Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
+2
Nisha
சே.குமார்
6 posters
Page 1 of 1
மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
இன்று எங்கள் அன்பு மகன் விஷாலுக்குப் பிறந்தநாள். அவன் நீண்ட ஆயுளோடும்... நல்ல கல்வியோடும்... நிறைவான வாழ்வும் நிறைந்த சந்தோஷமுமாய் வாழ உங்கள் ஆசிகளை வேண்டி....
நேற்றிரவு நண்பரின் திடீர் அழைப்பின் பேரில் 'ஐ' படம் பார்த்தாச்சு. இயக்குநரின் சங்கரின் முந்தைய படங்களைப் போல் அவ்வளவாக கவரவில்லை. காதலும் காதலுக்கான பழிவாங்களுமான அரதப் பழசான தமிழ் சினிமாக் கதையை பிரமாண்டம் என்னும் சர்க்கரை சேர்த்து தித்திப்பான பொங்கலாக்க முயன்று தோற்றிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அவ்வளவாக நல்ல கதை என்று சொல்ல முடியாத ஒரு படத்தில் சண்டைக்காட்சிகளை நீளமாக்கி நகர்த்தியிருக்கிறார். ஐந்து வில்லன்களில் 'சைடு வகுப்பெடுத்து சாப்டா பேசினா சரத்குமார்ன்னு நினைச்சியோ அவருதான் மெயின் வில்லன்' அப்படின்னு ராம்குமார் இறுதிக்காட்சியில் சொல்வதற்கு முன்னரே அந்த நபர் வரும் இரண்டாவது காட்சியிலேயே நமக்கு இவர்தான் முக்கிய வில்லன் எனத் தெரிய வருவதால் சுவரஸ்யம் இல்லை. இசைப்புயலின் இசையும் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும் அருமை என்றால் மெர்சலாயிட்டேன் தவிர மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலக்கியிருப்பவர் சீயான். மனுசனுக்கு தொழில் மீது எவ்வளவு ஈர்ப்பு... அப்பா... கலக்கிட்டார். படம் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் விக்ரம் நிறைவாய் நிற்கிறார். தன்னை வருத்தி கலைஞன்டான்னு சொல்ல வைத்திருக்கிறார். சந்தானம், பவர்ஸ்டார் கூட்டணி சிரிப்புக்கள் பரவாயில்லை.
மாடலாக வரும் எமி அழகோ அழகோ... அவர் விளம்பரப் படங்களில் நடிப்பது போன்று வரும் பாடல் காட்சியில் அவர் மீது கேமரா விளையாடியிருக்கிறது. தன்னைக் காதலித்தது போல் நடித்தது தெரிந்த இடத்தில்... இன்னும் ஒரு சில இடங்களில் விக்ரம் வசனம் பேசும் போது தனுஷ் தெரிஞ்சான்ய்யா... அது எனக்கு மட்டும்தானான்னு தெரியலை... திருநங்கைகளை கேவலமாக காட்டுவதும், இரட்டை அர்த்தம் என்பதை விட நேரடி அர்த்தமே கொள்ளக்கூடிய அசிங்கமான வசனங்களை வைத்திருப்பது ஷங்கருமா என நினைக்க வைக்கிறது. பிரமாண்டத்தை நம்பி படமெடுக்கும் இயக்குநர் ஷங்கர், ரசிகர்கள் தனது படத்தை எப்படியும் பார்ப்பார்கள் என்ற தீவிர நம்பிக்கை வைத்திருக்கிறார். அதை முதலில் அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மீண்டும் இந்தியன் போன்ற ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும். ஆளானப்பட்ட சூப்பர் ஸ்டாரோட லிங்காவையே ஓரங்கட்டுன ரசிகர்கள் பிரமாண்டத்தை பிச்சி உதறுவானுங்கங்கிறதுக்கு 'ஐ' உதாரணம். மொத்தத்தில் ஐ-யை விக்ரம் என்னும் மகா கலைஞனுக்காகப் பார்க்கலாம்.
ஒரு எழுத்தாளன் இனிமேல் எழுதமாட்டேன்... எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்துவிட்டான் என்று சொல்லும் அளவுக்கு கொண்டு சென்ற சமூகத்தை என்ன சொல்வது. தனது நாவலில் ஒரு ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டு எழுதும் போது அதனால் பிரச்சினைகள் எழும் என்று நினைத்தால் அதை அப்போதே கற்பனைப் பெயராக மாற்றியிருக்கலாம். நம்ம ஊர் பெயரைப் பயன்படுத்த நமக்கு உரிமை இருக்கு என்று நினைத்திருக்கலாம். அதேபோல் நம்ம ஊர் பெயரை களங்கப்படுத்தியிருக்கிறார் என்பதை நாலாண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய பிரச்சினை ஆக்கும் நபர்கள், புத்தகத்தின் முதல் பிரதி வந்த போதே அவரிடம் பேசி அடுத்த பிரதியில் பெயர் வராமல் செய்திருக்கலாம். நாலாண்டுக்குப் பிறகு ஒரு அரசியல்... அது ஒரு எழுத்தாளனின் சிந்தனையை சிறையிலிடும் அளவுக்குப் போய்... ஊரை விட்டே போ என்று மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையால் சொல்ல வைத்து... எழுத்தாளன் செத்துட்டான்யா என அறிக்கைவிட வைத்து... சை... என்ன மாதிரியான சூழலில் நாம் இப்போது வாழ்கிறோம். ஒரு எழுத்தாளனின் பேனாவைப் பறித்து வைத்து அவன் சிந்தனைகளுக்கு தீயிட்டு விட்டோம் என மார்தட்டிக் கொள்வதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு. இதில் இருந்து ஐயா பெருமாள் முருகன் அவர்கள் மீண்டு வர வேண்டும்... மீண்டும் வரவேண்டும்...
வெண்ணிலா வீடு படத்தை இரண்டு நாட்களுக்கு பொழுது போகவில்லை எனப் பார்த்தேன். இரவல் நகை வாங்கி அதனை களவு கொடுக்கும் கதைகள் பல புத்தகங்களில் வெளி வந்திருக்கின்றன. அதே கதைக்களம்... அன்பான வாழ்க்கை. அழகான குழந்தை என வாழும் குடும்பத்துக்குள் பக்கத்து வீட்டுக்கு குடிவரும் பணக்காரியின் நட்பும்... அதன் பின்னான நிகழ்வுகளில் அவளின் நகையை வாங்கி அணிந்து திருமணத்திற்குச் சென்று அதை களவு கொடுத்து விட்டு படும் இன்னல்களும் என வெண்ணிலா வீடாக இருந்த குடும்பம் எப்படி அமாவாசை இருளுக்குள் செல்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். நல்ல படம்.... பார்க்கலாம்...
பதினைந்து நாட்கள் அலைனில் ஓட்டியாச்சு.. இன்னும் ஒரு வாரம்... இரண்டு வாரம்... என்று சொல்கிறார்களே தவிர முடிவாய் சொல்ல மாட்டேங்கிறானுங்க... எதாயிருந்தாலும் சொல்லுங்கடா நான் இரண்டு இடத்திலும் வாடகை கொடுக்க முடியாது என்று மின்னஞ்சல் அனுப்பினால் இன்னும் பதிலில்லை. அபுதாபி குளிரை விட அலைனில் குளிர் கொன்று எடுக்கிறது. இங்கு ஹீட்டர் தண்ணீரில் 5.30க்கு குளிக்கும் போது கிடைத்த சுகம் 5 மணிக்கு எழுந்து குளிரக்குளிர தண்ணியை ஊத்தும் போது கிடைக்கவில்லை. பின்னர் குளிரில் பேருந்து நிறுத்தம் வந்து பஸ் பிடித்து அலுவலகம் சென்று வேலை பார்த்து திரும்ப அறைக்கு 3.30 மணிக்கு வந்தாலும் குளிர் மட்டும் குறைவேனா என்கிறது. அலுவலகத்திலோ பெண்கள் அதிகம்... பெரும்பாலும் அரபிப் பெண்களுக்கு வெளியில் எவ்வளவு குளிர் இருந்தாலும் ஏசியை மட்டும் குறைக்கும் மனசு வரவே வராது. அங்கயும் பிரீசர்தான்... என்ன செய்ய... எப்படா அபுதாபிக்கு வருவோம்ன்னு இருக்கு... ஆனா அறையை விட்டு எங்கும் செல்லாததால் ஊருக்குப் பேச, படிக்க, எழுத என நிறைய நேரம் கிடைக்கிறது. இங்கு 11.30 மணி வரை விளக்கு எரியும் அங்கே 9.40க்கெல்லாம் சிவசம்போதான்...
டூ நூரா வித் லவ் அப்படின்னு ஒரு மலையாளப்படம் பார்த்தேன். சமூக சேவை செய்யும் இஸ்லாமியப் பெண்ணுக்கு எல்லா மதங்களிலும் நண்பர்கள். குழந்தை பிறப்பதில் பிரச்சினை என்பதாக ஆரம்பிக்கும் படம்.... மெல்ல பின்னோக்கி பயணிக்க... அவளின் சமூகசேவை, ஆராய்ச்சி, நட்பு, காதல் என நகர்ந்து கர்ப்பிணி ஆகும் போது இந்தக் குழந்தை வயிற்றில் வளர வளர அவளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் வரும்.. உயிருக்கே ஆபத்து வரும் என்ற இடத்தில் நிற்க, கருவைக் கலைக்கலாம் என கணவன் மன்றாட அவளோ எனக்கு என்னோட குழந்தை வேணும் என பிடிவாதமாய் மறுக்க, பிரசவ சமயத்தில் மருத்துவமனையில் அவள் உயிருக்குப் போராட, பைக்கில் இந்த நினைவுகளைச் சுமந்து செல்லும் கணவன் விபத்தில் தலையில் அடிபட்டு அதே ஆஸ்பத்திரி ஐசியூவில் இருக்க, குழந்தை பிறந்து கணவனைப் பார்த்தவளுக்கு மீண்டும் பிரச்சினை வர, இதயத்தை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். இதயம் மாற்றி மீண்டு வந்தாளா? அவளுக்கு யார் இதயத்தைக் கொடுத்தார்கள் என்பதை இறுதிக்காட்சியாக்கி முடித்திருக்கிறார்கள். ரொம்ப நல்ல படம்ன்னு சொல்ல முடியாது என்றாலும் பார்க்கலாம் ரகம்தான்.விஷால் பள்ளியில் நடனத்தில் இரண்டாம் பரிசாக ஒரு கோப்பையும் சர்ட்டிபிகேட்டும் வாங்கி வந்திருந்தான். நேற்று எங்கள் ஊர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் பரிசாக டம்ளம் பெற்றிருக்கிறான். அவனை அவன் போக்கில் வளர விட வேண்டும் என்பதே எங்கள் ஆசை.
சில நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் போது என்ன மனிதர்கள் இவர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அடுத்தவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பொழைப்பை நடத்த நினைக்கும் பிறவிகளைப் பற்றி என்ன சொல்வது? நம்மிடம் உருகி உருகிப் பேசி, நம்ம சொந்தங்களிடம் நல்ல பெயர் வாங்க உன்னை அப்படிப் பேசினான், இப்படிப் பேசினான்... அவரை வாடான்னான் போடான்னான்... சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப் பாக்கிறான்னு வாய்க்கு வந்ததைப் பேசி வாழ நினைக்கும் ஈனர்களுக்கு என்ன பதில் சொல்வது?
சொத்துக்கள் மட்டுமே ஒருவனுக்கு சுகத்தைக் கொடுக்குமெனில் அந்தச் சொத்துக்களை போட்டுக் கொடுத்து வாழ நினைக்கும் புண்ணியவான்களே துதி பாடி பெற்றுக் கொள்ளட்டும். எங்களுக்கு வேண்டாம்... கடனை வாங்கிக் கட்டினாலும் எங்களுக்கு என்று ஒரு வீடும் இரண்டு செல்வங்களும் சொத்தாய்... நிறைவான வாழ்க்கையை எங்களுக்கு கொடுக்க அதுவே போதும்... தயவு செய்து சொத்து சொத்து என்றோ... சொல்லாததை சொன்னேன் என்றோ சொல்லி வாழ நினைக்காதீர்கள்... அந்த வாழ்க்கை நரகலைத் தின்று வாழ்வதற்குச் சமம். இனி இது போல் என்னிடம் செய்யாதீர்கள். பிறர் போற்ற வாழப் பழகிக் கொள்ளுங்கள்... பிறரைத் தூற்றி வாழ நினைக்காதீர்கள்.
மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
வாவ்!
நீங்கள் அந்த குமாரா? அம்மாடி வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள். நான் யாரோ என நினைத்தேன் சார்.
கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள்.
இனிய வரவேற்புகள் சார்.
நீங்கள் அந்த குமாரா? அம்மாடி வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள். நான் யாரோ என நினைத்தேன் சார்.
கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள்.
இனிய வரவேற்புகள் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
அருமையான ஐ விமர்சனம். நிதர்சன உண்மை.
எழுத்தாளரின் குமுறல் உண்மையில் நெஞ்சை தொடுகிறது.
தொடரட்டும் உங்கள் பயணம் குமார்
எழுத்தாளரின் குமுறல் உண்மையில் நெஞ்சை தொடுகிறது.
தொடரட்டும் உங்கள் பயணம் குமார்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
Nisha wrote:வாவ்!
நீங்கள் அந்த குமாரா? அம்மாடி வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள். நான் யாரோ என நினைத்தேன் சார்.
கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள்.
இனிய வரவேற்புகள் சார்.
அது சரி உங்களுக்கு தெரிந்தவரா நிஷா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
மகன் விசாலுக்கு எங்கள் அன்பு நல் வாழ்த்துகள் குமார் சார். நடனத்தில் பரிசும் சார்டிபிகேட்டும் வாங்கியதற்கும் வாழ்த்துகள் சொல்லி விடுங்கள்.
Last edited by Nisha on Sun 18 Jan 2015 - 14:33; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
*சம்ஸ் wrote:Nisha wrote:வாவ்!
நீங்கள் அந்த குமாரா? அம்மாடி வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள். நான் யாரோ என நினைத்தேன் சார்.
கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள்.
இனிய வரவேற்புகள் சார்.
அது சரி உங்களுக்கு தெரிந்தவரா நிஷா?
எனக்கு தெரிந்தவர் இல்லை சம்ஸ். ஆனால் இவரின் வலைப்பூவில் இருக்கும் அனைத்து பதிவையும் படித்திருக்கின்றேன். கிராமத்து மண்ணும் நினைவுகளும் , சூழலுமாய் மனசை கவர்ந்த எழுத்து இவருடையது.
நேற்று கூட பொங்கல் குறித்த கட்டுரை ஒன்றில் அவர்கள் ஊர் பொங்கல் குறித்து எழுதி இருந்தார். அந்த ஊருக்கு ஒரு தடவை போக மாட்டோமா என ஏக்கம் வந்தது என்னமோ உண்மை.
கீழே இருக்கும் படம் பாருங்கள். இயற்கையோடு ஒன்றி எப்படி பொங்கல் வைக்கின்றார்கள் என..இந்த படத்தில் அவர் தகப்பனும் இருப்பதாய் வலைப்பூவில் சொல்லி இருக்கார். கையை உயர்த்தியபடி இருப்பவர் இவர் அப்பாவாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
ஐ பட விமர்சனம் அருமை!
பெருமான் முருகன் எனும் எழுத்தாளர் குறித்த பகிர்வு எனக்குள் புரியாத புதிராய் இருக்கின்றது. அப்படி என்ன எழுதினார் என கேட்பதை விட ஏன் இப்படி தமிழ் சமூகத்தை அதிலும் பெண்களை குறித்து எழுதினார் எனும் கேள்வியும் வருகின்றது.ஆனாலும் அவருக்கான தண்டனையும் எதிர்ப்பும் சற்று அதீதமாய் அரசியல் கலந்ததாய் தான் போனது. தவிர்த்திருக்கலாம்.
வெண்ணிலா வீடு குறித்த விமர்சனம் அருமை .. அலைன் வாழ்க்கை யும் குளிரும் வெளி நாட்டு வாழ்க்கை எனில் நாடோடிகள் தான் நாம் என புரிய வைக்கின்றது.
விஷால் குறித்து தெளிவான முடிவுக்கு பாராட்டுகள். சினிமாவும் வாழ்க்கையும் பின்னிப்பிணைந்ததாய் இரண்டையும் இணைத்த பகிர்வுக்கு நன்றி
இறுதியாய் மனிதர் குணம் குறித்து கீழே இருக்கும் குறள் தான் நினைவில் வருகின்றது.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
பெருமான் முருகன் எனும் எழுத்தாளர் குறித்த பகிர்வு எனக்குள் புரியாத புதிராய் இருக்கின்றது. அப்படி என்ன எழுதினார் என கேட்பதை விட ஏன் இப்படி தமிழ் சமூகத்தை அதிலும் பெண்களை குறித்து எழுதினார் எனும் கேள்வியும் வருகின்றது.ஆனாலும் அவருக்கான தண்டனையும் எதிர்ப்பும் சற்று அதீதமாய் அரசியல் கலந்ததாய் தான் போனது. தவிர்த்திருக்கலாம்.
வெண்ணிலா வீடு குறித்த விமர்சனம் அருமை .. அலைன் வாழ்க்கை யும் குளிரும் வெளி நாட்டு வாழ்க்கை எனில் நாடோடிகள் தான் நாம் என புரிய வைக்கின்றது.
விஷால் குறித்து தெளிவான முடிவுக்கு பாராட்டுகள். சினிமாவும் வாழ்க்கையும் பின்னிப்பிணைந்ததாய் இரண்டையும் இணைத்த பகிர்வுக்கு நன்றி
இறுதியாய் மனிதர் குணம் குறித்து கீழே இருக்கும் குறள் தான் நினைவில் வருகின்றது.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
ஐ இன்னும் பார்க்கவில்லை விமர்சனங்களால் சில படங்களை தவிர்த்திருந்தேன் அந்த லிஸ்டில் ஐயும் வருமோ தெரியல பார்க்கலாம்
விமர்சனப்பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்
விமர்சனப்பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
புத்தகம் எழுதிய உடன் எதிர்ப்பதை விட்டு விட்டு இப்போது எதிர்ப்பது என்பது ஏதோ உணர்த்துகிறது.
வேண்டுமென்றே செய்கின்றசெயல்போல் தெரிகிறது.
வேண்டுமென்றே செய்கின்றசெயல்போல் தெரிகிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
ahmad78 wrote:புத்தகம் எழுதிய உடன் எதிர்ப்பதை விட்டு விட்டு இப்போது எதிர்ப்பது என்பது ஏதோ உணர்த்துகிறது.
வேண்டுமென்றே செய்கின்றசெயல்போல் தெரிகிறது.
ஆமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
Nisha wrote:வாவ்!
நீங்கள் அந்த குமாரா? அம்மாடி வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள். நான் யாரோ என நினைத்தேன் சார்.
கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள்.
இனிய வரவேற்புகள் சார்.
ரொம்ப நன்றிங்க...
என்னைத் தொடர்ந்து வாசிப்பதற்கும்... இத்தனை அன்பிற்கும்...
சந்தோஷமா இருக்கு.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
உண்மைதான்...Nisha wrote:ahmad78 wrote:புத்தகம் எழுதிய உடன் எதிர்ப்பதை விட்டு விட்டு இப்போது எதிர்ப்பது என்பது ஏதோ உணர்த்துகிறது.
வேண்டுமென்றே செய்கின்றசெயல்போல் தெரிகிறது.
ஆமாம்!
புத்தகத்தை வாசித்து முடித்தால் தெரியும். எதற்கான எதிர்ப்பு என... இப்போது வாசிப்பில்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
தங்கள் கருத்துக்கு நன்றிங்க...நேசமுடன் ஹாசிம் wrote:ஐ இன்னும் பார்க்கவில்லை விமர்சனங்களால் சில படங்களை தவிர்த்திருந்தேன் அந்த லிஸ்டில் ஐயும் வருமோ தெரியல பார்க்கலாம்
விமர்சனப்பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
தங்கள் கருத்துக்கு நன்றிங்க...Nisha wrote:ஐ பட விமர்சனம் அருமை!
பெருமான் முருகன் எனும் எழுத்தாளர் குறித்த பகிர்வு எனக்குள் புரியாத புதிராய் இருக்கின்றது. அப்படி என்ன எழுதினார் என கேட்பதை விட ஏன் இப்படி தமிழ் சமூகத்தை அதிலும் பெண்களை குறித்து எழுதினார் எனும் கேள்வியும் வருகின்றது.ஆனாலும் அவருக்கான தண்டனையும் எதிர்ப்பும் சற்று அதீதமாய் அரசியல் கலந்ததாய் தான் போனது. தவிர்த்திருக்கலாம்.
வெண்ணிலா வீடு குறித்த விமர்சனம் அருமை .. அலைன் வாழ்க்கை யும் குளிரும் வெளி நாட்டு வாழ்க்கை எனில் நாடோடிகள் தான் நாம் என புரிய வைக்கின்றது.
விஷால் குறித்து தெளிவான முடிவுக்கு பாராட்டுகள். சினிமாவும் வாழ்க்கையும் பின்னிப்பிணைந்ததாய் இரண்டையும் இணைத்த பகிர்வுக்கு நன்றி
இறுதியாய் மனிதர் குணம் குறித்து கீழே இருக்கும் குறள் தான் நினைவில் வருகின்றது.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
ரொம்ப நன்றிங்க...Nisha wrote:மகன் விசாலுக்கு எங்கள் அன்பு நல் வாழ்த்துகள் குமார் சார். நடனத்தில் பரிசும் சார்டிபிகேட்டும் வாங்கியதற்கும் வாழ்த்துகள் சொல்லி விடுங்கள்.
கண்டிப்பாக சொல்கிறேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
சே.குமார் wrote:Nisha wrote:வாவ்!
நீங்கள் அந்த குமாரா? அம்மாடி வெரி சப்ரைஸ் சார். மனசின் பக்கம் குமாரா நீங்கள். நான் யாரோ என நினைத்தேன் சார்.
கலையாத கனவுகளும் , வேரும் விழுதுகளும், கிராமத்து நினைவுகளுமாய் கலக்கும் குமாரா நீங்கள்.
இனிய வரவேற்புகள் சார்.
ரொம்ப நன்றிங்க...
என்னைத் தொடர்ந்து வாசிப்பதற்கும்... இத்தனை அன்பிற்கும்...
சந்தோஷமா இருக்கு.
உங்களைக்குறித்த அறிமுகத்தினை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் புதிய திரி தொடங்கி சொல்லுங்கள் சார்.
சேனை அறிமுகமாகியது எப்படி? என இங்கேயும் சொல்லுங்கள்!
வரவேற்க வசதியாய் இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்
கலையாத கனவுகள், வேரும் விழுதுகளும் இரு தொடர்களுமே கிராமிய பேச்சு வழக்கில் மிக அருமையான் எழுத்து நடையோடான தொடர் கதை குமார் சார்.
உங்கள் வலைப்பூவில் வரும் பதிவுகளை தவறாது படித்து விடுவேன். ஆனால் இது வரை அங்கே பின்னூட்டியதில்லை.
உங்கள் வலைப்பூவில் வரும் பதிவுகளை தவறாது படித்து விடுவேன். ஆனால் இது வரை அங்கே பின்னூட்டியதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம்: மனசுக்கு விடுமுறை
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம்: மனசுக்கு விடுமுறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|