சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

வறியவர்களை துரத்தும் சட்டம்... Khan11

வறியவர்களை துரத்தும் சட்டம்...

4 posters

Go down

வறியவர்களை துரத்தும் சட்டம்... Empty வறியவர்களை துரத்தும் சட்டம்...

Post by அப்துல்லாஹ் Thu 28 Jul 2011 - 9:03


வறியவர்களை துரத்தும் சட்டம்... Autodriverfamily
பொய்வழக்கு போட்டு ஆட்டோ ஓட்டுனருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக காவல்துறை துணை ஆய்வாளர் மீது ஆட்டோ ஓட்டுனர் மனைவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.



குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, புளியடிவிளை பகுதியைச் சேர்ந்த பாத்திமா எனற பெண் நேற்று நாகர்கோவிலிலுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து தக்கலை காவல்துறை துணை ஆய்வாளர்மீது புகார் அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

"எனது கணவர் பாபுல் ஹுதா ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவரது வாகனத்தை மட்டுமே நம்பி எனது குடும்பம் உள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையினரால் புனையப்பட்ட 2 பொய் வழக்குகளில் நீதிமன்றம் எனது கணவரைக் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து இருந்த போதிலும் காவல்துறை பல்வேறு வழக்குகளில் எனது கணவரைத் தொடர்புபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனைக் காரணமாகக் கொண்டு எனது கணவர் நிரபராதி எனத் தெரிந்தும் எனது கணவர் மீது குற்றம் சுமத்தி எங்களது வீட்டினுள் அத்துமீறி நுழைவதும் அராஜகம் புரிவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கடந்த 24ம் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் தக்கலை துணை ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் 5 பேர் குடிபோதையோடு சீருடையில்லாமல் வீட்டினுள் நுழைய முற்பட்டு கதவினை உடைக்கும் விதமாக அடித்தனர். நான் சத்தம் கேட்டு ஜன்னல் திறந்து யார் என விசாரித்தேன். அவர்கள், "உன் கணவர் எங்கே? அவன் கையில் கிடைத்தால் தொலைத்து விடுவோம்" எனக்கூறி கதவைத் திறக்க கூறினார். நான் அதற்கு "என் கணவர் வீட்டில் இல்லை; நான் மட்டும் குழந்தைகளுடன் தனியே இருக்கிறேன். பெண் காவலர் இல்லாமல் வந்திருக்கிறீர்கள். நான் கதவைத் திறக்க மாட்டேன்" எனக்கூறினேன். பின்னர் அவர்கள் கதவை உடைக்க முயற்சித்ததால் கதவைத் திறந்தேன்.

பின்னர் வீடு முழுவதும் தேடினர். என் கணவர் வீட்டில் இல்லாதது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொண்டபின்னர், அவரது போட்டோவைக் கேட்டனர். நான் உயிருக்குப் பயந்து எனது கணவரின் புகைப்படத்தைக் கொடுத்தேன். பின்னர் எனது அறைக்குள் இருந்த பீரோவை அடித்து நொறுக்கினர். மேலும் வெளியில் இறங்கி வீட்டின் முன்நின்று கொண்டிருந்த எனது கணவரது ஆட் டோவையும் அடித்து நொறுக்கினர். "உன் கணவனை இன்று காலை 8 மணிக்குக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடு; ஒப்படைத்தால் அவன் உயிர்பிழைப்பான்", என கொலை மிரட்டல் விடுத்துவிட்டு விட்டு சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக துணை ஆய்வாளர் வியஜகுமார் தலைமையில் காவலர்கள் மீண்டும் 25ம் தேதி இரவு 12 மணி அளவில் வந்து கதவைத் திறக்க கூறினார். நான் பயந்து கதவைத் திறந்தவுடன் எனது கணவரின் ஆட்டோ சாவியைக் கேட்டனர். நான் கொடுத்ததும் ஆட்க் டோவை எடுத்துக் கொண்டு "நாளை காலை 8 மணிக்குகள் உனது கணவர் காவல்நிலையத்திற்கு வரவில்லையென்றால் உனது குடும்பம் இந்த ஊரிலேயே இருக்காதபடி செய்து விடுவேன்" என மிரட்டிச் சென்றனர்.

எனது கணவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துவதைத் தவிர எந்த ஒரு சமூக விரோத செயலிலும் ஈடுபடுவது இல்லை. எங்கள் பகுதியில் அவருக்கு நற்பெயர் உண்டு. அனைவரது கஷ்டங்களுக்கும், ஓடோடி சென்று உதவி செய்து வாழ்ந்து வருகிறார். எந்தத் தொடர்பும் இல்லாமல் காவல்துறையினர் தொடர்ச்சியாக பொய் வழக்குகளில் சிக்க வைக்க முனையும் போது ஏற்படும் இழப்புகளால் எனது குடும்பம் பொருளாதார மற்றும் மன ரீதியான நெருக்கடிகளையும் சந்தித்து உள்ளது. இதேபோன்று நிலை காவல்துறையினரால் இனியும் தொடர்ந்தால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழிஇல்லை. எனவே எனது கணவர் மீது பொய் வழக்கு போடமுயன்று எங்களது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்து சட்ட விரோதமாக நடந்த காவலர்ர் மற்றும் துணை ஆய்வாளர் விஜயகுமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வறியவர்களை துரத்தும் சட்டம்... Empty Re: வறியவர்களை துரத்தும் சட்டம்...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Jul 2011 - 9:21

இந்த நிலை எங்கும் நடப்பதைக்காண்கிறோம் ஒருவன் சிறு குற்றத்திற்காக போலிசில் மாட்டினால் அவனின் ஆயுள் முழுவதும் குற்றவாளியாக்கிவிடுகிறாரகள் அதிகாரிகள்

இதற்கு முக்கியமாக சரியான சட்டங்கள் இல்லாமையே காரணம்

இந்த பிரச்சினைத் தீர்வுக்கு உரிய நபர் மேலதிகாரிகளைச் சந்தித்து தன் தரப்பு நியாயங்களை எத்திவைத்து முற்றுப்புள்ளி இடுவதுதான் சிறப்பாக அமையும்

தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி சகோ


வறியவர்களை துரத்தும் சட்டம்... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வறியவர்களை துரத்தும் சட்டம்... Empty Re: வறியவர்களை துரத்தும் சட்டம்...

Post by நண்பன் Thu 28 Jul 2011 - 9:21

இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது அநியாயமாக தாக்கப்படும் நிரபராதி மக்கள் இறுதியில் வேறு விதமான முடிவெடுக்க நேரிடும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வறியவர்களை துரத்தும் சட்டம்... Empty Re: வறியவர்களை துரத்தும் சட்டம்...

Post by இன்பத் அஹ்மத் Thu 28 Jul 2011 - 9:27

@.
சாதிக் wrote:இந்த நிலை எங்கும் நடப்பதைக்காண்கிறோம் ஒருவன் சிறு குற்றத்திற்காக போலிசில் மாட்டினால் அவனின் ஆயுள் முழுவதும் குற்றவாளியாக்கிவிடுகிறாரகள் அதிகாரிகள்

இதற்கு முக்கியமாக சரியான சட்டங்கள் இல்லாமையே காரணம்

இந்த பிரச்சினைத் தீர்வுக்கு உரிய நபர் மேலதிகாரிகளைச் சந்தித்து தன் தரப்பு நியாயங்களை எத்திவைத்து முற்றுப்புள்ளி இடுவதுதான் சிறப்பாக அமையும்

தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி சகோ
@. @. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வறியவர்களை துரத்தும் சட்டம்... Empty Re: வறியவர்களை துரத்தும் சட்டம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum