சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

திருமணம் செய்த ஆண்காளால் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! அதிர்ச்சியில் உறையும் யாழ்ப்பாணம்!! Khan11

திருமணம் செய்த ஆண்காளால் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! அதிர்ச்சியில் உறையும் யாழ்ப்பாணம்!!

Go down

திருமணம் செய்த ஆண்காளால் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! அதிர்ச்சியில் உறையும் யாழ்ப்பாணம்!! Empty திருமணம் செய்த ஆண்காளால் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! அதிர்ச்சியில் உறையும் யாழ்ப்பாணம்!!

Post by mufees Mon 14 May 2012 - 19:39

குடும்பங்களில் கணவன், மனைவியரிடையே அதிகரித்துவரும் திருமணத்துக்கு அப்பாலான தகாத உறவுகள், பாலியல் பிறழ்வு நடவடிக்கைகள், திருமணம் முடித்த ஆண்களால் ஏமாற்றப்படும் இளம் பெண்கள் என ஏராளமான பிறழ்வு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவில் கண்ணீர் மல்க முறைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் முடித்து பல ஆண்டுகளாக கணவன் மனைவியராக வாழ்ந்து வந்த சிலர், இடையில திருமணத்துக்கு அப்பாலான உறவுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பாக இரண்டு தரப்புக்களிடமிருந்தும் ஏராளமான முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமது கணவன்மார் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சில பெண்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தமது மனைவி வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஆண்களாலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசி வாயிலான தொடர்புகள் மூலமே இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவுகள் பேணப்படுவதாக இரண்டு தரப்பு முறைப்பாடுகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் அறியாத வகையில் இரகசியமாக கைத்தொலைபேசி மூலமாக இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவு பேணப்படுவதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திருமணம் முடித்து பிள்ளைகளையும் கொண்டிருக்கும் 35-40 வயது மதிக்கத்தக்க ஆண்களால் 16-18 வயது பெண்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவில் முறைப்பாடு தெரிவிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

18 வயதுக்குக் குறைந்த பெண்கள் இவ்வாறு காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டால் அதற்கெதிராக ஆட்கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று குறிப்பிடும் பொலிஸ் தரப்பு, மற்றபடி வயது வந்த பெண்கள் தொடர்புபடும் சம்பவங்கள் தொடர்பாக தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறது.

திருமணத்துக்கு அப்பாலான உறவு தொடர்பாக பொலிஸாரிடம் செய்யப்பட்டுள்ள இவ்வாறான முறைப்பாடுகளில், 67 வயதுடைய பெண்மணி ஒருவருடைய முறைப்பாடு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. தன்னுடைய கணவர் வேறொரு இளம் பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக இவர் கண்ணீருடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

எனினும், திருமணத்துக்கு அப்பாலான தொடர்புகள், பாலியல் பிறழ்வு நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் எந்த இடமும் கிடையாது என்றும் பொலிஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறான தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து ஆலோசனை கூறுவது அல்லது அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு அப்பால் வேறெதுவும் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள் பொலிஸார்.

காதலித்து ஏமாற்றப்பட்டது தொடர்பான பெரும்பாலான முறைப்பாடுகளில் இளைஞர்கள் சம்பந்தப்படவில்லை என்றும், பெரும்பாலும் திருமணம் முடித்து, பிள்ளைகளையும் கொண்டிருக்கும் வயது வந்த ஆண்கள் தொடர்பாகவே இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சுயவிருப்பத்தின் பேரால் நடைபெற்றிருக்கக்கூடிய இவ்வறான சம்பவங்கள் குறித்து பொலிஸார் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு திருமணத்துக்கு அப்பாலான உறவு, பாலியல் பிறழ்வு நடவடிக்கைகள், வயது வந்த ஆண்களால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவது போன்ற நடவடிக்கைகள் இவ்வளவுக்கு நடைபெற்று வருவது தமக்கு அதிர்ச்சியளிப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸார் அன்றி, சமூக அளவிலேயே கவனம் செலுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் என்று பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பாலியல் கல்வி, சட்டம் பற்றிய தெளிவு, விழிப்புணர்வுச் செயற்பாடுகள் போன்ற மூலமும், ஊடகங்களில் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகள் மூலமுமே இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், ஊடகங்கள் இந்த விடயத்தில் அதிகளவு பங்களிப்புச் செலுத்த முடியும் என்றும் பொலிஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum