சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார் Khan11

ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார்

Go down

ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார் Empty ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டல் அபகரிப்பு: நேரு-தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது புகார்

Post by நண்பன் Fri 26 Aug 2011 - 10:14

தஞ்சை, ஆக. 26-


தஞ்சையில் ரூ.15 கோடி
மதிப்புள்ள ஓட்டலை போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக தி.மு.க. முன்னாள்
அமைச்சர் கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம் உள்பட 4 பேர் மீது பெங்களூரை
சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார்.

பெங்களூர்
எம்.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் கனகரெத்தினம் மனைவி நாகராணி. இவர் தஞ்சை
போலீஸ் டி.ஐ.ஜி. ரவிக்குமாரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-


நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். எனக்கும்,
கணவர் கனகரெத்தினம், மகன் நிக் ஆகியோருக்கு சொந்தமான இடம் தஞ்சை புதிய
பஸ்நிலையம் அருகே உள்ள பாஸ்கரபுரம் காலனியில் உள்ளது. இதில் ஓட்டல் இங்கா
இண்டர்நேஷனல் என்ற பெயரில் 8 மாடிகளுடன் தங்கும் விடுதி கட்டி இருந்தேன்.

கணவர்
லண்டனில் தொழில் செய்து வருகிறார். நான் ஓட்டலின் 8-வது மாடியில் மகனுடன்
வசித்து வந்தேன். தங்கும் விடுதியை கட்டுவதற்கு அதனை அடமானம் செய்து
திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் கடன் பெற்று இருந்தேன். தங்கும்
விடுதியின் வேலைகள் முடிவடையாததால் அதை திறக்கவில்லை.

இந்த
நிலையில் விடுதியை ஏலம் விடப்போவதாக பத்திரிகையில் வங்கி அறிவித்தது.
பத்திரிகை விளம்பரத்தை பார்த்து விட்டு முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின்
மைத்துனர் ராஜபூபதியும், அவரின் மகன் பரணிதரனும் என்னிடம் வந்து,
பத்திரிகை விளம்பரத்தை பற்றி சொல்லி அமைச்சர் நேருவும் அவரின் சகோதரர்
ராமஜெயமும் தங்களை அனுப்பி வைத்ததாகவும், தங்கும் விடுதியை விலைக்கு வாங்கி
கொள்வதாகவும் கூறினார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டேன்.

அதன்
பின்பு லீசுக்கு கேட்டனர். சொத்து ஏலம் போகாமல் இருப்பதற்காக நானும்
லீசுக்கு கொடுக்க சம்மதித்தேன். திருச்சியில் உள்ள வங்கிக்கு
அழைத்துச்சென்ற அவர்கள் கடனை தீர்ப்பது சம்பந்தமாக பேசினார்கள்.

இதையடுத்து
என்னிடமும், எனது கணவர் மற்றும் மகனிடமும் பல வெற்று பத்திரங்களில்
கையொப்பம் பெற்றுக்கொண்டு, வங்கி கடனை அவர்களே நேரடியாக செலுத்திவிட்டனர்.
லீசுக்கான தொகையில் மீதியை தருவதாக கூறி திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில்
தங்க வைத்தனர்.

பின்னர் லீசுக்கு பத்திரம் எழுதி
தருகிறோம் என்று கூறி தஞ்சை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு
அழைத்துச்சென்றனர். வழியில் வல்லம் அருகே வந்தபோது அங்கு ஒரு காரில் வைத்து
என்னிடமும், எனது கணவர் மற்றும் மகனிடமும் டைப் செய்யப்பட்ட பேப்பரிலும்,
பத்திரத்திலும் கையெழுத்து வாங்கினர்.

அப்போது அந்த
பத்திரத்தை நான் படிக்க கேட்டதற்கு, ரூ. 500 பத்திரத்தில் சொத்தையா எழுதி
வாங்கமுடியும், அது லீசு பத்திரம் தான் என்று சொன்னார்கள்.
பத்திரப்பதிவு
முடிந்ததும் மீண்டும் திருச்சிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், ரூ. 1 லட்சம்
மட்டும் கொடுத்துவிட்டு திருச்சி லாட்ஜிலேயே அடைத்து வைத்துவிட்டனர்.
பின்பு சிலநாட்களுக்கு பிறகு மீதி லீசுக்கான தொகையை கேட்டபோது, முன்னாள்
அமைச்சர் நேரு மற்றும் அவருடைய தம்பி ராமஜெயம் ஆகியோர் சொல்லித்தான்
நாங்கள் இதுபோல் செய்தோம். நாங்கள் அவரின் பினாமி தான் என்றனர். மேலும்
எதவாது பிரச்சினை செய்தால் உயிருடன் விடமாட்டோம் என்று மிரட்டினர்.

என்னுடைய
ரூ. 15 கோடி ரூபாய் சொத்தை போலியாக பத்திரம் தயாரித்து அபகரித்து கொண்ட
ராஜபூபதி, பரணிதரன் இதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் அமைச்சர் நேரு அவரின்
சகோதரர் ராமஜெயம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே
தஞ்சை மாவட்ட குற்றப்பரிவு போலீசில் புகார் கொடுத்தேன் அதை முறையாக
விசாரிக்கவில்லை.

எனவே இந்த புகாரை வேறு
அதிகாரிக்கு அனுப்பி விசாரிக்கச்செய்து ஏமாற்றி சொத்தை அபகரித்ததற்கும்,
கொலை மிரட்டல் விடுத்ததற்கும், லாட்ஜில் அடைத்து வைத்ததற்கும் தக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த
புகார் மனுவை டி.ஐ.ஜி. அமல்ராஜ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு
விசாரணைக்காக அனுப்பி வைத்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. கண்ணகி முதல் கட்ட
விசாரணையை தொடங்கியுள்ளார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 கோடி மதிப்புள்ள பெண் வீடு அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. மேயர் மீது வழக்கு
» திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்
» மதுரையில் ரூ.40 லட்சம் நிலம் அபகரிப்பு: தி.மு.க. பிரமுகர் மின்னல்கொடி உள்பட 3 பேர் கைது
» மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக நிர்வாகிகள் மீது ரூ. 5 கோடி நில அபகரிப்புப் புகார்
» ரூ.1‌ கோடி ஹெராயின் பறிமுதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum