Latest topics
» ஜொலிப்பதில்லை!by rammalar Today at 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Today at 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Today at 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Today at 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Today at 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
+6
பாயிஸ்
jasmin
lafeer
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
அப்புகுட்டி
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
//இது என் நண்பரிடமிருந்து வந்த மடல்//
வளைகுடா மாப்பிள்ளை
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.
அன்புள்ள மனைவிக்கு,
நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..
என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது
அன்புள்ள கணவனுக்கு
தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.
நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களுக்கு இனையாக இருக்கலாம்.
மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.
பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.
அன்புள்ள மனைவிக்கு,
நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.
உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றாள்.
கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.
ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,
அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.
புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது
மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று. மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!
நன்றி முஸ்ரிஸ்
வளைகுடா மாப்பிள்ளை
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.
அன்புள்ள மனைவிக்கு,
நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..
என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது
அன்புள்ள கணவனுக்கு
தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.
நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களுக்கு இனையாக இருக்கலாம்.
மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.
பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.
அன்புள்ள மனைவிக்கு,
நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.
உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றாள்.
கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.
ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,
அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.
புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது
மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று. மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!
நன்றி முஸ்ரிஸ்
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!
மீண்டும் படித்தேன் என்னமோ மாதிரி இருக்கு நன்றி நன்றி
மீண்டும் படித்தேன் என்னமோ மாதிரி இருக்கு நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
சோகம் நிறைந்த அனுபமாக இருந்தது பகிர்வுக்கு நன்றி
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
சோகமான பதிவு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
இன்னொரு முறை படித்துப்பாருங்கள்சாதிக் wrote:சோகம் நிறைந்த அனுபமாக இருந்தது பகிர்வுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
இதுதான் இன்றைய எதார்த்தம் ,பெண்களின் ஆசைக்கு அளவே இல்லை .எனக்கும்தான் .ஆனால் முக்கால்வாசி என் தேவைகளை நான் என் உழைப்பில் வாங்கிக்கொள்கிறேன்.சுல்தான் போன்றவர்கள் எதையும் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் அவர் மனைவி அல்ல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
மனைவியின் ஆசையை நிறைவேற்றா விட்டாலும் குற்றமாச்சே மனைவியின் ராஜாங்கத்தில்jasmin wrote:இதுதான் இன்றைய எதார்த்தம் ,பெண்களின் ஆசைக்கு அளவே இல்லை .எனக்கும்தான் .ஆனால் முக்கால்வாசி என் தேவைகளை நான் என் உழைப்பில் வாங்கிக்கொள்கிறேன்.சுல்தான் போன்றவர்கள் எதையும் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் அவர் மனைவி அல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
மனித ஆசை நிரந்தரமற்றது அதற்கு அடிபணியும்போதுதான் இவ்வாறான நிலை உருவாகிறது கிடைத்ததை போதுமாக்கும் நிலை அனைவருடமும் இருந்துவிட்டால் நிம்மதியாக வாழலாம்
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
நீங்கள் சொல்லுவதும் இருந்தும்.....................................................................................................................?சாதிக் wrote:மனித ஆசை நிரந்தரமற்றது அதற்கு அடிபணியும்போதுதான் இவ்வாறான நிலை உருவாகிறது கிடைத்ததை போதுமாக்கும் நிலை அனைவருடமும் இருந்துவிட்டால் நிம்மதியாக வாழலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
நண்பரே மனைவின் ஆசையை நிறைவேற்றிய நம் ஆதி பிதா ஆதம் அவர்கள் நம்மை எப்படிப் பட்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டுப் போய்விட்டார் என்று நினைத்துப் பார்க்க வேண்டும் .அவர் முடிவுப் படி நடந்து இருந்தால் இன்று நாம் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகளாக அல்லவா இருந்திருப்போம் ...இந்த பாழும் உலகமும் நரகமும் நம்மை தீண்டி இருக்காதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
உண்மைதான் இருந்தாலும் நான் உங்களுக்குத்தானே சப்போர்ட் பண்ணினேன் எல்லாம் விணாய்போய் விட்டதே {)) {))jasmin wrote:நண்பரே மனைவின் ஆசையை நிறைவேற்றிய நம் ஆதி பிதா ஆதம் அவர்கள் நம்மை எப்படிப் பட்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டுப் போய்விட்டார் என்று நினைத்துப் பார்க்க வேண்டும் .அவர் முடிவுப் படி நடந்து இருந்தால் இன்று நாம் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகளாக அல்லவா இருந்திருப்போம் ...இந்த பாழும் உலகமும் நரகமும் நம்மை தீண்டி இருக்காதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
எனக்கு சப்போர்ட் பண்ணினால் சுல்தானின் கதிதான் உங்களுக்கு இது தேவையா ? நீதிக்கும் உண்மைக்கும் குரல் கொடுங்கள் நாங்கள் உங்களோடு இருப்போம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
ஆஹா உங்களை நம்பவே முடியலயே!jasmin wrote:எனக்கு சப்போர்ட் பண்ணினால் சுல்தானின் கதிதான் உங்களுக்கு இது தேவையா ? நீதிக்கும் உண்மைக்கும் குரல் கொடுங்கள் நாங்கள் உங்களோடு இருப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
இஸ்லாம் அதன் தூய வடிவில் விளங்கப்படுகினற பொழுது இம்மாதிரியான ஆசைகளோ,தேடல்களோ ஏற்படாது அத்தோடு இம்மடலும் இங்கு பிரசுரமும் ஆகியிருக்காது எனவே மனிதர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு இவ்வுலகில் நிர்நேயிக்கப்பட்டுள்ளது அது சிலருக்கு போதுமானதாக இருக்கிறது சிலருக்கு போதாமல் இருக்கிறது.நாம் மற்றவர்களைப்பார்த்து வாழாமல் இப்படித்தான் வாழ வேண்டுமென்று ஒரு வரையறை இருக்கிறது எனவே நாம் அதன் படி வாழ்தால் இம்மாதிரியான விபத்துக்கள் இனியும் ஏற்படாது என்பது எனது கருத்தாகவுள்ளது
சிந்தனையைத் தூண்டும் பதிவாக உள்ளது நன்றி
சிந்தனையைத் தூண்டும் பதிவாக உள்ளது நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
நல்ல விதமாக எடுத்துக்காட்டி உள்ளீர்கள் இந்த கதையில் வரும் சுல்தான் என்னத்த பெரிசா ஆசைப்பட்டார் சாதாரணமாக அனைவருக்கும் ஆசைதானே!பாயிஸ் wrote:இஸ்லாம் அதன் தூய வடிவில் விளங்கப்படுகினற பொழுது இம்மாதிரியான ஆசைகளோ,தேடல்களோ ஏற்படாது அத்தோடு இம்மடலும் இங்கு பிரசுரமும் ஆகியிருக்காது எனவே மனிதர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு இவ்வுலகில் நிர்நேயிக்கப்பட்டுள்ளது அது சிலருக்கு போதுமானதாக இருக்கிறது சிலருக்கு போதாமல் இருக்கிறது.நாம் மற்றவர்களைப்பார்த்து வாழாமல் இப்படித்தான் வாழ வேண்டுமென்று ஒரு வரையறை இருக்கிறது எனவே நாம் அதன் படி வாழ்தால் இம்மாதிரியான விபத்துக்கள் இனியும் ஏற்படாது என்பது எனது கருத்தாகவுள்ளது
சிந்தனையைத் தூண்டும் பதிவாக உள்ளது நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
நண்பன் wrote:நல்ல விதமாக எடுத்துக்காட்டி உள்ளீர்கள் இந்த கதையில் வரும் சுல்தான் என்னத்த பெரிசா ஆசைப்பட்டார் சாதாரணமாக அனைவருக்கும் ஆசைதானே!பாயிஸ் wrote:இஸ்லாம் அதன் தூய வடிவில் விளங்கப்படுகினற பொழுது இம்மாதிரியான ஆசைகளோ,தேடல்களோ ஏற்படாது அத்தோடு இம்மடலும் இங்கு பிரசுரமும் ஆகியிருக்காது எனவே மனிதர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு இவ்வுலகில் நிர்நேயிக்கப்பட்டுள்ளது அது சிலருக்கு போதுமானதாக இருக்கிறது சிலருக்கு போதாமல் இருக்கிறது.நாம் மற்றவர்களைப்பார்த்து வாழாமல் இப்படித்தான் வாழ வேண்டுமென்று ஒரு வரையறை இருக்கிறது எனவே நாம் அதன் படி வாழ்தால் இம்மாதிரியான விபத்துக்கள் இனியும் ஏற்படாது என்பது எனது கருத்தாகவுள்ளது
சிந்தனையைத் தூண்டும் பதிவாக உள்ளது நன்றி
எல்லாருக்கும் வரும் சாதரணமான ஆசைதானே என்று நீங்கள் சொன்னால் இன்று எல்லாருமே காரும் பங்கலாகவும்தான் இருக்க வேண்டும்.இருந்தாலும் நான் மேழே குறிப்பிட்டது போன்று இறைவன் நாட்டம் எப்படியோ அப்படியே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
@. @.பாயிஸ் wrote:நண்பன் wrote:நல்ல விதமாக எடுத்துக்காட்டி உள்ளீர்கள் இந்த கதையில் வரும் சுல்தான் என்னத்த பெரிசா ஆசைப்பட்டார் சாதாரணமாக அனைவருக்கும் ஆசைதானே!பாயிஸ் wrote:இஸ்லாம் அதன் தூய வடிவில் விளங்கப்படுகினற பொழுது இம்மாதிரியான ஆசைகளோ,தேடல்களோ ஏற்படாது அத்தோடு இம்மடலும் இங்கு பிரசுரமும் ஆகியிருக்காது எனவே மனிதர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு இவ்வுலகில் நிர்நேயிக்கப்பட்டுள்ளது அது சிலருக்கு போதுமானதாக இருக்கிறது சிலருக்கு போதாமல் இருக்கிறது.நாம் மற்றவர்களைப்பார்த்து வாழாமல் இப்படித்தான் வாழ வேண்டுமென்று ஒரு வரையறை இருக்கிறது எனவே நாம் அதன் படி வாழ்தால் இம்மாதிரியான விபத்துக்கள் இனியும் ஏற்படாது என்பது எனது கருத்தாகவுள்ளது
சிந்தனையைத் தூண்டும் பதிவாக உள்ளது நன்றி
எல்லாருக்கும் வரும் சாதரணமான ஆசைதானே என்று நீங்கள் சொன்னால் இன்று எல்லாருமே காரும் பங்கலாகவும்தான் இருக்க வேண்டும்.இருந்தாலும் நான் மேழே குறிப்பிட்டது போன்று இறைவன் நாட்டம் எப்படியோ அப்படியே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று. மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!
உங்கள் படைப்பு என்றும் அரிய படைப்பாய்,வரும் ,நானும் கரையில் படித்து இருக்கிறேன் !
இது முற்றிலும் ,அனுபவம் கொண்ட வரிகளாய் ,கடிதம் .
முடிக்கும் முன் வரும் இறை வசனம் இதுக்கு ,மகுடத்தின் வைரக்கல் .
தொடருங்கள் உங்கள்,படைப்புக்களை .நன்றி தோழரே .
உங்கள் படைப்பு என்றும் அரிய படைப்பாய்,வரும் ,நானும் கரையில் படித்து இருக்கிறேன் !
இது முற்றிலும் ,அனுபவம் கொண்ட வரிகளாய் ,கடிதம் .
முடிக்கும் முன் வரும் இறை வசனம் இதுக்கு ,மகுடத்தின் வைரக்கல் .
தொடருங்கள் உங்கள்,படைப்புக்களை .நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
அடிப்படையான சுய தேவை பூர்த்தி செய்ய, அயல் தேசம் அனுப்பும் மனைவி, உணர்ச்சி வசப்பட்டு, சலனப்பட்டு, சபலப்பட்டு, அடுத்தவரை விட உயர்ந்தநிலை அடையவேண்டுமென, தகுதிக்கு மீறிய பேராசை கொண்டு, சுய கவுரவர்த்திர்க்காக, மனைவி மக்களை பார்க்கவேண்டுமென்ற நியாயமான ஆசை நிராசையானது....மனைவியின் பேராசையும் நிராசையானது. ....இறைவன் சிந்தித்து செயல்பட்டு வாழ அறிவு கொடுத்தான். அறிவு பூர்வமாக வாழும்போது வாழ வைத்து அழகு பார்க்கிறான்....உணர்ச்சிவசப்பட்டு வாழும்போது தண்டனை தருகிறான்....இதுவே இறை நீதி. இதை உணர்ந்தால் என்றும் மன நிம்மதி.
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
@. @. :!+: :!+: :];:mravi wrote:அடிப்படையான சுய தேவை பூர்த்தி செய்ய, அயல் தேசம் அனுப்பும் மனைவி, உணர்ச்சி வசப்பட்டு, சலனப்பட்டு, சபலப்பட்டு, அடுத்தவரை விட உயர்ந்தநிலை அடையவேண்டுமென, தகுதிக்கு மீறிய பேராசை கொண்டு, சுய கவுரவர்த்திர்க்காக, மனைவி மக்களை பார்க்கவேண்டுமென்ற நியாயமான ஆசை நிராசையானது....மனைவியின் பேராசையும் நிராசையானது. ....இறைவன் சிந்தித்து செயல்பட்டு வாழ அறிவு கொடுத்தான். அறிவு பூர்வமாக வாழும்போது வாழ வைத்து அழகு பார்க்கிறான்....உணர்ச்சிவசப்பட்டு வாழும்போது தண்டனை தருகிறான்....இதுவே இறை நீதி. இதை உணர்ந்தால் என்றும் மன நிம்மதி.
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
நன்றி தோழா! அப்புக்குட்டி உறவு நன்மையான செய்தி கிட்ட தந்த பதிவிற்கு நன்றி...
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
அற்புதமான அறிவுபுர்வமான பதிவு பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
படித்தேன் கண் கலங்கி விட்டது நானும் படித்தேன் மீண்டும் உங்களின் பார்வைக்கு வெளியில் எடுத்துள்ளேன் பாருங்கள் மீண்டுமொருமுறை.
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
இது தான் நமது நிலைமையும் கூட .
பெண்களே கூப்பிட்டாலும் ,போகாமல் இருப்பது நாமுதான் .
பெண்களே கூப்பிட்டாலும் ,போகாமல் இருப்பது நாமுதான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பரிடமிருந்து வந்த மடல் படித்ததும் கண் கலங்கி விட்டது.
இதில் கூறப்பட்டுள்ள விடையத்தை என்னால் இங்கு உணர முடிந்தது எவ்வாறென்றால் இந்தியாவைச்சேர்ந்த நபரொருவர் தன்னுடைய வீட்டுக்கு Skype in ஊடாக தன் மகளுடன் பேசிக்கொண்டிருக்கும் நிலமையில் மரணம் அவரை பிடித்துக்கொண்டது.
3 மணிநேரத்துக்குப்பின்தான் பொலிசாரால் பிரேதம் நீக்கப்பட்டது இதுதான் சொத்து சேர்க்க நினைக்கும் மனிதர்களின் நிலையும் வெளிநாடுகளில் வாழும் மனிதர்களின் நிலையும்.
இதை மீண்டும் ஒரு முறை பிரசுரம் செய்து படிக்கச்செய்ததுடன் இச்சம்பவத்தை பகிர்ந்து கொள்ள உதவிய நண்பன் முனாஸ் சுலைமான் அவர்களுக்கு என் நனிறி
3 மணிநேரத்துக்குப்பின்தான் பொலிசாரால் பிரேதம் நீக்கப்பட்டது இதுதான் சொத்து சேர்க்க நினைக்கும் மனிதர்களின் நிலையும் வெளிநாடுகளில் வாழும் மனிதர்களின் நிலையும்.
இதை மீண்டும் ஒரு முறை பிரசுரம் செய்து படிக்கச்செய்ததுடன் இச்சம்பவத்தை பகிர்ந்து கொள்ள உதவிய நண்பன் முனாஸ் சுலைமான் அவர்களுக்கு என் நனிறி
Last edited by பாயிஸ் on Mon 5 Sep 2011 - 7:13; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 2 • 1, 2
Similar topics
» படித்ததும் பிடித்தது!
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» முதல் மடல்
» ஏ.ஆர்.ரஹ்மானுக்க சவுதியிலிருந்து ஒரு மடல்
» மகள் தாயிடம் மோதுவது ஏன்?
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» முதல் மடல்
» ஏ.ஆர்.ரஹ்மானுக்க சவுதியிலிருந்து ஒரு மடல்
» மகள் தாயிடம் மோதுவது ஏன்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|