சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம் Khan11

அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம்

2 posters

Go down

அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம் Empty அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 4:53

அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம் Tamil-Daily-News_Paper_57486689091
செங்கல்பட்டு : சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நடந்துவரும¢ கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பூர்த்தி செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்று பகுதியில் அட்டவட்டம், ஆத்தூர், பாலூர், பாண்டூர், பழவேரி, புலிப்புற கோயில் உள்ளிட்ட 6 இடங்களில் அரசு மணல் குவாரி திறந்துள்ளது.
இதில் பாண்டூர், ஆத்தூர் ஆகிய 2 குவாரிகள் மூடப்பட்டது. மீதமுள்ள 3 குவாரிகளில் மணல் எடுக்க தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வருகின்றன. 2 யூனிட் மணல் ரூ.625க்கு விற்கப்படுகிறது.

திருக்கழுக்குன்றம் தாலுகாவுக்குட்பட்ட அட்டவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்குட்பட்ட புலிப்புற கோயில் குவாரிகள் ஆறுமுகசாமி என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவரது லாரிகள் தவிர வெளி லாரிகளுக்கு இங்கு அனுமதி இல்லை. இதற்காக 100க்கும் மேற்பட்ட அடியாட்கள் குவிக்கப்பட்டுள்ளனர். டிராக்டர்கள் மூலம் அள்ளப்படும் மணல், ஆற்றங்கரை ஓரம் கொட்டப்படுகிறது. பின்னர் அதை ஆறுமுகசாமிக்கு சொந்தமான லாரிகளில் ஏற்றி 8 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் அருகே மங்களம் பகுதி யார்டுக்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். இங்கிருந்து ஒரு யூனிட் மணல் ரூ.2 ஆயிரம் என்ற அடிப்படையில் விற்கப்படுகிறது.

இதேபோன்று புலிப்புற கோயில் குவாரி, பாலாற்றில் இருந்து டிராக்டர் மூலம் மணல் எடுத்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளபிரான்புரம் பகுதி யார்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து ஒரு யூனிட் மணல் ரூ.2 ஆயிரத்துக்கு தனியார் லாரிகளில் ஏற்றப்படுகிறது. பழவேரி குவாரியில் அரசு விதிமுறைப்படி 2 யூனிட் மணல் ரூ.625க்கு விற்கப்படுகிறது. இங்கும் அடியாட்கள் தொல்லை கொடுப்பதால் ஒரு லோடு மணலுக்காக 2 நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது.

குவாரியில் இருந்து லாரிகள் சாலைக்கு வர சரியான தடம் இல்லை. இதனால், தனியார் யார்டுகளுக்கே சென்று மணல் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இப்படி, யார்டுகளில் இருந்து 2 யூனிட் மணல் ரூ.4 ஆயிரத்துக்கு வாங்கி புறநகர் பகுதியில் ரூ.10 ஆயிரத்துக்கும், சென்னையில் ரூ.12 ஆயிரத்துக்கும் விற்று பெருத்த லாபம் சம்பாதிக்கின்றனர். 2 யூனிட் மணலின் உண்மையான விலை வெறும் ரூ.625க்கு விற்கப்படுவதாக அரசு தரப்பில் கூறுகிறது.

யார்டுகளுக்கு தடை வருமா?

பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘குவாரிகளில் இருந்து 2 யூனிட் மணல் அரசு நிர்ணயித்த ^625க்கு வாங்கி சென்னைக்கு எடுத்து செல்கிறோம். லாரியில் மணல் அள்ளி போட ^1000 முதல் 1200 வரை கூலியாக தருகிறோம். டீசல் செலவு ^1200. மேலும் சில ஆயிரம் லாபம் வைத்து ^7 ஆயிரத்துக்கு விற்க முடியும். ஆனால் கூடுதல் விலைக்கு விற்க இடைத்தரகர்களே காரணம். இந்த முறையை ஒழித்து நேரடியாக குவாரியில் மணல் எடுக்க அனுமதித்தால்தான் விலையை குறைக்க முடியும்’’ என்றனர்.

அதிகாரிகள் உடந்தை

டிராக்டர் லாரி டிரைவர்கள் கூறுகையில், ‘‘குவாரி நடக்கும் இடத்துக்கு எந்த அதிகாரியும் வருவது இல்லை. ஆறுமுகசாமியின் ஆட்களே அதிகாரிகள் போல் செயல்படுகின்றனர். ஆற்றில் இருந்து கரைக்கு மணல் ஏற்றி வர ஒரு டிராக்டருக்கு குறைந்த கூலியாக ரூ.400 தருகின்றனர். யார்டில் இருந்து எடுத்து செல்லும் லாரி எண்களை குறிப்பிட்டு, ஆற்றில் இருந்து மணல் எடுத்து செல்வதாக கணக்கு எழுதுகின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர்,’’ என்று தெரிவித்தனர்.

கோட்டையில் இருந்து போன் வரும் என மிரட்டல்

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “மணல் குவாரிகளில் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுத்தால், நீங்கள் தாசில்தாராக நீடிக்க வேண்டுமா? தலைமை செயலகத்தில் இருந்து போன் வரும் என்று மிரட்டுகிறார்கள். இதனால் கண்டும் காணாமல் செல்கிறோம். மாவட்ட கலெக்டர் போன்ற அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம் Empty Re: அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம்

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 5:02

எந்த ஆட்சிலும் இது கொடிகட்டி பறக்கும் தொழில் இது .சும்மா வாய்க்கு வேண்டும் என்றால் சொல்வார்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» பன்றிக்காய்ச்சல் நோய் கண்டறிவுக்கு ரூ.3 ஆயிரம் மட்டுமே கட்டணம் : தமிழக அரசு
» விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு
» 65 ஆயிரம் ஏக்கர் காணிகளை அமெரிக்காவிற்கு வாழைப்பழ செய்கைக்கு வழங்கிய அரசு!
» ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடி... மீட்குமா மத்திய அரசு?
» அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum