Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
அழிந்த மதுரையும் அழியாத தெருக்களும்!
Page 1 of 1
அழிந்த மதுரையும் அழியாத தெருக்களும்!
மதுரை ஆங்கிலேயரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறித்து பல்வேறு குழப்பான கருத்துக்கள் நிலவுகின்றன.
1764-லிலேயே ஆங்கிலேயர் வசம் மதுரை போனது. அப்போது முதல் மாவட்ட ஆட்சியராக ஜார்ஜ் ப்ரக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார் என்ற குறிப்பும் உள்ளது.
1801-இல்தான் ஆங்கிலேயரின் முழுமையான ஆட்சிக்கு உட்பட்டதாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1866 இல் மதுரை நகராட்சியாக அறிவிக்கப்படுவதற்கு முன்கூட ஆங்கியேர்களே மாவட்ட ஆட்சியராக இருந்து வந்திருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர் 1834 முதல் 1847 வரை மதுரை ஆட்சியராக இருந்த ஜோஹன் பிளாக்பர்கன் என்பவர்.
13 ஆண்டுகள் மதுரை ஆட்சியராக இருந்த பிளாக்பர்ன் எடுத்த நடவடிக்கைகள் கடுமையான விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் மக்கள் அவரைப் புகழவும் செய்கின்றனர். பிளாக்பர்ன் பொறுப்புக்கு வந்தபோது மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றி இருந்த வீதிகள், ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி மற்றும் மாசிவீதி என்ற நான்கு பிரதான வீதிகளில் கோயிலின் உள்ளே இருந்த ஆடிவீதி தவிர மற்ற மூன்று வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இதனை பிளாக் பர்ன் அகற்றியுள்ளார். மதுரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பிள்ளையார் சுழியை போட்டவர் இவரே.
இதனைத் தொடர்ந்து பிளாக் பர்ன் மதுரையை விரிவு படுத்த பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அவருக்கு மதுரையில் இருந்த கோட்டைகளும், அகழிகளும் தடையாய் இருந்தன. மதுரையை சீரமைக்கவேண்டும் எனில் அகழிகளை அழிப்பதை தவிர வேறு வழியில்லை என நினைத்தார் ஆட்சியர். ஒவ்வொரு அகழிகளின் நீளம் 5670 அடியாக இருந்துள்ளது. அகழிகளை அகற்றுவதற்கு பெரும் மனித உழைப்பும், பணம் விரயமாகும் என எண்ணி அதற்காக ஒரு யுக்தியை கையாண்டார். அகழியை யார் சொந்த செலவில் மூடுகிறார்களோ அவர்கள் அந்த இடத்தை தனதாக்கி கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டார். இதனால் ஆர்வம் கொண்ட மக்கள் அகழிகளை மூடினார்கள். அகழிகளை மூடி இடத்தை வைத்துக் கொண்டார்கள்.
வெளிவீதி
கோட்டைச்சுவர்கள் இடிக்கப்பட்டு அகழி வீதிகள் உருவாக்கப்பட்டன. கோட்டைக்கு வெளியே உள்ள வீதி வெளிவீதி என்றும், மேற்கு பக்கம் இருந்த வீதி மேலவெளிவீதி என்றும், வடக்கு பக்கம் இருந்த வீதி வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி என உருவாகியது.
நினைவு சின்னங்களை அழித்த வழக்கு
பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மேஸ்திரி வீதி
தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்ட்டன. மேலப்பெருமாள் மேஸ்திரிவீதி, வடக்குபெருமாள்மேஸ்திரி வீதி, கீழப்பெருமாள்மேஸ்திரி வீதி என உருவாக்கப்பட்டது.
விளக்குத் தூண்
பிளாக்பர்னின் மதுரை சீர்திருத்தத்திற்காக அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு நினைவுச்சின்னங்களை நிறுவினார்கள். ஒன்று கீழமாசிவீதி, தெற்குமாசிவீதி சந்திப்பில் உள்ள விளக்குத்தூண். இவ்விளக்குத்தூணில் பிளாக்பர்ன் விளக்குத்தூண் என்றும் "பை எ கிரேட்புல் பீப்பிள்"என்று ஆங்கிலத்தில், அதாவது "நன்றியுள்ள மக்களால் நிறுவப்பட்ட தூண்" என்ற குறிப்பு இருந்துள்ளது. காலப்போக்கில் அவை சிதைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர் மேடாகி மறைந்து உள்ளதாக கூறுகிறார்கள்.
வரலாற்று சின்னங்களை அழித்தவருக்கு பாராட்டு
1847 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று சென்றபோது இங்கிலாந்தில் நடந்த பாராட்டு விழாவில் எபிசியண்ட் கலெக்டர் என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது. வரலாற்று தவற்றுக்கு வால்பிடித்தவர்களை காலமும் வரலாறும் மன்னிக்கவே மன்னிக்காது என்பதை வரலாறுகள் மீண்டும் மீண்டும் போதித்துக்கொண்டிருக்கின்றன. நாம் தான் காதுகொடுத்து கேட்பதில்லை.
ஆதார நூல்கள்:
1.தமிழ்வாசல்,எம்.வீ.அடைக்கல்ராஜ்-மதுரை
2.தடயம், அனிஸ்தீன்,அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி
தொகுப்பு: வைகை அனிஷ், செல்:9715-795795
1764-லிலேயே ஆங்கிலேயர் வசம் மதுரை போனது. அப்போது முதல் மாவட்ட ஆட்சியராக ஜார்ஜ் ப்ரக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார் என்ற குறிப்பும் உள்ளது.
1801-இல்தான் ஆங்கிலேயரின் முழுமையான ஆட்சிக்கு உட்பட்டதாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1866 இல் மதுரை நகராட்சியாக அறிவிக்கப்படுவதற்கு முன்கூட ஆங்கியேர்களே மாவட்ட ஆட்சியராக இருந்து வந்திருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர் 1834 முதல் 1847 வரை மதுரை ஆட்சியராக இருந்த ஜோஹன் பிளாக்பர்கன் என்பவர்.
13 ஆண்டுகள் மதுரை ஆட்சியராக இருந்த பிளாக்பர்ன் எடுத்த நடவடிக்கைகள் கடுமையான விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் மக்கள் அவரைப் புகழவும் செய்கின்றனர். பிளாக்பர்ன் பொறுப்புக்கு வந்தபோது மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றி இருந்த வீதிகள், ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி மற்றும் மாசிவீதி என்ற நான்கு பிரதான வீதிகளில் கோயிலின் உள்ளே இருந்த ஆடிவீதி தவிர மற்ற மூன்று வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இதனை பிளாக் பர்ன் அகற்றியுள்ளார். மதுரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பிள்ளையார் சுழியை போட்டவர் இவரே.
இதனைத் தொடர்ந்து பிளாக் பர்ன் மதுரையை விரிவு படுத்த பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அவருக்கு மதுரையில் இருந்த கோட்டைகளும், அகழிகளும் தடையாய் இருந்தன. மதுரையை சீரமைக்கவேண்டும் எனில் அகழிகளை அழிப்பதை தவிர வேறு வழியில்லை என நினைத்தார் ஆட்சியர். ஒவ்வொரு அகழிகளின் நீளம் 5670 அடியாக இருந்துள்ளது. அகழிகளை அகற்றுவதற்கு பெரும் மனித உழைப்பும், பணம் விரயமாகும் என எண்ணி அதற்காக ஒரு யுக்தியை கையாண்டார். அகழியை யார் சொந்த செலவில் மூடுகிறார்களோ அவர்கள் அந்த இடத்தை தனதாக்கி கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டார். இதனால் ஆர்வம் கொண்ட மக்கள் அகழிகளை மூடினார்கள். அகழிகளை மூடி இடத்தை வைத்துக் கொண்டார்கள்.
வெளிவீதி
கோட்டைச்சுவர்கள் இடிக்கப்பட்டு அகழி வீதிகள் உருவாக்கப்பட்டன. கோட்டைக்கு வெளியே உள்ள வீதி வெளிவீதி என்றும், மேற்கு பக்கம் இருந்த வீதி மேலவெளிவீதி என்றும், வடக்கு பக்கம் இருந்த வீதி வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி என உருவாகியது.
நினைவு சின்னங்களை அழித்த வழக்கு
பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மேஸ்திரி வீதி
தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்ட்டன. மேலப்பெருமாள் மேஸ்திரிவீதி, வடக்குபெருமாள்மேஸ்திரி வீதி, கீழப்பெருமாள்மேஸ்திரி வீதி என உருவாக்கப்பட்டது.
விளக்குத் தூண்
பிளாக்பர்னின் மதுரை சீர்திருத்தத்திற்காக அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு நினைவுச்சின்னங்களை நிறுவினார்கள். ஒன்று கீழமாசிவீதி, தெற்குமாசிவீதி சந்திப்பில் உள்ள விளக்குத்தூண். இவ்விளக்குத்தூணில் பிளாக்பர்ன் விளக்குத்தூண் என்றும் "பை எ கிரேட்புல் பீப்பிள்"என்று ஆங்கிலத்தில், அதாவது "நன்றியுள்ள மக்களால் நிறுவப்பட்ட தூண்" என்ற குறிப்பு இருந்துள்ளது. காலப்போக்கில் அவை சிதைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர் மேடாகி மறைந்து உள்ளதாக கூறுகிறார்கள்.
வரலாற்று சின்னங்களை அழித்தவருக்கு பாராட்டு
1847 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று சென்றபோது இங்கிலாந்தில் நடந்த பாராட்டு விழாவில் எபிசியண்ட் கலெக்டர் என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது. வரலாற்று தவற்றுக்கு வால்பிடித்தவர்களை காலமும் வரலாறும் மன்னிக்கவே மன்னிக்காது என்பதை வரலாறுகள் மீண்டும் மீண்டும் போதித்துக்கொண்டிருக்கின்றன. நாம் தான் காதுகொடுத்து கேட்பதில்லை.
ஆதார நூல்கள்:
1.தமிழ்வாசல்,எம்.வீ.அடைக்கல்ராஜ்-மதுரை
2.தடயம், அனிஸ்தீன்,அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி
தொகுப்பு: வைகை அனிஷ், செல்:9715-795795
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» காலத்தால் அழியாத அதிசய கிராமம்!
» Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..
» அழியாத செல்வம்
» என்றும் அழியாத பொன்மொழிகள்
» அழியாத பொன் மொழிகள்
» Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..
» அழியாத செல்வம்
» என்றும் அழியாத பொன்மொழிகள்
» அழியாத பொன் மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|