சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அறிவிக்கப்படாத அரிவாள் வெட்டும்! Khan11

அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அறிவிக்கப்படாத அரிவாள் வெட்டும்!

Go down

அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அறிவிக்கப்படாத அரிவாள் வெட்டும்! Empty அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அறிவிக்கப்படாத அரிவாள் வெட்டும்!

Post by ராகவா Sat 14 Dec 2013 - 8:03

தமிழகத்தில் தற்பொழுது அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அதனைப் பயன்படுத்தி அறிவிக்கப்படாத அரிவாள்வெட்டும் அமுலில் உள்ளதோ எனக் கருத வேண்டியுள்ளது.



மற்ற மாநிலங்களில் எத்தனை மணிநேரம் மின்வெட்டு இருக்கிறதோ அந்தளவிற்குத்தான் தமிழகத்தில் மின்சாரம் உள்ளது என்பது பாரமர்களுக்குக் கூட தெரியும்.

மின்சாரம் இல்லா கற்காலத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழகம். தமிழகப் பயன்பாட்டுக்கென மின்உற்புத்தி செய்யும் வடசென்னை அனல்மின்திட்டம் 1990ல் துவங்கப்பட்டது. 1996 ஆம்ஆண்டில் செயல்படத்துவங்கிய இந்தத் திட்டத்தின் மூன்றாவது அலகு உற்பத்தி செய்யும் 210 மெகாவாட்தான் இன்று வரை தமிழக மின்தேவையைப் பூர்த்தி செய்து கொண்டுவருகிறது.

2007 ம் ஆண்டு துவங்கப்பட்ட 1,800 மெகாவாட்டுக்கான திட்டமும் இனிமேல்தான் உற்பத்தியை தொடங்கவேண்டும். அரசின் அறிக்கைப்படி தமிழகத்தின் மொத்த மின்தேவை 12,000 மெகாவாட் எனவும் தற்போதைய உற்பத்தி சுமார் 8000 மெகாவாட் எனவும் பற்றாக்குறை சுமார் 4,000 மெகாவாட் என்றும் அறியப்படுகிறது. மொத்தத்தில் தேவையில் ஒரு பகுதி மட்டுமே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச்-மே மாதத்திலேயே உற்பத்தி நிலைக்குத் தயாரான வல்லூர் 500 மெகாவாட் நிலையமும், மேட்டுர் 600 மெகாவாட் நிலையமும், தூத்துக்குடி இரண்டாவது அலகான 500 மெகாவாட் உற்பத்தி நிலையம், எண்ணூர் திட்டம் 600 மெகாவாட் என எந்த திட்டத்தையும கடந்த தி.மு.க.அரசு செயல்படுத்தவில்லை. விளைவு 50 சதவிகிதம் மின்வெட்டு அப்போதே அமலுக்கு வந்ததது.

மின்வாரியம் லாபத்திலும் இயங்கவில்லை. கடந்த 2003-2004 ஆம் ஆண்டே 53,298 கோடி நஷ்டத்தை எட்டியுள்ளது. தற்பொழுது மின்சாரம் புதிய பொருளாதார கோட்பாட்டின்படி 35 சதவிகிதம் சுயஉற்பத்தியும், 30 சதவீதம் மத்திய தொகுப்பு மின்சாரமும், 35 சதவிகிதம் தனியார் கொள்முதல் மின்சாரமும் தான் நடைமுறையில் உள்ளது.

இவற்றையெல்லாம் விட ஆசியக்கண்டத்திலேயே காற்றாலை வளம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது இந்தியாவில்தான். இதன் மூலம் 2.80 பைசாவுக்கு வாங்கவேடிண்டிய மின்சாரத்தை அரசே 5.05 முதல் 6.70 வரை விலை கொடுத்து வாங்குகிறது. மறைமுகமாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவு.

இது போதாது என எண்ணி கடற்கரையில் 10 சதவீதத்தை தனியாருக்கு தாரை வார்த்து 18,145 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு அனுமதித்துள்ளது கேள்வி கேட்கப்படவேண்டிய விஷயம். இருக்கும் மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு ஓட்டுபோட்ட மக்களை இருளில் திணறடித்து வருகிறது அரசு. இதனால் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் அந்த மின்வெட்டை பயன்படுத்தி அறிவிக்கப்படாத அரிவாள் வெட்டும் அமுலில் உள்ளது! இந்நிலை மாறவில்லையேல், தமிழகம் கற்காலத்தை நோக்கி நகரும் நாட்களும் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது!

- வைகை அனிஷ், 9715-795795​
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum