Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி
Page 1 of 1
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி
சேலம் ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக, சேலம் ஆத்தூர், மேட்டூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 62 பேரிடம், போலி பணி நியமன உத்தரவு கொடுத்து, பல லட்சம் ரூபாய் வசூல் செய்து, தனியார் பஸ் கண்டக்டர் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஞானவேல் (35). அவர், 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு, கல்லேரிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர், ஞானவேல் மற்றும் ஜெகநாதன் மகன் முருகன் (40) ஆகியோரிடம், தனக்கு தெரிந்த ஒருவர், ரயில்வே துறையில் வேலை வாங்கி தருகிறார் என, தெரிவித்துள்ளார்.அதையடுத்து, தலைவாசல் அருகே பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த ஜெகராஜ் என்பவர், சீலியம்பட்டி ஞானவேல், முருகனை அணுகி ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முருகன், ஞானவேலிடம் பணி நியமனத்துக்கு கண் மருத்துவரிடம் சான்று பெற்று வரும்படி தெரிவித்ததால், ஆத்தூரில் மருத்துவ சான்று பெற்று கொடுத்துள்ளனர்.
பின், கடந்த 2008ம் ஆண்டு, சேலம் ரயில்வே கோட்டத்தில், ஹெல்பர், ஸ்வீப்பர் பணிகளுக்கான பணி நியமன உத்தரவினை, ஜெகராஜ் வழங்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தலா, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, நான்கு பணி நியமன உத்தரவுகள் அடுத்தடுத்து தேதிகள் குறிப்பிட்டு வழங்கியுள்ளார்.இந்த பணி நியமன உத்தரவுகளுடன், முருகன் மற்றும் ஞானவேல், ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளை அணுகி கேட்டுள்ளனர். அப்போது, "போலி'யான பணி நியமன உத்தரவு எனவும், இவற்றை சேலம் ரயில்வே கோட்டத்தில் கொடுத்தால் சிறையில் தள்ளிவிடுவர் எனவும், எச்சரித்து அனுப்பியுள்ளனர்.அதைகேட்டு அதிர்ச்சிக்குள்ளான இருவரும், ஜெகராஜி வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, வேலை வாங்கி தருவதாக வாங்கிய, 90 ஆயிரம் ரூபாயை, 2010ம் ஆண்டு ஃபிப்., 25ம் தேதிக்குள் தருவதாக, ஜெகராஜ் உறுதியளித்து ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.ஆனால், இதுநாள் வரை பணம் திருப்பி தராததால், பாதிக்கப்பட்ட நபர்கள், சேலம் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இதனிடையே, கடந்த 2008ல், சேலம் ரயில்வே கோட்டத்தில், ஆத்தூர் முருகன், ஞானவேல், கூத்தையம்மாள், ராமமூர்த்தி உள்பட, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு, மேட்டூர், இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஓசூர், ராமநாதபுரம், செங்கல்பட்டு, சிதம்பரம், பெரம்பலூர், தர்மபுரி, திருச்சி, திருமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 62 நபர்களிடம், ரயில்வே வேலை வாங்கி தருவதாக, "போலி' பணி நியமன உத்தரவு கொடுத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக "திடுக்கிடும்' தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து ஆத்தூர் சீலியம்பட்டியை சேர்ந்த ஞானவேல், முருகனின் தந்தை ஜெகநாதன் ஆகியோர் கூறியதாவது:தலைவாசல் பட்டுத்துறையை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் ஜெகராஜ் என்பவர், சேலம் ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி, நாங்களும் தலா, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தபோது, பணி நியமன உத்தரவு கொடுத்தார். சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம், பணி உத்தரவு கொடுத்தபோது தான் "போலி'யான உத்தரவு என்பது தெரிந்தது.இதேபோல், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 62 நபர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் கொடுத்து, பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார். பணத்தை திருப்பி தருவதாக, ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கொடுத்த ஜெகராஜ், சில மாதங்களாக தலைமறைவாகி விட்டார். ஏமாற்றிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
பின், கடந்த 2008ம் ஆண்டு, சேலம் ரயில்வே கோட்டத்தில், ஹெல்பர், ஸ்வீப்பர் பணிகளுக்கான பணி நியமன உத்தரவினை, ஜெகராஜ் வழங்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தலா, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, நான்கு பணி நியமன உத்தரவுகள் அடுத்தடுத்து தேதிகள் குறிப்பிட்டு வழங்கியுள்ளார்.இந்த பணி நியமன உத்தரவுகளுடன், முருகன் மற்றும் ஞானவேல், ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளை அணுகி கேட்டுள்ளனர். அப்போது, "போலி'யான பணி நியமன உத்தரவு எனவும், இவற்றை சேலம் ரயில்வே கோட்டத்தில் கொடுத்தால் சிறையில் தள்ளிவிடுவர் எனவும், எச்சரித்து அனுப்பியுள்ளனர்.அதைகேட்டு அதிர்ச்சிக்குள்ளான இருவரும், ஜெகராஜி வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, வேலை வாங்கி தருவதாக வாங்கிய, 90 ஆயிரம் ரூபாயை, 2010ம் ஆண்டு ஃபிப்., 25ம் தேதிக்குள் தருவதாக, ஜெகராஜ் உறுதியளித்து ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.ஆனால், இதுநாள் வரை பணம் திருப்பி தராததால், பாதிக்கப்பட்ட நபர்கள், சேலம் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இதனிடையே, கடந்த 2008ல், சேலம் ரயில்வே கோட்டத்தில், ஆத்தூர் முருகன், ஞானவேல், கூத்தையம்மாள், ராமமூர்த்தி உள்பட, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு, மேட்டூர், இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஓசூர், ராமநாதபுரம், செங்கல்பட்டு, சிதம்பரம், பெரம்பலூர், தர்மபுரி, திருச்சி, திருமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 62 நபர்களிடம், ரயில்வே வேலை வாங்கி தருவதாக, "போலி' பணி நியமன உத்தரவு கொடுத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக "திடுக்கிடும்' தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து ஆத்தூர் சீலியம்பட்டியை சேர்ந்த ஞானவேல், முருகனின் தந்தை ஜெகநாதன் ஆகியோர் கூறியதாவது:தலைவாசல் பட்டுத்துறையை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் ஜெகராஜ் என்பவர், சேலம் ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி, நாங்களும் தலா, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தபோது, பணி நியமன உத்தரவு கொடுத்தார். சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம், பணி உத்தரவு கொடுத்தபோது தான் "போலி'யான உத்தரவு என்பது தெரிந்தது.இதேபோல், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 62 நபர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் கொடுத்து, பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார். பணத்தை திருப்பி தருவதாக, ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கொடுத்த ஜெகராஜ், சில மாதங்களாக தலைமறைவாகி விட்டார். ஏமாற்றிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கார் வாங்கித் தருவதாக ஏமாற்றியவர் கம்பி எண்ணுகிறார்
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
» சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
» வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
» சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
» வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|