Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
‘நீயா நானா’ நிகழ்ச்சி தந்த அதிர்ச்சி!
2 posters
Page 1 of 1
‘நீயா நானா’ நிகழ்ச்சி தந்த அதிர்ச்சி!
‘நீயா நானா’ நிகழ்ச்சி தந்த அதிர்ச்சி!
விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் களப்பணியாளர்களும், மறுபக்கம் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தொடர்பற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். எழுத்தாளர் என்ற முறையில் நானும் பங்கேற்றேன்.
இன்றைய நிலையில் தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் எவை? என்ற கேள்வியை,
இளைஞர்களை நோக்கி முன்வைத்தார் கோபிநாத். ஏராளமான இளைஞர்களின் கருத்துக்கள்
மேலோட்டமாகவே இருந்தன. லஞ்சம், ஊழல், மின்சாரம் என்பதைத் தாண்டி
அவர்களுக்கு இந்த சமூகத்தில் நடக்கும் எந்த அவலங்களைப் பற்றியும்
தெரியவில்லை. பல இளம்பெண்கள் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைப்
பற்றி அதிகம் பேசினர். அவர்களுக்கும் கிராமப்புறங்களில் நாள்தோறும்
நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றியோ, வாச்சாத்தி பற்றியோ, கயர்லாஞ்சி
பற்றியோ எதுவும் தெரியவில்லை.
இஸ்லாமியர்கள் குறித்த உங்கள்
பார்வை என்ன? என்று அடுத்த கேள்வியை கேட்டார் கோபி. அதற்கு பதில் சொன்ன ஒரு
மாணவர் ‘எனக்கு நிறைய முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க; ஆனால், எங்க அம்மா
முஸ்லிம் பசங்க கூட பாத்து பழகுப்பா! என எச்சரிக்கிறார்’ என்றார். இன்னொரு
இளைஞர் ‘முஸ்லிம்கள் என்றாலே டெரரிஸ்ட் தான்’ என்ற தோற்றமே எங்களுக்கு
விதைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
குஜராத்தை எப்படி
பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனைத்து இளைஞர்களுமே ‘நல்ல நிர்வாகம்;
சிறந்த முதல்வர்’ என்று பாராட்டுக்களையே தெரிவித்தனர். ஒருவருக்குகூட
குஜராத்தின் மறுபக்கம் தெரியவில்லை.
கூடங்குளம் குறித்த
கேள்விக்கு ‘மின்சாரம் அவசியம்; அதனால் அணு உலை நிச்சயம் வேண்டும்’ என்றே
இளைஞர்கள் கூறினர். உதயகுமார் அம்மக்களை தவறாக வழி நடத்துகிறார் என்று
சொன்னார் ஒரு மாணவி.
இடஒதுக்கீடு பற்றி கேட்கப்பட்ட போது மொத்த
கூட்டமும் ஆர்ப்பரித்தது. பெரும்பாலான இளைஞர்கள் ‘இடஒதுக்கீட்டை ரத்து
செய்ய வேண்டும்’ என்று ஒரே குரலில் முழங்கினர். ஒரு தலித் இளைஞரே
‘இடஒதுக்கீடு எனக்கு தேவையில்லை; அதனால் பிற சமூகங்களைச் சார்ந்த என்
நண்பர்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று ஒரே போடாகப் போட்டார்.
எதிர்பக்கம் இருந்த சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப்போய்
விட்டோம். என்ன நடக்குது இங்கே? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களில் ஓங்கி நின்றன.
முடிந்தவரை அனைத்துக்கும் விளக்கம் கொடுத்து அவர்களுக்கு புரிய வைத்தோம்.
நான் பேசும்போது ஒன்றைச் சொன்னேன். ‘இங்கே எதிர்புறம் இருக்கும்
இளைஞர்களின் வயதொத்த நான், கடந்த 15 ஆண்டுகளாக சமூக வெளியில் எழுதி, பேசி,
இயங்கிக் கொண்டிருக்கிறேன். சமூக செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவருமே அவ்வாறு
இயங்கி வருகின்றனர். ஆனால், எங்கள் கருத்துக்கள் இந்த இளைய சமூகத்திடம்
சென்று சேர்வதில்லை. இவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும்; எதைக் கொடுக்கக்
கூடாது என்பதில் ஊடகங்கள் முன்முடிவோடு செயல்படுகின்றன. ஊடகங்கள் சொல்வதையே
இவர்களும் உலகம் என்று நம்புகின்றனர். அதுதான் பிரச்சனை’ என்றேன்.
பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், சிறுபான்மை அரசியல், இந்துத்துவ
எதிர்ப்பு என்று என்னென்னவோ நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை
எதிலுமே தொடர்பற்ற ஒரு தலைமுறை நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்து
கொண்டிருக்கிறது என்பதை கவனிக்காமலேயே இருக்கிறோம்.
‘நாம் சுமக்க
வேண்டிய சுமைகளும், கடக்க வேண்டிய தூரங்களும் மிக மிக அதிகம்’ என்ற
சிந்தனையே, ‘நீயா நானா’ அரங்கை விட்டு வெளியேறும்போது எனக்கு ஏற்பட்டது.
ஆளூர் ஷாநவாஸ்
விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் களப்பணியாளர்களும், மறுபக்கம் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தொடர்பற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். எழுத்தாளர் என்ற முறையில் நானும் பங்கேற்றேன்.
இன்றைய நிலையில் தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் எவை? என்ற கேள்வியை,
இளைஞர்களை நோக்கி முன்வைத்தார் கோபிநாத். ஏராளமான இளைஞர்களின் கருத்துக்கள்
மேலோட்டமாகவே இருந்தன. லஞ்சம், ஊழல், மின்சாரம் என்பதைத் தாண்டி
அவர்களுக்கு இந்த சமூகத்தில் நடக்கும் எந்த அவலங்களைப் பற்றியும்
தெரியவில்லை. பல இளம்பெண்கள் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைப்
பற்றி அதிகம் பேசினர். அவர்களுக்கும் கிராமப்புறங்களில் நாள்தோறும்
நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றியோ, வாச்சாத்தி பற்றியோ, கயர்லாஞ்சி
பற்றியோ எதுவும் தெரியவில்லை.
இஸ்லாமியர்கள் குறித்த உங்கள்
பார்வை என்ன? என்று அடுத்த கேள்வியை கேட்டார் கோபி. அதற்கு பதில் சொன்ன ஒரு
மாணவர் ‘எனக்கு நிறைய முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க; ஆனால், எங்க அம்மா
முஸ்லிம் பசங்க கூட பாத்து பழகுப்பா! என எச்சரிக்கிறார்’ என்றார். இன்னொரு
இளைஞர் ‘முஸ்லிம்கள் என்றாலே டெரரிஸ்ட் தான்’ என்ற தோற்றமே எங்களுக்கு
விதைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
குஜராத்தை எப்படி
பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனைத்து இளைஞர்களுமே ‘நல்ல நிர்வாகம்;
சிறந்த முதல்வர்’ என்று பாராட்டுக்களையே தெரிவித்தனர். ஒருவருக்குகூட
குஜராத்தின் மறுபக்கம் தெரியவில்லை.
கூடங்குளம் குறித்த
கேள்விக்கு ‘மின்சாரம் அவசியம்; அதனால் அணு உலை நிச்சயம் வேண்டும்’ என்றே
இளைஞர்கள் கூறினர். உதயகுமார் அம்மக்களை தவறாக வழி நடத்துகிறார் என்று
சொன்னார் ஒரு மாணவி.
இடஒதுக்கீடு பற்றி கேட்கப்பட்ட போது மொத்த
கூட்டமும் ஆர்ப்பரித்தது. பெரும்பாலான இளைஞர்கள் ‘இடஒதுக்கீட்டை ரத்து
செய்ய வேண்டும்’ என்று ஒரே குரலில் முழங்கினர். ஒரு தலித் இளைஞரே
‘இடஒதுக்கீடு எனக்கு தேவையில்லை; அதனால் பிற சமூகங்களைச் சார்ந்த என்
நண்பர்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று ஒரே போடாகப் போட்டார்.
எதிர்பக்கம் இருந்த சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப்போய்
விட்டோம். என்ன நடக்குது இங்கே? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களில் ஓங்கி நின்றன.
முடிந்தவரை அனைத்துக்கும் விளக்கம் கொடுத்து அவர்களுக்கு புரிய வைத்தோம்.
நான் பேசும்போது ஒன்றைச் சொன்னேன். ‘இங்கே எதிர்புறம் இருக்கும்
இளைஞர்களின் வயதொத்த நான், கடந்த 15 ஆண்டுகளாக சமூக வெளியில் எழுதி, பேசி,
இயங்கிக் கொண்டிருக்கிறேன். சமூக செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவருமே அவ்வாறு
இயங்கி வருகின்றனர். ஆனால், எங்கள் கருத்துக்கள் இந்த இளைய சமூகத்திடம்
சென்று சேர்வதில்லை. இவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும்; எதைக் கொடுக்கக்
கூடாது என்பதில் ஊடகங்கள் முன்முடிவோடு செயல்படுகின்றன. ஊடகங்கள் சொல்வதையே
இவர்களும் உலகம் என்று நம்புகின்றனர். அதுதான் பிரச்சனை’ என்றேன்.
பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், சிறுபான்மை அரசியல், இந்துத்துவ
எதிர்ப்பு என்று என்னென்னவோ நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை
எதிலுமே தொடர்பற்ற ஒரு தலைமுறை நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்து
கொண்டிருக்கிறது என்பதை கவனிக்காமலேயே இருக்கிறோம்.
‘நாம் சுமக்க
வேண்டிய சுமைகளும், கடக்க வேண்டிய தூரங்களும் மிக மிக அதிகம்’ என்ற
சிந்தனையே, ‘நீயா நானா’ அரங்கை விட்டு வெளியேறும்போது எனக்கு ஏற்பட்டது.
ஆளூர் ஷாநவாஸ்
Re: ‘நீயா நானா’ நிகழ்ச்சி தந்த அதிர்ச்சி!
முற்றிலும் உண்மை இன்றைய இளைஞர்கள் வீணாண விஷயங்களில் கவணம் செலுத்துகிறார்கள். உலக நடப்புகளை அவர்கள் தெரிஞ்சுக்க முன்வரவில்லை.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» நீயா..... நானா......
» நீயா நானா
» நீயா,நானா?
» மனசு பேசுகிறது ; நீயா... நானா...
» யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???
» நீயா நானா
» நீயா,நானா?
» மனசு பேசுகிறது ; நீயா... நானா...
» யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|