Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
மேதைகளின் நகைச்சுவை
2 posters
Page 1 of 1
மேதைகளின் நகைச்சுவை
மூதறிஞர் ராஜாஜி ஒரு முறை சேலம் நகர் மன்றத் தலைவராய் இருந்தார்.ஒரு நகர் மன்றக் கூட்டத்தில்,ஒரு உறுப்பினர் சேலம் சுடுகாட்டுக்கு சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.அது சம்பந்தமாக விவாதம் நடந்தது.ஒரு சிலர் வேண்டும் என்றும் ஒரு சிலர் வேண்டாம் என்றும் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.நகராட்சியில் நிதிநிலைமை சரியில்லாதிருந்தது.அதைக் கருத்தில் கொண்டாலும் சுற்று சுவர் உடனைதேவையில்லை என்பது ராஜாஜியின் எண்ணம்.நிதி நிலை பற்றி வெளியில் சொல்வது சரியாய் இருக்காது என்று அவர் கருதினார்.விவாதம் மிக சூடான நிலையில் அதுவரை அமைதியாய் இருந்த ராஜாஜி தலையிட்டார்.
அவர் சொன்னார்,''சுடுகாட்டுக்கு சுற்று சுவர் தேவையில்லை.''என்ன காரணத்தால் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்பதை அறிய அனைவரும் ஆவல் கொண்டனர்.ராஜாஜி தொடர்ந்தார்,''சுடு காட்டுக்கு உள்ளே சென்றவன் வெளியே வரமாட்டான்.வெளியே இருப்பவன் உள்ளே செல்ல விரும்ப மாட்டான்.அப்படி இருக்க சுற்று சுவர் எதற்கு?''அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.நிதிநிலை பற்றி அறிந்தவர்கள் அந்த சூழலை ராஜாஜி சரி செய்தசாமர்த்தியத்தை எண்ணி வியந்தனர்.
நன்றி ;மேதைகளின் நகைச்சுவை
தென்றல்
அவர் சொன்னார்,''சுடுகாட்டுக்கு சுற்று சுவர் தேவையில்லை.''என்ன காரணத்தால் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்பதை அறிய அனைவரும் ஆவல் கொண்டனர்.ராஜாஜி தொடர்ந்தார்,''சுடு காட்டுக்கு உள்ளே சென்றவன் வெளியே வரமாட்டான்.வெளியே இருப்பவன் உள்ளே செல்ல விரும்ப மாட்டான்.அப்படி இருக்க சுற்று சுவர் எதற்கு?''அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.நிதிநிலை பற்றி அறிந்தவர்கள் அந்த சூழலை ராஜாஜி சரி செய்தசாமர்த்தியத்தை எண்ணி வியந்தனர்.
நன்றி ;மேதைகளின் நகைச்சுவை
தென்றல்
Re: மேதைகளின் நகைச்சுவை
கவியரசர் கண்ணதாசன் நகைச்சுவை
----
ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக கவியரசர் கண்ணதாசன் காரில் போய்க் கொண்டிருந்தார்.அவர் பொதுவாக தாமதமாய்த்தான் விழாக்களில் கலந்து கொள்வார்.அன்றும் விழா ஆரம்பிக்கும் தருணம் வந்து விட்டது. ஓட்டுனர் காரை அதி விரைவாக ஓட்டிச் செல்கிறார்.அந்த வேகத்தில் கார் கூட அதிர ஆரம்பிக்கிறது.கவியரசருக்கு வயிறே கலங்குகிறது.
உடனே ஓட்டுனரிடம்,''கொஞ்சம் மெதுவாகப் போகலாமே,''என்றார்.ஆனால் தாமதம் ஆகிறது என்பதனை உணர்ந்த ஓட்டுனர் வேகத்தைக் குறைக்காமலேயேஓட்டினார்.கண்ணதாசன் சற்று கோபமாக,''மெதுவாகப் போ என்று சொன்னேனே?''என்றார்.
ஓட்டுநரோ,''ஐயா,இந்த வேகத்தில் போனால்தான் விழாவுக்குப் போய் சேர முடியும் ,''என்றார்.கவிஞர்,''நான் சொல்வதைக் கேள்.ஒரு கால் மணி நேரம் தாமதமாகப் போனால் கூடப் பரவாயில்லை.பத்து வருடம் முன்னாலேயே போய் விடக் கூடாது,''என்றார் சிரிக்காமலேயே. ஓட்டுனர் உடனடியாக வேகத்தை குறைத்து விட்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!
நன்றி ;மேதைகளின் நகைச்சுவை
தென்றல்
----
ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக கவியரசர் கண்ணதாசன் காரில் போய்க் கொண்டிருந்தார்.அவர் பொதுவாக தாமதமாய்த்தான் விழாக்களில் கலந்து கொள்வார்.அன்றும் விழா ஆரம்பிக்கும் தருணம் வந்து விட்டது. ஓட்டுனர் காரை அதி விரைவாக ஓட்டிச் செல்கிறார்.அந்த வேகத்தில் கார் கூட அதிர ஆரம்பிக்கிறது.கவியரசருக்கு வயிறே கலங்குகிறது.
உடனே ஓட்டுனரிடம்,''கொஞ்சம் மெதுவாகப் போகலாமே,''என்றார்.ஆனால் தாமதம் ஆகிறது என்பதனை உணர்ந்த ஓட்டுனர் வேகத்தைக் குறைக்காமலேயேஓட்டினார்.கண்ணதாசன் சற்று கோபமாக,''மெதுவாகப் போ என்று சொன்னேனே?''என்றார்.
ஓட்டுநரோ,''ஐயா,இந்த வேகத்தில் போனால்தான் விழாவுக்குப் போய் சேர முடியும் ,''என்றார்.கவிஞர்,''நான் சொல்வதைக் கேள்.ஒரு கால் மணி நேரம் தாமதமாகப் போனால் கூடப் பரவாயில்லை.பத்து வருடம் முன்னாலேயே போய் விடக் கூடாது,''என்றார் சிரிக்காமலேயே. ஓட்டுனர் உடனடியாக வேகத்தை குறைத்து விட்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!
நன்றி ;மேதைகளின் நகைச்சுவை
தென்றல்
Re: மேதைகளின் நகைச்சுவை
கலைவாணர் என்.எஸ்.கே நகைச்சுவை
---
கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கு வானொலியில் பேசஒரு வாய்ப்பு வந்தது.அவரும் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.அப்போது வானொலி இயக்குனர் அவரிடம், அவர் பேசக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு,''இதில் ஒரு வரியை மட்டும் நீங்கள் நீக்க வேண்டியிருக்கும்,''என்றார்.கலைவானரும் விபரம் கேட்க நீக்க வேண்டிய வரியைக் காட்டினார் இயக்குனர்.என்.எஸ்.கே.வாசித்துப் பார்த்தார்.
அதில்,''இந்த வருடத்திலே நீங்க எல்லோரும் சந்தோசமா இருங்க, காமராஜர் சந்தோசமா இருக்காரு!அண்ணா சந்தோசமாக இருக்காரு,''என்று இருந்தது.இயக்குனர் இதில் அண்ணா பற்றிக் குறிப்பிட்ட வரியை மட்டும் நீக்க வேண்டும் என்று கூறினார்.அதற்கான காரணத்தையும் அவர் சொல்ல மறுத்தார்.
உடனேஎன்.எஸ்.கே.முகத்தைகுழந்தைத்தனமாகவைத்துக்கொண்டுசொன்னார்,''ஐயா,வேண்டுமானால் இப்போதே அண்ணா வீட்டுக்குப் போன் பண்ணுங்க.அவர் சந்தோசமா இருக்காரா,இல்லையா என்று கேளுங்க.அவரு சந்தோசமா இல்லாம காய்ச்சலில் படுத்திக் கிடந்தார் என்றால் இந்த வரியை நான் எடுத்து விடுகிறேன்,''கலைவாணர் சொன்ன விதம் அதிகாரியின் மனதை மாற்றியது.இறுதியாக,''நீங்கள் உங்கள் விருப்பப்படியே பேசுங்கள்,''என்று சொன்னார்.
நன்றி ;மேதைகளின் நகைச்சுவை
தென்றல்
---
கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கு வானொலியில் பேசஒரு வாய்ப்பு வந்தது.அவரும் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.அப்போது வானொலி இயக்குனர் அவரிடம், அவர் பேசக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு,''இதில் ஒரு வரியை மட்டும் நீங்கள் நீக்க வேண்டியிருக்கும்,''என்றார்.கலைவானரும் விபரம் கேட்க நீக்க வேண்டிய வரியைக் காட்டினார் இயக்குனர்.என்.எஸ்.கே.வாசித்துப் பார்த்தார்.
அதில்,''இந்த வருடத்திலே நீங்க எல்லோரும் சந்தோசமா இருங்க, காமராஜர் சந்தோசமா இருக்காரு!அண்ணா சந்தோசமாக இருக்காரு,''என்று இருந்தது.இயக்குனர் இதில் அண்ணா பற்றிக் குறிப்பிட்ட வரியை மட்டும் நீக்க வேண்டும் என்று கூறினார்.அதற்கான காரணத்தையும் அவர் சொல்ல மறுத்தார்.
உடனேஎன்.எஸ்.கே.முகத்தைகுழந்தைத்தனமாகவைத்துக்கொண்டுசொன்னார்,''ஐயா,வேண்டுமானால் இப்போதே அண்ணா வீட்டுக்குப் போன் பண்ணுங்க.அவர் சந்தோசமா இருக்காரா,இல்லையா என்று கேளுங்க.அவரு சந்தோசமா இல்லாம காய்ச்சலில் படுத்திக் கிடந்தார் என்றால் இந்த வரியை நான் எடுத்து விடுகிறேன்,''கலைவாணர் சொன்ன விதம் அதிகாரியின் மனதை மாற்றியது.இறுதியாக,''நீங்கள் உங்கள் விருப்பப்படியே பேசுங்கள்,''என்று சொன்னார்.
நன்றி ;மேதைகளின் நகைச்சுவை
தென்றல்
Re: மேதைகளின் நகைச்சுவை
இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சில் நகைசுவை
---
ஒரு முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சர்ச்சிலும்,இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள்.ராதாகிருஷ்ணன் கையை சுத்தமாகக் கழுவி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தார்.சர்ச்சில் கரண்டி,முள் கரண்டி ஆகியவற்றை உபயோகித்து சாப்பிட ஆரம்பித்தார்.ராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைப் பார்த்த சர்ச்சில் ''என்ன இது,கரண்டியை உபயோகித்து சாப்பிடுங்க.அதுதான் சுகாதாரமானது.
''என்றார்.உடனே ராதாகிருஷ்ணன், ''இல்லை அய்யா,கைதான் ரொம்ப சுகாதாரமானது.''என்றார்.உடனே சர்ச்சில்,'அது எப்படி?''என்று கேட்க,நமது ஜனாதிபதி சொன்னார்,''கைதான் சுகாதாரமானது.ஏனென்றால்,அதை வேறு யாரும் உபயோகப் படுத்த முடியாது.மேலும் எனது கை சுத்தமாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.உங்களால் உங்கள் கரண்டி சுத்தமாக இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?''சர்ச்சில் பதில் சொல்ல முடியாது திகைத்து நின்றார்.
---
ஒரு முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சர்ச்சிலும்,இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள்.ராதாகிருஷ்ணன் கையை சுத்தமாகக் கழுவி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தார்.சர்ச்சில் கரண்டி,முள் கரண்டி ஆகியவற்றை உபயோகித்து சாப்பிட ஆரம்பித்தார்.ராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைப் பார்த்த சர்ச்சில் ''என்ன இது,கரண்டியை உபயோகித்து சாப்பிடுங்க.அதுதான் சுகாதாரமானது.
''என்றார்.உடனே ராதாகிருஷ்ணன், ''இல்லை அய்யா,கைதான் ரொம்ப சுகாதாரமானது.''என்றார்.உடனே சர்ச்சில்,'அது எப்படி?''என்று கேட்க,நமது ஜனாதிபதி சொன்னார்,''கைதான் சுகாதாரமானது.ஏனென்றால்,அதை வேறு யாரும் உபயோகப் படுத்த முடியாது.மேலும் எனது கை சுத்தமாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.உங்களால் உங்கள் கரண்டி சுத்தமாக இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?''சர்ச்சில் பதில் சொல்ல முடியாது திகைத்து நின்றார்.
Re: மேதைகளின் நகைச்சுவை
அறிஞர் பெர்னாட்ஷா நகைச்சுவை
---
கிண்டல்,கேலி செய்வதில் அறிஞர் பெர்னாட்ஷா அவர்களுக்கு ஈடு யாரும் கிடையாது.அவர் ஒரு சமதர்மவாதி(SOCIALIST).இருந்தாலும் சமதர்ம தத்துவத்தையே கிண்டல் செய்வார்.''முப்பது வயதில் நீ ஒரு சமதர்ம வாதியாக இல்லாவிட்டால் உன்னிடம் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல முப்பது வயதுக்குப் பின்னும் நீ சமதர்மவாதியாகத் தொடர்ந்தால் அப்போதும் உன்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்''என்று சொன்னவர் அவர்.
ஆங்கிலம் தான் அவருக்குத் தாய்மொழி.அந்த ஆங்கிலம் கூட அவரது கிண்டல்,கேலியிலிருந்து தப்ப முடியவில்லை.ஒரு நாள் ஒரு காகிதத்தில் GHOTI என்று எழுதி பக்கத்திலிருந்த ஆங்கில அறிஞர்களிடம் படிக்கச்சொன் னார்.
ஒருவர் 'கொட்டி' என்றும் இன்னொருவர் 'கோட்டி' என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியாக உச்சரித்தார்கள்.இறுதியில் அனைவரும் தவறு என்று கூறிய ஷா அதை FISH என்று உச்சரித்தார்.அனைவரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.பின் அவர் ROUGH என்ற வார்த்தையில் GHக்கு என்ன உச்சரிப்பு வரும் என்று கேட்டார்.உடனே அவர்கள்F என்று சொன்னார்கள்.பின் WOMEN என்ற வார்த்தையில் O க்கு என்ன உச்சரிப்பு என்று கேட்க அவர்கள் Iஎன்று சொன்னார்கள்.அடுத்து STATION என்ற வார்த்தையில்TI என்பதை எப்படி உச்சரிப்பது என்று கேட்டார்.அவர்களும் SHஎன்று சொன்னார்கள்.அப்படியானால் இந்த வார்த்தை GHOTIயை நான் ஏன் FISHஎன்று உச்சரித்தால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறீர்கள்?''என்று கேட்டார்.வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
---
கிண்டல்,கேலி செய்வதில் அறிஞர் பெர்னாட்ஷா அவர்களுக்கு ஈடு யாரும் கிடையாது.அவர் ஒரு சமதர்மவாதி(SOCIALIST).இருந்தாலும் சமதர்ம தத்துவத்தையே கிண்டல் செய்வார்.''முப்பது வயதில் நீ ஒரு சமதர்ம வாதியாக இல்லாவிட்டால் உன்னிடம் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல முப்பது வயதுக்குப் பின்னும் நீ சமதர்மவாதியாகத் தொடர்ந்தால் அப்போதும் உன்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்''என்று சொன்னவர் அவர்.
ஆங்கிலம் தான் அவருக்குத் தாய்மொழி.அந்த ஆங்கிலம் கூட அவரது கிண்டல்,கேலியிலிருந்து தப்ப முடியவில்லை.ஒரு நாள் ஒரு காகிதத்தில் GHOTI என்று எழுதி பக்கத்திலிருந்த ஆங்கில அறிஞர்களிடம் படிக்கச்சொன் னார்.
ஒருவர் 'கொட்டி' என்றும் இன்னொருவர் 'கோட்டி' என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியாக உச்சரித்தார்கள்.இறுதியில் அனைவரும் தவறு என்று கூறிய ஷா அதை FISH என்று உச்சரித்தார்.அனைவரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.பின் அவர் ROUGH என்ற வார்த்தையில் GHக்கு என்ன உச்சரிப்பு வரும் என்று கேட்டார்.உடனே அவர்கள்F என்று சொன்னார்கள்.பின் WOMEN என்ற வார்த்தையில் O க்கு என்ன உச்சரிப்பு என்று கேட்க அவர்கள் Iஎன்று சொன்னார்கள்.அடுத்து STATION என்ற வார்த்தையில்TI என்பதை எப்படி உச்சரிப்பது என்று கேட்டார்.அவர்களும் SHஎன்று சொன்னார்கள்.அப்படியானால் இந்த வார்த்தை GHOTIயை நான் ஏன் FISHஎன்று உச்சரித்தால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறீர்கள்?''என்று கேட்டார்.வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
Similar topics
» நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாள் - அவர் சொன்ன ஒரு நகைச்சுவை
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» பஸ் நகைச்சுவை
» நகைச்சுவை
» நகைச்சுவை.!!
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» பஸ் நகைச்சுவை
» நகைச்சுவை
» நகைச்சுவை.!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|