சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பக்தி கதைகள்  Khan11

பக்தி கதைகள்

2 posters

Go down

பக்தி கதைகள்  Empty பக்தி கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 30 Mar 2014 - 9:22

கணவனை கொடுமை செய்தால்
--------------------------------------------------
மனை காட்டுக்கு அனுப்ப காரணமாக இருந்தவள் கைகேயி. இவள் நற்குலத்தில் பிறந்து,நற்குணவானான தசரதரை மணந்து, நல்ல மகனைப் பெற்ற பிறகும், இவளது செய்கையால் பூவும், பொட்டும்பறிபோயிற்று. இந்த புத்திஇவளுக்கு எப்படி வந்தது தெரியுமா?கலகா....பெயருக்கேற்ற பொருத்தம் இந்த பெண்மணிக்கு. ஊரிலோ, வீட்டிலோ ஏதாவது தகராறு என்றால் கலகா அங்கே இருப்பாள். பெரும் கர்வம் பிடித்தவள். தன்கணவர் பிட்சுவை புழுவுக்கும் கீழாக மதிப்பாள்.நல்ல உணவுகூட கொடுக்கமாட்டாள். 

துணி துவைத்து கொடுக்கமாட்டாள். அதே நேரம் அவள் ருசியாக சமைத்து சாப்பிடுவாள். மனைவியால் பிட்சுவுக்கு பெரும் துன்பமே ஏற்பட்டது.பிட்சுவுக்கு ரகுவரன் என்ற நண்பர் இருந்தார்., அவர்பிட்சுவிடம் உன்மனைவியைத் திருத்த வழி இருக்கிறது. நீ என்னசொன்னாலும் அவள்நேர்மாறான காரியங்களையே செய்கிறாள். எனவே நீ என்ன விரும்புகிறாயோ, அதற்கு நேர்மாறாக உன் மனைவியிடம் சொல்.

உன் காரியம் நிறைவேறிவிடும் என்றார்.பிட்சுவுக்கும் அந்த யோசனை பிடித்துப்போனது. ஒருமுறை தனது நண்பனுக்குவிருந்தளிக்க வேண்டிய அவசியம் பிட்சுவுக்கு ஏற்பட்டது. மனைவி இதை விரும்பமாட்டாள் என்பதை உணர்ந்த பிட்சு, கலகா, என் நண்பன் பெரிய அயோக்கியன். அவன் இங்கு வந்திருக்கிறான். அவனுக்கு தண்ணீர் கூட கொடுக்காதே. 

அவனாகவே திரும்பிபோய்விடுவான், என்றார்.கலகாவுக்கு கோபம் வந்துவிட்டது. இப்படியா செய்வீர்கள்? வீட்டுக்கு வந்தவரை சாப்பிட சொல்லாமல் அனுப்புவது தர்மமாகுமா? அவர் ஒன்றும் மோசமானவராக தெரியவில்லையே! அவருக்கு சாதாரசாப்பாடாக இல்லாமல் பெரிய விருந்தே வைக்கப்போகிறேன், என சொல்லி விருந்துக்கு ஏற்பாடு செய்தாள்.பிட்சுவின் தகப்பனாருக்கு திதி கொடுக்க வேண்டிய நாள் வந்தது. மாமனாரை கலகாவுக்கு பிடிக்காது. 

எனவே திதி கொடுக்க விடமாட்டாள் என்பதை அறிந்த பிட்சு கலகாவிடம், இந்த ஆண்டு என் தந்தைக்கு நான் திதி கொடுக்கமாட்டேன். நீயும் வீட்டில் எந்த பலகாரமும் செய்யாதே, என்றார்.கலகாவிற்கு ஆத்திரமாக வந்தது. பெற்ற தந்தைக்கு திதி கொடுக்காத உம்மைப் போன்றவர்களால் தான், நாட்டில் மழையே இல்லை. இந்த ஆண்டு கண்டிப்பாக திதி கொடுக்க வேண்டும், என்றாள்.

பிட்சு நினைத்தபடியே திவசம் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆனால், இது கடைசிவரை சாத்தியமாகவில்லை. சில மாதங்களில் கலகாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது. அவள் கடுமையாக சண்டை போட்டாள். எனவே பிட்சு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். விஷயம் அறிந்த கலகா, தற்கொலை செய்து கொண்டாள்.பேயாக அலைந்த கலகாவை, எமதூதர்கள் எமதர்மராஜாவிடம் கூட்டிச்சென்றனர். 

சித்ரகுப்தர், கலகா செய்த பாவங்களை அடுக்கினார்.கணவனுக்கு அடங்காத இவள் காலம்பூராவும் பேயின் உருவம் தாங்கியேஅலையட்டும், என எமன் தீர்ப்பளித்தார்.எமதூதர்கள் கலகாவை வானிலிருந்து தூக்கி வீசினர். அவள் ஒருநதிக்கரையில் வந்து விழுந்தாள். அங்கிருந்த மக்களெல்லாம் அவளது உருவத்தைப் பார்த்து பயந்து ஓடினர். அப்போது தர்மதத்தர் என்ற அந்தணர் அங்கு வந்தார். 

பேயை விரட்டுவதற்கான மந்திரங்களை மனதிற்குள் ஓதினார். ஆனாலும் பேய்அடங்கவில்லை. அவர் அருகிலிருந்த சிவன் கோயிலுக்குள் சென்றார். தீபத்தட்டை எடுத்து கற்பூரம் கொளுத்தி அதை பேய் மீது வீசினார். பேயின் உடல் தீப்பற்றிக் கொண்டது. பின், தீர்த்தச் செம்பை பேயின் மீது வீசினார்.தீர்த்த செம்பிலிருந்த தண்ணீர் பேயின்உடலில் பட்டதும், தீ அணைந்ததுடன், பேய் உருவமும் மாறியது. அது அழகான பெண்ணாக வடிவெடுத்தது.அவள் தன் முற்பிறவி வரலாறைதர்மதத்தரிடம் கூறினாள். தர்மதத்தர் அதைக் கேட்டு பரிதாபப்பட்டார். 

அப்போதுஎமதூதர்கள் அங்கு வந்தனர்.பேயாக திரிந்த இவள், சிவனுக்குரியகற்பூரமும், தீர்த்தமும் பட்டதால் பாவங்கள் குறையப் பெற்றாள். ஆனாலும், கணவனை மதிக்காத இவள், அடுத்த பிறவியிலும் ஒரு கெட்ட பெயரை ஏற்பாள். தர்மதத்தரானஉமக்கு இப்போது இரண்டு மனைவியர்இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த பிறவியில் கோசலை, சுமித்திரை என்ற பெயரில் உம்மை கணவனாக அடைவார்கள். 

உம்மால் பாவ மன்னிப்பு பெற்ற இந்தப் பெண், கைகேயி என்ற பெயருடன் உம்மை கணவராகஅடைவாள், என்றனர்.அடுத்த பிறவியில் தர்மதத்தர், தசரதமகாராஜாவாக பிறந்தார். கலகா, கைகேயி என்ற பெயரில் பிறந்து அவரை மனைவியாக அடைந்தாள். மந்தரை என்ற தீய பெண்ணுடன் சேர்ந்து, ராமனை காட்டுக்கு அனுப்பகாரணமானாள்.அதனால், இன்றும்அழியாத கெட்ட பெயரைசுமக்கிறாள். 

கணவனும்மனைவியும் அனுசரணையாக நடக்க வேண்டும் என்பதேகைகேயியின் வாழ்க்கை உலகுக்குகற்றுத் தரும் பாடம்.

நன்றி ; தின மலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பக்தி கதைகள்  Empty Re: பக்தி கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 30 Mar 2014 - 9:28

நம்பிக்கையுடன் வணங்கு! 
-------------------------------------------
சந்தேக பக்தி நன்மை தராது என்பற்காகசொல்லப்படும் கதை இது.ஒரு சமயம் மக்கள் பாவங்களில் மூழ்கி மிகவும் சிரமப்பட்டார்கள். கருணையுள்ள சிவபெருமான், அவர்களை பாவங்களில் இருந்து மீட்க ஸ்ரீருத்ரமந்திரத்தை அருளினார். மக்கள் அந்த மந்திரத்தை ஓதியதால், பாவங்களில் இருந்து மீண்டனர்.அவர்களுக்கு இறப்பே வரவில்லை.

இதனால் நரகம் காலியானது. எமதர்ம ராஜா, பிரம்மாவிடம் ஓடினார்.பிரபு! இப்போதெல்லாம் நான் யார் அருகே போனாலும், அவர்கள் ருத்ர மந்திரம் சொல்லியவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களது உயிர்களைக் கவர முடியவில்லை. ஆள் இல்லாத ஊருக்கு ராஜாவாக இருந்து என்ன பயன்? எனவே, என் பதவியிலிருந்து விலகுகிறேன், 

என்றார்.பிரம்மா அவரைத் தேற்றி, நான் அச்ரத்தா, துர்மேதா என்ற தூதுவர்களைத்படைத்து தருகிறேன். அச்ரத்தா என்றால் நம்பிக்கையின்மை. துர்மேதா என்றால் மோசமான எண்ணங்கள். இவற்றை மந்திரம் சொல்பவர்கள் மீது ஏவி விடு. பிறகு விளைவைப் பார், என்றார்.இந்த தூதுவர்கள் மந்திரம் சொன்னவர்களிடையே போன போது, அவர்களுக்கு நாம்சொல்லும் இந்த மந்திரத்தால் தான், நமக்கு நற்பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறதா! அல்லது நம் சக்தியால் கிடைத்துக் கொண்டிருக்கிறதா! என்ற சந்தேகம் ஏற்பட்டது. 

அந்தசந்தேகத்துடன், அவர்கள் மந்திரம் ஓத எமனின் வேலை எளிதாகி விட்டது.கடவுளை வணங்கும் போது மிகுந்த நம்பிக்கையுடன் வணங்க வேண்டும். புரிகிறதா!

நன்றி ; தின மலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பக்தி கதைகள்  Empty Re: பக்தி கதைகள்

Post by Nisha Sun 30 Mar 2014 - 23:32

கே.இனியவன் wrote:கணவனை கொடுமை செய்தால்
--------------------------------------------------
 அவர்பிட்சுவிடம் உன்மனைவியைத் திருத்த வழி இருக்கிறது. நீ என்னசொன்னாலும் அவள்நேர்மாறான காரியங்களையே செய்கிறாள். எனவே நீ என்ன விரும்புகிறாயோ, அதற்கு நேர்மாறாக உன் மனைவியிடம் சொல்.

  

 நன்றி ; தின மலர்

ஹா!  நல்ல ஆலோசனைகள் தான்..
தொடருங்கள் இனியவன்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பக்தி கதைகள்  Empty Re: பக்தி கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum