Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
சர்வதேச அனர்த்த முகாமைத்துவ மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்
2 posters
Page 1 of 1
சர்வதேச அனர்த்த முகாமைத்துவ மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்
இலங்கை, சுனாமி அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து 10 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “எதிர்காலத்தில் எங்களுக்கு வேண்டும்; பாதுகாப்பான இலங்கை” என்ற தொனிப் பொருளிலான சர்வதேச அனர்த்த முகாமைத்துவ மாநாடு இன்று (24) கொழும்பில் ஆரம்பமாகிறது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 460 உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்குபற்ற இருப்பதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கடந்த 10 வருட காலத்தில் சுனாமி உட்பட பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த அனுபவங்களை பகிர்தல் அதன் மூலம் பெற்ற பாடங்கள் கடந்த காலத்தில் எட்டிய முன்னேற்றங்கள் உட்பட பல விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்பட இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் மாநாடு 3 தினங்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.
இடர் முகாமைத்துவ மாநாடு தொடர்பாக விளக்கும் ஊடக மாநாடு அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் 35 ஆயிரம் பேர் இறந்ததோடு ஒரு இலட்சம் வீடுகள் சேதமடைந்தன. 1.5 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் உதவுவதை விட மக்களுக்கு முன்னெச்சரிக்கை அளிப் பதற்கே எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதற்காக மக்களை அறிவூட்டி வருவதோடு சகல முகாம்களிலும் 25 இராணுவ வீரர்களுக்கு இடர் முகாமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டுமொருமுறை சுனாமி அனர்த்தம் ஏற்பட்டால் எதுவித உயிர்ச் சேதமுமின்றி முகாமைத்துவம் செய்யக்கூடிய வல்லமை இலங்கைக்கு காணப்படுகிறது. எதிர்காலத்தில் வேறு விதமான அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதற்காக ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து கூட்டுத் திட்டங்கள் செற்படுத்தப்பட்டு வருகிறது. மண் சரிவு, வெள்ள அபாயங்களை மட்டுப்படுத்தவும் அநேக திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது முதல் கடந்த 10 வருட காலத்தில் நாம் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பான அறிக்கை டிசம்பர் 26 ஆம் திகதி அனுஷ் டிக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தின் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். இந்த அறிக்கை 2015 மார்ச் மாதம் ஜப்பானில் நடக்கும். சர்வதேச இடர் மட்டுப்படுத்தல் மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்படும்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளை விட எமது நாடு துரிதமாக எழுச்சி பெற்றது. அனைவருக்கும் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டன. இது குறித்து சக நாடுகள் எம்மை பாராட்டு கின்றன. இலங்கையில் முதற்தடவையாகவே எவ்வாறான மாநாடு நடைபெறுகிறது என்றார். இந்த ஊடக மாநாட்டில் அமைச்சின் செயலாளர் மொஹமட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 10 வருட காலத்தில் சுனாமி உட்பட பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த அனுபவங்களை பகிர்தல் அதன் மூலம் பெற்ற பாடங்கள் கடந்த காலத்தில் எட்டிய முன்னேற்றங்கள் உட்பட பல விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்பட இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் மாநாடு 3 தினங்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.
இடர் முகாமைத்துவ மாநாடு தொடர்பாக விளக்கும் ஊடக மாநாடு அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் 35 ஆயிரம் பேர் இறந்ததோடு ஒரு இலட்சம் வீடுகள் சேதமடைந்தன. 1.5 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் உதவுவதை விட மக்களுக்கு முன்னெச்சரிக்கை அளிப் பதற்கே எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதற்காக மக்களை அறிவூட்டி வருவதோடு சகல முகாம்களிலும் 25 இராணுவ வீரர்களுக்கு இடர் முகாமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டுமொருமுறை சுனாமி அனர்த்தம் ஏற்பட்டால் எதுவித உயிர்ச் சேதமுமின்றி முகாமைத்துவம் செய்யக்கூடிய வல்லமை இலங்கைக்கு காணப்படுகிறது. எதிர்காலத்தில் வேறு விதமான அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதற்காக ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து கூட்டுத் திட்டங்கள் செற்படுத்தப்பட்டு வருகிறது. மண் சரிவு, வெள்ள அபாயங்களை மட்டுப்படுத்தவும் அநேக திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது முதல் கடந்த 10 வருட காலத்தில் நாம் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பான அறிக்கை டிசம்பர் 26 ஆம் திகதி அனுஷ் டிக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தின் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். இந்த அறிக்கை 2015 மார்ச் மாதம் ஜப்பானில் நடக்கும். சர்வதேச இடர் மட்டுப்படுத்தல் மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்படும்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளை விட எமது நாடு துரிதமாக எழுச்சி பெற்றது. அனைவருக்கும் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டன. இது குறித்து சக நாடுகள் எம்மை பாராட்டு கின்றன. இலங்கையில் முதற்தடவையாகவே எவ்வாறான மாநாடு நடைபெறுகிறது என்றார். இந்த ஊடக மாநாட்டில் அமைச்சின் செயலாளர் மொஹமட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Re: சர்வதேச அனர்த்த முகாமைத்துவ மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்
பகிர்வுக்கு நன்றி ஹாசிம்!
சில நாட்கள் ஆளையே காணோமே? நலமாக இருக்கின்றீர்கள் தானே?
சில நாட்கள் ஆளையே காணோமே? நலமாக இருக்கின்றீர்கள் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|