட
ஆரம்பித்து நாளடைவில் அதையே பழக்கமாக ஆக்கிக்கொள்வதுண்டு.
சாப்பிடும்போது பேசுவது, அவசரமாகச் சாப்பிடுவது அல்லது
திரவங்களைப் பருகுவது, ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பது, அடிக்கடி
சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்றவை அதிக காற்றை
விழுங்கச் செய்யும். பதற்றமாக இருக்கும்போது சிலர் அதிக காற்றை
விழுங்குவர். சிலருடைய உடம்பு, நார்ச்சத்துள்ள மற்றும் குறிப்பிட்ட
விதமான சர்க்கரை கொண்டுள்ள உணவு மற்றும் பருப்பு வகைகளை
ஜீரணமாக்கும்போது, சாதாரணத்தைவிட அதிக வாயுவை உற்பத்தி
செய்கிறது.
உதாரணமாக, முள்ளங்கி, முட்டைக்கோஸ், ராஜ்மா, கிழங்கு வகைகள்,
பூண்டு. இந்தத் தொல்லை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம்
காண்பிக்கவும்.
-
ஜீரண மண்டலம் என்பது மாபெரும் உறுப்புகளின் சங்கமம்.
சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், கல்லீரல், கணையம்,
சிறுநீரகங்கள் எனப் பல உறுப்புகளோடு தொடர்புடைய மிகப்
பெரிய உடலியற் செயல்பாட்டையே நாம் ஜீரண மண்டலம்
என்கிறோம்.
இதில் வரச் சாத்தியமான சில முக்கியமான பிரச்னைகளை இங்கு
பார்க்கலாம்.
ஏப்பம், வயிறு உப்புசம்
அதிக காற்றை விழுங்குதல், சாதாரணமாக விழுங்கும் காற்றை
உடல் சரிவர வெளியேற்றாமல் இருப்பது, இரைப்பையில்
ஜீரணமாகாத உணவு பெருங்குடலுக்குச் செல்லும்போது வாயு
உற்பத்தியாவது, உடலில் இயற்கையாகவே சாதாரண அளவுக்கு
உற்பத்தியாகும் வாயுவைக்கூட சிலரால் பொறுக்க முடியாது போவது
போன்ற பல காரணங்களால் இவை ஏற்படும்.
சிலர் எந்தவிதக் காரணமும் இன்றி தாங்களாகவே ஏப்பம் விடுவதை
ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொள்ளுவர். வேறு சிலர் ஆரம்பத்தில்
வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தைச் சரி செய்ய ஏப்பம்விட
ஆரம்பித்து நாளடைவில் அதையே பழக்கமாக ஆக்கிக்கொள்வதுண்டு.
சாப்பிடும்போது பேசுவது, அவசரமாகச் சாப்பிடுவது அல்லது
திரவங்களைப் பருகுவது, ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பது, அடிக்கடி
சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்றவை அதிக காற்றை
விழுங்கச் செய்யும். பதற்றமாக இருக்கும்போது சிலர் அதிக காற்றை
விழுங்குவர். சிலருடைய உடம்பு, நார்ச்சத்துள்ள மற்றும் குறிப்பிட்ட
விதமான சர்க்கரை கொண்டுள்ள உணவு மற்றும் பருப்பு வகைகளை
ஜீரணமாக்கும்போது, சாதாரணத்தைவிட அதிக வாயுவை உற்பத்தி
செய்கிறது.
உதாரணமாக, முள்ளங்கி, முட்டைக்கோஸ், ராஜ்மா, கிழங்கு வகைகள்,
பூண்டு. இந்தத் தொல்லை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம்
காண்பிக்கவும்.
Last edited by rammalar on Wed 8 Nov 2023 - 6:50; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: ஜீரண மண்டலம் பிரச்னைகளும் தீர்வும்!
அஜீரணம்
சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல்பகுதியிலோ, நெஞ்சின் கீழ்ப்
பகுதியிலோ, அசௌகரியமான அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படும்.
இதனுடன் நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல், குமட்டல், வாந்தி அல்லது
உப்புசம் ஏற்படலாம். என்ன சாப்பிடும்போது இந்த அறிகுறிகள்
ஏற்படுகிறது எனக் கவனித்துத் தவிர்க்கவும். தொடர்ந்து இருந்தால்
மருத்துவரிடம் காண்பிக்கவும்.
குமட்டல், வாந்தி
இவை அசௌகரியத்தை ஏற்படுத்தி நம் அன்றாட வாழ்க்கையையே
பாதிக்கும்.ஜீரண மண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள உறுப்புகளிலும்
மற்றும் உடலின் சில பாகங்களில் ஏற்படும் தொற்றினாலும், எரிவாலும்,
ஒற்றைத் தலைவலியாலும் எனப் பல காரணங்கள் உண்டு. சிலருக்கு
பிரயாணங்களின்போது ஏற்படும். இதைத் தடுக்க மருந்துகள் உள்ளன.
வாந்தியால் உடம்பில் தாதுஉப்பு, நீர் குறையும். உடனடியாக அதைச்
சரிசெய்ய வேண்டும். இதைத் தவிர, தொடர்ந்து குமட்டல், வாந்தி இருந்தால்
அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்துச் சரிசெய்ய வேண்டும்.
வயிற்று வலி
ஜீரண மண்டலத்திலோ, வயிற்றின் இதர உறுப்புகளிலோ வயிற்றின்
சுவரிலோ தொற்று, எரிவு, அடைப்பு, புற்றுநோய், அடிபடுதல் என ஏ
ற்பட்டால் வயிற்றுவலி ஏற்படும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
*சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து அதிக வலி
*திடீரென அதிக வலி
*வலியினால் வேலை பாதிக்கப்படுதல்
*வலியுடன் குமட்டல், வாந்தி, வாந்தியில் ரத்தம்
*வலியுடன் பேதி அல்லது மலச்சிக்கல், மலத்தில் நிற மாற்றம்.
முக்கியமாக கருப்பு அல்லது காப்பி நிறத்தில் போதல்.
*இரவில் தூங்கும்போது வலியினால் விழித்தல்.
*தொடர்ந்து சில நாட்களுக்கு லேசான/மிதமான வலி.
நெஞ்சு/வயிறு எரிச்சல்
எப்பொழுதாவது காரமான உணவு சாப்பிட்ட பிறகு நம்
எல்லோருக்கும் இது ஏற்பட்டிருக்கும். இதுவே அடிக்கடி
ஏற்படுமானால் வயிறு உணவுக் குழாய் பின்னோட்ட நோயின்
(Gastro Desophageal Reflux Disease) அறிகுறியாக
இருக்கலாம்.
நாம் உண்ணும் உணவு எப்போதும் ஒரு வழிப் பாதையாக
உணவுக் குழாயில் இருந்து இரைப்பைக்குச் செல்லும். அவ்வாறு
இல்லாமல், சில சமயங்களில் இரைப்பையில் உள்ள உணவு
அமிலத்துடன் உணவுக் குழாய்க்குத் திரும்பும்போது, உணவுக்
குழாயைப் பாதிக்கிறது.
இதனால் நெஞ்சுக் குழியில் இருந்து நெஞ்சு மற்றும் தொண்டை
வரை எரிச்சல், எதுக்களித்தல், விழுங்குவதில் சிரமம் போன்றவை
ஏற்படும். கவனிக்காவிட்டால், பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல்பகுதியிலோ, நெஞ்சின் கீழ்ப்
பகுதியிலோ, அசௌகரியமான அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படும்.
இதனுடன் நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல், குமட்டல், வாந்தி அல்லது
உப்புசம் ஏற்படலாம். என்ன சாப்பிடும்போது இந்த அறிகுறிகள்
ஏற்படுகிறது எனக் கவனித்துத் தவிர்க்கவும். தொடர்ந்து இருந்தால்
மருத்துவரிடம் காண்பிக்கவும்.
குமட்டல், வாந்தி
இவை அசௌகரியத்தை ஏற்படுத்தி நம் அன்றாட வாழ்க்கையையே
பாதிக்கும்.ஜீரண மண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள உறுப்புகளிலும்
மற்றும் உடலின் சில பாகங்களில் ஏற்படும் தொற்றினாலும், எரிவாலும்,
ஒற்றைத் தலைவலியாலும் எனப் பல காரணங்கள் உண்டு. சிலருக்கு
பிரயாணங்களின்போது ஏற்படும். இதைத் தடுக்க மருந்துகள் உள்ளன.
வாந்தியால் உடம்பில் தாதுஉப்பு, நீர் குறையும். உடனடியாக அதைச்
சரிசெய்ய வேண்டும். இதைத் தவிர, தொடர்ந்து குமட்டல், வாந்தி இருந்தால்
அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்துச் சரிசெய்ய வேண்டும்.
வயிற்று வலி
ஜீரண மண்டலத்திலோ, வயிற்றின் இதர உறுப்புகளிலோ வயிற்றின்
சுவரிலோ தொற்று, எரிவு, அடைப்பு, புற்றுநோய், அடிபடுதல் என ஏ
ற்பட்டால் வயிற்றுவலி ஏற்படும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
*சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து அதிக வலி
*திடீரென அதிக வலி
*வலியினால் வேலை பாதிக்கப்படுதல்
*வலியுடன் குமட்டல், வாந்தி, வாந்தியில் ரத்தம்
*வலியுடன் பேதி அல்லது மலச்சிக்கல், மலத்தில் நிற மாற்றம்.
முக்கியமாக கருப்பு அல்லது காப்பி நிறத்தில் போதல்.
*இரவில் தூங்கும்போது வலியினால் விழித்தல்.
*தொடர்ந்து சில நாட்களுக்கு லேசான/மிதமான வலி.
நெஞ்சு/வயிறு எரிச்சல்
எப்பொழுதாவது காரமான உணவு சாப்பிட்ட பிறகு நம்
எல்லோருக்கும் இது ஏற்பட்டிருக்கும். இதுவே அடிக்கடி
ஏற்படுமானால் வயிறு உணவுக் குழாய் பின்னோட்ட நோயின்
(Gastro Desophageal Reflux Disease) அறிகுறியாக
இருக்கலாம்.
நாம் உண்ணும் உணவு எப்போதும் ஒரு வழிப் பாதையாக
உணவுக் குழாயில் இருந்து இரைப்பைக்குச் செல்லும். அவ்வாறு
இல்லாமல், சில சமயங்களில் இரைப்பையில் உள்ள உணவு
அமிலத்துடன் உணவுக் குழாய்க்குத் திரும்பும்போது, உணவுக்
குழாயைப் பாதிக்கிறது.
இதனால் நெஞ்சுக் குழியில் இருந்து நெஞ்சு மற்றும் தொண்டை
வரை எரிச்சல், எதுக்களித்தல், விழுங்குவதில் சிரமம் போன்றவை
ஏற்படும். கவனிக்காவிட்டால், பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: ஜீரண மண்டலம் பிரச்னைகளும் தீர்வும்!
கீழ்க்கண்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் பெரிதும் உதவும்
சாப்பிட்ட பிறகு 2-3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவும்.
தலையை உயர்த்திப் படுப்பது உதவும்.சாக்லேட், தக்காளி மற்றும்
புளிப்புப் பழங்கள், எண்ணெய், கொழுப்புச் சத்துள்ள உணவுகள்
நெஞ்சு எரிச்சலை அதிகப்படுத்தும்.
புகை, மதுப்பழக்கத்தைத் தவிர்க்கவும். புகைப்பொருட்கள்
உமிழ்நீர் சுரப்பதைத் தடுப்பதுடன், இரைப்பையில் அதிக அமிலம்
சுரக்கச்செய்து, உணவுக் குழாய்க்கும், வயிற்றுக்குமான தசையைத்
தளர்வடையச் செய்கின்றன.
அதிக எடை இருந்தால், எடை குறைத்தல் நல்லது. வாரத்துக்கு இ
ரண்டு தடவைக்கு மேல் நெஞ்சு எரிச்சல் இருந்தாலோ, உணவு
நெஞ்சில் அடைத்தால் போல் உணர்ந்தாலோ எதுக்களிப்பது,
அடிக்கடி காற்றுக் குழாய்க்குச் சென்று இருமல், தொண்டை
கரகரப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுத்துவது போன்றவை இருந்தால்
மருத்துவரிடம் செல்லவும்.
பெப்டிக் அல்சர் (peptic ulcer)
புண் இரைப்பையிலும், குடலின் ஆரம்பப் பகுதியான ட்யோடினத்திலும்
(Duodenum) ஏற்படும்போது 'அல்சர்' எனப்படுகிறது. இது ஏற்பட
இரண்டு பொதுவான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹெலிக்கோ பாக்டர் பைலோரை மற்றும் அதிக/தேவையில்லாமல்
உட்கொள்ளும் வலி மாத்திரைகள்.
முன்பு முக்கியக் காரணிகளாக பரவலாக நம்பப்பட்ட உணவுகள்
மற்றும் மன அழுத்தத்தை சமீப ஆய்வுகள் நிராகரிக்கின்றன.
இவை ஏற்கெனவே உள்ள புண்ணை வேண்டுமானால் அதிகப்படுத்தும்
என்று கூறுகின்றன.
புகைபிடித்தல் அல்சர் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
வலி மாத்திரைகளை அதிக அளவில் மருத்துவரின் பரிந்துரையின்
பேரில் உட்கொள்ளாமல் இருப்பதும், பரிந்துரைக்கப்பட்ட வலி
மருந்துகளை ஆலோசனையின்படி சரிவர உட்கொள்ளாமல் இருப்பதும்,
இரைப்பையில் சுரக்கப்படும் அமிலத்தில் இருந்து இரைப்பை மற்றும்
டுயோடினத்தைக் காக்கமுடியாமல் செய்து எரிவை ஏற்படுத்தி அல்சர்
புண்ணாக்குகிறது.
அறிகுறி இல்லாமலும் இருக்கலாம். வயிற்றில் வலி ஏற்படுத்தலாம்
அல்லது ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம். தொடர்ந்து வயிற்று வலி
ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தல் அவசியம்.
ஹெலிக்கோ பாக்டர் பைலோரை பாக்டீரியாவால் ஏற்பட்டிருக்கும்
என்று கண்டுபிடித்தால் 3-4 வகையான மருந்துகள் கொடுக்கப்படும்.
இந்த பாக்டீரியாவை முழுவதுமாக அழிக்கத் தொடர்ந்து சில நாட்களுக்கு
மருந்து எடுக்க வேண்டியிருக்கும்.
அதனால் பரிந்துரைக்கப்பட்ட கால அவகாசத்துக்கு மருந்துகளை
உட்கொள்வதன் மூலம் மட்டுமே நோயில் இருந்து நிரந்தர நிவாரணம்
பெறமுடியும். இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்ட அனைவருக்குமே
'அல்சர்' ஏற்படுவதில்லை. ஏன் சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது என்று
ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
யோகா எவ்வாறு உதவுகிறது?
யோகப் பயிற்சிகள் ஜீரண மண்டலத்தின் எல்லா உறுப்புகளுக்கும்
ரத்த ஓட்டத்தைச் சீர் செய்கிறது.அதன் பலவிதச் சுரப்புகளையும்
சீராக்குகிறது.தானியங்கி நரம்பு மண்டலம் ஜீரண மண்டலத்தின்
சீரான இயக்கத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இது சமன் நிலையில்
இல்லாதபோது வியாதிகள் ஏற்படும்.
யோகப்பயிற்சிகள் நரம்புமண்டலத்தைச் சமன் செய்ய பெரிதும்
உதவுகிறது.
--
தொகுப்பு: லயா
சாப்பிட்ட பிறகு 2-3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவும்.
தலையை உயர்த்திப் படுப்பது உதவும்.சாக்லேட், தக்காளி மற்றும்
புளிப்புப் பழங்கள், எண்ணெய், கொழுப்புச் சத்துள்ள உணவுகள்
நெஞ்சு எரிச்சலை அதிகப்படுத்தும்.
புகை, மதுப்பழக்கத்தைத் தவிர்க்கவும். புகைப்பொருட்கள்
உமிழ்நீர் சுரப்பதைத் தடுப்பதுடன், இரைப்பையில் அதிக அமிலம்
சுரக்கச்செய்து, உணவுக் குழாய்க்கும், வயிற்றுக்குமான தசையைத்
தளர்வடையச் செய்கின்றன.
அதிக எடை இருந்தால், எடை குறைத்தல் நல்லது. வாரத்துக்கு இ
ரண்டு தடவைக்கு மேல் நெஞ்சு எரிச்சல் இருந்தாலோ, உணவு
நெஞ்சில் அடைத்தால் போல் உணர்ந்தாலோ எதுக்களிப்பது,
அடிக்கடி காற்றுக் குழாய்க்குச் சென்று இருமல், தொண்டை
கரகரப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுத்துவது போன்றவை இருந்தால்
மருத்துவரிடம் செல்லவும்.
பெப்டிக் அல்சர் (peptic ulcer)
புண் இரைப்பையிலும், குடலின் ஆரம்பப் பகுதியான ட்யோடினத்திலும்
(Duodenum) ஏற்படும்போது 'அல்சர்' எனப்படுகிறது. இது ஏற்பட
இரண்டு பொதுவான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹெலிக்கோ பாக்டர் பைலோரை மற்றும் அதிக/தேவையில்லாமல்
உட்கொள்ளும் வலி மாத்திரைகள்.
முன்பு முக்கியக் காரணிகளாக பரவலாக நம்பப்பட்ட உணவுகள்
மற்றும் மன அழுத்தத்தை சமீப ஆய்வுகள் நிராகரிக்கின்றன.
இவை ஏற்கெனவே உள்ள புண்ணை வேண்டுமானால் அதிகப்படுத்தும்
என்று கூறுகின்றன.
புகைபிடித்தல் அல்சர் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
வலி மாத்திரைகளை அதிக அளவில் மருத்துவரின் பரிந்துரையின்
பேரில் உட்கொள்ளாமல் இருப்பதும், பரிந்துரைக்கப்பட்ட வலி
மருந்துகளை ஆலோசனையின்படி சரிவர உட்கொள்ளாமல் இருப்பதும்,
இரைப்பையில் சுரக்கப்படும் அமிலத்தில் இருந்து இரைப்பை மற்றும்
டுயோடினத்தைக் காக்கமுடியாமல் செய்து எரிவை ஏற்படுத்தி அல்சர்
புண்ணாக்குகிறது.
அறிகுறி இல்லாமலும் இருக்கலாம். வயிற்றில் வலி ஏற்படுத்தலாம்
அல்லது ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம். தொடர்ந்து வயிற்று வலி
ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தல் அவசியம்.
ஹெலிக்கோ பாக்டர் பைலோரை பாக்டீரியாவால் ஏற்பட்டிருக்கும்
என்று கண்டுபிடித்தால் 3-4 வகையான மருந்துகள் கொடுக்கப்படும்.
இந்த பாக்டீரியாவை முழுவதுமாக அழிக்கத் தொடர்ந்து சில நாட்களுக்கு
மருந்து எடுக்க வேண்டியிருக்கும்.
அதனால் பரிந்துரைக்கப்பட்ட கால அவகாசத்துக்கு மருந்துகளை
உட்கொள்வதன் மூலம் மட்டுமே நோயில் இருந்து நிரந்தர நிவாரணம்
பெறமுடியும். இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்ட அனைவருக்குமே
'அல்சர்' ஏற்படுவதில்லை. ஏன் சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது என்று
ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
யோகா எவ்வாறு உதவுகிறது?
யோகப் பயிற்சிகள் ஜீரண மண்டலத்தின் எல்லா உறுப்புகளுக்கும்
ரத்த ஓட்டத்தைச் சீர் செய்கிறது.அதன் பலவிதச் சுரப்புகளையும்
சீராக்குகிறது.தானியங்கி நரம்பு மண்டலம் ஜீரண மண்டலத்தின்
சீரான இயக்கத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இது சமன் நிலையில்
இல்லாதபோது வியாதிகள் ஏற்படும்.
யோகப்பயிற்சிகள் நரம்புமண்டலத்தைச் சமன் செய்ய பெரிதும்
உதவுகிறது.
--
தொகுப்பு: லயா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கம்ப்யூட்டர் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் .....
» ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்
» உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்!
» போர் மண்டலம் 2100 3D விளையாட்டை தரவிறக்கம் செய்வதற்கு
» தொலைதூர விண்வெளியில் நட்சத்திர மண்டலம் உருவான ரகசியம்: ஆய்வில் புதிய தகவல்
» ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்
» உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்!
» போர் மண்டலம் 2100 3D விளையாட்டை தரவிறக்கம் செய்வதற்கு
» தொலைதூர விண்வெளியில் நட்சத்திர மண்டலம் உருவான ரகசியம்: ஆய்வில் புதிய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|