Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
4 posters
Page 1 of 1
போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
வெளிநாட்டில் இருக்கும் தாயாருடன் அஞ்சலி பேசியதாக அவரது அண்ணன் ரவி சங்கர் தெரிவித்தார். போலீசில் கொடுத்துள்ள புகாரை நான் வாபஸ் பெற வேண்டும் என்று தாயாரிடம் அஞ்சலி கேட்டுக்கொண்டதாகவும் ரவி சங்கர் கூறினார்.
நடிகை அஞ்சலியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மொகலிபுதூர். அஞ்சலியின் தாயார் பெயர் பார்வதி தேவி. அமிதாப்பச்சன் இந்தியில் நடித்து தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படும்போல் பச்சன் படத்தில் வெங்கடேசுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.
இதுதவிர ரவிதேஜாவுடன் ‘பலுபு’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் நடிப்பதற்காக தனது சித்தப்பா சூரிபாபுவுடன் (பாரதிதேவியின் கணவர்) 4 தினங்களுக்கு முன் அஞ்சலி ஐதராபாத் சென்றார்.
அஞ்சலி காணாமல் போனது பற்றி அவருடைய அண்ணன் ரவி சங்கர் தெலுங்கு டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஐதராபாத் மாதாபூரில் உள்ள தஸ்பல்லா ஓட்டலில் சித்தப்பா சூரிபாபுவுடன் தங்கி இருந்த எனது தங்கை அஞ்சலி திங்கட்கிழமை காலை அங்கிருந்து காணாமல் போய்விட்டார். சூரிபாபு குளியல் அறையில் இருந்தபோது அஞ்சலி ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
தான் குளித்து விட்டு வெளியே வந்த போது அஞ்சலி செல்போனில் பேசியதாகவும், அப்போது வெளியே செல்வதாக தன்னிடம் அஞ்சலி கூறியதாகவும் சித்தப்பா சூரிபாபு என்னிடம் தெரிவித்தார். எனக்கு அவர் மீதும் சந்தேகம் உள்ளது.
காலை 9.50 மணிக்கு ஓட்டல் அறையை விட்டு வெளியேறிய அஞ்சலி கடைசியாக 11 மணிக்கு ஒரு நடிகருடன் செல்போனில் பேசி இருக்கிறார். ஷம்ஷாபாத் விமான நிலைய பகுதியில் இருந்து அந்த அழைப்பு வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஓட்டலை விட்டு வெளியேறிய அஞ்சலியுடன் தெலுங்கு படவுலகைச் சேர்ந்த இளம் நடிகர் ஒருவர் காரில் சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த தகவலை உறுதிசெய்ய முடியவில்லை.
இதற்கிடையே, கத்தார் நாட்டில் உள்ள தோகா நகரில் இருக்கும் எனது தாயார் பார்வதிதேவி அங்கிருந்து என்னிடம் டெலிபோனில் பேசினார். அஞ்சலி தன்னுடன் பேசியதாகவும், நான் காணவில்லை என்று ரவிசங்கர் ஏன் போலீசில் புகார் கொடுத்தார்? அதை உடனே வாபஸ் வாங்கச் சொல்லுங்கள் என்று அப்போது அஞ்சலி கேட்டுக்கொண்டதாகவும் எனது தாயார் என்னிடம் கூறினார்.
அதற்கு நான் அவரிடம், அஞ்சலியை நேரில் பார்த்தால்தான் போலீசில் புகாரை வாபஸ் பெறுவேன் என்று கூறிவிட்டேன். தான் நன்றாக இருப்பதாகவும் தாயாரிடம் அஞ்சலி தெரிவித்து இருக்கிறார். இதேபோல், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், நான் புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றும் எனது அண்ணன் பாபுஜியிடமும் அஞ்சலி செல்போனில் பேசி இருக்கிறார்.
அஞ்சலியை எங்கள் குடும்பத்துடன் எங்கள் சித்தி பாரதிதேவி சேரவிடுவதில்லை. இதனால் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் அஞ்சலி பேசுவார். அப்போது, சித்தியின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கூறுவார். அஞ்சலி பற்றிய நல்ல தகவல் கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு ரவி சங்கர் கூறினார்.
வெங்கடேசுடன் அஞ்சலி நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நேற்று (புதன்கிழமை) பெங்களூரில் நடைபெறுவதாக இருந்தது. அஞ்சலி வராததால் அந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் கூறுகையில்; அஞ்சலி படப்பிடிப்புக்கு வராததால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு ஏதாவது பிரச்சினை என்று சொல்லி இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி அதை தீர்த்து வைக்க முயற்சித்து இருப்போம். அதை விடுத்து படப்பிடிப்புக்கு வராமல் இருப்பது தயாரிப்பாளருக்குத்தான் நஷ்டம் என்று கூறினார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர் நேற்று மாலை ஐதராபாத் ஜூபிலி ல்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனது தங்கை பத்திரமாக இருப்பதாகவும், எனவே அவரை காணவில்லை என்று அளித்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார். ஆனால் போலீசார் அதை ஏற்க மறுத்து விட்டனர்.
அஞ்சலியை நேரில் காட்டாதவரை புகாரை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
பத்திரமாக இருக்கிறார்..!!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24147
மதிப்பீடுகள் : 1186
Re: போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
:] :]rammalar wrote:பத்திரமாக இருக்கிறார்..!!
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
நடிப்பில் அழகுடி நீ :++
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
யாருக்கு முத்தம் எந்திரன் :% :%எந்திரன் wrote:நடிப்பில் அழகுடி நீ :++
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
பரபரப்பா பேசனும்கிறதுக்காக என்ன தில்லாலஙடி வேலையெல்லாம் காட்டுறாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ம்பை போலீசில் நடிகை அக்ஷராஹாசன் புகார்
» நடிகை அஞ்சலி..
» நடிகை பியாவுக்கு டிப்ஸ் கொடுத்த நடிகர்
» மங்காத்தாவின் புதிய கூட்டணியில் நடிகை அஞ்சலி
» முகம் 'பளிச்' என இருக்க நடிகை அஞ்சலி அட்வைஸ்..!
» நடிகை அஞ்சலி..
» நடிகை பியாவுக்கு டிப்ஸ் கொடுத்த நடிகர்
» மங்காத்தாவின் புதிய கூட்டணியில் நடிகை அஞ்சலி
» முகம் 'பளிச்' என இருக்க நடிகை அஞ்சலி அட்வைஸ்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|