Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
ஸ்டாலினுக்கு, திடீரென நெஞ்சு வலி
3 posters
Page 1 of 1
ஸ்டாலினுக்கு, திடீரென நெஞ்சு வலி
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு, "ஆஞ்சியோகிராம்' செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு, தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்தபோது, நேற்று காலை 11 மணி அளவில், ஸ்டாலினுக்கு திடீரென கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதோடு, படபடப்பும் இருந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருடன், கு.க.செல்வமும் சென்றார். மருத்துவமனையில், இருதய சிகிச்சை நிபுணர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர் குழு, அவரை பரிசோதித்தது. முதலில், அவரது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. பின், இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில், அவரது இருதய இயக்கத்தில் மாறுபாடு இருப்பது தெரிய வந்தது. இதனால், இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா என பரிசோதிப்பதற்காக, "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏதும் இல்லை என தெரியவந்தது. இந்தப் பரிசோதனைகள் எல்லாம் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் செய்யப்பட்டன. பின் அவர், 6வது மாடியில் சிறப்பு வார்டில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தற்போது அவர் ஓய்வு எடுத்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஸ்டாலினுக்கு நெஞ்சுவலி என தகவல் பரவியதால், தி.மு.க., தலைவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மத்திய அமைச்சர்கள் அழகிரி, ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், துரைமுருகன், விஜயன் எம்.பி., பொன்முடி, தா.மோ.அன்பரசன் ஆகியோர், மருத்துவமனைக்கு வந்தனர். சிறிது நேரம் கழித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவரது மனைவியும் ஸ்டாலின் தாயாருமான தயாளு, ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகள் ஆகியோரும், மருத்துவமனைக்கு விரைந்தனர். கருணாநிதி டாக்டர்களை சந்தித்து, ஸ்டாலின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார். மாலை 4,15 முதல் 4.45 மணி வரை, மருத்துவமனையில் இருந்த அவர், பின் அங்கிருந்து வீடு திரும்பினார். இருதய ரத்தக் குழாய்களில் பிரச்னை இல்லை என, ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்தாலும், அவருக்கு, "எக்கோ' பரிசோதனை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இன்று, அவருக்கு "எக்கோ' பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது. மாலை 6 மணிக்கு மேல், ஸ்டாலின் உறவினர்கள் ஒரு சிலரை தவிர, மருத்துவமனையில் இருந்து, அழகிரி உள்ளிட்ட அனைவரும் வீடு திரும்பினர்.
டாக்டர்கள் இதுகுறித்து கூறும்போது, ""அவருக்கு, இருதயத்தில் பிரச்னை ஏதுமில்லை. முன்னெச்சரிக்கையாக பரிசோதனைகள் செய்யப்பட்டன'' என்றனர். ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது தொடர்பாக, கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்குப் பின் அவருக்கு எவ்வித குறைபாடும் இல்லை என, மருத்துவர்கள் கண்டறிந்து அவர் இல்லம் திரும்பலாம் என தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்தபோது, நேற்று காலை 11 மணி அளவில், ஸ்டாலினுக்கு திடீரென கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதோடு, படபடப்பும் இருந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருடன், கு.க.செல்வமும் சென்றார். மருத்துவமனையில், இருதய சிகிச்சை நிபுணர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர் குழு, அவரை பரிசோதித்தது. முதலில், அவரது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. பின், இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில், அவரது இருதய இயக்கத்தில் மாறுபாடு இருப்பது தெரிய வந்தது. இதனால், இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா என பரிசோதிப்பதற்காக, "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏதும் இல்லை என தெரியவந்தது. இந்தப் பரிசோதனைகள் எல்லாம் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் செய்யப்பட்டன. பின் அவர், 6வது மாடியில் சிறப்பு வார்டில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தற்போது அவர் ஓய்வு எடுத்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஸ்டாலினுக்கு நெஞ்சுவலி என தகவல் பரவியதால், தி.மு.க., தலைவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மத்திய அமைச்சர்கள் அழகிரி, ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், துரைமுருகன், விஜயன் எம்.பி., பொன்முடி, தா.மோ.அன்பரசன் ஆகியோர், மருத்துவமனைக்கு வந்தனர். சிறிது நேரம் கழித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவரது மனைவியும் ஸ்டாலின் தாயாருமான தயாளு, ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகள் ஆகியோரும், மருத்துவமனைக்கு விரைந்தனர். கருணாநிதி டாக்டர்களை சந்தித்து, ஸ்டாலின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார். மாலை 4,15 முதல் 4.45 மணி வரை, மருத்துவமனையில் இருந்த அவர், பின் அங்கிருந்து வீடு திரும்பினார். இருதய ரத்தக் குழாய்களில் பிரச்னை இல்லை என, ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்தாலும், அவருக்கு, "எக்கோ' பரிசோதனை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இன்று, அவருக்கு "எக்கோ' பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது. மாலை 6 மணிக்கு மேல், ஸ்டாலின் உறவினர்கள் ஒரு சிலரை தவிர, மருத்துவமனையில் இருந்து, அழகிரி உள்ளிட்ட அனைவரும் வீடு திரும்பினர்.
டாக்டர்கள் இதுகுறித்து கூறும்போது, ""அவருக்கு, இருதயத்தில் பிரச்னை ஏதுமில்லை. முன்னெச்சரிக்கையாக பரிசோதனைகள் செய்யப்பட்டன'' என்றனர். ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது தொடர்பாக, கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்குப் பின் அவருக்கு எவ்வித குறைபாடும் இல்லை என, மருத்துவர்கள் கண்டறிந்து அவர் இல்லம் திரும்பலாம் என தெரிவித்தனர்.
Re: ஸ்டாலினுக்கு, திடீரென நெஞ்சு வலி
டாக்டர்கள் இதுகுறித்து கூறும்போது, ""அவருக்கு, இருதயத்தில் பிரச்னை ஏதுமில்லை. முன்னெச்சரிக்கையாக பரிசோதனைகள் செய்யப்பட்டன'' என்றனர்.
இது ஏன் தெரியுமா அவரின் காரியாலயம் பறிக்கப்பட இருக்கிறது என்ற விபரம் கேட்டு போட்ட நாடகம் என்று இந்திய நண்பர் ஒருவர் சொன்னார்............
இது ஏன் தெரியுமா அவரின் காரியாலயம் பறிக்கப்பட இருக்கிறது என்ற விபரம் கேட்டு போட்ட நாடகம் என்று இந்திய நண்பர் ஒருவர் சொன்னார்............
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|