Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
+3
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
நான் மிகமிக ரசிக்கும் புலவர்களில் அவ்வையாரும் காளமேகமும் முதன்மையானவர்கள்.
இம் என்றால் நூறு கவிதை இச்சென்றால் நூறுகவிதை யாக்கும் திறமைமிக்ககவி காளமேகம்.
அதேபோல் கவிகளுக்கே உரிய கர்வம் மிக அதிக அளவில் கொண்டவர். யாருக்கும் எப்போதும் பயப்படாமல் தனது கருத்துக்களை வெட்டென கூறுபவர்.
இத்திரியில் மொத்தம் 5 சிலேடைப் பாடல்கள் உள்ளன)
பாம்பும் எள்ளும்
தேங்காயும் நாயும்
வைக்கோலும் யானையும்
குதிரையும் ஆடும்!
விநாயகரும் முருகனும் சிவபெருமானும்
இவரது கவிதைகளில் சொல்லாடலும் இலக்கிய நயமும் படிக்கும்போது நம்மை வியப்பிலாழ்த்தும். அதுவும் அவரது சிலேடைப் பாடல்களைப் படித்தல் நாம் சொக்கிப் போவோம். உதாரணமாக:
பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது!
பிரித்துப் படிக்க:
ஆடிக் குடத்தை அடையும் ஆடும் போதே இரையும்
மூடித் திறக்கின் முகம் காட்டும். ஓடி மண்டை
பற்றி பரபர எனும் பாரிர் பிண்ணாக்கும் உண்டாம்
உற்றிடு பாம்பு எள் எனவே ஓது!
விளக்க உரை: பாம்பானது படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். படமெடுத்து ஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக் காட்டும். அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக் கொள்ளும். அது கடித்துவிட்டாலோ அதன் விஷம் மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்.
எள், செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணையானது குடத்தில் சேமிக்கப்படும். அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்ற ஓசை ஏற்படும். எண்ணைக் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின் திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும். அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.
இப்படி அருமையாக பல சிலேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் கவி காளமேகப்புலவர்.
இம் என்றால் நூறு கவிதை இச்சென்றால் நூறுகவிதை யாக்கும் திறமைமிக்ககவி காளமேகம்.
அதேபோல் கவிகளுக்கே உரிய கர்வம் மிக அதிக அளவில் கொண்டவர். யாருக்கும் எப்போதும் பயப்படாமல் தனது கருத்துக்களை வெட்டென கூறுபவர்.
இத்திரியில் மொத்தம் 5 சிலேடைப் பாடல்கள் உள்ளன)
பாம்பும் எள்ளும்
தேங்காயும் நாயும்
வைக்கோலும் யானையும்
குதிரையும் ஆடும்!
விநாயகரும் முருகனும் சிவபெருமானும்
இவரது கவிதைகளில் சொல்லாடலும் இலக்கிய நயமும் படிக்கும்போது நம்மை வியப்பிலாழ்த்தும். அதுவும் அவரது சிலேடைப் பாடல்களைப் படித்தல் நாம் சொக்கிப் போவோம். உதாரணமாக:
பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது!
பிரித்துப் படிக்க:
ஆடிக் குடத்தை அடையும் ஆடும் போதே இரையும்
மூடித் திறக்கின் முகம் காட்டும். ஓடி மண்டை
பற்றி பரபர எனும் பாரிர் பிண்ணாக்கும் உண்டாம்
உற்றிடு பாம்பு எள் எனவே ஓது!
விளக்க உரை: பாம்பானது படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். படமெடுத்து ஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக் காட்டும். அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக் கொள்ளும். அது கடித்துவிட்டாலோ அதன் விஷம் மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்.
எள், செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணையானது குடத்தில் சேமிக்கப்படும். அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்ற ஓசை ஏற்படும். எண்ணைக் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின் திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும். அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.
இப்படி அருமையாக பல சிலேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் கவி காளமேகப்புலவர்.
Last edited by யாதுமானவள் on Mon 18 Jul 2011 - 12:51; edited 5 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
மிகவும் அருமையான தகவல் பெருங்கவி காளமேகப்புலவர் பற்றி அறிந்திட இந்தப்பகிர்வு போதாது என்று நினைக்கிறேன் மேலும் மேலும் தொடருங்கள் அக்கா கவித்துறையில் ஆர்முடனிருக்கும் எமது சேனை உறவுகளுக்காக ஒரு பாடமெடுங்களேன் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது தொடருங்கள் நன்றி
நல்ல பகிர்வு
நல்ல பகிர்வு
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
சாதிக் wrote:மிகவும் அருமையான தகவல் பெருங்கவி காளமேகப்புலவர் பற்றி அறிந்திட இந்தப்பகிர்வு போதாது என்று நினைக்கிறேன் மேலும் மேலும் தொடருங்கள் அக்கா கவித்துறையில் ஆர்முடனிருக்கும் எமது சேனை உறவுகளுக்காக ஒரு பாடமெடுங்களேன் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது தொடருங்கள் நன்றி
நல்ல பகிர்வு
நன்றி சாதிக். காளமேகக் கவியின் அபாரமான கவிதைகளில் நான் ரசித்தவற்றை இங்கு பதிகிறேன்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
யாதுமானவள் wrote:சாதிக் wrote:மிகவும் அருமையான தகவல் பெருங்கவி காளமேகப்புலவர் பற்றி அறிந்திட இந்தப்பகிர்வு போதாது என்று நினைக்கிறேன் மேலும் மேலும் தொடருங்கள் அக்கா கவித்துறையில் ஆர்முடனிருக்கும் எமது சேனை உறவுகளுக்காக ஒரு பாடமெடுங்களேன் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது தொடருங்கள் நன்றி
நல்ல பகிர்வு
நன்றி சாதிக். காளமேகக் கவியின் அபாரமான கவிதைகளில் நான் ரசித்தவற்றை இங்கு பதிகிறேன்.
கண்டிப்பாக தொடருங்கள் அக்கா உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
அரிய தகவலுக்கு நன்றி தோழியே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
kalainilaa wrote:அரிய தகவலுக்கு நன்றி தோழியே .
அரிய தகவல் நாம் அறியவேண்டிய கவிதைகள்.
நன்றி !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
யாதுமானவள் wrote:kalainilaa wrote:அரிய தகவலுக்கு நன்றி தோழியே .
அரிய தகவல் நாம் அறியவேண்டிய கவிதைகள்.
நன்றி !
அறிய தந்தமைக்கு நன்றி .
இது போல தங்களில் தான்,அனைத்தும் அறிய முடியும்.
காளமேகப் புலவர் பற்றி அறிந்து இருந்தாலும் ,அவரின் கவிதையை
உங்களால் படிக்க முடிந்தது .நன்றி தோழியே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
உங்கள் தயவில் கற்றுக்கொள்ள முடிகிறது தொடருங்கள் கவியே
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
@. @.சாதிக் wrote:மிகவும் அருமையான தகவல் பெருங்கவி காளமேகப்புலவர் பற்றி அறிந்திட இந்தப்பகிர்வு போதாது என்று நினைக்கிறேன் மேலும் மேலும் தொடருங்கள் அக்கா கவித்துறையில் ஆர்முடனிருக்கும் எமது சேனை உறவுகளுக்காக ஒரு பாடமெடுங்களேன் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது தொடருங்கள் நன்றி
நல்ல பகிர்வு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அடுத்த ஒரு அழகான சிலேடைப் பாடலைப் பார்ப்போம்...
தேங்காயும் நாயும்
ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயு நாயுமிணைச் செப்பு.
(பிரித்துப் படிக்க :
ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது - சேடியே
தீங்கு ஆயது இல்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் இணைச் செப்பு)
விளக்கம்: தோழி! (சேடி- தோழி) , தீமை இல்லாத திருமலைராயன் வாழும் மலைப்பகுதியிலே தேங்காயையும் நாயையும் ஒப்பாகக் கூறு... எப்படியெனில்..
தேங்காயிடம் ஓடும் இருக்கும் .(ஓடு ஒன்றை கொண்டதாய் இருக்கும்) அந்த ஓட்டின் உட்புறம் வெளுத்திருக்கும். வெண்மையான தேங்காய் அதன் உள்ளிருக்கும். அனைவரும் நாடும் (விரும்பும்) தேங்காயானது குலையாகத் தொங்குவதால் அது வளைவதில்லை(நாணாது). கோணுவதில்லை . காய்களைத் தாங்க முடியுமா என அஞ்சுவது இல்லை
அதே போல்...
நாய் ... சில நேரம் ஓடும். சில நேரம் ஒரே இடத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கும் (ஓடும் இருக்கும்)
அதன் உள்வாய் வெளுத்து இருக்கும். எப்போதும் குறைத்துக் கொண்டிருப்பதற்கு வெட்கப்படுவதே இல்லை. புதியவர்கள் யாரும் வருவதை (நாடும்) உற்றுப் பார்க்கும் , பிறகு குலைக்கும் . குலைப்பதர்க்குச் சிறிதும் வெட்கப்படாது ...யாரைக் கண்டும் அஞ்சவும் அஞ்சாது.
அதனால் நாயும் தேங்காயும் ஒன்று !
இப்படி நாயும் தேங்காயும் ஒன்று என்று கவி காளமேகம் அழகாக எடுத்துரைக்கிறார் .
தேங்காயும் நாயும்
ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயு நாயுமிணைச் செப்பு.
(பிரித்துப் படிக்க :
ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது - சேடியே
தீங்கு ஆயது இல்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் இணைச் செப்பு)
விளக்கம்: தோழி! (சேடி- தோழி) , தீமை இல்லாத திருமலைராயன் வாழும் மலைப்பகுதியிலே தேங்காயையும் நாயையும் ஒப்பாகக் கூறு... எப்படியெனில்..
தேங்காயிடம் ஓடும் இருக்கும் .(ஓடு ஒன்றை கொண்டதாய் இருக்கும்) அந்த ஓட்டின் உட்புறம் வெளுத்திருக்கும். வெண்மையான தேங்காய் அதன் உள்ளிருக்கும். அனைவரும் நாடும் (விரும்பும்) தேங்காயானது குலையாகத் தொங்குவதால் அது வளைவதில்லை(நாணாது). கோணுவதில்லை . காய்களைத் தாங்க முடியுமா என அஞ்சுவது இல்லை
அதே போல்...
நாய் ... சில நேரம் ஓடும். சில நேரம் ஒரே இடத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கும் (ஓடும் இருக்கும்)
அதன் உள்வாய் வெளுத்து இருக்கும். எப்போதும் குறைத்துக் கொண்டிருப்பதற்கு வெட்கப்படுவதே இல்லை. புதியவர்கள் யாரும் வருவதை (நாடும்) உற்றுப் பார்க்கும் , பிறகு குலைக்கும் . குலைப்பதர்க்குச் சிறிதும் வெட்கப்படாது ...யாரைக் கண்டும் அஞ்சவும் அஞ்சாது.
அதனால் நாயும் தேங்காயும் ஒன்று !
இப்படி நாயும் தேங்காயும் ஒன்று என்று கவி காளமேகம் அழகாக எடுத்துரைக்கிறார் .
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
இரு முறை படித்த பிறகுதான் எனக்கு சரியாக விளங்கியது அக்கா
எவ்வளவு விளக்கம் உள்ளது
தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அக்கா
முதலில் என்னால் நம்ப முடிய வில்லை
விரிவாக படித்த பிறகு தெளிவடைந்தேன்
சம்மதிக்கிறேன்
நன்றி அக்கா
தொடருங்கள்
எவ்வளவு விளக்கம் உள்ளது
தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அக்கா
முதலில் என்னால் நம்ப முடிய வில்லை
விரிவாக படித்த பிறகு தெளிவடைந்தேன்
சம்மதிக்கிறேன்
நன்றி அக்கா
தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
நல்லதொரு ஒப்பீடு நாயும் தேங்காயும் இதுவரை ஒப்பிட்டு பார்த்திருக்கவில்லை அருமையான பாடல்
மிக முக்கியமாக விளக்கவுரை பாடலை திரும்பிப்படித்திட ஊக்கமாக அமைகிறது மிக்க நன்றி அக்கா
தொடருங்கள்
மிக முக்கியமாக விளக்கவுரை பாடலை திரும்பிப்படித்திட ஊக்கமாக அமைகிறது மிக்க நன்றி அக்கா
தொடருங்கள்
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
நண்பன் wrote:இரு முறை படித்த பிறகுதான் எனக்கு சரியாக விளங்கியது அக்கா
எவ்வளவு விளக்கம் உள்ளது
தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அக்கா
முதலில் என்னால் நம்ப முடிய வில்லை
விரிவாக படித்த பிறகு தெளிவடைந்தேன்
சம்மதிக்கிறேன்
நன்றி அக்கா
தொடருங்கள்
தங்கள் ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி நண்பன் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
சாதிக் wrote:நல்லதொரு ஒப்பீடு நாயும் தேங்காயும் இதுவரை ஒப்பிட்டு பார்த்திருக்கவில்லை அருமையான பாடல்
மிக முக்கியமாக விளக்கவுரை பாடலை திரும்பிப்படித்திட ஊக்கமாக அமைகிறது மிக்க நன்றி அக்கா
தொடருங்கள்
தங்கள் ஈடுபாட்டிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சாதிக் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
எங்களின் கருத்தையும் ஏற்று தொடர்ந்து பகிந்தமைக்கு நன்றி அக்கா :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
சம்ஸ்... இது நீங்கள் அனைவரும் கொடுத்த வாய்ப்பு. நான் தான் சேனை குழுமத்திற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.*சம்ஸ் wrote:எங்களின் கருத்தையும் ஏற்று தொடர்ந்து பகிந்தமைக்கு நன்றி அக்கா :”@:
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி!
Last edited by யாதுமானவள் on Fri 1 Jul 2011 - 15:31; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
யாதுமானவள் wrote:சம்ஸ்... இது நீங்கள் அனைவரும் கொடுத்த வாய்ப்பு. நான் தான் சேனை குழுமத்திற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.*சம்ஸ் wrote:எங்களின் கருத்தையும் ஏற்று தொடர்ந்து பகிந்தமைக்கு நன்றி அக்கா :”@:
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி!
சீனா தேசம் சென்றாயினும் சீர் கல்வியை கற்றுக்கொள்" (நபி மொழி).
நல்லதை கற்றுக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன்...அக்கா சேனை உறவுகளாய்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
அடுத்த ஒரு அழகான பாடல் வைக்கோலும் யானையும் ஒன்றெனக் கூறுகிறார்.
வாரிக் களத்தடிக்கும், வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்.
விளக்கம்
சிறப்புப் பொருந்திய செம்மை நிறமுடைய அழகான மேனியுடைய திருமலை ராயனின் மலைச்சாரலிடத்தில் வைக்கோல் மதயனைக்குச் சமம் என்று கூறுகிறார் கவி காளமேகம்.
எப்படியெனில் -
வைக்கோல், உழவர்களால் கற்றை கற்றையாக வாரிஎடுத்துச் செல்லப்பட்டு களத்துமேட்டில் அடிக்கப்படும். பிறகு பண்டகசாலைகளில் கோட்டையாகக் கட்டிச் சேர்க்கப்படும். ஊருக்குள் கொண்டுவரப்படும். பெரிய பெரிய வைக்கோற் போர்களாக வைக்கப்பட்டு சிறப்பாகத் தோன்றும்.
அதே போல் -
யானையானது , போர்க்களத்தில் பகைவர்களைத் துதிக்கையால் தூக்கிஎடுத்துத் தரையில் வீசி அடித்துக் கொல்லும்.. இப்படி பகைவர்களைக் கொன்ற பின் அவர்கள் கோட்டைக்குள் வெற்றியுடன் நுழையும். .இப்படி போர்க்காலத்தில் யானையானது சிறப்பாகத் தோன்றும்
இதனால் வைக்கோலும் யானையும் சமம் என கவிகாளமேகம் அழகாகக் கூறுகிறார்.
வாரிக் களத்தடிக்கும், வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்.
விளக்கம்
சிறப்புப் பொருந்திய செம்மை நிறமுடைய அழகான மேனியுடைய திருமலை ராயனின் மலைச்சாரலிடத்தில் வைக்கோல் மதயனைக்குச் சமம் என்று கூறுகிறார் கவி காளமேகம்.
எப்படியெனில் -
வைக்கோல், உழவர்களால் கற்றை கற்றையாக வாரிஎடுத்துச் செல்லப்பட்டு களத்துமேட்டில் அடிக்கப்படும். பிறகு பண்டகசாலைகளில் கோட்டையாகக் கட்டிச் சேர்க்கப்படும். ஊருக்குள் கொண்டுவரப்படும். பெரிய பெரிய வைக்கோற் போர்களாக வைக்கப்பட்டு சிறப்பாகத் தோன்றும்.
அதே போல் -
யானையானது , போர்க்களத்தில் பகைவர்களைத் துதிக்கையால் தூக்கிஎடுத்துத் தரையில் வீசி அடித்துக் கொல்லும்.. இப்படி பகைவர்களைக் கொன்ற பின் அவர்கள் கோட்டைக்குள் வெற்றியுடன் நுழையும். .இப்படி போர்க்காலத்தில் யானையானது சிறப்பாகத் தோன்றும்
இதனால் வைக்கோலும் யானையும் சமம் என கவிகாளமேகம் அழகாகக் கூறுகிறார்.
Last edited by யாதுமானவள் on Sat 2 Jul 2011 - 8:53; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
இதுவும் அழகான பாடல் சிறந்த ஒப்பீடு யாரும் கற்பனை பண்ண முடியாத இருவிடயம்
நல்ல விளக்கம் அக்கா பகிர்வுக்கு நன்றி
நல்ல விளக்கம் அக்கா பகிர்வுக்கு நன்றி
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
kalainilaa wrote:அரிய தகவலுக்கு நன்றி தோழியே .
நன்றி கலை நிலா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
சாதிக் wrote:இதுவும் அழகான பாடல் சிறந்த ஒப்பீடு யாரும் கற்பனை பண்ண முடியாத இருவிடயம்
நல்ல விளக்கம் அக்கா பகிர்வுக்கு நன்றி
நன்றி சாதிக்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
அனைவருக்கும் நன்றி !
இதோ அடுத்த ஒரு மிக மிக அழகான சிலேடைப் பாடல் ..
குதிரையும் ஆடும்!
கொம்பிலையே தீனிதின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புவுயி னன்னடைய தாதலால் - உம்பர்களும்
தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடுங் குதிரையுநே ராம்.
பிரித்துப் படிக்க:
கொம்பு இலையே தீனி தின்னும் கொண்டு அதன் மேல் வெட்டுதலால்
அம்புவியின் நன் நடை உடையது ஆதலால் - உம்பர்களும்
தேடும் நற் சோலைத் திருமலை ராயன் வரையில்
ஆடும் குதிரையும் நேராம்.
விளக்கம் : தேவர்களெல்லாம் தேடிவந்து மகிழ்ந்து இருக்கக்கூடிய அழகிய சோலைகள் நிறைந்த திருமலைராயனின் மலைச்சாரலில் ஆடும் குதிரையும் சமம் என்று கூறுகிறார்!
எப்படியெனில்.. .
குதிரைக்குக் கொம்பு இல்லை. அது தனக்கு வைக்கப்பட்ட உணவையே தின்னும். போர்க்காலத்தில் போர்வீரர்கள் அதன் மேல் ஏறிச் சென்று பகைவர்களை வெட்டிக் கொல்வார்கள். இந்த உலகிலேயே குதிரைகளின் நடை தான் அழகானதாக எடுப்பானதாக இருக்கும் என்கிறார் கவி காளமேகம்.
சிறப்புக் குறிப்பு : குதிரையின் நடையில் ஐந்து விதம் உண்டு.
மல்ல, மயூர, வானர, வியாக்ர, சார நடை போடுமென்று குதிரையின் நடையழகை வர்ணிப்பர்.
அடுத்து,
ஆடு, நுனிக்கொம்பில் உள்ள இலையையே (கொம்பு இலை) தின்னும். அவ்வாறு உணவை உட்கொண்டபின் அதே தீனியை மேலும் வெட்டி அசைபோடும். அதுமட்டுமல்ல, இந்த அழகிய உலகில்... ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று நடந்து செல்லும் இயல்பினை உடையது என்கிறார்.
இன்னும் வேறுவிதமான அர்த்தமும் கொள்ளலாம்:
கொண்டதன் மேல் வெட்டுதலால்: ஆட்டை இடையரிடத்திலிருந்து விலை கொடுத்து வாங்கியபின் அதை வெட்டுதலால் என்றும் பொருள் கொள்ளலாம்
அதே போல்: அம்புவியில் நல் நடையுடையது :
"நடை" என்பதற்கு செல்வம் என்றும் பொருள் உண்டு. அப்படி பொருள் கொள்ளும் போது....ஆட்டிற்கு எப்ப்போதும் நல்ல விலை உண்டு. (ஆடுகள் வைத்திருப்பவனைச் செல்வந்தனாகவே கருதுவர்)
இப்படி ஒப்புமைப் படுத்தி கவி காளமேகம் குதிரையும் ஆடும் ஒன்று என்று கூடுகிறார்.
இதோ அடுத்த ஒரு மிக மிக அழகான சிலேடைப் பாடல் ..
குதிரையும் ஆடும்!
கொம்பிலையே தீனிதின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புவுயி னன்னடைய தாதலால் - உம்பர்களும்
தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடுங் குதிரையுநே ராம்.
பிரித்துப் படிக்க:
கொம்பு இலையே தீனி தின்னும் கொண்டு அதன் மேல் வெட்டுதலால்
அம்புவியின் நன் நடை உடையது ஆதலால் - உம்பர்களும்
தேடும் நற் சோலைத் திருமலை ராயன் வரையில்
ஆடும் குதிரையும் நேராம்.
விளக்கம் : தேவர்களெல்லாம் தேடிவந்து மகிழ்ந்து இருக்கக்கூடிய அழகிய சோலைகள் நிறைந்த திருமலைராயனின் மலைச்சாரலில் ஆடும் குதிரையும் சமம் என்று கூறுகிறார்!
எப்படியெனில்.. .
குதிரைக்குக் கொம்பு இல்லை. அது தனக்கு வைக்கப்பட்ட உணவையே தின்னும். போர்க்காலத்தில் போர்வீரர்கள் அதன் மேல் ஏறிச் சென்று பகைவர்களை வெட்டிக் கொல்வார்கள். இந்த உலகிலேயே குதிரைகளின் நடை தான் அழகானதாக எடுப்பானதாக இருக்கும் என்கிறார் கவி காளமேகம்.
சிறப்புக் குறிப்பு : குதிரையின் நடையில் ஐந்து விதம் உண்டு.
மல்ல, மயூர, வானர, வியாக்ர, சார நடை போடுமென்று குதிரையின் நடையழகை வர்ணிப்பர்.
அடுத்து,
ஆடு, நுனிக்கொம்பில் உள்ள இலையையே (கொம்பு இலை) தின்னும். அவ்வாறு உணவை உட்கொண்டபின் அதே தீனியை மேலும் வெட்டி அசைபோடும். அதுமட்டுமல்ல, இந்த அழகிய உலகில்... ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று நடந்து செல்லும் இயல்பினை உடையது என்கிறார்.
இன்னும் வேறுவிதமான அர்த்தமும் கொள்ளலாம்:
கொண்டதன் மேல் வெட்டுதலால்: ஆட்டை இடையரிடத்திலிருந்து விலை கொடுத்து வாங்கியபின் அதை வெட்டுதலால் என்றும் பொருள் கொள்ளலாம்
அதே போல்: அம்புவியில் நல் நடையுடையது :
"நடை" என்பதற்கு செல்வம் என்றும் பொருள் உண்டு. அப்படி பொருள் கொள்ளும் போது....ஆட்டிற்கு எப்ப்போதும் நல்ல விலை உண்டு. (ஆடுகள் வைத்திருப்பவனைச் செல்வந்தனாகவே கருதுவர்)
இப்படி ஒப்புமைப் படுத்தி கவி காளமேகம் குதிரையும் ஆடும் ஒன்று என்று கூடுகிறார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
கவி காளமேகப் புலவர் வருணனை துதித்து பாடினால் மழையே வருமளவிற்கு சொல்லாற்றல் கொண்டவர். அவரின் பாடல்கள், விளக்க உரையுடன்.. நம் தமிழ் சேனையில்...உள்ளம் நெகிழவைக்கும் அற்புதத்தை தொடராக தாருங்கள் சகோதரி....
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
mravi wrote:கவி காளமேகப் புலவர் வருணனை துதித்து பாடினால் மழையே வருமளவிற்கு சொல்லாற்றல் கொண்டவர். அவரின் பாடல்கள், விளக்க உரையுடன்.. நம் தமிழ் சேனையில்...உள்ளம் நெகிழவைக்கும் அற்புதத்தை தொடராக தாருங்கள் சகோதரி....
நன்றி ரவி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
அனைத்தையும் பொறுமையாக படித்து வருகிறேன் அக்கா இந்த விடயங்களை நாம் படிக்கிறோம் இது பற்றி இணையத்தில் தேடுவோருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் அமையும் மிக்க நன்றி அக்கா தொடருங்கள்
உங்கள் சேவையை
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் சேவையை
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவி காளமேகப்புலவர் - சிலேடைப் பாடல்கள் (6)
» கவி காளமேகம் - சிலேடைப் பாடல்கள் (7 - பாம்பும் வாழைப்பழமும்)
» காளமேகப் புலவரின் பாட்டொன்று...
» மனசாட்சி உள்ள புலவர்...!!
» புலவர் பாட ஆரம்பிச்சா மன்னர் தூங்கிடுவாரு…!
» கவி காளமேகம் - சிலேடைப் பாடல்கள் (7 - பாம்பும் வாழைப்பழமும்)
» காளமேகப் புலவரின் பாட்டொன்று...
» மனசாட்சி உள்ள புலவர்...!!
» புலவர் பாட ஆரம்பிச்சா மன்னர் தூங்கிடுவாரு…!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|