சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

தமிழ்ப் பழமொழிகள் Khan11

தமிழ்ப் பழமொழிகள்

Go down

தமிழ்ப் பழமொழிகள் Empty தமிழ்ப் பழமொழிகள்

Post by rammalar Tue 3 Sep 2024 - 17:57

*அகத்தின் அழகு முகத்தில் தெரியும். *அகல இருந்தால் நிகள உறவு, * கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு.*அகல் வட்டம் பகல் மழை.*அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.*அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேஷ்ட்டி, உனக்கொரு வேஷ்ட்டி என்றார்களாம்.*அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.*அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.*அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.*அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.*அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.*அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?*அடக்கமே பெண்ணுக்கு அழகு.*அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.*அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.*அடாது செய்தவன் படாது படுவான்.*அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்.*அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.*அடியாத மாடு படியாது.*அடிக்கிற கைதான் அணைக்கும்!
---
*அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.*அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.*அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.*அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.*அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ ! *அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.*அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்குஅண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.*அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.*அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.*அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..*அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்-------------
த்தால் அத்தனையும் புழு.*அந்தி மழை அழுதாலும் விடாது.*அப்பன் அருமை மாண்டால் தெரியும்.*அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.


*அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.*அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.*அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.*அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.*அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்குஅரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போலகுழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.*அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.*அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.*அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.*அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.*அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.அவனவன் செய்த வினை அவனவனுக்கு.அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
----------------------------
அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.அழுத பிள்ளை பால் குடிக்கும்.அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.அளக்கிற நாழி அகவிலை அறியுமா?அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரிஅற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.அறச் செட்டு முழு நட்டம்.அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.அறமுறுக்கினால் அற்றுப் போகும்.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.அறிய அறியக் கெடுவார் உண்டா?அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.அறிவீனனிடம் புத்தி கேட்காதே.அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.அற்ப சகவாசம் பிராண சங்கடம்.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.அற்றது பற்றெனில் உற்றது வீடு.அன்பான நண்பனை ஆபத்தில் அறி.அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லைஅன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழ்ப் பழமொழிகள் Empty Re: தமிழ்ப் பழமொழிகள்

Post by rammalar Tue 3 Sep 2024 - 17:57

தமிழ்ப் பழமொழிகள் *அகத்தின் அழகு முகத்தில் தெரியும். *அகல இருந்தால் நிகள உறவு, * கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு.*அகல் வட்டம் பகல் மழை.*அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.*அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேஷ்ட்டி, உனக்கொரு வேஷ்ட்டி என்றார்களாம்.*அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.*அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.*அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.*அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.*அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.*அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?*அடக்கமே பெண்ணுக்கு அழகு.*அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.*அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.*அடாது செய்தவன் படாது படுவான்.*அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்.*அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.*அடியாத மாடு படியாது.*அடிக்கிற கைதான் அணைக்கும்! *அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.*அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.*அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.*அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.*அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ ! *அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.*அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்குஅண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.*அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.*அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.*அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..*அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.*அந்தி மழை அழுதாலும் விடாது.*அப்பன் அருமை மாண்டால் தெரியும்.*அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.*அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.*அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.*அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.*அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.*அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்குஅரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போலகுழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.*அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.*அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.*அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.*அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.*அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.அவனவன் செய்த வினை அவனவனுக்கு.அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.அழுத பிள்ளை பால் குடிக்கும்.அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.அளக்கிற நாழி அகவிலை அறியுமா?அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரிஅற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.அறச் செட்டு முழு நட்டம்.அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.அறமுறுக்கினால் அற்றுப் போகும்.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.அறிய அறியக் கெடுவார் உண்டா?அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.அறிவீனனிடம் புத்தி கேட்காதே.அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.அற்ப சகவாசம் பிராண சங்கடம்.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.அற்றது பற்றெனில் உற்றது வீடு.அன்பான நண்பனை ஆபத்தில் அறி.அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லைஅன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!ஆசை வெட்கம் அறியாது.ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools)ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.ஆடிப் பட்டம் தேடி விதை.ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையாஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போலஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதேஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லைஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.ஆரால் கேடு, வாயால் கேடு.ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.ஆலயம் தொழுவது சாலமும் நன்று.ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.ஆலும் வேலும் பல்லுக்குறுதி.ஆழமறியாமல் காலை இடாதே.ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடுஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.ஆள் பாதி, ஆடை பாதி.ஆழம் தெரியாமல் காலை விடாதே.ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.ஆறின கஞ்சி பழங் கஞ்சி.ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.ஆனைக்கும் அடிசறுக்கும்.ஆனை படுத்தால் ஆள் மட்டம்.ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது. இக்கரைக்கு அக்கரை பச்சை.இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.இஞ்சி இலாபம் மஞ்சளில்.இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று.இஞ்சி தின்ன குரங்கு மாதிரி....இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.இரக்கப் போனாலும் சிறக்கப் போ.இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லைஇராச திசையில் கெட்டவணுமில்லைஇராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.இருவர் நட்பு ஒருவர் பொறை.இலவு காத்த கிளி போல....இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.இல்லது வாராது; உள்ளது போகாது.இல்லாததை கொண்டா, கல்லாததைப் பாடு (என்பர்கள், எங்கிறார்கள்)இல்லாதவனுக்கு பசியேப்பம், இருப்பவனுக்கோ புளியேப்பம்.இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.இளங்கன்று பயமறியாதுஇளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.இறங்கு பொழுதில் மருந்து குடி.இறுகினால் களி , இளகினால் கூழ்.இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு (கேணி) நாறும்.இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடேஇனம் இனத்தோடே எழைப்பங்கன் பணத்தோடே.இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா? ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.ஈர நாவிற்கு எலும்பில்லை.ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லாஉடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்.உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளைஉத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்உப்பில்லா பண்டம் குப்பையிலே.உப்பிட்டவரை உள்ள அளவும் நினை.உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!உரம் ஏற்றி உழவு செய்உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!உலோபிக்கு இரட்டை செலவு.உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும்.உளவு இல்லாமல் களவு இல்லை.உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்லஉள்ளது போகாது இல்லது வாராது.உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்.உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும். ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.ஊண் அற்றபோது உடலற்றது.ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.ஊமை சொப்பனம் கண்டாற் போல..ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டிஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.ஊசி முனையில் மூன்று குளம். எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?எதார்த்தவாதி வெகுசன விரோதி.எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.எதிரிக்கு எதிரி நண்பன்.எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகாஎய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?எருது நோய் காக்கைக்கு தெரியுமா?எருமைமாட்டின் மீது மழை பெய்தாற் போல.எலி அழுதால் பூனை விடுமா?எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிதுஎல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.எறும்புந் தன் கையால் எண் சாண்எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லைஏரி நிறைந்தால் கரை கசியும்.ஏரி மேல் கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போனானாம்ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமைஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.ஏழை என்றால் எவர்க்கும் எளிதுஏழையின் சொல் அம்பலம் ஏறாதுஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.ஏமாந்தவன் தொடையில் திரித்தது லாபம்.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.ஏரி மடை என்றால் நோனி மடை (என்கிறார்) ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.ஐந்தில் விளையாதது, ஐம்பதில் விளையுமா?ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாதுஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?ஐப்பசி அடை மழை.ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம். ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?ஒரு காசு பேணின் இரு காசு தேறும்ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரைஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு.ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினைஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.ஒரு முறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி, மும்முறை உண்பவன் ரோகி.ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.ஒற்றுமையே பலம்.ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு (என்று).......ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டியதாம்.ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும். ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.ஓடுகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்டு, குத்துதே குடையுதே என்றானாம்....ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு. ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை. கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.கடலுக்குக் கரை போடுவார் உண்டா?கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?கடல் திடலாகும், திடல் கடலாகும்.கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்கள் மன ஆழம் காணலரிது!கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.கடன் பட்டார் நெஞ்சம் போல...கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்.கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!கண் கண்டது கை செய்யும்.கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?கண்டதே காட்சி கொண்டதே கோலம்.கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.கண்டதைத் தின்றால் பலவான் ஆகலாம்.கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய்.கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.கதிரவன் சிலரை காயேன் என்குமோ?கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளேகந்தையானாலும் கசக்கிக் கட்டு.கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.கரணம் தப்பினால் மரணம்.கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?கரும்பு தின்ன கூலி வேண்டுமா?கருத்த பார்ப்பனனையும், வெளுத்த சூத்திரனையும் நம்பாதே !?கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருசன்.கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.கல்லாதவரே கண்ணில்லாதவர்.கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.கல்லடி பட்டாலும் கண்ணடி படாதே!!கல்வி அழகே அழகு.கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர்.கள் குடித்த குரங்கு போல ...கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைகழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக் குரலே குரல்களவும் கற்று மரஇது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழிகளவும் கத்தும் மறகளவையும் சூதாட்டத்தையும் மறகளை பிடுங்காப் பயிர் காற்பயிர்.கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.கள்ள மனம் துள்ளும்.கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே.கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?கனிந்த பழம் தானே விழும்.கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ. காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?காணி ஆசை கோடி கேடு.காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும்.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல.காப்பு சொல்லும் கை மெலிவை.காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.காய்த்த மரம் கல் அடிபடும்.காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி..காரண குருவே காரிய குரு!காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லைகாலம் செய்கிறது ஞாலம் செய்யாது.காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.காலைக் கல்; மாலைப் புல் காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!காற்றில்லாமல் தூசி பறக்குமா?காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!கிட்டாதாயின் வெட்டென மறகிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது. கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடிகீர்த்தியால் பசி தீருமா?கீறி ஆற்றினால் புண் ஆறும். குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு.குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும்.குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.குடியைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பு.குணத்தை மாற்றக் குருவில்லை.குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.குப்பை உயரும் கோபுரம் தாழும்.குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.குரங்கின் கைப் பூமாலை.குரங்கு கையில் பூமாலை கொடுத்தாற் போல....குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்குரங்கு சுன்னியை மருந்துக்கு கேட்டால் அது கொம்புக்கு கொம்புக்கு தாவுமாம்!குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.குருவிக்கேத்த ராமேஸ்வரம்இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்குகுரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலேகுலவித்தை கற்றுப் பாதி கல்லாமற்... - Organization of Tamil Cultural Activities and Charity Centre | Facebook
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum