சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 7:27 pm

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 7:25 pm

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 11:14 am

» தெய்வங்கள்!
by rammalar Today at 10:56 am

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 9:23 am

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 9:15 am

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 6:19 am

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 6:11 am

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 11:39 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 11:27 pm

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 11:24 pm

» பல்சுவை 5
by rammalar Yesterday at 9:48 pm

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 9:29 am

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 9:15 am

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 9:08 am

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 8:51 am

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri May 31, 2024 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri May 31, 2024 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri May 31, 2024 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri May 31, 2024 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri May 31, 2024 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri May 31, 2024 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri May 31, 2024 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri May 31, 2024 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:53 pm

» வரகு வடை
by rammalar Thu May 30, 2024 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu May 30, 2024 5:28 pm

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் Khan11

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

Go down

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் Empty தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun Oct 16, 2011 4:10 pm

உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனிதனின் அடிப்படை உரிமை. ஒவ்வொருவருக்கும் போதுமான அளவில் தரமான உணவு கிடைக்க வேண்டும்.
வசதி வாய்ப்பற்றவர்களுக்கு, உடல் ஊனமுற்றவர்களுக்கு, இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த ஆண்டு "உணவு விலை - நெருக்கடியில் இருந்து உறுதித் தன்மை' என்ற மையக் கருத்தோடு உலக உணவு தினம் அக். 16ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால், வறுமையும் அதிகரிக்கிறது. அடுத்த வேலை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும், உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

85 கோடி பேர் : உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப் பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டு தோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன. உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு, முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் ஒவ்வொரு அரசும், அவை அனைவருக்கும் வினியோகிக்கபட வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

விலைவாசியே காரணம் : உலகில் வாழும் அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும், அதை பெறும் அளவு பணம் இல்லாத நிலையே மரணங்களுக்கு காரணம். உலகில், வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது கடினமான விஷயமாகிறது. உலக வங்கியின் அறிக்கையின் படி, 2010 - 2011ம் ஆண்டில் உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றத்தால், உ<லகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாண சமையல் சாதம்... சரியான உணவு விகிதம் : திருமண வீடுகளில் மாப்பிள்ளை, பெண்ணுக்கு அடுத்தபடியாக, அனைவராலும் பேசப்படுவது விருந்து தான். அறுசுவையுடன் தித்திக்க பரிமாறப்படும் விருந்தை சாப்பிடும் போது, மனநிறைவு ஏற்படும். அனைத்து சத்துகளும் ஒருங்கிணைந்து, சரிவிகித உணவாக இருப்பது தான், விருந்தின் சிறப்பு.

இன்று உலக உணவு தினம். எளிய உணவு வகைகளில் தான் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அனைவராலும் சரிவிகித உணவை சாப்பிட முடியும் என்கிறார், டாக்டர் சீ.ரேவதி (குழந்தைகள் நல நிபுணர், மதுரை). : ""குழந்தைப் பருவத்திலிருந்து உணவு பழக்கத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். "பேஷன்' என்ற பெயரில், காலைநேர உணவை தவிர்க்கக்கூடாது. கொழுப்பு குறைவான, அதிகமாக உணவுகளை கலந்து சாப்பிடுவது நல்லது. இட்லி, வடை சேர்த்து சாப்பிடலாம். ஆனால் பூரி, வடை இரண்டுமே எண்ணெய் அதிகமாக இருக்கும். கண்ணைப் பறிக்கும் வண்ண உணவுகளை, கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடலாம். சீசனுக்கேற்ப தினம் ஒரு பழங்களை சாப்பிடவேண்டும்.
அதிக காரம், உப்பு, அமிலத்தன்மை கொண்ட பாக்கெட் தின்பண்டங்களை குழந்தைகள் விரும்புபவர். உணவின் நச்சுத்தன்மையை குழந்தைகளுக்கு புரியவைத்து, அவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
பீட்சா, பர்கரை தவிர்த்து, கேழ்வரகு, கம்பு கஞ்சி, கூழ் இவற்றை வெல்லத்துடன் கலந்து கொடுத்தால், இரும்புச்சத்து, கால்சியம் கிடைக்கும். சிறுமிகளுக்கு மாதவிடாய்க்கு ஒருவாரம் முன், உளுந்தங்களியில் எண்ணெய் விட்டு வெல்லத்துடன் கொடுத்தால் ரத்த இழப்பை ஈடுகட்டும். சிறுவர்களுக்கு உடலை வலுப்படுத்தும். வயிற்றில் புழுக்கள் இருந்தால், உணவில் சத்துக்களை உறிஞ்சி ரத்தசோகை ஏற்படுத்தும், என்றார்.

மதுரை பாத்திமா கல்லூரி மனையியல் துறைத் தலைவர் வசந்தா எஸ்தர் ராணி கூறியதாவது: மூன்று வேளை உணவிலும் கார்போ ஹைட்ரேட், புரதம், தாது, நார், தண்ணீர், விட்டமின் சத்துக்கள் இருந்தால் தான், அது சரிவிகித உணவு. இதற்கேற்ப உணவுமுறையை திட்டமிட வேண்டும். இட்லி, சட்னி, சாம்பார், வாழைப்பழம், பால்... இதுதான் சரிவிகித உணவு. எலுமிச்சை சாதத்திற்கு, உருளைக்கிழங்கு வறுவல் பொருந்தாது. சோயா பீன்ஸ் கூட்டு சாப்பிடலாம். மதியநேரம் சாதம், சாம்பார், கீரைப் பொறியல், காய், தயிர், பாகற்காய் அல்லது புடலை சாப்பிடலாம், என்றார்.

ரத்தசோகையை விரட்ட... : பேரீச்சம்பழத்தை கீறி, விதையை எடுத்துவிட்டு வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து மூடி, பொடித்த சர்க்கரையை தூவி சாப்பிடலாம். புரோட்டீன், இரும்புச்சத்து இதில் அதிகம்.ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதி கரிக்கும். அவல், பொரி, தர்ப்பூசணி, ஈரல், கீரை, சிறிய பாகற்காயிலும் இரும்புச்சத்து அதிகம்.


தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum