Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
பக்தி கதைகள்
2 posters
Page 1 of 1
பக்தி கதைகள்
கணவனை கொடுமை செய்தால்
--------------------------------------------------
மனை காட்டுக்கு அனுப்ப காரணமாக இருந்தவள் கைகேயி. இவள் நற்குலத்தில் பிறந்து,நற்குணவானான தசரதரை மணந்து, நல்ல மகனைப் பெற்ற பிறகும், இவளது செய்கையால் பூவும், பொட்டும்பறிபோயிற்று. இந்த புத்திஇவளுக்கு எப்படி வந்தது தெரியுமா?கலகா....பெயருக்கேற்ற பொருத்தம் இந்த பெண்மணிக்கு. ஊரிலோ, வீட்டிலோ ஏதாவது தகராறு என்றால் கலகா அங்கே இருப்பாள். பெரும் கர்வம் பிடித்தவள். தன்கணவர் பிட்சுவை புழுவுக்கும் கீழாக மதிப்பாள்.நல்ல உணவுகூட கொடுக்கமாட்டாள்.
துணி துவைத்து கொடுக்கமாட்டாள். அதே நேரம் அவள் ருசியாக சமைத்து சாப்பிடுவாள். மனைவியால் பிட்சுவுக்கு பெரும் துன்பமே ஏற்பட்டது.பிட்சுவுக்கு ரகுவரன் என்ற நண்பர் இருந்தார்., அவர்பிட்சுவிடம் உன்மனைவியைத் திருத்த வழி இருக்கிறது. நீ என்னசொன்னாலும் அவள்நேர்மாறான காரியங்களையே செய்கிறாள். எனவே நீ என்ன விரும்புகிறாயோ, அதற்கு நேர்மாறாக உன் மனைவியிடம் சொல்.
உன் காரியம் நிறைவேறிவிடும் என்றார்.பிட்சுவுக்கும் அந்த யோசனை பிடித்துப்போனது. ஒருமுறை தனது நண்பனுக்குவிருந்தளிக்க வேண்டிய அவசியம் பிட்சுவுக்கு ஏற்பட்டது. மனைவி இதை விரும்பமாட்டாள் என்பதை உணர்ந்த பிட்சு, கலகா, என் நண்பன் பெரிய அயோக்கியன். அவன் இங்கு வந்திருக்கிறான். அவனுக்கு தண்ணீர் கூட கொடுக்காதே.
அவனாகவே திரும்பிபோய்விடுவான், என்றார்.கலகாவுக்கு கோபம் வந்துவிட்டது. இப்படியா செய்வீர்கள்? வீட்டுக்கு வந்தவரை சாப்பிட சொல்லாமல் அனுப்புவது தர்மமாகுமா? அவர் ஒன்றும் மோசமானவராக தெரியவில்லையே! அவருக்கு சாதாரசாப்பாடாக இல்லாமல் பெரிய விருந்தே வைக்கப்போகிறேன், என சொல்லி விருந்துக்கு ஏற்பாடு செய்தாள்.பிட்சுவின் தகப்பனாருக்கு திதி கொடுக்க வேண்டிய நாள் வந்தது. மாமனாரை கலகாவுக்கு பிடிக்காது.
எனவே திதி கொடுக்க விடமாட்டாள் என்பதை அறிந்த பிட்சு கலகாவிடம், இந்த ஆண்டு என் தந்தைக்கு நான் திதி கொடுக்கமாட்டேன். நீயும் வீட்டில் எந்த பலகாரமும் செய்யாதே, என்றார்.கலகாவிற்கு ஆத்திரமாக வந்தது. பெற்ற தந்தைக்கு திதி கொடுக்காத உம்மைப் போன்றவர்களால் தான், நாட்டில் மழையே இல்லை. இந்த ஆண்டு கண்டிப்பாக திதி கொடுக்க வேண்டும், என்றாள்.
பிட்சு நினைத்தபடியே திவசம் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆனால், இது கடைசிவரை சாத்தியமாகவில்லை. சில மாதங்களில் கலகாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது. அவள் கடுமையாக சண்டை போட்டாள். எனவே பிட்சு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். விஷயம் அறிந்த கலகா, தற்கொலை செய்து கொண்டாள்.பேயாக அலைந்த கலகாவை, எமதூதர்கள் எமதர்மராஜாவிடம் கூட்டிச்சென்றனர்.
சித்ரகுப்தர், கலகா செய்த பாவங்களை அடுக்கினார்.கணவனுக்கு அடங்காத இவள் காலம்பூராவும் பேயின் உருவம் தாங்கியேஅலையட்டும், என எமன் தீர்ப்பளித்தார்.எமதூதர்கள் கலகாவை வானிலிருந்து தூக்கி வீசினர். அவள் ஒருநதிக்கரையில் வந்து விழுந்தாள். அங்கிருந்த மக்களெல்லாம் அவளது உருவத்தைப் பார்த்து பயந்து ஓடினர். அப்போது தர்மதத்தர் என்ற அந்தணர் அங்கு வந்தார்.
பேயை விரட்டுவதற்கான மந்திரங்களை மனதிற்குள் ஓதினார். ஆனாலும் பேய்அடங்கவில்லை. அவர் அருகிலிருந்த சிவன் கோயிலுக்குள் சென்றார். தீபத்தட்டை எடுத்து கற்பூரம் கொளுத்தி அதை பேய் மீது வீசினார். பேயின் உடல் தீப்பற்றிக் கொண்டது. பின், தீர்த்தச் செம்பை பேயின் மீது வீசினார்.தீர்த்த செம்பிலிருந்த தண்ணீர் பேயின்உடலில் பட்டதும், தீ அணைந்ததுடன், பேய் உருவமும் மாறியது. அது அழகான பெண்ணாக வடிவெடுத்தது.அவள் தன் முற்பிறவி வரலாறைதர்மதத்தரிடம் கூறினாள். தர்மதத்தர் அதைக் கேட்டு பரிதாபப்பட்டார்.
அப்போதுஎமதூதர்கள் அங்கு வந்தனர்.பேயாக திரிந்த இவள், சிவனுக்குரியகற்பூரமும், தீர்த்தமும் பட்டதால் பாவங்கள் குறையப் பெற்றாள். ஆனாலும், கணவனை மதிக்காத இவள், அடுத்த பிறவியிலும் ஒரு கெட்ட பெயரை ஏற்பாள். தர்மதத்தரானஉமக்கு இப்போது இரண்டு மனைவியர்இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த பிறவியில் கோசலை, சுமித்திரை என்ற பெயரில் உம்மை கணவனாக அடைவார்கள்.
உம்மால் பாவ மன்னிப்பு பெற்ற இந்தப் பெண், கைகேயி என்ற பெயருடன் உம்மை கணவராகஅடைவாள், என்றனர்.அடுத்த பிறவியில் தர்மதத்தர், தசரதமகாராஜாவாக பிறந்தார். கலகா, கைகேயி என்ற பெயரில் பிறந்து அவரை மனைவியாக அடைந்தாள். மந்தரை என்ற தீய பெண்ணுடன் சேர்ந்து, ராமனை காட்டுக்கு அனுப்பகாரணமானாள்.அதனால், இன்றும்அழியாத கெட்ட பெயரைசுமக்கிறாள்.
கணவனும்மனைவியும் அனுசரணையாக நடக்க வேண்டும் என்பதேகைகேயியின் வாழ்க்கை உலகுக்குகற்றுத் தரும் பாடம்.
நன்றி ; தின மலர்
--------------------------------------------------
மனை காட்டுக்கு அனுப்ப காரணமாக இருந்தவள் கைகேயி. இவள் நற்குலத்தில் பிறந்து,நற்குணவானான தசரதரை மணந்து, நல்ல மகனைப் பெற்ற பிறகும், இவளது செய்கையால் பூவும், பொட்டும்பறிபோயிற்று. இந்த புத்திஇவளுக்கு எப்படி வந்தது தெரியுமா?கலகா....பெயருக்கேற்ற பொருத்தம் இந்த பெண்மணிக்கு. ஊரிலோ, வீட்டிலோ ஏதாவது தகராறு என்றால் கலகா அங்கே இருப்பாள். பெரும் கர்வம் பிடித்தவள். தன்கணவர் பிட்சுவை புழுவுக்கும் கீழாக மதிப்பாள்.நல்ல உணவுகூட கொடுக்கமாட்டாள்.
துணி துவைத்து கொடுக்கமாட்டாள். அதே நேரம் அவள் ருசியாக சமைத்து சாப்பிடுவாள். மனைவியால் பிட்சுவுக்கு பெரும் துன்பமே ஏற்பட்டது.பிட்சுவுக்கு ரகுவரன் என்ற நண்பர் இருந்தார்., அவர்பிட்சுவிடம் உன்மனைவியைத் திருத்த வழி இருக்கிறது. நீ என்னசொன்னாலும் அவள்நேர்மாறான காரியங்களையே செய்கிறாள். எனவே நீ என்ன விரும்புகிறாயோ, அதற்கு நேர்மாறாக உன் மனைவியிடம் சொல்.
உன் காரியம் நிறைவேறிவிடும் என்றார்.பிட்சுவுக்கும் அந்த யோசனை பிடித்துப்போனது. ஒருமுறை தனது நண்பனுக்குவிருந்தளிக்க வேண்டிய அவசியம் பிட்சுவுக்கு ஏற்பட்டது. மனைவி இதை விரும்பமாட்டாள் என்பதை உணர்ந்த பிட்சு, கலகா, என் நண்பன் பெரிய அயோக்கியன். அவன் இங்கு வந்திருக்கிறான். அவனுக்கு தண்ணீர் கூட கொடுக்காதே.
அவனாகவே திரும்பிபோய்விடுவான், என்றார்.கலகாவுக்கு கோபம் வந்துவிட்டது. இப்படியா செய்வீர்கள்? வீட்டுக்கு வந்தவரை சாப்பிட சொல்லாமல் அனுப்புவது தர்மமாகுமா? அவர் ஒன்றும் மோசமானவராக தெரியவில்லையே! அவருக்கு சாதாரசாப்பாடாக இல்லாமல் பெரிய விருந்தே வைக்கப்போகிறேன், என சொல்லி விருந்துக்கு ஏற்பாடு செய்தாள்.பிட்சுவின் தகப்பனாருக்கு திதி கொடுக்க வேண்டிய நாள் வந்தது. மாமனாரை கலகாவுக்கு பிடிக்காது.
எனவே திதி கொடுக்க விடமாட்டாள் என்பதை அறிந்த பிட்சு கலகாவிடம், இந்த ஆண்டு என் தந்தைக்கு நான் திதி கொடுக்கமாட்டேன். நீயும் வீட்டில் எந்த பலகாரமும் செய்யாதே, என்றார்.கலகாவிற்கு ஆத்திரமாக வந்தது. பெற்ற தந்தைக்கு திதி கொடுக்காத உம்மைப் போன்றவர்களால் தான், நாட்டில் மழையே இல்லை. இந்த ஆண்டு கண்டிப்பாக திதி கொடுக்க வேண்டும், என்றாள்.
பிட்சு நினைத்தபடியே திவசம் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆனால், இது கடைசிவரை சாத்தியமாகவில்லை. சில மாதங்களில் கலகாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது. அவள் கடுமையாக சண்டை போட்டாள். எனவே பிட்சு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். விஷயம் அறிந்த கலகா, தற்கொலை செய்து கொண்டாள்.பேயாக அலைந்த கலகாவை, எமதூதர்கள் எமதர்மராஜாவிடம் கூட்டிச்சென்றனர்.
சித்ரகுப்தர், கலகா செய்த பாவங்களை அடுக்கினார்.கணவனுக்கு அடங்காத இவள் காலம்பூராவும் பேயின் உருவம் தாங்கியேஅலையட்டும், என எமன் தீர்ப்பளித்தார்.எமதூதர்கள் கலகாவை வானிலிருந்து தூக்கி வீசினர். அவள் ஒருநதிக்கரையில் வந்து விழுந்தாள். அங்கிருந்த மக்களெல்லாம் அவளது உருவத்தைப் பார்த்து பயந்து ஓடினர். அப்போது தர்மதத்தர் என்ற அந்தணர் அங்கு வந்தார்.
பேயை விரட்டுவதற்கான மந்திரங்களை மனதிற்குள் ஓதினார். ஆனாலும் பேய்அடங்கவில்லை. அவர் அருகிலிருந்த சிவன் கோயிலுக்குள் சென்றார். தீபத்தட்டை எடுத்து கற்பூரம் கொளுத்தி அதை பேய் மீது வீசினார். பேயின் உடல் தீப்பற்றிக் கொண்டது. பின், தீர்த்தச் செம்பை பேயின் மீது வீசினார்.தீர்த்த செம்பிலிருந்த தண்ணீர் பேயின்உடலில் பட்டதும், தீ அணைந்ததுடன், பேய் உருவமும் மாறியது. அது அழகான பெண்ணாக வடிவெடுத்தது.அவள் தன் முற்பிறவி வரலாறைதர்மதத்தரிடம் கூறினாள். தர்மதத்தர் அதைக் கேட்டு பரிதாபப்பட்டார்.
அப்போதுஎமதூதர்கள் அங்கு வந்தனர்.பேயாக திரிந்த இவள், சிவனுக்குரியகற்பூரமும், தீர்த்தமும் பட்டதால் பாவங்கள் குறையப் பெற்றாள். ஆனாலும், கணவனை மதிக்காத இவள், அடுத்த பிறவியிலும் ஒரு கெட்ட பெயரை ஏற்பாள். தர்மதத்தரானஉமக்கு இப்போது இரண்டு மனைவியர்இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த பிறவியில் கோசலை, சுமித்திரை என்ற பெயரில் உம்மை கணவனாக அடைவார்கள்.
உம்மால் பாவ மன்னிப்பு பெற்ற இந்தப் பெண், கைகேயி என்ற பெயருடன் உம்மை கணவராகஅடைவாள், என்றனர்.அடுத்த பிறவியில் தர்மதத்தர், தசரதமகாராஜாவாக பிறந்தார். கலகா, கைகேயி என்ற பெயரில் பிறந்து அவரை மனைவியாக அடைந்தாள். மந்தரை என்ற தீய பெண்ணுடன் சேர்ந்து, ராமனை காட்டுக்கு அனுப்பகாரணமானாள்.அதனால், இன்றும்அழியாத கெட்ட பெயரைசுமக்கிறாள்.
கணவனும்மனைவியும் அனுசரணையாக நடக்க வேண்டும் என்பதேகைகேயியின் வாழ்க்கை உலகுக்குகற்றுத் தரும் பாடம்.
நன்றி ; தின மலர்
Re: பக்தி கதைகள்
நம்பிக்கையுடன் வணங்கு!
-------------------------------------------
சந்தேக பக்தி நன்மை தராது என்பற்காகசொல்லப்படும் கதை இது.ஒரு சமயம் மக்கள் பாவங்களில் மூழ்கி மிகவும் சிரமப்பட்டார்கள். கருணையுள்ள சிவபெருமான், அவர்களை பாவங்களில் இருந்து மீட்க ஸ்ரீருத்ரமந்திரத்தை அருளினார். மக்கள் அந்த மந்திரத்தை ஓதியதால், பாவங்களில் இருந்து மீண்டனர்.அவர்களுக்கு இறப்பே வரவில்லை.
இதனால் நரகம் காலியானது. எமதர்ம ராஜா, பிரம்மாவிடம் ஓடினார்.பிரபு! இப்போதெல்லாம் நான் யார் அருகே போனாலும், அவர்கள் ருத்ர மந்திரம் சொல்லியவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களது உயிர்களைக் கவர முடியவில்லை. ஆள் இல்லாத ஊருக்கு ராஜாவாக இருந்து என்ன பயன்? எனவே, என் பதவியிலிருந்து விலகுகிறேன்,
என்றார்.பிரம்மா அவரைத் தேற்றி, நான் அச்ரத்தா, துர்மேதா என்ற தூதுவர்களைத்படைத்து தருகிறேன். அச்ரத்தா என்றால் நம்பிக்கையின்மை. துர்மேதா என்றால் மோசமான எண்ணங்கள். இவற்றை மந்திரம் சொல்பவர்கள் மீது ஏவி விடு. பிறகு விளைவைப் பார், என்றார்.இந்த தூதுவர்கள் மந்திரம் சொன்னவர்களிடையே போன போது, அவர்களுக்கு நாம்சொல்லும் இந்த மந்திரத்தால் தான், நமக்கு நற்பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறதா! அல்லது நம் சக்தியால் கிடைத்துக் கொண்டிருக்கிறதா! என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அந்தசந்தேகத்துடன், அவர்கள் மந்திரம் ஓத எமனின் வேலை எளிதாகி விட்டது.கடவுளை வணங்கும் போது மிகுந்த நம்பிக்கையுடன் வணங்க வேண்டும். புரிகிறதா!
நன்றி ; தின மலர்
-------------------------------------------
சந்தேக பக்தி நன்மை தராது என்பற்காகசொல்லப்படும் கதை இது.ஒரு சமயம் மக்கள் பாவங்களில் மூழ்கி மிகவும் சிரமப்பட்டார்கள். கருணையுள்ள சிவபெருமான், அவர்களை பாவங்களில் இருந்து மீட்க ஸ்ரீருத்ரமந்திரத்தை அருளினார். மக்கள் அந்த மந்திரத்தை ஓதியதால், பாவங்களில் இருந்து மீண்டனர்.அவர்களுக்கு இறப்பே வரவில்லை.
இதனால் நரகம் காலியானது. எமதர்ம ராஜா, பிரம்மாவிடம் ஓடினார்.பிரபு! இப்போதெல்லாம் நான் யார் அருகே போனாலும், அவர்கள் ருத்ர மந்திரம் சொல்லியவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களது உயிர்களைக் கவர முடியவில்லை. ஆள் இல்லாத ஊருக்கு ராஜாவாக இருந்து என்ன பயன்? எனவே, என் பதவியிலிருந்து விலகுகிறேன்,
என்றார்.பிரம்மா அவரைத் தேற்றி, நான் அச்ரத்தா, துர்மேதா என்ற தூதுவர்களைத்படைத்து தருகிறேன். அச்ரத்தா என்றால் நம்பிக்கையின்மை. துர்மேதா என்றால் மோசமான எண்ணங்கள். இவற்றை மந்திரம் சொல்பவர்கள் மீது ஏவி விடு. பிறகு விளைவைப் பார், என்றார்.இந்த தூதுவர்கள் மந்திரம் சொன்னவர்களிடையே போன போது, அவர்களுக்கு நாம்சொல்லும் இந்த மந்திரத்தால் தான், நமக்கு நற்பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறதா! அல்லது நம் சக்தியால் கிடைத்துக் கொண்டிருக்கிறதா! என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அந்தசந்தேகத்துடன், அவர்கள் மந்திரம் ஓத எமனின் வேலை எளிதாகி விட்டது.கடவுளை வணங்கும் போது மிகுந்த நம்பிக்கையுடன் வணங்க வேண்டும். புரிகிறதா!
நன்றி ; தின மலர்
Re: பக்தி கதைகள்
கே.இனியவன் wrote:கணவனை கொடுமை செய்தால்
--------------------------------------------------
அவர்பிட்சுவிடம் உன்மனைவியைத் திருத்த வழி இருக்கிறது. நீ என்னசொன்னாலும் அவள்நேர்மாறான காரியங்களையே செய்கிறாள். எனவே நீ என்ன விரும்புகிறாயோ, அதற்கு நேர்மாறாக உன் மனைவியிடம் சொல்.
நன்றி ; தின மலர்
ஹா! நல்ல ஆலோசனைகள் தான்..
தொடருங்கள் இனியவன்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|