சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது Khan11

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது

2 posters

Go down

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது Empty பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது

Post by நண்பன் Sun 10 Mar 2013 - 6:42

திருவனந்தபுரம்: மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ததால் ஆத்திரமடைந்த முதியவர் கண்ணூர் குடும்ப நல நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் எளயாவூர் பகுதியை சேர்ந்தவர் வி.வி.பிரபாகரன் (62). இவர் ‘ஜனகீய பிரகதிகரணவேதி‘ என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். அரசுத்துறைகள் மூலமோ, தனி அமைப்புகளாலோ யாருக்காவது ஏதாவது வகையில் சிரமம் ஏற்பட்டால் இந்த அமைப்பு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டது. பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 5 வருடங்களுக்கு முன் விவாகரத்து கோரி கண்ணூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வாய்தா மேல் வாய்தாவாக போய் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி பிரசன்னகுமாரி, பிரபகாரனின் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மனைவியிடமிருந்து எப்படியும் விவாகரத்து கிடைத்துவிடும் என பிரபாகரன் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால் தீர்ப்பு எதிராக அமைந்தது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகளிர் தினமான நேற்று முன்தினம் பிரபாகரன் கையில் ஒரு பார்சலுடன் குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போது நீதிபதி பிரசன்ன குமாரி வழக்கு விசாரணையில் மும்முரமாக இருந்தார். ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே நீதிமன்ற அரங்கத்திற்குள் நுழைந்த அவர் , நீதிபதிக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு பரிசு கொண்டு வந்திருப்பதாக சத்தம் போட்டு கூறினார். பின்னர் அந்த பார்சலை அவர் நீதிபதியிடம் கொடுக்க முயன்றார். காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பிரபாகரனை வெளியேற்றுமாறு நீதிபதி பிரசன்னகுமாரி உத்தரவிட்டார். போலீசார் பிரபாகரனை வெளியேற்றி விட்டு அவரிடமிருந்த பார்சலை கைப்பற்றி பரிசோதித்தபோது அதில் 2 செருப்புகள் இருந்தது தெரியவந்தன. இதைப்பார்த்த அங்கிருந்த வக்கீல்கள் அதிர்ச்சியடைந்தனர். நீதிபதிக்கு செருப்பு கொடுப்பதா என்று கூறி பிரபாகரனை வக்கீல்கள் தாக்கினர். இது குறித்து அறிந்ததும் கூடுதல் போலீசார் நீதிமன்றத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் பிரபாகரனை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது Empty Re: பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது

Post by பானுஷபானா Sun 10 Mar 2013 - 10:54

அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum