Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
தமிழ்கட்சிகளின் சந்திப்பு
Page 1 of 1
தமிழ்கட்சிகளின் சந்திப்பு
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் சந்திப்பினை மேற்கொண்டன--அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கம் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இச்சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதாக சந்திப்பில் கலந்துகொண்ட எமது கட்சியின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் கூட்டாக செயற்படுவது எனவும் தீர்வு திட்டம் ஒன்றை ஒருமித்து முன்வைப்பதற்கு ஏற்றவகையில் குழு ஒன்றை அமைப்பதற்கும் இன்றைய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்திப்பதெனவும், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதெனவும் இன்று உடன்பாடு காணப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை மேற்கொண்டன.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளின் அரங்கமானது கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி இடம்பெற்ற தமது முதலாவது சந்திப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இதுதொடர்பாக அழைப்பினை விடுத்திருந்தன. இந்த நிலையில் அவ்வழைப்பினை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பிற்கிணங்க கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.
இரு அமைப்புக்களிலும் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குகொண்ட நிலையில் இன்றைய சந்திப்பானது ஆக்கபூர்வமாக இடம்பெற்றது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் கலந்துரையாடப்பட்டதுடன் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதனடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஒரு குழுவினை எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இன்றையதினம் மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை இடம்பெற்ற இம்முதல் சந்திப்பானது மிகவும் சிநேக பூர்வமானதாகவும் அடுத்தகட்ட சந்திப்புக்களுக்கான ஓர் ஆரம்பமாகவும் அமைந்தமை குறித்து பங்குகொண்ட கட்சித் தலைவர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர்.
இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயகமூர்த்தி சிவசக்தி ஆனந்தன் பா.அரியநேத்திரன் எம்.சுமந்திரன் பொன்.செல்வராசா எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி எம்.கே.சிவாஜிலிங்கம் த.சித்தார்த்தன் செ.சந்திரஹாசன் அ.இராசமாணிக்கம் ப.உதயராசா ஜீ.சுரேந்திரன் கோபாலகிருஷ்ணன் ஆர்.ராகவன் எஸ்.சதானந்தம் டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது!
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநயாக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லய்யா குமாரகுருபரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று விசேட உயர் மட்ட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிபப்pட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அசரியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காக ஆறு பேர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலைக் கூட்டணி, (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
,புளொட், போன்ற 11 கட்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் தடவையாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் பிரச்சினைக்காக ஒன்று சேர்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கம் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இச்சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதாக சந்திப்பில் கலந்துகொண்ட எமது கட்சியின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் கூட்டாக செயற்படுவது எனவும் தீர்வு திட்டம் ஒன்றை ஒருமித்து முன்வைப்பதற்கு ஏற்றவகையில் குழு ஒன்றை அமைப்பதற்கும் இன்றைய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்திப்பதெனவும், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதெனவும் இன்று உடன்பாடு காணப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை மேற்கொண்டன.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளின் அரங்கமானது கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி இடம்பெற்ற தமது முதலாவது சந்திப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இதுதொடர்பாக அழைப்பினை விடுத்திருந்தன. இந்த நிலையில் அவ்வழைப்பினை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பிற்கிணங்க கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.
இரு அமைப்புக்களிலும் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குகொண்ட நிலையில் இன்றைய சந்திப்பானது ஆக்கபூர்வமாக இடம்பெற்றது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் கலந்துரையாடப்பட்டதுடன் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதனடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஒரு குழுவினை எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இன்றையதினம் மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை இடம்பெற்ற இம்முதல் சந்திப்பானது மிகவும் சிநேக பூர்வமானதாகவும் அடுத்தகட்ட சந்திப்புக்களுக்கான ஓர் ஆரம்பமாகவும் அமைந்தமை குறித்து பங்குகொண்ட கட்சித் தலைவர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர்.
இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயகமூர்த்தி சிவசக்தி ஆனந்தன் பா.அரியநேத்திரன் எம்.சுமந்திரன் பொன்.செல்வராசா எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி எம்.கே.சிவாஜிலிங்கம் த.சித்தார்த்தன் செ.சந்திரஹாசன் அ.இராசமாணிக்கம் ப.உதயராசா ஜீ.சுரேந்திரன் கோபாலகிருஷ்ணன் ஆர்.ராகவன் எஸ்.சதானந்தம் டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது!
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநயாக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லய்யா குமாரகுருபரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று விசேட உயர் மட்ட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிபப்pட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அசரியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காக ஆறு பேர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலைக் கூட்டணி, (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
,புளொட், போன்ற 11 கட்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் தடவையாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் பிரச்சினைக்காக ஒன்று சேர்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அத்வானி - ரஜினிகாந்த் சந்திப்பு
» மன்மோகன் - தயாநிதிமாறன் சந்திப்பு
» முதல் சந்திப்பு
» அரை மணி நேரச் சந்திப்பு
» ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு
» மன்மோகன் - தயாநிதிமாறன் சந்திப்பு
» முதல் சந்திப்பு
» அரை மணி நேரச் சந்திப்பு
» ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|