Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
+15
Atchaya
முனாஸ் சுலைமான்
lafeer
அப்துல்லாஹ்
*சம்ஸ்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
kalainilaa
யாதுமானவள்
பாயிஸ்
ஹம்னா
நண்பன்
இன்பத் அஹ்மத்
ஹாசிம்
19 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
First topic message reminder :
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
இவள் இன்னும் தொடர்வாள்......................
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஆஹா மறுபடியும் சஸ்பென்ஸ் மீண்டும் வருவாள்
எங்களை ஆர்வப்படுத்திப் பார்ப்பதே உங்களுக்கு பொழுது போக்காகி விட்டது நல்லா இருந்த பொண்ணுக்கு காலில் என்ன நடந்திச்சி எனக்கு விடை கிடைக்க வில்லை
வைத்தியசாலை சந்திப்பு அருமையாக உள்ளது தொடரட்டும் காத்திருக்கிறோம் நாங்களும் மலர் கொத்துடன்
தொடருங்கள் ஹாசிம்
:!+: :!+: :!+:
எங்களை ஆர்வப்படுத்திப் பார்ப்பதே உங்களுக்கு பொழுது போக்காகி விட்டது நல்லா இருந்த பொண்ணுக்கு காலில் என்ன நடந்திச்சி எனக்கு விடை கிடைக்க வில்லை
வைத்தியசாலை சந்திப்பு அருமையாக உள்ளது தொடரட்டும் காத்திருக்கிறோம் நாங்களும் மலர் கொத்துடன்
தொடருங்கள் ஹாசிம்
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
உறவுகளற்று வாழ்ந்து கொண்டிருந்த
அவளுக்கு வந்த மடல் உறவு ஒன்றை
கொண்டு வந்துள்ளது.
அந்த சந்தோஷம் தாளாமல் ஓடுகிறாள் என்று
நினைக்கிறேன்.
அவள் ஏன் ஓடினாள் என்பதை சீக்கிறம் சொல்லுங்கள் அண்ணா.
அவளுக்கு வந்த மடல் உறவு ஒன்றை
கொண்டு வந்துள்ளது.
அந்த சந்தோஷம் தாளாமல் ஓடுகிறாள் என்று
நினைக்கிறேன்.
அவள் ஏன் ஓடினாள் என்பதை சீக்கிறம் சொல்லுங்கள் அண்ணா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
//மலர்ச்சென்டு கையிலேந்தி
மலர்ந்த முகத்துடன்
என்வினவல்களுக்கு விடையாய்
அவனின் மொழிச்சல்கள்
என் காதுகளுக்கு கவிதையாய்
ஒலித்ததை மறக்கவில்லை //
மறக்காமல் மீதியையும் சீக்ரம் சொல்லிருங்க
மலர்ந்த முகத்துடன்
என்வினவல்களுக்கு விடையாய்
அவனின் மொழிச்சல்கள்
என் காதுகளுக்கு கவிதையாய்
ஒலித்ததை மறக்கவில்லை //
மறக்காமல் மீதியையும் சீக்ரம் சொல்லிருங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:ஆஹா மறுபடியும் சஸ்பென்ஸ் மீண்டும் வருவாள்
எங்களை ஆர்வப்படுத்திப் பார்ப்பதே உங்களுக்கு பொழுது போக்காகி விட்டது நல்லா இருந்த பொண்ணுக்கு காலில் என்ன நடந்திச்சி எனக்கு விடை கிடைக்க வில்லை
வைத்தியசாலை சந்திப்பு அருமையாக உள்ளது தொடரட்டும் காத்திருக்கிறோம் நாங்களும் மலர் கொத்துடன்
தொடருங்கள் ஹாசிம்
:!+: :!+: :!+:
எதிர்பார்த்திருந்த காகிதம்
காத்திருக்கிறதென்றறிந்து
கால்கள் விரைந்தபோது
நிஜங்களும் நிழலாகியதென்றறிந்து
எனைத் தேற்றியதை மறக்கவில்லை
இதில் அது உள்வாங்கப்பட்டிருக்கிறது காகிதம் இவளுக்காக காத்திருந்ததறிந்து விரைந்தாள் நிஜமான (தூண் கட்டடிடம் மரம் போன்றவை) விடயங்கள் இவளது கண்ணை மறைத்து நிழலாக தெரிந்திருக்கிறது அந்தநேரம் அடிபட்டு விழுந்தாள் வைத்திய சாலையில் கிடக்கிறாள் புரிந்ததா உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஒரு பிறேக்கிட நினைத்ததில் உருவான பகுதியது
நன்றி நண்பன் முதல் முதல் பின்னூட்டம் உங்களிடமிருந்து கிடைப்பதில் மகிழ்ச்சி தோழா
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஹம்னா wrote:உறவுகளற்று வாழ்ந்து கொண்டிருந்த
அவளுக்கு வந்த மடல் உறவு ஒன்றை
கொண்டு வந்துள்ளது.
அந்த சந்தோஷம் தாளாமல் ஓடுகிறாள் என்று
நினைக்கிறேன்.
அவள் ஏன் ஓடினாள் என்பதை சீக்கிறம் சொல்லுங்கள் அண்ணா.
இதன் தொடரும் வந்துவிட்டது ஹம்னா நன்றி உங்களின் அரிய கருத்துக்கு
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நன்றி நன்றி நன்றாக புரிந்தது வாழ்த்துக்கள்
சிறப்பாக தொடருங்கள் நாங்களும் வருகிறோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
சிறப்பாக தொடருங்கள் நாங்களும் வருகிறோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:நன்றி நன்றி நன்றாக புரிந்தது வாழ்த்துக்கள்
சிறப்பாக தொடருங்கள் நாங்களும் வருகிறோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
கருத்தில் தவறிருந்தால் சொல்லிவிடுங்கள் என்னை சரிசெய்வதற்காக
மிக்க நன்றி நண்பன்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
எழுதியது யாரு பல சோதனைகளைத் தாண்டி சாதிக்க துடிக்கும் ஹாசிமாச்சே தவறிருக்காது :];:ஹாசிம் wrote:நண்பன் wrote:நன்றி நன்றி நன்றாக புரிந்தது வாழ்த்துக்கள்
சிறப்பாக தொடருங்கள் நாங்களும் வருகிறோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
கருத்தில் தவறிருந்தால் சொல்லிவிடுங்கள் என்னை சரிசெய்வதற்காக
மிக்க நன்றி நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:எழுதியது யாரு பல சோதனைகளைத் தாண்டி சாதிக்க துடிக்கும் ஹாசிமாச்சே தவறிருக்காது :];:ஹாசிம் wrote:நண்பன் wrote:நன்றி நன்றி நன்றாக புரிந்தது வாழ்த்துக்கள்
சிறப்பாக தொடருங்கள் நாங்களும் வருகிறோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
கருத்தில் தவறிருந்தால் சொல்லிவிடுங்கள் என்னை சரிசெய்வதற்காக
மிக்க நன்றி நண்பன்
ஐயோ நீங்களுமா என்னை வாருகிறீர்கள் இருங்கள் அனைத்துக்கும் ஒரு முடிவு விரைவில் எடுத்துவிடுகிறேன் நன்றி தோழா
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அருமையாக உள்ளது.
அடுத்து வருவதற்க்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.
அவள் வாழ்வில் என்னதான் நடக்கப்போகிறதென்பதை
அறிய ஆவலாக உள்ளது.
அடுத்து வருவதற்க்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.
அவள் வாழ்வில் என்னதான் நடக்கப்போகிறதென்பதை
அறிய ஆவலாக உள்ளது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
.அவளாகிய அவள் ....( பாகம் 04 )
அன்பிற்காய் கையேந்தி
அலைந்த பொழுதுகளில்
அடைந்தேன் உனையோர் திருவிழாவில்
தொடர்ந்தேன் உனையடைய
வியந்தேன் உன் சரிதையில்
அடைவது உனையென்று
உள்ளம் எனக்கிட்ட கட்டளையில்
உனக்காக ஏங்கினேன் கண்ணே
இன்ப அதிர்வுக்காய்
செய்தனன் நாடகம் - அதில்
வீழ்ந்தது நாநானேன்
எனக்காகப் பிறந்தவளே
உன் விழிகளில் ஈரமெதற்கு
பிறப்பில் அனாதையாய் நானும்
வளர்ப்பில் உயர்ந்து நிற்கிறேன்
உனக்குப்பிணி தந்து
உயிரில் கலந்திட்ட காதலுடன்
உனையேந்தினேன் அழகே
உன்னோடு மரணம்வரை
தொடர்வது திண்ணம்
வரிகளின் இனிமையிலும்
வார்த்தைகளின் உறுதியிலும்
சொக்கித் தவித்து
சொப்பனத்திற்காய் அவன்மார்பில்
சாய்ந்த நிமிடம் மறக்கவில்லை
தழுவலில் எமை மறந்து
சூழல்நிலை மறந்து
சுவனம் நேரில் கண்டதாய்
சுகம் கண்டபொழுது
எழுந்த சிரிப்பொலியில்
அதிர்ந்ததை மறக்கவில்லை
இன்னும் தொடர்வாள்.........
அன்பிற்காய் கையேந்தி
அலைந்த பொழுதுகளில்
அடைந்தேன் உனையோர் திருவிழாவில்
தொடர்ந்தேன் உனையடைய
வியந்தேன் உன் சரிதையில்
அடைவது உனையென்று
உள்ளம் எனக்கிட்ட கட்டளையில்
உனக்காக ஏங்கினேன் கண்ணே
இன்ப அதிர்வுக்காய்
செய்தனன் நாடகம் - அதில்
வீழ்ந்தது நாநானேன்
எனக்காகப் பிறந்தவளே
உன் விழிகளில் ஈரமெதற்கு
பிறப்பில் அனாதையாய் நானும்
வளர்ப்பில் உயர்ந்து நிற்கிறேன்
உனக்குப்பிணி தந்து
உயிரில் கலந்திட்ட காதலுடன்
உனையேந்தினேன் அழகே
உன்னோடு மரணம்வரை
தொடர்வது திண்ணம்
வரிகளின் இனிமையிலும்
வார்த்தைகளின் உறுதியிலும்
சொக்கித் தவித்து
சொப்பனத்திற்காய் அவன்மார்பில்
சாய்ந்த நிமிடம் மறக்கவில்லை
தழுவலில் எமை மறந்து
சூழல்நிலை மறந்து
சுவனம் நேரில் கண்டதாய்
சுகம் கண்டபொழுது
எழுந்த சிரிப்பொலியில்
அதிர்ந்ததை மறக்கவில்லை
இன்னும் தொடர்வாள்.........
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
மீண்டும் அவளாகிய அவள் தொடரைத் தொடர்ந்தமைக்கு முதற் கண் நன்றி ஹாசிம் இன்னும் வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி மிக்க நன்றி
ரசித்த சிரித்த இந்த வரிகள் என்னை மகிழ்வித்தது
தழுவலில் எமை மறந்து
சூழல்நிலை மறந்து
சுவனம் நேரில் கண்டதாய்
சுகம் கண்டபொழுது
எழுந்த சிரிப்பொலியில்
அதிர்ந்ததை மறக்கவில்லை
அப்றம் ;)
தொடருங்கள் ஹாசிம் பாராட்டுக்கள்.
ரசித்த சிரித்த இந்த வரிகள் என்னை மகிழ்வித்தது
தழுவலில் எமை மறந்து
சூழல்நிலை மறந்து
சுவனம் நேரில் கண்டதாய்
சுகம் கண்டபொழுது
எழுந்த சிரிப்பொலியில்
அதிர்ந்ததை மறக்கவில்லை
அப்றம் ;)
தொடருங்கள் ஹாசிம் பாராட்டுக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஒவ்வொரு வரிகளும் புதிதாய் தெரிகிறது..வார்த்தை பூக்களை கவிதை நூலில் அழகாக கோர்த்திருக்கிறீர்கள்..இன்னும் தொடரவேண்டும் அவள்..அவளாகிய அவள்.அருமையான தொடர் கவிதை..வாழ்த்துக்கள் உறவே.. :!@!: :flower:
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
வரிகளின் இனிமையிலும்
வார்த்தைகளின் உறுதியிலும்
சொக்கித் தவித்து
சொப்பனத்திற்காய் அவன்மார்பில்
சாய்ந்த நிமிடம் மறக்கவில்லை[quote]
நாங்களும் இக்கவிதையை மறக்க வில்லை தொடருங்கள் ஹாசிம் அருமையான தொடர் கவிதை. :flower:
வார்த்தைகளின் உறுதியிலும்
சொக்கித் தவித்து
சொப்பனத்திற்காய் அவன்மார்பில்
சாய்ந்த நிமிடம் மறக்கவில்லை[quote]
நாங்களும் இக்கவிதையை மறக்க வில்லை தொடருங்கள் ஹாசிம் அருமையான தொடர் கவிதை. :flower:
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பகுதி 06)
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
சந்திசிரித்தாற்போல்
தெரிந்துகொண்ட காதலுக்காய்
வாழ்த்தொலிகளோடு புத்திமதிகளும்
காதினில் ஓதிட்ட தோழியருக்கு
ஜாடயில் ஒப்புதலும்
பார்வையில் காதலையும்
சமர்ப்பித்ததை மறக்கவில்லை
இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை
ஒலித்த கைபேசியில்
மறுமுனையில் இசைத்த குரலின்
இன்பக்காதல் மொழியில்
இறுக்கமான மனதினை
வசியம்செய்த வஞ்சகனின்
அழைப்பாணை மறக்கவில்லை
அந்திமாலை கடற்கரைச்சாலை
அரவங்களற்ற ஒதுக்குப்புறத்தில்
அமர்ந்திருந்த மன்னவனோ
மலர்ந்த முகத்துடன் உச்சிமோர்ந்த
முத்தத்தோடு வரவேற்றதை மறக்கவில்லை
வானத்து நிலவும் கடலலையின் ஒலியும்
அங்காங்கே அணைத்துக்கிடந்த காதலர்களும்
சில்லென்ற தென்றலுமாய்
என் உணர்வுகளுக்குத் தீயிட்டு
காதலுணர்வில் சங்கமித்திட
துணையானதை மறக்கவில்லை
பாசமொழியும் பக்குவமான அன்பும்
கடந்தகாலத்தில் இழந்தவைகளை
மீட்டித்தந்ததாய் உணரச்செய்தது
மகிழ்வோடு (அவனை)அவதானிக்கலானேன்
என்மனம் முழுதும் அவனுக்காய்
அலைந்ததையும் மறக்கவில்லை
அவள் ...தொடர்வாள்...........
சந்திசிரித்தாற்போல்
தெரிந்துகொண்ட காதலுக்காய்
வாழ்த்தொலிகளோடு புத்திமதிகளும்
காதினில் ஓதிட்ட தோழியருக்கு
ஜாடயில் ஒப்புதலும்
பார்வையில் காதலையும்
சமர்ப்பித்ததை மறக்கவில்லை
இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை
ஒலித்த கைபேசியில்
மறுமுனையில் இசைத்த குரலின்
இன்பக்காதல் மொழியில்
இறுக்கமான மனதினை
வசியம்செய்த வஞ்சகனின்
அழைப்பாணை மறக்கவில்லை
அந்திமாலை கடற்கரைச்சாலை
அரவங்களற்ற ஒதுக்குப்புறத்தில்
அமர்ந்திருந்த மன்னவனோ
மலர்ந்த முகத்துடன் உச்சிமோர்ந்த
முத்தத்தோடு வரவேற்றதை மறக்கவில்லை
வானத்து நிலவும் கடலலையின் ஒலியும்
அங்காங்கே அணைத்துக்கிடந்த காதலர்களும்
சில்லென்ற தென்றலுமாய்
என் உணர்வுகளுக்குத் தீயிட்டு
காதலுணர்வில் சங்கமித்திட
துணையானதை மறக்கவில்லை
பாசமொழியும் பக்குவமான அன்பும்
கடந்தகாலத்தில் இழந்தவைகளை
மீட்டித்தந்ததாய் உணரச்செய்தது
மகிழ்வோடு (அவனை)அவதானிக்கலானேன்
என்மனம் முழுதும் அவனுக்காய்
அலைந்ததையும் மறக்கவில்லை
அவள் ...தொடர்வாள்...........
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அவளாகிய அவள் கருணைக் காதலைப் பற்றித் தெரியாதவளுக்கு
அவளின் வர்ணிப்புக்கள் மிகவும் இனிமையாக உள்ளது உள்ளத்தைக் குளிரச்செய்கிறது காதலனாக நானிருக்கும் போது.
மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் என்றும் போல் இன்றும் அடுத்த கட்டத்திற்கு காத்திருக்கும் கருணைக் காதலன்
உங்கள் அன்பு நண்பன்
வாழ்த்துக்கள் தொடருங்கள்
அவளின் வர்ணிப்புக்கள் மிகவும் இனிமையாக உள்ளது உள்ளத்தைக் குளிரச்செய்கிறது காதலனாக நானிருக்கும் போது.
மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் என்றும் போல் இன்றும் அடுத்த கட்டத்திற்கு காத்திருக்கும் கருணைக் காதலன்
உங்கள் அன்பு நண்பன்
வாழ்த்துக்கள் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
கவிதையை படிக்கின்ற போது உணர்வுகள் உயிரை தட்டிச்செல்கிறது
காதலுக்காய் காலமெல்லாம் காத்திருந்தேன் காதல் கைகூடி வந்த வேலை காத்திருந்த நிமிடங்களை மீண்டும் மீண்டும் நினைக்க மனம் ஏங்கத் துடித்தது காதல் காத்திருப்பதிலும் சுகம் என்பதை அழகாய்ச்சொன்னது கீழ் வருகின்ற இந்த வரிகள்
இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை
காதல் கொண்ட உள்ளங்கள் பரிமாரிக்கொண்ட இதயத்தை சுற்றிச் சுற்றி அதனோடு அழைவதை நாம் உணர்ந்திருக்கிறோம இந்த அவளாகிய அவளிலும் உணர்கிறேன் தோழா அருமையாக உள்ளது.
விரைவாக உடன் கூட்டி வாருங்கள் வரவேற்க காத்திருக்கிறோம்...
காதலுக்காய் காலமெல்லாம் காத்திருந்தேன் காதல் கைகூடி வந்த வேலை காத்திருந்த நிமிடங்களை மீண்டும் மீண்டும் நினைக்க மனம் ஏங்கத் துடித்தது காதல் காத்திருப்பதிலும் சுகம் என்பதை அழகாய்ச்சொன்னது கீழ் வருகின்ற இந்த வரிகள்
இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை
காதல் கொண்ட உள்ளங்கள் பரிமாரிக்கொண்ட இதயத்தை சுற்றிச் சுற்றி அதனோடு அழைவதை நாம் உணர்ந்திருக்கிறோம இந்த அவளாகிய அவளிலும் உணர்கிறேன் தோழா அருமையாக உள்ளது.
விரைவாக உடன் கூட்டி வாருங்கள் வரவேற்க காத்திருக்கிறோம்...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
காதல் வரிகள் படிக்கும் போது உள்ளத்தை தட்டி ரசிக்க சொல்கிறது காற்றின் தேடலது என்று கானலாகிப்
போகாது கல்லரையாக மாறாது சரித்திரம் படைக்கட்டும்.
உனர்வை தொட்ட வரிகள் உனர்ச்சி பூர்வமாக உள்ளது நண்பா வாழ்த்துகள் அவள் வருகையை எதிர்பார்த்தபடி காத்திருக்கிறேன் சேனையை பார்த்தவனாக உங்களின் கவியை ரசித்தவனாக.
போகாது கல்லரையாக மாறாது சரித்திரம் படைக்கட்டும்.
உனர்வை தொட்ட வரிகள் உனர்ச்சி பூர்வமாக உள்ளது நண்பா வாழ்த்துகள் அவள் வருகையை எதிர்பார்த்தபடி காத்திருக்கிறேன் சேனையை பார்த்தவனாக உங்களின் கவியை ரசித்தவனாக.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நேசமுடன் ஹாசிம் wrote:
சந்திசிரித்தாற்போல்
தெரிந்துகொண்ட காதலுக்காய்
வாழ்த்தொலிகளோடு புத்திமதிகளும்
காதினில் ஓதிட்ட தோழியருக்கு
ஜாடயில் ஒப்புதலும்
பார்வையில் காதலையும்
சமர்ப்பித்ததை மறக்கவில்லை
இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை
ஒலித்த கைபேசியில்
மறுமுனையில் இசைத்த குரலின்
இன்பக்காதல் மொழியில்
இறுக்கமான மனதினை
வசியம்செய்த வஞ்சகனின்
அழைப்பாணை மறக்கவில்லை
அந்திமாலை கடற்கரைச்சாலை
அரவங்களற்ற ஒதுக்குப்புறத்தில்
அமர்ந்திருந்த மன்னவனோ
மலர்ந்த முகத்துடன் உச்சிமோர்ந்த
முத்தத்தோடு வரவேற்றதை மறக்கவில்லை
வானத்து நிலவும் கடலலையின் ஒலியும்
அங்காங்கே அணைத்துக்கிடந்த காதலர்களும்
சில்லென்ற தென்றலுமாய்
என் உணர்வுகளுக்குத் தீயிட்டு
காதலுணர்வில் சங்கமித்திட
துணையானதை மறக்கவில்லை
பாசமொழியும் பக்குவமான அன்பும்
கடந்தகாலத்தில் இழந்தவைகளை
மீட்டித்தந்ததாய் உணரச்செய்தது
மகிழ்வோடு (அவனை)அவதானிக்கலானேன்
என்மனம் முழுதும் அவனுக்காய்
அலைந்ததையும் மறக்கவில்லை
அவள் ...தொடர்வாள்...........
[/b][/color]
தொடருங்கள் முத்தான வரிகளுடன் சிறப்புகவிதை ஆறாம் பாகத்தினையும் தாண்டி வீற நடை போடுகிறது வாழ்த்துக்கள் அன்புறவுக்கவிஞரே..
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:அவளாகிய அவள் கருணைக் காதலைப் பற்றித் தெரியாதவளுக்கு
அவளின் வர்ணிப்புக்கள் மிகவும் இனிமையாக உள்ளது உள்ளத்தைக் குளிரச்செய்கிறது காதலனாக நானிருக்கும் போது.
மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் என்றும் போல் இன்றும் அடுத்த கட்டத்திற்கு காத்திருக்கும் கருணைக் காதலன்
உங்கள் அன்பு நண்பன்
வாழ்த்துக்கள் தொடருங்கள்
மிக்க நன்றி நண்பன் புத்துணர்வு கிடைக்கிறது தொடரும் ஆசை எழுகிறது
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 07)
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பகுதி 06)
தொட்டுப்பார்த்து கட்டியணைத்தான்
என்விரல்களின் இடையே விரல்கோர்த்து
இசைமீட்டும் வீணையாய் என்னை
மயங்கிடச்செய்த காதலை அவனிடம்
ரசித்து ருசித்ததை மறக்கவில்லை
உலகம் மறந்து காதலை நினைத்து
அவன் மடியில் தலைவைத்து
இன்பலோகம் இதுதானோவென்று
என் கன்னிப்பருவம் இசைபோட்டபோது
எதிர்காலம் நோக்கிய சிந்தனையில்
சுதாகரித்து விலகியதை மறக்கவில்லை
இளமைக்குத்தீனியாய் என் இதயம்
படபடத்தாலும் என் அந்தரத்து வாழ்வை
அகத்தினுள்ளே அலசியாய்ந்து
காதலின் அடுத்தபடியை கருதிடவும்
காமத்தினுள் கட்டுண்ட கைசேதத்தை
நாடாததையும் மறக்கவில்லை
அனாதையாய் அலங்கோலமாய்
ஆரம்பித்த என்வாழ்வின் அடைவாய்
உன்னதமானதொரு வாழ்க்கையில்
இணையப்போகிறேனென்ற கற்பனையில்
இளமையின் துடிப்புக்கு இசைந்த
நிமிடங்களை மறக்கவில்லை
என்னவனாய் ஏற்றமனதுக்கு
என்னை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் என்னுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்ததை மறக்கவில்லை
ஆச்சரியம் அவனுள்ளே
ஆசுவாசம் என்னுள்ளே
காதலின் ரசனையில்
இத்தனை போராட்டமென்று
அச்சங்கொண்டகம் அழுதது - ஏனோ அவனை
இழக்க முடியாததை மறக்கவில்லை
விடைபெறமறுத்த மனமும்
இடம்தரமறுத்த நிலையும்
இருமனங்களின் இணைவாம்
திருமணம் பற்றி அசைபோடத்துடித்தது
ஏற்பானா இல்லை மறுப்பானா - என்று
தூக்கமின்றி துவண்டதை மறக்கவில்லை
திருமணம் நடந்ததா தொடர்வாள்.......
தொட்டுப்பார்த்து கட்டியணைத்தான்
என்விரல்களின் இடையே விரல்கோர்த்து
இசைமீட்டும் வீணையாய் என்னை
மயங்கிடச்செய்த காதலை அவனிடம்
ரசித்து ருசித்ததை மறக்கவில்லை
உலகம் மறந்து காதலை நினைத்து
அவன் மடியில் தலைவைத்து
இன்பலோகம் இதுதானோவென்று
என் கன்னிப்பருவம் இசைபோட்டபோது
எதிர்காலம் நோக்கிய சிந்தனையில்
சுதாகரித்து விலகியதை மறக்கவில்லை
இளமைக்குத்தீனியாய் என் இதயம்
படபடத்தாலும் என் அந்தரத்து வாழ்வை
அகத்தினுள்ளே அலசியாய்ந்து
காதலின் அடுத்தபடியை கருதிடவும்
காமத்தினுள் கட்டுண்ட கைசேதத்தை
நாடாததையும் மறக்கவில்லை
அனாதையாய் அலங்கோலமாய்
ஆரம்பித்த என்வாழ்வின் அடைவாய்
உன்னதமானதொரு வாழ்க்கையில்
இணையப்போகிறேனென்ற கற்பனையில்
இளமையின் துடிப்புக்கு இசைந்த
நிமிடங்களை மறக்கவில்லை
என்னவனாய் ஏற்றமனதுக்கு
என்னை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் என்னுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்ததை மறக்கவில்லை
ஆச்சரியம் அவனுள்ளே
ஆசுவாசம் என்னுள்ளே
காதலின் ரசனையில்
இத்தனை போராட்டமென்று
அச்சங்கொண்டகம் அழுதது - ஏனோ அவனை
இழக்க முடியாததை மறக்கவில்லை
விடைபெறமறுத்த மனமும்
இடம்தரமறுத்த நிலையும்
இருமனங்களின் இணைவாம்
திருமணம் பற்றி அசைபோடத்துடித்தது
ஏற்பானா இல்லை மறுப்பானா - என்று
தூக்கமின்றி துவண்டதை மறக்கவில்லை
திருமணம் நடந்ததா தொடர்வாள்.......
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
தொட்டுப்பார்த்து கட்டியணைத்தான்
என்விரல்களின் இடையே விரல்கோர்த்து
இசைமீட்டும் வீணையாய் என்னை
மயங்கிடச்செய்த காதலை அவனிடம்
ரசித்து ருசித்ததை மறக்கவில்லை
உலகம் மறந்து காதலை நினைத்து
அவன் மடியில் தலைவைத்து
இன்பலோகம் இதுதானோவென்று
என் கன்னிப்பருவம் இசைபோட்டபோது
எதிர்காலம் நோக்கிய சிந்தனையில்
சுதாகரித்து விலகியதை மறக்கவில்லை
இளமைக்குத்தீனியாய் என் இதயம்
படபடத்தாலும் என் அந்தரத்து வாழ்வை
அகத்தினுள்ளே அலசியாய்ந்து
காதலின் அடுத்தபடியை கருதிடவும்
காமத்தினுள் கட்டுண்ட கைசேதத்தை
நாடாததையும் மறக்கவில்லை
அனாதையாய் அலங்கோலமாய்
ஆரம்பித்த என்வாழ்வின் அடைவாய்
உன்னதமானதொரு வாழ்க்கையில்
இணையப்போகிறேனென்ற கற்பனையில்
இளமையின் துடிப்புக்கு இசைந்த
நிமிடங்களை மறக்கவில்லை
என்னவனாய் ஏற்றமனதுக்கு
என்னை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் என்னுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்ததை மறக்கவில்லை
ஆச்சரியம் அவனுள்ளே
ஆசுவாசம் என்னுள்ளே
காதலின் ரசனையில்
இத்தனை போராட்டமென்று
அச்சங்கொண்டகம் அழுதது - ஏனோ அவனை
இழக்க முடியாததை மறக்கவில்லை
விடைபெறமறுத்த மனமும்
இடம்தரமறுத்த நிலையும்
இருமனங்களின் இணைவாம்
திருமணம் பற்றி அசைபோடத்துடித்தது
ஏற்பானா இல்லை மறுப்பானா - என்று
தூக்கமின்றி துவண்டதை மறக்கவில்லை
ஹாஸிம் சாரின் ஹவிதையின் சிறப்பு அங்கம் 6 முந்திய சில வற்றை நான் பார்க்க வில்லை
மிகவும் உட்சாகமான எதிர்பார்ப்பை கொண்டுள்ள சிறப்புக்கவித்தொடர் வாழ்த்துக்கள் என்ன சார் இது உண்மையாக இருக்குமோ உங்கட............. :,;:
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
சத்தியமாக இல்லைசார் நான் எடுத்த கருவுக்கு நகர்த்திச்செல்கிறேன் அவ்வளவுதான் சும்மா என்னோடு முடிச்சிப்போட்டு வாழ்கையோட விளையாடிடாதிங்க :,;:
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
சிறப்பான கவித் தொடர்வாள்!
பாராட்டுக்கள் ஹாசீம்!
முனாஸ் சார், வணக்கம்.
பாராட்டுக்கள் ஹாசீம்!
முனாஸ் சார், வணக்கம்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
Atchaya wrote:சிறப்பான கவித் தொடர்வாள்!
பாராட்டுக்கள் ஹாசீம்!
முனாஸ் சார், வணக்கம்.
மிக்க நன்றி அண்ணா கண்டிப்பாக தொடர்வாள்
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்.....!
» என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(
» அவள்
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்.....!
» என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(
» அவள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|