Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
இரண்டு மாதங்களுக்குள் தேசிய அரசை அமைக்க அழுத்தம்: கண்காணிப்பு பணிகள் ஒரு மாதத்திற்கு நீடிப்பு
சிரியாவில் தொடர்ந்தும் வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் அங்கு ஆட்சி மாற்றத்திற்கான புதிய திட்டத்தை அரபு லீக் அமைப்பு முன்வைத்துள்ளது.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது. இதன்படி சிரிய அரசு எதிர்த் தரப்பினரையும் இணைத்து தேசிய அரசொன்றை அமைக்க வேண்டும் என அரபு லீக் அழைப்பு விடுத்தது.
இரு தரப்பினரும் வன்முறையை கைவிட வேண்டும். அத்துடன் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் துணை ஜனாதிபதியிடம் தனது அதிகாரங்களை கையளிக்க வேண்டும் என அரபு லீக் அழுத்தம் கொடுத்துள்ளது.
எனினும் அரபு லீக்கின் இந்த திட்டத்தை சிரிய அரசு நிராகரித்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத சிரிய அரசின் முக்கிய பிரமுகர் ஒருவர் அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சிக்கு கூறும் போது “தமது திட்டத்திற்கு அப்பால் அரபு லீக் கொண்டு வந்துள்ள புதிய தீர்மானத்தை சிரியா நிராகரிக்கிறது. அத்துடன் இந்த திட்டம் எமது இறையான்மையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதில் நேற்று முன்தினம் நடந்த அரபு லீக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சிரியாவில் தொடரும் அரபு லீக் கண்காணிப்புப் பணியில் இருந்து வெளியேறுவதாக சவூதி அரேபியா அறிவித்தது.
சிரிய அரசு தனது வாக்குறுதிகளை மீறி செயற்படுவதாக குற்றம் சாட்டியே சவூதி கண்காணிப்பு பணியில் இருந்து விலகிக் கொண்டது.
எனினும் சிரிய கண்காணிப்புப் பணியை மேலும் ஒரு மாதத்திற்கு தொடருவதற்கு இந்த கூட்டத்தில் அரபு லீக் தீர்மானித்தது. எவ்வாறாயினும் சவூதி அரேபியா கண்காணிப்புப் பணியில் இருந்து விலகியுள்ள நிலையில் அரபு லீக்கின் கண்காணிப்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அரபு லீக் திட்டங்களுக்கு பிரதான நிதியுதவி வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியாவே முன்னிலையில் உள்ளது. அரபு லீக் கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் சவுத் அல் பைசல், சர்வதேச சமூகம் சிரியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
சிரிய விவகாரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் 5 மணி நேரம் ஆலோசித்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த ஊடக மாநாட்டில் அரபு லீக் தீர்மானங்கள் குறித்து கட்டார் நாட்டு தலைவர் ஷெய்க் ஹமத் பின் ஜஸ்ஸிம் அல் தானி அறிவித்தார்.
அதில் அவர், சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் தனது அதிகாரங்களை துணை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும் என்றும் இன்னும் இரண்டு வாரத்திற்குள் எதிர்த்தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் தேசிய அரசொன்றை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் மூலம் சிரியாவில் பல அரசியல் கட்சிகளை கொண்ட தேர்தல் ஒன்று நடத்தப்படுவதே அரபு லீக்கின் இறுதி எதிர்பார்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரபு லீக் ஐ.நா.வின் உதவியையும் நாடும் என கட்டார் தலைவர் குறிப்பிட்டார். எனினும் தாம் சிரியாவில் இராணுவ தலையீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் கூறினார்.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக ஆட்சி மாற்றம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தில் இருந்து பிரிந்த ஒரு படைப்பிரிவும் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த வன்முறைகளால் 5000 க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
ஆனால் சிரிய அரசு தாம் தீவிரவாதிகள் மற்றும் ஆயுதக் குழுக்களுடன் போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த மோதல்களில் 2000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கொல்லப் பட்டதாக சிரிய அரசு கூறுகிறது.
இரண்டு மாதங்களுக்குள் தேசிய அரசை அமைக்க அழுத்தம்: கண்காணிப்பு பணிகள் ஒரு மாதத்திற்கு நீடிப்பு
சிரியாவில் தொடர்ந்தும் வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் அங்கு ஆட்சி மாற்றத்திற்கான புதிய திட்டத்தை அரபு லீக் அமைப்பு முன்வைத்துள்ளது.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது. இதன்படி சிரிய அரசு எதிர்த் தரப்பினரையும் இணைத்து தேசிய அரசொன்றை அமைக்க வேண்டும் என அரபு லீக் அழைப்பு விடுத்தது.
இரு தரப்பினரும் வன்முறையை கைவிட வேண்டும். அத்துடன் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் துணை ஜனாதிபதியிடம் தனது அதிகாரங்களை கையளிக்க வேண்டும் என அரபு லீக் அழுத்தம் கொடுத்துள்ளது.
எனினும் அரபு லீக்கின் இந்த திட்டத்தை சிரிய அரசு நிராகரித்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத சிரிய அரசின் முக்கிய பிரமுகர் ஒருவர் அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சிக்கு கூறும் போது “தமது திட்டத்திற்கு அப்பால் அரபு லீக் கொண்டு வந்துள்ள புதிய தீர்மானத்தை சிரியா நிராகரிக்கிறது. அத்துடன் இந்த திட்டம் எமது இறையான்மையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதில் நேற்று முன்தினம் நடந்த அரபு லீக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சிரியாவில் தொடரும் அரபு லீக் கண்காணிப்புப் பணியில் இருந்து வெளியேறுவதாக சவூதி அரேபியா அறிவித்தது.
சிரிய அரசு தனது வாக்குறுதிகளை மீறி செயற்படுவதாக குற்றம் சாட்டியே சவூதி கண்காணிப்பு பணியில் இருந்து விலகிக் கொண்டது.
எனினும் சிரிய கண்காணிப்புப் பணியை மேலும் ஒரு மாதத்திற்கு தொடருவதற்கு இந்த கூட்டத்தில் அரபு லீக் தீர்மானித்தது. எவ்வாறாயினும் சவூதி அரேபியா கண்காணிப்புப் பணியில் இருந்து விலகியுள்ள நிலையில் அரபு லீக்கின் கண்காணிப்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அரபு லீக் திட்டங்களுக்கு பிரதான நிதியுதவி வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியாவே முன்னிலையில் உள்ளது. அரபு லீக் கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் சவுத் அல் பைசல், சர்வதேச சமூகம் சிரியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
சிரிய விவகாரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் 5 மணி நேரம் ஆலோசித்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த ஊடக மாநாட்டில் அரபு லீக் தீர்மானங்கள் குறித்து கட்டார் நாட்டு தலைவர் ஷெய்க் ஹமத் பின் ஜஸ்ஸிம் அல் தானி அறிவித்தார்.
அதில் அவர், சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் தனது அதிகாரங்களை துணை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும் என்றும் இன்னும் இரண்டு வாரத்திற்குள் எதிர்த்தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் தேசிய அரசொன்றை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் மூலம் சிரியாவில் பல அரசியல் கட்சிகளை கொண்ட தேர்தல் ஒன்று நடத்தப்படுவதே அரபு லீக்கின் இறுதி எதிர்பார்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரபு லீக் ஐ.நா.வின் உதவியையும் நாடும் என கட்டார் தலைவர் குறிப்பிட்டார். எனினும் தாம் சிரியாவில் இராணுவ தலையீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் கூறினார்.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக ஆட்சி மாற்றம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தில் இருந்து பிரிந்த ஒரு படைப்பிரிவும் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த வன்முறைகளால் 5000 க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
ஆனால் சிரிய அரசு தாம் தீவிரவாதிகள் மற்றும் ஆயுதக் குழுக்களுடன் போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த மோதல்களில் 2000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கொல்லப் பட்டதாக சிரிய அரசு கூறுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
» சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர் விலகல்
» சிரியாவில் ஐ.நா - அரபு லீக் இணைந்து கண்காணிப்பு பணியை தொடர திட்டம்
» சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
» சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர் விலகல்
» சிரியாவில் ஐ.நா - அரபு லீக் இணைந்து கண்காணிப்பு பணியை தொடர திட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|