சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக நிர்வாகிகள் மீது ரூ. 5 கோடி நில அபகரிப்புப் புகார் Khan11

மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக நிர்வாகிகள் மீது ரூ. 5 கோடி நில அபகரிப்புப் புகார்

Go down

மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக நிர்வாகிகள் மீது ரூ. 5 கோடி நில அபகரிப்புப் புகார் Empty மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக நிர்வாகிகள் மீது ரூ. 5 கோடி நில அபகரிப்புப் புகார்

Post by யாதுமானவள் Fri 15 Jul 2011 - 6:45

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக பிரமுகர்கள் மீது ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டிப் பறித்து விட்டதாக புகார் தரப்பட்டுள்ளது. புகார் உண்மையானதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை புறநகர் எஸ்.பி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நில அபகரிப்புப் புகார்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தனிப் பிரிவே அமைத்து போலீஸார் துரிதகதியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மு.க.அழகிரியின் முக்கிய உதவியாளர்கள் மூன்று பேர் மீது நில அபகரிப்புப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பொட்டு சுரேஷ், கோ.தளபதி மற்றும் எஸ்ஆர் கோபி ஆகியோரே அந்த முக்கியப் புள்ளிகள்.

மதுரையில் கடந்த திமுக ஆட்சியில் ராஜாக்கள் போல வலம் வந்த அழகிரியின் முக்கிய உதவியாளர்களில் இந்த மூவருக்கும் தனி இடமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மதுரை திருமங்கலம் அருகே உள்ள வெங்கடசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவனாண்டி மற்றும் அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை புறநகர் எஸ்.பியிடம் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

செங்குளம் என்ற இடத்தில் எங்களுக்கு சொந்தமான ரூ. 5 கோடி மதிப்புள்ள 5.14 ஏக்கர் நிலத்தை ரூ. 40 லட்சம் கொடுத்து விட்டு பொட்டு சுரேஷ், எஸ்.ஆர்.கோபி, திமுக நகர் மாவட்டச் செயலாளர் கே.தளபதி, திருமங்கலம் ஒன்றியத் தலைவர் கே. சந்திரசேகரன், திருமங்கலம் டவுன் பஞ்சாயத்துத் தலைவர் இந்திரா காந்தி அவரது கணவர் கிருஷ்ணசாமி ஆகியோர் அபகரித்து விட்டனர்.

இதே நிலத்துக்கு இதற்கு முன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் ரூ. 4.3 கோடி தருவதாக உறுதி அளித்து பவர் ஆப் அட்டார்னி பெற்றுக் கொண்டார். ஆனால்2007ல் ரூ. 1.4 கோடி தந்து விட்டு ஏமாற்றி விட்டார். இதன் பிறகே உறவினர் ஒருவர் மூலம் பொட்டு சுரேஷ்சை அணுகினோம்.

பிரச்னையை தீர்த்து வைப்பதாக அவர் உறுதி அளித்தார். ஆனால் அவரது எண்ணம் பின்னர் தான் தெரிந்தது. அவரது ஆட்கள் எங்களை தாக்கி பதிவு அலுவலகத்துக்கு கட்டாயப்படுத்தி கொண்டு சென்றனர். அங்கு இந்திரா காந்தி பெயரில் நிலத்தை பதிவு செய்து கொண்டனர் எனத் தெரிவித்துள்ளனர்.

ஐஜி சிவனாண்டியும் சிக்குகிறார்

ஏற்கனவே கொடைக்கானலில் திமுக நகராட்சித் தலைவர் உள்பட 3 பேரையும், சிவகங்கையில் 4 பேரையும் நில அபகரிப்புப் புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். கொடைக்கானல் விவகாரத்தில், முன்னாள் மேற்கு பிராந்திய ஐ.ஜியான சிவானண்டியும் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

கொடைக்கானல் நகராட்சித் தலைவராக இருந்த முகம்மது இப்ராகிமுக்காக நில உரி்மையாளரை சிவனாண்டி மிரட்டிப் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் திமுக இளைஞர் அணி செயலாளர் பி. முருகன், அவரது சகோதரர் பி. சுப்பையா உள்ளிட்டோர் மீது சிவகங்கையில் நில அபகரிப்பு புகார் கூறப்பட்டு உள்ளது.

சிவனாண்டி கடந்த அதிமுகஆட்சியில் ராஜா போலம் வலம் வந்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.இதனால் கடந்த திமுக ஆட்சியில் அவரை போட்டுப் பார்த்தது திமுக அரசு. இறுதியில் அவர் திமுகவுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அவர் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல்லூரி தலைவர் புகார்
» திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல்லூரி தலைவர் புகார்
» திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்
» மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum