சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

ஃபித்ரா எனும் தர்மம் Khan11

ஃபித்ரா எனும் தர்மம்

Go down

ஃபித்ரா எனும் தர்மம் Empty ஃபித்ரா எனும் தர்மம்

Post by abuajmal Tue 23 Aug 2011 - 10:52

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற
வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள்
, பெண்கள், அடிமைகள்,
சிறுவர்கள் மீது இது
கடமையாகும்.


முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண்,
பெரியவர் மற்றும் சிறுவர்
மீது
நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்
(ரலி)
, நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில்
உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது
அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார்
இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.


நமது பராமரிப்பில் ஐந்து
நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம்
பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா
எனப்படுகிறது.


ஃபித்ராவின் நோக்கம்

இரண்டு காரணங்களுக்காக
ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.


நோன்பாளியிடமிருந்து
ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத்
தூய்மைப்படுத்தவும், ஏழை
களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா
தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி)
, நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா
1817

நோன்பு நோற்றவர்களுக்கு
நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது.
ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது.

நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது
ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும்
கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்

மக்கள் (பெருநாள்)
தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட
வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509
இந்த ஹதீஸை ஆதாரமாகக்
கொண்டு
பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன்
பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும்
இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
பெருநாள் தொழுகைக்குப்
பின்னால்
கொடுக்கக் கூடாது.

எத்தனை நாட்களுக்கு
முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த
ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன்
என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள
இடமிருந்தாலும் வேறு பல
ஹதீஸ்களை ஆராயும் போது
, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது.

பெரு நாளைக்கு சில
நாட்களுக்கு முன்னால்
கொடுக்கலாம்என்ற
கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.


ரமலான் ஸகாத்தைப்
பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை
நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து
எடுக்கலானான். உடனே
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக்
கொண்டு செல்வேன்
என்று நான் கூறினேன்.

அதற்கு அவன் எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளதுஎனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன்.
காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள்.அல்லாஹ்வின்
தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு
விட்டேன்
என்று கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள
ஆரம்பித்தான். அவனைப் பிடித்து

உன்னை நபிகள் நாயகத்திடம்
கொண்டு போகப் போகி றேன்
என்று கூறினேன். எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்என்று அவன் கூறினான்

அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான்
சென்ற போது
, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள்.
அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை
விட்டு விட்டேன் எனக் கூறினேன். அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்
என்று நபிகள் நாயகம் (ஸல்)
கூறினார்கள்.


நான் அவனுக்காகக்
காத்திருந்தேன்.
மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் ஃபித்ரா
என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான்
கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத்
திரட்டுவதையே குறிக்கிறது.
ஃபித்ராவை குறிக்கவில்லைஎன்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும்
ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல.
அன்றாடம் திரட்டப்பட்டுக்
கொண்டே இருக்கும். ஆனால்
ரமளான் ஜகாத்என்ற
சொல்
ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக்
கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து
கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு
என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்
தினார்கள்என்பது
ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது.

ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று
ஜகாத்
வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி)
சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே
குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள்
தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது
ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு
மூன்று நாட்களுக்கு
முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது
ஆதரமாக அமைந்துள்ளது.


ஃபித்ரா தர்மத்துக்காக
திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது.

மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான்
என்பதிலிருந்து பெருநாளைக்கு
சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத்
திரட்டலாம் என்பது தெரிகிறது.





நபித் தோழர்கள் நோன்புப்
பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்
ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.



நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது
மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
காலத்துக்குப் பின்னர்
நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள்
என்பது இதன் கருத்தாக இருந்தால்
அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி
செய்வதாக இது அமையும்.


எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே
ஃபித்ராவைத் திரட்டலாம்
என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை
ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது






நன்றி : tntj.net
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum