Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
நம் நாட்டில் பெண்களின் பிரச்சனைகள் அத்தனையும் திருமணத்தை மையமிட்டதாகவே உள்ளன.
திருமணம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்திலும் பெண்ணடிமை பிணைந்து கிடக்கின்றது.
இவை அனைத்தும் சமயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு சாதிகளின் வழியாகப் பாதுகாக்கப்படுகின்றன. என்று ஒரு பெண்ணியவாதி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.
கருக்கலைப்பு, சிசுக்கொலை, மீறிப் பிறந்தால் வரவேற்பின்றி புறக்கணிப்பு, குழந்தை வளர்ப்பில் பராபட்சம், விளையாட்டுகளில் கூட வேறுபாடு, கல்வி அளிப்பதில் பாகுபாடு என்றிவ்வாறாக சீர், செனத்தி, நகை, நட்டு, வரதட்சணை, தற்கொலை, புகுந்த வீட்டுக் கொடுமைகள் என்ற தொடர்கதையாக நீள்பவை அனைத்தையும் பார்க்கும் போது மேற்கூறப்பட்ட கருத்து உண்மையே என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கூடக்குறைவு ஏதுமின்றி பெண்களின் மீதான இக்கொடுமைகள் யாவற்றையும்
மனித வாலாற்றில் இஸ்லாம் மட்டும்தான் ஒழித்துக்கட்டி
பெண்ணினம் தன்னுடைய வாழ்வு மூச்சை சீராகச் சுவாசிக்க வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது
என்று நாம் முன்வைக்கிற அதே சமயம்,
தற்போதைய நிகழ்கால முஸ்லிம் சமூகத்தில் இக்கொடுமைகள் நிலவவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கவும் தயாராக இல்லை!
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் (கி.பி.எட்டாம் நூற்றாண்டில்) இந்தியாவில் இஸ்லாம் அறிமுகமானது என வைத்துக் கொண்டால் கூட
ஏறக்குறைய பன்னிரண்டு நூற்றாண்டு காலமாய் இங்கே இஸ்லாமும், முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்லவேண்டும்.
ஆனால், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல முடியுமேயொழிய இஸ்லாம் வாழ்ந்து வருகின்றது என்று சொல்லவே முடியாது.
பிரச்சனையின் அடிப்படைச் சிக்கலே இங்குதான் அவிழ்கின்றது.
ஓரிறைவனை மட்டுமே ஒப்புக்கொண்டு
அவன் காட்டிய வழியில் தான் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும்
என்கிற சத்திய நன்னெறியினை இந்தியவாழ் முஸ்லிம்கள் தத்தமது சமகாலத்தைய சகோதர சமயத்தார்களிடம் முறையாகக் கொண்டுபோய் சேர்த்தார்கள் இல்லையா?
என்கிற கேள்வியையே இங்கு நாம் ஒதுக்கித் தள்ளிவிடுவோம்.
கடவுட் கொள்கையிலும், பண்பாட்டிலும் பாரதூரமான வேறுபாடுகளைக் கொண்ட இருசமூகங்கள் அருகருகே கலந்து வசிக்கும்போது அவற்றிற்கிடையே பரஸ்பரம் நிகழும் தாக்கங்கள் எங்ஙனம் அமையும்?
அடிப்படைக் கொள்கையையோ, அவற்றின் கூறுகளையோ ஏற்றல்,
கலாச்சாரத்தின் சிற்சில அம்சங்களை ஒப்புக் கொள்ளல்,
நேரிடையாகவோ, எதிரிடையாகவே ஒருசில பண்பாட்டு மாற்றங்கள், சிதைவுகளுக்கு உட்படுதல் போன்ற தளங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?
இத்தகைய எதிர்த் தாக்கங்கள் எந்தச் சமூகத்தில் அதிகமாகப் பிரதிபலித்தன?
எனும் கோணத்தில் ஆராயப் புகுந்தோமென்றால்
இந்திய முஸ்லிம்; பெண்கள் இன்றைக்கு சந்தித்து வருகின்ற எல்லாப் பிரச்சனைகள், அவலங்களுக்குமான முழுவிடை கிடைத்துவிடும்.
இஸ்லாமிய இறைக்கோட்பாடு இந்திய சமய நெறிகள், சித்தாந்தங்கள் பலவற்றிலும் பெருத்த மாறுதல்களை ஏற்படுத்தியது.
இஸ்லாமியப் பேரறிஞர் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி இதுகுறித்து எழுதியுள்ள ஒரு கருத்து மேலோட்டமாகப் பார்க்கையில் அதிர்ச்சியை அளித்தாலும் ஆழக் கவனித்தால் உண்மை புலனாகும்.
அவர் எழுதுகிறார்: இஸ்லாமின் ஓரிறைக் கோட்பாடு காரணமாக சித்தாந்த மாறுபாட்டை சந்தித்தவை ஆர்ய சமாஜம், ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளே ஆகும்.
விளைவாக, உருவ வழிபாடு எனும் இணைவைப்புக் கருத்திலிருந்து (தவ்ஹீது எனும்) ஓரிறைக் கோட்பாட்டை நோக்கி நெருங்கிவர அவை முயன்றன.
நாம் பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருப்பதால் பண்பாட்டுத் தளத்தை கவனிப்போம்.
தன்னுடைய பண்பாட்டின் சிறப்புக் கூறுகள் பலவற்றை இஸ்லாம் பிறசமய நெறிகள், மரபு சித்தாந்தங்கள் போன்;றவற்றிற்கு ஷஏற்றுமதி செய்திருந்தாலும்,
குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு வீரியமிக்க பல்வேறு பண்பாட்டுத் தாக்கங்களை ஷஇறக்குமதி செய்து உள்வாங்கி கொண்டது.
திருமணம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்திலும் பெண்ணடிமை பிணைந்து கிடக்கின்றது.
இவை அனைத்தும் சமயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு சாதிகளின் வழியாகப் பாதுகாக்கப்படுகின்றன. என்று ஒரு பெண்ணியவாதி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.
கருக்கலைப்பு, சிசுக்கொலை, மீறிப் பிறந்தால் வரவேற்பின்றி புறக்கணிப்பு, குழந்தை வளர்ப்பில் பராபட்சம், விளையாட்டுகளில் கூட வேறுபாடு, கல்வி அளிப்பதில் பாகுபாடு என்றிவ்வாறாக சீர், செனத்தி, நகை, நட்டு, வரதட்சணை, தற்கொலை, புகுந்த வீட்டுக் கொடுமைகள் என்ற தொடர்கதையாக நீள்பவை அனைத்தையும் பார்க்கும் போது மேற்கூறப்பட்ட கருத்து உண்மையே என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கூடக்குறைவு ஏதுமின்றி பெண்களின் மீதான இக்கொடுமைகள் யாவற்றையும்
மனித வாலாற்றில் இஸ்லாம் மட்டும்தான் ஒழித்துக்கட்டி
பெண்ணினம் தன்னுடைய வாழ்வு மூச்சை சீராகச் சுவாசிக்க வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது
என்று நாம் முன்வைக்கிற அதே சமயம்,
தற்போதைய நிகழ்கால முஸ்லிம் சமூகத்தில் இக்கொடுமைகள் நிலவவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கவும் தயாராக இல்லை!
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் (கி.பி.எட்டாம் நூற்றாண்டில்) இந்தியாவில் இஸ்லாம் அறிமுகமானது என வைத்துக் கொண்டால் கூட
ஏறக்குறைய பன்னிரண்டு நூற்றாண்டு காலமாய் இங்கே இஸ்லாமும், முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்லவேண்டும்.
ஆனால், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல முடியுமேயொழிய இஸ்லாம் வாழ்ந்து வருகின்றது என்று சொல்லவே முடியாது.
பிரச்சனையின் அடிப்படைச் சிக்கலே இங்குதான் அவிழ்கின்றது.
ஓரிறைவனை மட்டுமே ஒப்புக்கொண்டு
அவன் காட்டிய வழியில் தான் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும்
என்கிற சத்திய நன்னெறியினை இந்தியவாழ் முஸ்லிம்கள் தத்தமது சமகாலத்தைய சகோதர சமயத்தார்களிடம் முறையாகக் கொண்டுபோய் சேர்த்தார்கள் இல்லையா?
என்கிற கேள்வியையே இங்கு நாம் ஒதுக்கித் தள்ளிவிடுவோம்.
கடவுட் கொள்கையிலும், பண்பாட்டிலும் பாரதூரமான வேறுபாடுகளைக் கொண்ட இருசமூகங்கள் அருகருகே கலந்து வசிக்கும்போது அவற்றிற்கிடையே பரஸ்பரம் நிகழும் தாக்கங்கள் எங்ஙனம் அமையும்?
அடிப்படைக் கொள்கையையோ, அவற்றின் கூறுகளையோ ஏற்றல்,
கலாச்சாரத்தின் சிற்சில அம்சங்களை ஒப்புக் கொள்ளல்,
நேரிடையாகவோ, எதிரிடையாகவே ஒருசில பண்பாட்டு மாற்றங்கள், சிதைவுகளுக்கு உட்படுதல் போன்ற தளங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?
இத்தகைய எதிர்த் தாக்கங்கள் எந்தச் சமூகத்தில் அதிகமாகப் பிரதிபலித்தன?
எனும் கோணத்தில் ஆராயப் புகுந்தோமென்றால்
இந்திய முஸ்லிம்; பெண்கள் இன்றைக்கு சந்தித்து வருகின்ற எல்லாப் பிரச்சனைகள், அவலங்களுக்குமான முழுவிடை கிடைத்துவிடும்.
இஸ்லாமிய இறைக்கோட்பாடு இந்திய சமய நெறிகள், சித்தாந்தங்கள் பலவற்றிலும் பெருத்த மாறுதல்களை ஏற்படுத்தியது.
இஸ்லாமியப் பேரறிஞர் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி இதுகுறித்து எழுதியுள்ள ஒரு கருத்து மேலோட்டமாகப் பார்க்கையில் அதிர்ச்சியை அளித்தாலும் ஆழக் கவனித்தால் உண்மை புலனாகும்.
அவர் எழுதுகிறார்: இஸ்லாமின் ஓரிறைக் கோட்பாடு காரணமாக சித்தாந்த மாறுபாட்டை சந்தித்தவை ஆர்ய சமாஜம், ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளே ஆகும்.
விளைவாக, உருவ வழிபாடு எனும் இணைவைப்புக் கருத்திலிருந்து (தவ்ஹீது எனும்) ஓரிறைக் கோட்பாட்டை நோக்கி நெருங்கிவர அவை முயன்றன.
நாம் பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருப்பதால் பண்பாட்டுத் தளத்தை கவனிப்போம்.
தன்னுடைய பண்பாட்டின் சிறப்புக் கூறுகள் பலவற்றை இஸ்லாம் பிறசமய நெறிகள், மரபு சித்தாந்தங்கள் போன்;றவற்றிற்கு ஷஏற்றுமதி செய்திருந்தாலும்,
குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு வீரியமிக்க பல்வேறு பண்பாட்டுத் தாக்கங்களை ஷஇறக்குமதி செய்து உள்வாங்கி கொண்டது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
உலமாக்கள், மார்க்க அறிஞர்களின் கவனமும் கண்காணிப்பும் இல்லாமல் போனதால் தான் இது நிகழ்ந்தது என்று தைரியமாகக் கூறலாம்
உருவ வழிபாட்டிற்கு இணையான தர்கா வழிபாடு,
ஆதீனமடாதிபதிகள், தனிநபர் வழிபாடு,
செய்வினை, ஜாதிகளுக்கு மாற்றாக உட்பிரிவுகள் பிராதரி (சகோதர இனப்பிரிவுகள்)
சூனியம் போன்றவற்றின் மாற்றாக ஆமில்கள்,
தங்கல்களின் அமைப்பு,
பஞ்சாங்கத்திற்குப் பதிலாதஃபால் கிதாபுகள்,
ஜோஸியம், ஜாதகம் போன்றவற்றை அப்படியே மனமொப்பி ஏற்றுக் கொள்ளும் தன்மை,
குலதெய்வங்கள் போன்று குல தர்காக்கள், நேர்ச்சை, நேர்ச்சை யாரை நோக்கி செய்யப்படுகின்றதோ அவர் பெயரையே குழந்தைகளுக்கு வைக்கும்போக்கு,
குடும்ப உறுப்பினர்கள் (ஆண்பெண் உட்பட) அனைவர் பெயரிலும் அக்குல தர்கா அவ்லியாவின் பெயர் இடம் பெறுதல்,
சிற்சில இடங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே பெயரையே சூட்டும் குணம்,
திருமணம், திருமண சடங்குகள், மூன்று நாள் முதல் ஏழு நாட்கள் வரை நடைபெறும் திருமண வைபவங்கள்,
சீர் செட்டுகள், நகை வரதட்சணைகள், மொய் வகையறாக்கள், அழைப்பு ஊர்வலங்கள், திருமணங்களைத் தொடர்ந்து படையெடுத்து வரும் பண்டிகை, விழா சீரியல்கள், வளைகாப்பு, குழந்தை பிறப்பு சீர்கள், கருக்கலைப்பு,
பெண்சிசுக் கொலை மட்டும் நானறிந்து அவ்வளவாக இல்லை
பெண் குழந்தை புறக்கணிக்கப்படுதல், வளர்ப்பில் பாகுபாடு பாரபட்சம், கல்வி மறுப்பு,
பத்தாம்பசலித்தனத்தின் அடையாளமாய் பெண் உருவாக்கம் என்று முஸ்லிம் சமூகத்தில் இன்று பிடிவாதமாய் நின்று நிலவிவரும்
இவை எதுவொன்றுமே இஸ்லாத்தின் அம்சங்கள் அல்ல.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஷஒட்டி உறவாடி வரும் மாற்றுமதத்தாரின் பண்பாட்டைப் பார்த்து கற்றுக் கொண்டவை
அல்லது சிலைவணக்கம் தவறு என்றுணர்ந்து நம் முன்னோர் இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தபோதும் விடாப்பிடியாக அக்கறையின்றி கொண்டு வந்த மிச்ச சொச்சங்கள் இவை.
மக்களுடைய மனப்போக்கு என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது.
ஆலிம்கள் உலமாக்களின் பொறுப்பின்மை, கவனக்குறை என்று தான் கூறவேண்டும்.
இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றியவர்களே எங்களுக்கும் ஒரு சிலையைச் செய்து கொடு! என்று கேட்டிருக்கும் போது மக்கள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்று காரணம் கட்ட முடியாது.
உலமாக்கள் ஏன் கவனம் செலுத்தாது விட்டுவிட்டனர் என்பது வேறொரு தலைப்பின் கீழ் விவாதிக்க வேண்டிய விஷயம்!
இஸ்லாம் முறையாக போதிக்கப்படவில்லை, பின்பற்றப்படவில்லை என்பது தான் கருத்தூன்றி இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்!
இதன் விளைவு எப்படி வெளிப்பட்டாக வேண்டுமோ அப்படியே வெளிப்படுகின்றது.
குரலற்றவர்களின் குரல் என்கிற தலைப்பில் தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்ட நூலொன்று சிறையில் இருந்தபோது என்கைக்கு வந்தது.
அந்நூலை தொடர்ச்சியாக வாசிக்கவே என்னால் இயலவில்லை.
கண்ணீர் ததும்பித் ததும்பி எழுத்துக்களை மறைத்துக் கொண்டே இருந்தது.
அடிகள் உதைகளுடனான வளர்ப்பு, குடிகாரத் தந்தையின் கொடுமை, பாலியல் சீண்டல்கள்,
முதிர்கன்னிகள், வரதட்சணை சித்ரவதைகள், கணவனின் கொடுமைகள்,
தலாக் பயமுறுத்தல்கள், நிர்க்கதியான நிலை,
போக்கிடமோ, புகலிடமோ ஏதுமற்ற அநாதரவு!
ஐயா, இவையெல்லாம் என்ன?
உலகமெல்லாம் சமத்துவம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இஸ்லாமின் சொந்த வீட்டில்தானா இவையனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன?
உருவ வழிபாட்டிற்கு இணையான தர்கா வழிபாடு,
ஆதீனமடாதிபதிகள், தனிநபர் வழிபாடு,
செய்வினை, ஜாதிகளுக்கு மாற்றாக உட்பிரிவுகள் பிராதரி (சகோதர இனப்பிரிவுகள்)
சூனியம் போன்றவற்றின் மாற்றாக ஆமில்கள்,
தங்கல்களின் அமைப்பு,
பஞ்சாங்கத்திற்குப் பதிலாதஃபால் கிதாபுகள்,
ஜோஸியம், ஜாதகம் போன்றவற்றை அப்படியே மனமொப்பி ஏற்றுக் கொள்ளும் தன்மை,
குலதெய்வங்கள் போன்று குல தர்காக்கள், நேர்ச்சை, நேர்ச்சை யாரை நோக்கி செய்யப்படுகின்றதோ அவர் பெயரையே குழந்தைகளுக்கு வைக்கும்போக்கு,
குடும்ப உறுப்பினர்கள் (ஆண்பெண் உட்பட) அனைவர் பெயரிலும் அக்குல தர்கா அவ்லியாவின் பெயர் இடம் பெறுதல்,
சிற்சில இடங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே பெயரையே சூட்டும் குணம்,
திருமணம், திருமண சடங்குகள், மூன்று நாள் முதல் ஏழு நாட்கள் வரை நடைபெறும் திருமண வைபவங்கள்,
சீர் செட்டுகள், நகை வரதட்சணைகள், மொய் வகையறாக்கள், அழைப்பு ஊர்வலங்கள், திருமணங்களைத் தொடர்ந்து படையெடுத்து வரும் பண்டிகை, விழா சீரியல்கள், வளைகாப்பு, குழந்தை பிறப்பு சீர்கள், கருக்கலைப்பு,
பெண்சிசுக் கொலை மட்டும் நானறிந்து அவ்வளவாக இல்லை
பெண் குழந்தை புறக்கணிக்கப்படுதல், வளர்ப்பில் பாகுபாடு பாரபட்சம், கல்வி மறுப்பு,
பத்தாம்பசலித்தனத்தின் அடையாளமாய் பெண் உருவாக்கம் என்று முஸ்லிம் சமூகத்தில் இன்று பிடிவாதமாய் நின்று நிலவிவரும்
இவை எதுவொன்றுமே இஸ்லாத்தின் அம்சங்கள் அல்ல.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஷஒட்டி உறவாடி வரும் மாற்றுமதத்தாரின் பண்பாட்டைப் பார்த்து கற்றுக் கொண்டவை
அல்லது சிலைவணக்கம் தவறு என்றுணர்ந்து நம் முன்னோர் இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தபோதும் விடாப்பிடியாக அக்கறையின்றி கொண்டு வந்த மிச்ச சொச்சங்கள் இவை.
மக்களுடைய மனப்போக்கு என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது.
ஆலிம்கள் உலமாக்களின் பொறுப்பின்மை, கவனக்குறை என்று தான் கூறவேண்டும்.
இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றியவர்களே எங்களுக்கும் ஒரு சிலையைச் செய்து கொடு! என்று கேட்டிருக்கும் போது மக்கள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்று காரணம் கட்ட முடியாது.
உலமாக்கள் ஏன் கவனம் செலுத்தாது விட்டுவிட்டனர் என்பது வேறொரு தலைப்பின் கீழ் விவாதிக்க வேண்டிய விஷயம்!
இஸ்லாம் முறையாக போதிக்கப்படவில்லை, பின்பற்றப்படவில்லை என்பது தான் கருத்தூன்றி இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்!
இதன் விளைவு எப்படி வெளிப்பட்டாக வேண்டுமோ அப்படியே வெளிப்படுகின்றது.
குரலற்றவர்களின் குரல் என்கிற தலைப்பில் தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்ட நூலொன்று சிறையில் இருந்தபோது என்கைக்கு வந்தது.
அந்நூலை தொடர்ச்சியாக வாசிக்கவே என்னால் இயலவில்லை.
கண்ணீர் ததும்பித் ததும்பி எழுத்துக்களை மறைத்துக் கொண்டே இருந்தது.
அடிகள் உதைகளுடனான வளர்ப்பு, குடிகாரத் தந்தையின் கொடுமை, பாலியல் சீண்டல்கள்,
முதிர்கன்னிகள், வரதட்சணை சித்ரவதைகள், கணவனின் கொடுமைகள்,
தலாக் பயமுறுத்தல்கள், நிர்க்கதியான நிலை,
போக்கிடமோ, புகலிடமோ ஏதுமற்ற அநாதரவு!
ஐயா, இவையெல்லாம் என்ன?
உலகமெல்லாம் சமத்துவம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இஸ்லாமின் சொந்த வீட்டில்தானா இவையனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
யா அல்லாஹ்! இவற்றுக்கெல்லாம் யார் காரணம்?
இஸ்லாமிய அமைப்பொன்றின் முன்பு ஊழியம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் பெண்கள் படும் பாட்டினை கண்களால் பார்த்திருக்கிறேன்.
நெருங்கிய உற்றார் உறவினர்களினால் நிகழ்த்தப்படும்; பாலியல் சீண்டல்களைப் பற்றி காது கொடுத்துக் கேட்டிருக்கிறேன்.
அவற்றால் மனம் பாதிக்கப்பட்ட பெண்களை பேதைச் சகோதரிகளைக் கண்டுள்ளேன்.
முறையற்ற தலாக்குகளால் சீரழிந்து போனோர்
தொலைந்து போன வாழ்வைத் தேடி அலைவதையும் கண்டுள்ளேன்.
இளம் வயதில் துணையற்றுப் போன (பெரும்பாலோர் தலாக் விடப்பட்டவர்கள்)
முஸ்லிம் பெண்களின் மறுவாழ்வுக்கென்றே திருப்பூர், குன்னூர் போன்ற இடங்களில் அமைப்புகள் இயங்குகின்றன.
தென்காசி பகுதியில் பழங்குடி முஸ்லிம் பெண்களை முறைப்படி திருமணம் செய்து கொடுப்பதெற்கென்றே சிலர் பாடுபட்டு வருகிறனர்.
இவர்கள் அனைவரும் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியை நிறைவேற்ற எப்படியெல்லாம் திணறுகிறார்கள் என்று நம்மில் யாருக்காவது தெரியுமா?
எழுத்துகளிலும், பயான்களிலும் முன்வைக்கப்படுகின்ற இஸ்லாம்தான் மொஹல்லாக்களிலும் வசிக்கின்றது என்றால் இவர்களுக்கு எல்லாம் எதற்கு இந்த வேலை?
இதற்கெல்லாம் யாரு காரணம்?
இறைவனா?
இறைத்தூதரா?
வான்மறை குர்ஆனா?
வழிகாட்ட வந்த நபிமொழியா?
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!
இவைதாம் காரணம் என்றால் இப்படிப்பட்ட மார்க்கம் கண்டிப்பாக இறைமார்க்கமாக இருக்காது.
இத்தகைய போதனைகளுக்குப் பின்னணியில் உள்ள ந}ல் கட்டாயம் இறைமறையாக இருக்காது.
இஸ்லாமிய அறிவு கொடுக்கப்படாததும், இஸ்லாமிய வாழ்வும் ஒழுக்கமும் பயிற்றுவிக்கப் படாததும் தான் உண்மையான காரணங்கள் என்கிற ஒருமித்த முடிவிற்குத்தான் நீங்களும் நானும் இப்போது வரவேண்டியிருக்கிறது.
கற்பிப்பதும், பயிற்றுவிப்பதும் யார்மீது கடமை?
அக்கடமையை ஏன் அவர்கள் நிறைவேற்றாமல் போனார்கள்?
என்பனவெல்லாம் பக்கவாட்டில் முளைக்கின்ற துணைக்கேள்விகள்!
ஆனால் ஒன்றை மட்டும் நீங்களும் நானும் கண்டிப்பாக செய்யமாட்டோம்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குவது,
ஷரீஅத்தை சுட்டிக்காட்டி குற்றஞ்சுமத்தவது,
குர்ஆனுக்கு புதியதொரு விளக்கம் காணவேண்டும் என்று துடிப்பது,
பெண்கள் சட்டவாரியம் அமைப்பது,
வெகுஜன ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சிப்பது என்பன போன்ற செயல்கள் நம்மிடமிருந்து தோன்ற.மேற்கண்ட அவலங்களையெல்லாம் எவ்வாறு அகற்றுவது?
அதற்குரிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றியும் நாம் விரிவாக அலசி ஆராய வேண்டியுள்ளது.
சொல்லப் போனால் இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சியின் கட்டுமானமே அதன் மீது தான் அமையவேண்டியிருக்கும்.
அதுபோலவே பெண்ணுக்கான முழு முற்று விடுதலை - பரிபூரண விடுதலை இஸ்லாமின் மூலம் தான் சாத்தியம் என்பதை இக்கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வலியுறுத்தி உள்ளேன்
பெண்ணிய இயக்கங்கள் போராட்டங்கள் கூட இவ்விஷயத்தில் பெரிதாக ஒன்றும் சாதித்திட இயலாது என்றும் கூறுகிறோம்.
அதெப்படி இஸ்லாம் மட்டும் வெற்றியை ஈட்டும் அல்லது ஈட்டியது என்பதைக் காணலாம்.
''Jazaakallaahu khairan'' http://islamiyappaarvai.blogspot.com/
இஸ்லாமிய அமைப்பொன்றின் முன்பு ஊழியம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் பெண்கள் படும் பாட்டினை கண்களால் பார்த்திருக்கிறேன்.
நெருங்கிய உற்றார் உறவினர்களினால் நிகழ்த்தப்படும்; பாலியல் சீண்டல்களைப் பற்றி காது கொடுத்துக் கேட்டிருக்கிறேன்.
அவற்றால் மனம் பாதிக்கப்பட்ட பெண்களை பேதைச் சகோதரிகளைக் கண்டுள்ளேன்.
முறையற்ற தலாக்குகளால் சீரழிந்து போனோர்
தொலைந்து போன வாழ்வைத் தேடி அலைவதையும் கண்டுள்ளேன்.
இளம் வயதில் துணையற்றுப் போன (பெரும்பாலோர் தலாக் விடப்பட்டவர்கள்)
முஸ்லிம் பெண்களின் மறுவாழ்வுக்கென்றே திருப்பூர், குன்னூர் போன்ற இடங்களில் அமைப்புகள் இயங்குகின்றன.
தென்காசி பகுதியில் பழங்குடி முஸ்லிம் பெண்களை முறைப்படி திருமணம் செய்து கொடுப்பதெற்கென்றே சிலர் பாடுபட்டு வருகிறனர்.
இவர்கள் அனைவரும் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியை நிறைவேற்ற எப்படியெல்லாம் திணறுகிறார்கள் என்று நம்மில் யாருக்காவது தெரியுமா?
எழுத்துகளிலும், பயான்களிலும் முன்வைக்கப்படுகின்ற இஸ்லாம்தான் மொஹல்லாக்களிலும் வசிக்கின்றது என்றால் இவர்களுக்கு எல்லாம் எதற்கு இந்த வேலை?
இதற்கெல்லாம் யாரு காரணம்?
இறைவனா?
இறைத்தூதரா?
வான்மறை குர்ஆனா?
வழிகாட்ட வந்த நபிமொழியா?
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!
இவைதாம் காரணம் என்றால் இப்படிப்பட்ட மார்க்கம் கண்டிப்பாக இறைமார்க்கமாக இருக்காது.
இத்தகைய போதனைகளுக்குப் பின்னணியில் உள்ள ந}ல் கட்டாயம் இறைமறையாக இருக்காது.
இஸ்லாமிய அறிவு கொடுக்கப்படாததும், இஸ்லாமிய வாழ்வும் ஒழுக்கமும் பயிற்றுவிக்கப் படாததும் தான் உண்மையான காரணங்கள் என்கிற ஒருமித்த முடிவிற்குத்தான் நீங்களும் நானும் இப்போது வரவேண்டியிருக்கிறது.
கற்பிப்பதும், பயிற்றுவிப்பதும் யார்மீது கடமை?
அக்கடமையை ஏன் அவர்கள் நிறைவேற்றாமல் போனார்கள்?
என்பனவெல்லாம் பக்கவாட்டில் முளைக்கின்ற துணைக்கேள்விகள்!
ஆனால் ஒன்றை மட்டும் நீங்களும் நானும் கண்டிப்பாக செய்யமாட்டோம்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குவது,
ஷரீஅத்தை சுட்டிக்காட்டி குற்றஞ்சுமத்தவது,
குர்ஆனுக்கு புதியதொரு விளக்கம் காணவேண்டும் என்று துடிப்பது,
பெண்கள் சட்டவாரியம் அமைப்பது,
வெகுஜன ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சிப்பது என்பன போன்ற செயல்கள் நம்மிடமிருந்து தோன்ற.மேற்கண்ட அவலங்களையெல்லாம் எவ்வாறு அகற்றுவது?
அதற்குரிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றியும் நாம் விரிவாக அலசி ஆராய வேண்டியுள்ளது.
சொல்லப் போனால் இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சியின் கட்டுமானமே அதன் மீது தான் அமையவேண்டியிருக்கும்.
அதுபோலவே பெண்ணுக்கான முழு முற்று விடுதலை - பரிபூரண விடுதலை இஸ்லாமின் மூலம் தான் சாத்தியம் என்பதை இக்கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வலியுறுத்தி உள்ளேன்
பெண்ணிய இயக்கங்கள் போராட்டங்கள் கூட இவ்விஷயத்தில் பெரிதாக ஒன்றும் சாதித்திட இயலாது என்றும் கூறுகிறோம்.
அதெப்படி இஸ்லாம் மட்டும் வெற்றியை ஈட்டும் அல்லது ஈட்டியது என்பதைக் காணலாம்.
''Jazaakallaahu khairan'' http://islamiyappaarvai.blogspot.com/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
இதுக்கு எல்லாம் ,முறையான ,இசலாத்தின் கல்வி இல்லாதது தான் மூலக் காரணம் .இம்மை படிப்புக்கு ,கொடுக்கும்,
கொடுத்த அளவுக்கு ஈமானுக்கு கொடுக்காததே காரணம் .,
நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள்,தனி மனிதன் வழிபாடு ,இதுவும் காரணம் .மொத்தத்தில் இன்னும் அறியாமை விலகாமலே இருப்பது உண்மை!
நன்றி தோழரே .நல்ல பதிவு தந்தமைக்கு .
கொடுத்த அளவுக்கு ஈமானுக்கு கொடுக்காததே காரணம் .,
நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள்,தனி மனிதன் வழிபாடு ,இதுவும் காரணம் .மொத்தத்தில் இன்னும் அறியாமை விலகாமலே இருப்பது உண்மை!
நன்றி தோழரே .நல்ல பதிவு தந்தமைக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் (1)
» முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் (2)
» முஸ்லிம் பெண்களின் ஆடையும், சில பௌத்த தேரர்களின் குற்றங்களும் (ஆதாரம் இணைப்பு)
» முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்
» முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் (2)
» முஸ்லிம் பெண்களின் ஆடையும், சில பௌத்த தேரர்களின் குற்றங்களும் (ஆதாரம் இணைப்பு)
» முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|