Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
பண்பட்டவர்களின் வார்த்தைகள் பட்டறிவின் பலனாய் அது பழமொழி...
+3
பானுஷபானா
யாதுமானவள்
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
பண்பட்டவர்களின் வார்த்தைகள் பட்டறிவின் பலனாய் அது பழமொழி...
பழமொழி என்பது யாரால் உருவாக்கப்பட்டது எவரும் அறிந்ததில்லை ஆனால் இன்று நம் வீட்டு குழந்தைகளுக்கு அதன் வரிகூட தெரியாமலிருக்கிறது.ஏதோ தமிழ் துணைபாடதேர்வில் 5 தோ அல்லது 10 மதிப்பெண்களுக்கோ தமிழ்வழிக் கல்வியில் மட்டுமே இருக்கிறது.நம் வீட்டின் பாட்டியோ.தாத்தாவோ வாழ்வின் எதார்தத்தை உணர்ந்திருந்து வாய் வழி சொற்களே.பழமொழியை அனுபவத்தின் குழந்தைகள் என்ற சொல்வார்கள்.ஆகையால்பழமொழியை பிழைமொழி என்றுசொல்லிப் புறங்கையால் ஒதுக்கிவிடமுடியாது.தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது , முதுசொல், முதுமொழி,பழஞ்சொல்,மூதுரை
என்று பலவாறாக குறிக்கப்படுகிறது.தொல்காப்பியத்தில் பழமொழிக்கான விளக்கம்அளிக்கப்பட்டுள்ளது.
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி
குறித்த பொருளை முடித்ததற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப – தொல்காப்பியம்
நெல்லை மாவட்டத்தில் பழமொழியைச் சொலவடை என்றும் , பழைய ராமநாதபுரம்மாவட்டத்தில் ஒவகதை என்றும் சேலத்தில் சொலவந்தரம் என்றும் கோவையில்ஒப்புத் தட்டம் என்றும் அழைக்கிறார்கள்.ஆங்கிலத்தில் பழமொழியானதுProverb என்றும் old sayings என்றும் அழைக்கப்படுகிறது.பெரும்பாலான தமிழ்ப் பழமொழிகள் எதுகை மோனையிலும் , முரண்தொடையிலும்
எழுதப்பட்டுள்ளன அறியப்படாத எத்தனையோ பழமொழிகள் காலத்தால் மறைந்து போயின• அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
• அகல உழுகிறதை விட ஆழ உழு.
• அகல் வட்டம் பகல் மழை.
• அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
• அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
• அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
• அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
• அடக்கமே பெண்ணுக்கு அழகு.
• அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
• அடாது செய்தவன் படாது படுவான்.
• அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
• அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
• அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
• அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
• அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
• அந்தி மழை அழுதாலும் விடாது.
• அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
• அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
• அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
• அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
• அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
• அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
• அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
• அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
• அழுத பிள்ளை பால் குடிக்கும்.
• அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
• அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
• அறச் செட்டு முழு நட்டம் .
• அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
• அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
• அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
• அறமுறுக்கினால் அற்றும் போகும்.
• அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
• அறிய அறியக் கெடுவார் உண்டா?
• அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
• அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
• அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
• அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
• அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
• அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
• அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
• அற்ப அறிவு அல்லற் கிடம்.
• அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
• அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
• அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
• அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
• அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாம
• ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
• ஆரால் கேடு, வாயால் கேடு.
• ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
• ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
• ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
• ஆழமறியாமல் காலை இடாதே.
• ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
• ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
• ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
• ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
• ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
• ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
• ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
• ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
• ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
• ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
• ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
• ஆனைக்கும் அடிசறுக்கும்.
• ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
• ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்ன
• இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
• இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
• இஞ்சி இலாபம் மஞ்சளில்.
• இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
• இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
• இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
• இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
• இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
• இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
• இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
• இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
• இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
• இராச திசையில் கெட்டவணுமில்லை
• இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
• இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
• இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
• இருவர் நட்பு ஒருவர் பொறை.
• இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
• இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
• இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
• இளங்கன்று பயமறியாது
• இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
• இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
• இறங்கு பொழுதில் மருந்து குடி
• இறுகினால் களி , இளகினால் கூழ்.
• இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
• இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
• இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
• இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
• ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
• ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
• ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
• ஈர நாவிற்கு எலும்பில்லை.
• உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
• உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
• உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
• உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
• உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
• உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
• உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
• உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
• உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
• உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
• உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
• உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
• உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
• உலோபிக்கு இரட்டை செலவு.
• உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
• உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
• உளவு இல்லாமல் களவு இல்லை.
• உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
• உள்ளது போகாது இல்லது வாராது.
• உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
• உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
• உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
• ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
• ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
• ஊண் அற்றபோது உடலற்றது.
• ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
• ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
• ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
• ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
• எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
• எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
• எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
• எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
• எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
• எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
• எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
• எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
• எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
• எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
• எதார்த்தவாதி வெகுசன விரோதி.
• எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
• எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
• எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
• எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
• எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
• எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
• எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
• எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
• எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
• எலி அழுதால் பூனை விடுமா?
• எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
• எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
• எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
• எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
• எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
• எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
• எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
• எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
• எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
• எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
• எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
• எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
• எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
• எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
• எறும்பு ஊர கல்லுந் தேயும்.
• எறும்புந் தன் கையால் எண் சாண்
• ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
• ஏரி நிறைந்தால் கரை கசியும்.
• எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
• ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
• ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
• ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
• ஏழை என்றால் எவர்க்கும் எளிது
• ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
• ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
• ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
• ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
• ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
• ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
• ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
• ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
• ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
• ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
• ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
• ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
• ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
• ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
• ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
• ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
• ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
• ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
• ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
• ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
• ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
• ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
• ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
• ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
• ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
• ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
• ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
• ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
• ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
• ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
• கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
• கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
• கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
• கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
• கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
• கடல் திடலாகும், திடல் கடலாகும்.
• கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
• கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
• கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
• கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
• கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
• கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
• கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
• கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
• கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
• கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
• கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
• கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
• கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
• கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
• கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
• கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
• கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
• கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
• கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
• கண் கண்டது கை செய்யும்.
• கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
• கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
• கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
• கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
• கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
• கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
• கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
• கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
• கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
• கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
• கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
• கரணம் தப்பினால் மரணம்.
• கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
• கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
• கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
• கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
• கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
• கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
• கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
• கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
• கல்லாதவரே கண்ணில்லாதவர்.
• கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
• கல்வி அழகே அழகு.
• கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
• கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
• கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
• களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
• கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
• கள்ள மனம் துள்ளும்.
• கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
• கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
• கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
• கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
• கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
• கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
• கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
• கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
• கனிந்த பழம் தானே விழும்.
• கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
• கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
• காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
• காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
• காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
• காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
• காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
• காணி ஆசை கோடி கேடு.
• காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
• காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
• காப்பு சொல்லும் கை மெலிவை.
• காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
• காய்த்த மரம் கல் அடிபடும்.
• காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
• காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
• காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
• கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
• காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
• காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
• காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
• காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
• காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
• காற்றில்லாமல் தூசி பறக்குமா?
• காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
• காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
• கிட்டாதாயின் வெட்டென மற
• கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
• கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
• கீர்த்தியால் பசி தீருமா?
• கீறி ஆற்றினால் புண் ஆறும்.
• குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
• குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
• குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
• குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
• குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
• குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
• குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
• குணத்தை மாற்றக் குருவில்லை.
• குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
• குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
• குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
• குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
• குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
• குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
• குப்பை உயரும் கோபுரம் தாழும்.
• குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
• குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
• குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
• குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
• குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
• குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
• குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
• குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
• குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
• குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
• குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
• கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
• குரங்கின் கைப் பூமாலை.
• குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
• குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
• கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
• கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
• கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
• கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
கெடுக்கினும் கல்வி கேடுபடாது
• கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
• கெடுவான் கேடு நினைப்பான்
• கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
• கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
• கெட்டும் பட்டணம் சேர்
• கெண்டையைப் போட்டு வராலை இழு.
• கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
• கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
• கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
• கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
• கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
• கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
• கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
• கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
• கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
• கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
• கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
• கையிலே காசு வாயிலே தோசை
• கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
• கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
• கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்
• கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
• கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
• கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
• கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
• கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
• கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
• கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
• கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
• கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
• கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
• கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
• கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
• கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
• கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
• கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
• கோபம் சண்டாளம்.
• கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
• கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
• கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
• கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
• கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
• கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
• சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
• சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
• சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
• சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
• சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
• சர்க்கரை என்றால் தித்திக்குமா?
• சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
• சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
• சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
• சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
• சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
• சாண் ஏற முழம் சறுக்கிறது.
• சாது மிரண்டால் காடு கொள்ளாது.
• சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
• சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
• சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
• சுக துக்கம் சுழல் சக்கரம்.
• சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
• சுட்ட சட்டி அறியுமா சுவை.
• சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
• சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
• சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
• சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
• சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
• சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
• சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
• சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
• சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
• சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
• சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
• செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
• செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
• செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
• செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
• செயவன திருந்தச் செய்.
• செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
• செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
• செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
• சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
• சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
• சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
• சேற்றிலே செந்தாமரை போல.
• சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
• சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
• சொல் அம்போ வில் அம்போ?
• சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
• சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
• சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
• சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
• சொல்வல்லவனை வெல்லல் அரிது.
• சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
• சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
• சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
• சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
• சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
• சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
• தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
• தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
• தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
• தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
• தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
• தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
• தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
• தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
• தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
• தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
• தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
• தருமம் தலைகாக்கும்.
• தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
• தலை இருக்க வால் ஆடலாமா ?
• தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
• தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
• தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
• தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
• தவளை தன் வாயாற் கெடும்.
• தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
• நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடா
*இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?
*தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது
*கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
*கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்
*அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
*அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது
*அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்
*ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
*இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்
*ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்
*அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் *பிரயோசனமில்லாதவை
*அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து
*தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு
*அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்
*அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?
*அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
*ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்
*ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு
*அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்
*அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்
*புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்
*பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்
பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்
நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்
*பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்
*ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்
*நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை
*ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்
*மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு
*உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
*முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது
*சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது
*சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
*எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்
*உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது
*சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு
*மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும்
நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்
*எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்
*இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்
*உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்
*நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்
*ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்
*அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்
எஜமானனை கீழே தள்ளாமல் விடாது
*அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்
*காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்
*ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை
செவிடன் இருமுறை சிரிப்பான்
*ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்
*குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.
*அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்
*ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்
*தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை
*கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்
*மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்
*வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான்
*இரவல் வாங்கிய உடை வாடை தாங்காதுஉடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை
*ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்
*மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..
*உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்
*ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை
*மனைவியும்
Re: பண்பட்டவர்களின் வார்த்தைகள் பட்டறிவின் பலனாய் அது பழமொழி...
அருமை! அருமை ! பகிர்வுக்கு நன்றி அப்துல்லாஹ் ..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பண்பட்டவர்களின் வார்த்தைகள் பட்டறிவின் பலனாய் அது பழமொழி...
மீண்டும் ஒரு முறை எங்களுக்கு நினைவு படுத்திப் படிப்பதற்கு பகிர்ந்தழித்த உறவுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பண்பட்டவர்களின் வார்த்தைகள் பட்டறிவின் பலனாய் அது பழமொழி...
அருமை இருந்தாலும் ரெம்ப நீளமான பதிவா இருக்கே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பண்பட்டவர்களின் வார்த்தைகள் பட்டறிவின் பலனாய் அது பழமொழி...
இந்த நேரத்துக்கு தேவையான பதிவு .
மறந்த பழமொழிகள் .அறியாத் பழமொழிகள்
கூட இங்கு ..
அரிய பதிவுவை அறிய தந்த தோழருக்கு நன்றி .
மறந்த பழமொழிகள் .அறியாத் பழமொழிகள்
கூட இங்கு ..
அரிய பதிவுவை அறிய தந்த தோழருக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பண்பட்டவர்களின் வார்த்தைகள் பட்டறிவின் பலனாய் அது பழமொழி...
@. @. ##* :”@: :!@!:kalainilaa wrote:இந்த நேரத்துக்கு தேவையான பதிவு .
மறந்த பழமொழிகள் .அறியாத் பழமொழிகள்
கூட இங்கு ..
அரிய பதிவுவை அறிய தந்த தோழருக்கு நன்றி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|