Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் காசாவின் மிக உயரமான இரு கட்டடங்கள் தரைமட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் காசாவின் மிக உயரமான இரு கட்டடங்கள் தரைமட்டம்
இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் காசாவின் மிக உயரமான இரு கட்டடங்கள் தரைமட்டம்
பலஸ்தீனர்களின் உயிர்ப்பலி 2,136 ஆக உயர்வு: எகிப்தில் தொடர்ந்தும் யுத்த நிறுத்த முயற்சி
பலஸ்தீனின் காசா மீதான இஸ்ரே லின் தாக்குதல்கள் 50 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் நேற்று செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற வான் தாக்குதல்களில் மேலும் இரு பலஸ் தீனர் பலியானதோடு காசாவில் இரு க்கும் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங் கள் தரைமட்டமாக்கப்பட்டு 20 பேரு க்கு காயத்தை ஏற்படுத்தியது.
இதில் 70 குடும்பங்கள் மற்றும் கடைத்தொகுதிகள், அலுவலகங்கள் இருந்த 13 மாடி கட்டடத்தை இஸ் ரேல் தாக்கி அழித்ததாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காசா நகரின் மையப்பகுதியில் இரு க்கும் இந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழும்போது காயத்திற்கு உள்ளாகாமல் இருக்க அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள மக்க ளும் வெளியேற்றப்பட்டனர்.
காசாவில் இருக்கும் மிக உயர்ந்த அடுக்கு மாடிகளில் ஒன்றான இந்த கட்டடம் தகர்த்தழிக்கப்படும் முன்னர் ஆளற்ற விமானத்தைக் கொண்டு வெடிக்காத இரு ஏவுகணைகளை அனுப்பி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. 13 மாடி கட்டடத்தின் 11 மாடிகளில் குடியிருப்புகள் இருந்துள்ளதோடு அடுத்த இரண்டு மாடிகளில் கடைத் தொகுதிகள், தேநீர் கடைகள் மற் றும் ஹமாஸ் அரசியல் பிரிவு அலு வலகம், பொது சேவை அமைச்சு அலுவலகம் இயங்கி வந்துள்ளன.
தவிர காசா நகரில் இருக்கும் 16 மாடிகள் கொண்ட பா'h கோபுர கட்டடமும் இஸ்ரேல் வான் தாக்குத லில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 1990 களில் இத்தாலி வர்த்தகர் ஒருவரால் கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டடத்தில் குடியிருப்புகள், கடைத்தொகுதிகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கிவந் துள்ளன.
'லிட்டில் இத்தாலி' என்று அழைக் கப்படும் இந்த அடுக்குமாடி கட்டடத் தின் மீது இஸ்ரேலின் எப்-16 ரக யுத்த விமானம் குறைந்தது ஆறு ஏவு கணைகளை ஏவியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். இஸ் ரேல் இராணுவம் எச்சரிக்கை செய்தி அனுப்பியதை அடுத்து கட்டடத்தில் இருந்த குடியிருப்பாளர்கள் வெளி யேறியுள்ளனர்.
கடந்த ஒருசில தினங்களில் காசா வில் இருக்கும் உயர்ந்த அடுக்குமா டிக் கட்டடங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித் துள்ளது. கடந்த சனிக்கிழமையில் இருந்து அவ்வாறு மிக உயர்ந்த ஐந்து அடுக்குமாடிகள் தரைமட்டமா க்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் நேற்றை தாக்குதல்க ளில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப பட்டுள்ளனர். இதன் மூலம் இது வரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்க ளின் எண்ணிக்கை 2,136 ஆக அதி கரித்திருப்பதோடு மேலும் 11,000க் கும் அதிகமானவர்கள் காயமடைந் துள்ளனர். ஐ.நா. கணிப்பின்படி 17,000 க்கும் அதிகமான வீடுகள் அழிக்கப் பட்டு 100,000 க்கும் அதிகமானவ ர்கள் வீடற்ற நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக இஸ் ரேல் தரப்பில் 64 இராணுவத்தினர் உட்பட 68 பேர் கொல்லப்பட்டுள்ள னர்.
மறுபுறத்தில் பலஸ்தீன போராளி கள் இஸ்ரேல் மீது தொடர்ந்தும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை யில் மாத்திரம் காசாவில் இருந்து 130க்கும் அதிகமான மோட்டார் குண் டுகள் மற்றும் ரொக்கெட்டுகள் இஸ் ரேல் மீது ஏவப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஒரு இஸ்ரேல் சிவிலியன் சிறு காய த்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதில் லெபனான் எல்லையில் இரு ந்து திங்கள் இரவில் இரு ரொக்கெ ட்டுகள் இஸ்ரேலில் விழுந்து வெடித் துள்ளது. இதற்கு பதிலடியாக லெப னான் மீது பீரங்கி தாக்குதல் நடத் தியதாக இஸ்ரேல் இராணுவம் குறி ப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இரு தரப்பிலும் எந்த பாதிப்பும் ஏற் படவில்லை.
இரு அடுக்குமாடி கட்டடங்கள் தாக் கப்பட்டதற்கு பதிலடியாக டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்கள் மீது நான்கு ரொக்கெட் தாக்குதல் களை நடத்தியதாக ஹமாஸ் ஆயு தப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ் ஸாம் படையணி அறிவித்துள்ளது.
காசாவில் தாக்குதல்கள் நீடிக்கும் சூழலில் மத்தியஸ்தம் வகிக்கும் எகி ப்து புதிய யுத்த நிறுத்தத்திற்கு தீவி ரமாக முயற்சித்து வருகிறது. எகிப்து பரிந்துரைத்திருக்கும் புதிய யுத்த நிறுத்த முயற்சி குறித்து இஸ்ரேலின் பதிலுக்காக காத்திருப்பதாக எகிப்து வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எகிப்து பரிந்துரைத்திருக்கும் புதிய யுத்த நிறுத்தத்தில் காசாவுக்கான ரபாஹ் எல்லைக்கடவையை திறக்க வும், காசாவின் மீன்பிடி பகுதியை 6 கடல் மைல் தொலைவால் அதிகரிக் கவும் கட்டுமானப் பொருட்கள் காசா நுழைய அனுமதிக்கவும் கோரப்பட் டுள்ளது.
இந்த யுத்த நிறுத்த பரிந்துரை எகிப்தினால் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிப்பதாக இஸ்ரேல் வாக்குறுதி அளித்துள்ளது.
"இந்த பரிந்துரைக்கு பலஸ்தீன தரப்பு அங்கீகாரம் அளித்திருக்கும் நிலையில் புதிய யுத்த நிறுத்தம் பற் றிய அறிவிப்பை எகிப்து விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதனை தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்ப டும்" என்று எகிப்து அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து மத்தியஸ்தர்களால் இரு தரப்பு முரண்பாட்டை தீர்க்க முடி யாத நிலையில் காசாவில் முன்னர் அமுல்படுத்தப்பட்டிருந்த யுத்த நிறுத் தம் கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி முறிவடைந்தது. யுத்த நிறுத்த முறி வுக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மாத்திரம் இதுவரை 90 க்கும் அதிமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்று க்கு காசா மீது இஸ்ரேல் கடந்த எட்டு ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் முற்றுகை அகற்றப்பட வேண் டும் என்றும் காசாவில் துறைமுகம் மற்றும் விமானநிலையங்கள் திறக்க ப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் உறுதியாக நிற்கிறது. ஆனால் இந்த நிபந்தனைகளுக்கு அனுமதி அளிக்க காசா இராணுவமயமற்ற பகு தியாக மாற்றப்பட வேண்டும் என்று இஸ்ரேல் பதில் நிபந்தனை விதிக்கி றது.
இதேவேளை காசாவில் யுத்த நிறு த்தம் ஒன்றை கொண்டுவரும் ஐ.நா. தீர்மானம் ஒன்றுக்காக அமெரிக்கா சொந்தமான நகலொன்றை தயாரி க்க ஆரம்பித்துள்ளது. ஐரோப்பிய சக்திகள் மற்றும் ஜோர்தானுடன் இணைந்து இந்த நகல் தயாரிக்கப் பட்டு வருவதாக இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர். யுத்த நிறுத்த த்தை கொண்டுவர பாதுகாப்புச் சபையில் கடந்த மாதம் ஜோர்தான் கொண்டுவந்த தீர்மானம் மற்றும் கடந்த வாரம் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் nஜர்மனி கொண்டுவந்த தீர் மானம் வெற்றி அளிக்காத நிலையி லேயே தற்போது அமெரிக்கா தீர் மானம் ஒன்றை கொண்டுவரவுள்ளது.
தினகரன்
பலஸ்தீனர்களின் உயிர்ப்பலி 2,136 ஆக உயர்வு: எகிப்தில் தொடர்ந்தும் யுத்த நிறுத்த முயற்சி
பலஸ்தீனின் காசா மீதான இஸ்ரே லின் தாக்குதல்கள் 50 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் நேற்று செவ் வாய்க்கிழமை இடம்பெற்ற வான் தாக்குதல்களில் மேலும் இரு பலஸ் தீனர் பலியானதோடு காசாவில் இரு க்கும் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங் கள் தரைமட்டமாக்கப்பட்டு 20 பேரு க்கு காயத்தை ஏற்படுத்தியது.
இதில் 70 குடும்பங்கள் மற்றும் கடைத்தொகுதிகள், அலுவலகங்கள் இருந்த 13 மாடி கட்டடத்தை இஸ் ரேல் தாக்கி அழித்ததாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காசா நகரின் மையப்பகுதியில் இரு க்கும் இந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழும்போது காயத்திற்கு உள்ளாகாமல் இருக்க அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள மக்க ளும் வெளியேற்றப்பட்டனர்.
காசாவில் இருக்கும் மிக உயர்ந்த அடுக்கு மாடிகளில் ஒன்றான இந்த கட்டடம் தகர்த்தழிக்கப்படும் முன்னர் ஆளற்ற விமானத்தைக் கொண்டு வெடிக்காத இரு ஏவுகணைகளை அனுப்பி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. 13 மாடி கட்டடத்தின் 11 மாடிகளில் குடியிருப்புகள் இருந்துள்ளதோடு அடுத்த இரண்டு மாடிகளில் கடைத் தொகுதிகள், தேநீர் கடைகள் மற் றும் ஹமாஸ் அரசியல் பிரிவு அலு வலகம், பொது சேவை அமைச்சு அலுவலகம் இயங்கி வந்துள்ளன.
தவிர காசா நகரில் இருக்கும் 16 மாடிகள் கொண்ட பா'h கோபுர கட்டடமும் இஸ்ரேல் வான் தாக்குத லில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 1990 களில் இத்தாலி வர்த்தகர் ஒருவரால் கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டடத்தில் குடியிருப்புகள், கடைத்தொகுதிகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கிவந் துள்ளன.
'லிட்டில் இத்தாலி' என்று அழைக் கப்படும் இந்த அடுக்குமாடி கட்டடத் தின் மீது இஸ்ரேலின் எப்-16 ரக யுத்த விமானம் குறைந்தது ஆறு ஏவு கணைகளை ஏவியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். இஸ் ரேல் இராணுவம் எச்சரிக்கை செய்தி அனுப்பியதை அடுத்து கட்டடத்தில் இருந்த குடியிருப்பாளர்கள் வெளி யேறியுள்ளனர்.
கடந்த ஒருசில தினங்களில் காசா வில் இருக்கும் உயர்ந்த அடுக்குமா டிக் கட்டடங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித் துள்ளது. கடந்த சனிக்கிழமையில் இருந்து அவ்வாறு மிக உயர்ந்த ஐந்து அடுக்குமாடிகள் தரைமட்டமா க்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் நேற்றை தாக்குதல்க ளில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப பட்டுள்ளனர். இதன் மூலம் இது வரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்க ளின் எண்ணிக்கை 2,136 ஆக அதி கரித்திருப்பதோடு மேலும் 11,000க் கும் அதிகமானவர்கள் காயமடைந் துள்ளனர். ஐ.நா. கணிப்பின்படி 17,000 க்கும் அதிகமான வீடுகள் அழிக்கப் பட்டு 100,000 க்கும் அதிகமானவ ர்கள் வீடற்ற நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக இஸ் ரேல் தரப்பில் 64 இராணுவத்தினர் உட்பட 68 பேர் கொல்லப்பட்டுள்ள னர்.
மறுபுறத்தில் பலஸ்தீன போராளி கள் இஸ்ரேல் மீது தொடர்ந்தும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை யில் மாத்திரம் காசாவில் இருந்து 130க்கும் அதிகமான மோட்டார் குண் டுகள் மற்றும் ரொக்கெட்டுகள் இஸ் ரேல் மீது ஏவப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஒரு இஸ்ரேல் சிவிலியன் சிறு காய த்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதில் லெபனான் எல்லையில் இரு ந்து திங்கள் இரவில் இரு ரொக்கெ ட்டுகள் இஸ்ரேலில் விழுந்து வெடித் துள்ளது. இதற்கு பதிலடியாக லெப னான் மீது பீரங்கி தாக்குதல் நடத் தியதாக இஸ்ரேல் இராணுவம் குறி ப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இரு தரப்பிலும் எந்த பாதிப்பும் ஏற் படவில்லை.
இரு அடுக்குமாடி கட்டடங்கள் தாக் கப்பட்டதற்கு பதிலடியாக டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்கள் மீது நான்கு ரொக்கெட் தாக்குதல் களை நடத்தியதாக ஹமாஸ் ஆயு தப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ் ஸாம் படையணி அறிவித்துள்ளது.
காசாவில் தாக்குதல்கள் நீடிக்கும் சூழலில் மத்தியஸ்தம் வகிக்கும் எகி ப்து புதிய யுத்த நிறுத்தத்திற்கு தீவி ரமாக முயற்சித்து வருகிறது. எகிப்து பரிந்துரைத்திருக்கும் புதிய யுத்த நிறுத்த முயற்சி குறித்து இஸ்ரேலின் பதிலுக்காக காத்திருப்பதாக எகிப்து வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எகிப்து பரிந்துரைத்திருக்கும் புதிய யுத்த நிறுத்தத்தில் காசாவுக்கான ரபாஹ் எல்லைக்கடவையை திறக்க வும், காசாவின் மீன்பிடி பகுதியை 6 கடல் மைல் தொலைவால் அதிகரிக் கவும் கட்டுமானப் பொருட்கள் காசா நுழைய அனுமதிக்கவும் கோரப்பட் டுள்ளது.
இந்த யுத்த நிறுத்த பரிந்துரை எகிப்தினால் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிப்பதாக இஸ்ரேல் வாக்குறுதி அளித்துள்ளது.
"இந்த பரிந்துரைக்கு பலஸ்தீன தரப்பு அங்கீகாரம் அளித்திருக்கும் நிலையில் புதிய யுத்த நிறுத்தம் பற் றிய அறிவிப்பை எகிப்து விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதனை தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்ப டும்" என்று எகிப்து அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து மத்தியஸ்தர்களால் இரு தரப்பு முரண்பாட்டை தீர்க்க முடி யாத நிலையில் காசாவில் முன்னர் அமுல்படுத்தப்பட்டிருந்த யுத்த நிறுத் தம் கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி முறிவடைந்தது. யுத்த நிறுத்த முறி வுக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மாத்திரம் இதுவரை 90 க்கும் அதிமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்று க்கு காசா மீது இஸ்ரேல் கடந்த எட்டு ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் முற்றுகை அகற்றப்பட வேண் டும் என்றும் காசாவில் துறைமுகம் மற்றும் விமானநிலையங்கள் திறக்க ப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் உறுதியாக நிற்கிறது. ஆனால் இந்த நிபந்தனைகளுக்கு அனுமதி அளிக்க காசா இராணுவமயமற்ற பகு தியாக மாற்றப்பட வேண்டும் என்று இஸ்ரேல் பதில் நிபந்தனை விதிக்கி றது.
இதேவேளை காசாவில் யுத்த நிறு த்தம் ஒன்றை கொண்டுவரும் ஐ.நா. தீர்மானம் ஒன்றுக்காக அமெரிக்கா சொந்தமான நகலொன்றை தயாரி க்க ஆரம்பித்துள்ளது. ஐரோப்பிய சக்திகள் மற்றும் ஜோர்தானுடன் இணைந்து இந்த நகல் தயாரிக்கப் பட்டு வருவதாக இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர். யுத்த நிறுத்த த்தை கொண்டுவர பாதுகாப்புச் சபையில் கடந்த மாதம் ஜோர்தான் கொண்டுவந்த தீர்மானம் மற்றும் கடந்த வாரம் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் nஜர்மனி கொண்டுவந்த தீர் மானம் வெற்றி அளிக்காத நிலையி லேயே தற்போது அமெரிக்கா தீர் மானம் ஒன்றை கொண்டுவரவுள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இஸ்ரேலின் புதிய குடியேற்ற திட்டத்தை பிரதமர் நிறுத்தம்
» இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல்வாதி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பு
» சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்
» ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்...!! (படங்கள் இணைப்பு)
» அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு
» இஸ்ரேலின் கடும்போக்கு அரசியல்வாதி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பு
» சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்
» ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்...!! (படங்கள் இணைப்பு)
» அமெரிக்கா, இஸ்ரேலின் யுனஸ்கோ வாக்குரிமை பறிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|