சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 03 Khan11

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 03

Go down

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 03 Empty இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 03

Post by ansar hayath Fri 4 Jan 2013 - 22:46

இலங்கையின் பூர்வீக சோனகர்

உலகில் காணப்படும் ஒவ்வொரு நாடும் தமது நாட்டில் வாழும் இனத்தவரை வகைப்படுத்துவதற்குத் தத்தமது அரசியல் சாசனங்களுக்கேற்பவும், வசதிக்கேற்பவும் பல்வேறு ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்கின்றன. அவ்வாறே இலங்கையும் தன் மக்களையும் அவர்களின் இனங்களையும் அடையாளப்படுத்துவதற்குத் தமது அரசயிலமைப்புக்கேற்றவாறான செயற்பாட்டை நடைமுறைப்படுத்தி வருகிறது.


இதன் பிரகாரம் இலங்கையின் குடிசன மதிப்பீட்டு வரைமுறையின் ஆரம்பகாலத்தை அப்போது ஆட்சியில் இருந்த பிரித்தானியர் இலங்கைக்கு முதன் முறையாக 1871ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். அதன் பின் 1900 வரை இரு வேறு தடவைகள் ஒரு சில நடைமுறை மாற்றங்களைக் கண்ட குடிசன மதிப்பீட்டு (Census) சட்ட திட்டங்கள் பெரும்பாலும் இக்கால கட்டத்தின் நடைமுறைகளையே பின்பற்றின. இதன் பின்னர் இந்திய நடைமுறைகளின் அடிப்படையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டாலும், அடிப்படையில் அன்றைய பிரித்தானியரின் நடைமுறையே இலங்கைத் தீவிற்குப் மிகப் பொருத்தமாக அமைந்திருந்ததனால் அதன் அடிப்படையிலேயே நாட்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.


இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது, அன்றைய கால கட்டத்தில் திரு. இராமநாதன் விதைக்க முனைந்த விஷத்தையும் அதை நம் மூதாதையர் எதிர்கொண்ட விதத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எந்த ஒரு இலங்கை வாழ் சோனகரும் அவ்வளவு இலகுவாகத் தட்டிக்கழித்து விட முடியாது. நவீன காலத்தில் நம் பூர்வீகம் தொடர்பான உண்மையை விளக்கும் தூண்டுகோளாக இன்று இவை மாறியிருப்பது மாத்திரமன்றி, அன்றைய கால கட்டத்தில் சோனகர்கள் தம் வரலாற்றுக் கடமையைச் செய்யத் தவறியிருந்தால், ஆயிராமாயிரம் வருடங்களாக, அமைதியாகத் தம் உரிமைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம், நாட்டில் அடக்கியொடுக்கப்பட்ட அனாதைகளாக மாறியிருப்பது திண்ணம்.

எனவே, அதற்கு வித்திட முனைந்த படித்த “சைவர்களின்” தந்திரத்தை மிக நேர்த்தியாகக் கையாண்டதோடு மாத்திரமன்றி அன்றைய ஆங்கில வரலாற்றிசிரியர்களே மீண்டும் இலங்கை வரலாற்றைத் தீர ஆராய்ந்து இன்று நமக்கு சாட்சியளிக்கும் விதமாக இலங்கைச் சோனகர்களின் தனித்துவத்தை எடுத்தியம்புவதற்கும் அடிப்படையாக இருந்த பெரியோர்களை மறந்து விட்டு எம்மால் எம் சரித்திரத்தை மீட்டிப்பார்க்க முடியாது, அப்படிச் செய்வதும் தவறு !

அன்று திரு. ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை முதல் பின் நாட்களில் நாம் கண்ட சமூக முன்னோடிகள் சேர் ராசிக் பரீத், Dr. T.B. ஜாயா, Dr. ஏ.எம்.ஏ அஸீஸ் வரையும், பின்னரும் 20ம் நூற்றாண்டில் நம் அரசியல் உரிமை மற்றும், சமூக முன்னேற்றத்திற்காக உழைத்த பெரியோர்களை நமது வரலாறு அடிக்கடி மறந்து விட்டு, புதிய அத்தியாயங்களை எழுதுவோருக்குத் துணை போவது தவறாகும்.

இலங்கை முஸ்லிம்கள் பற்றிய புதிய அத்தியாயங்களை எழுத முனைவோர் பெரும்பாலும் முஸ்லிம்களின் முன்னைய வரலாற்றை குழி தோண்டிப் புதைத்து விட்டு, காலணித்துவ விடுதலையின் பின்னர் ஏற்பட்ட புதிய “சிலோனில்” இருந்தும், அன்று நிலவிய அரசியல் நிலைப்பாடுகள், அந் நிலைப்பாடுகளில் கட்சி சார்பில் முன் நிறுத்தப்பட்ட அரசியல் விதிகள், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் “சுதேசிய ” கொள்கைப் பின்னணியில் கட்டுண்ட அரசியல் நிலைப்பாடுகள், அதில் ஈடுபட்டவர்கள் மற்றும், மீண்டும் ஒரு தடவை “தமிழர்” எனும் தரப்பில் இணைந்து, குட்டுப் பட்டுத் தட்டுத் தடுமாறித் தம் சமூகத்தின் உரிமைக்காக உயிர்த்தெழுந்த மறைந்த முஸ்லிம் அரசியல் தலைவர் அஷ்ரப் அவர்களின் முஸ்லிம் காங்கிரஸ் வரையுமே அரசியல் ஞானத்தை மட்டுப்படுத்தி, அதன் பின்னரான ஜெயவர்தனவின் “சிறி லங்கா” கண்ட விளைவுகளைத் தமக்கு சாதகமாக்கி, அடக்கியொடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளோடும், அவர்கள் உந்தப்பட்டு எழுந்த போதான சிறு எழுச்சிகளின் பக்க சார்பான விளைவுகளோடு மாத்திரமே வரலாற்றை எழுதி முடித்து, தன் நிறைவு கண்டு கலாநிதிப்பட்டங்களும் வாங்கிக்கொள்கின்றனர்.

அப்படியானால், அதற்கு முன்னர் இலங்கைத் தீவில் இஸ்லாமிய சமூகம், முஸ்லிம்களாகவோ அல்லது சோனகராகவோ வாழவே இல்லையா? என்று ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டால், எக்காரணம் கொண்டும் பதிலளிக்காமல் தப்பிக்கொள்வார்கள். இவ்வாறானவர்கள் என்னதான் முனைந்தாலும், இலங்கையின் அடிப்படை அரசியல் சாசனமும், வரலாறும் சாட்சி கூறும் நம் தனித்துவத்தை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நம் சமூகத்தாரிடம் குழப்பங்களை விளைவிக்க முடியும்.

அவ்வாறு திணிக்கப்படும் குழப்பங்களில் மிகப் பிரதானமான குழப்பமானது, நமது இன அடையாளத்தை மழுங்கடித்து நம்மை மத அடையாளத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தி நம் அரசியல் உரிமைகளைக் குழப்பத்திற்குள்ளாக்குவதாகும்.

கடந்த காலங்களிலும் சரி, இன்றைய கால கட்டத்திலும் சரி, இல்லை எதிர்காலமாக இருந்தாலும், எக்காலமாக இருந்தாலும், நமது சமூகம் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவதற்கு மிக இலகுவான அடிப்படை நம்மை ஒன்று சேர்க்கும் நம் அழகிய மார்க்கமான இஸ்லாம் ஆகும். இஸ்லாத்தைப் பின்பற்றுவோர் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர். எனவே உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய சமுதாயம் ஒன்று பட்டு நிற்பதற்கு “முஸ்லிம்கள்” எனும் அடையாளமே மிகச் சிறந்த அடையாளமாக இருப்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இருப்பினும், நாம் வாழும் நாட்டின் அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்த வரை நமது மதமா? இனமா? முக்கியம் பெற வேண்டும் எனும் கேள்விக்கு மிகத் தெளிவான நிலையை ஒவ்வொரு இலங்கை வாழ் முஸ்லிமும் பெற்றிருக்க வேண்டிய தேவைக்குள்ளாகிறார்கள்.

இப்போது, இலங்கை அரசியலில் நாம் முஸ்லிம்களாகப் பார்க்கப்படுவோமாயின் நமது சமூகம் எவ்வாறான விளைவுகளைச் சந்திக்கப் போகிறது என்று முதலில் பார்ப்போம்.

அடிப்படையில், முஸ்லிம்களாக மாத்திரம் நாம் அடையாளப்படுத்தப்படின் இலங்கையின் பூர்வீகக் குடிகளுக்கான அடிப்படை உரிமைகள் எமக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் அவசியத்தை முதலில் நாம் இழந்தவராவோம். அதனடிப்டையில் இன்று இந்திய வம்சாவளியினர் என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மலை நாட்டுத் தமிழ் பேசும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையே நாமும் எதிர்காலத்தில் அனுபவிப்போம் என்பது திண்ணம்.

அடுத்ததாக, முஸ்லிமாக இருப்பதற்கான அடிப்படைத் தகுதி என்பது ஒருவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்பதெனும் அடிப்படையில், இஸ்லாத்தைத் தழுவும் யார் வேண்டுமானாலும் முஸ்லிமாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். எனினும் முஸ்லிம் எனும் அந்த நிலையிலிருந்து இலங்கையின் பூர்வீகத்தில் பங்கு கொள்ளும் எந்த இனத்திற்குள் அவர் தம்மை இணைத்துக்கொள்வார் எனும் கேள்வி, சந்தேக வடிவில் எழுவது நியாயமானது. அப்படியாயின், இஸ்லாத்தைத் தழுவிய யார் வேண்டுமானாலும் முஸ்லிமாகவும், சோனகராகவும் இருக்க முடியுமா எனும் கேள்வியையும் கேட்டு, அதற்கு விடை “ஆம்” என இருக்குமானால், அங்கே “சோனகர்” என்பாருக்கு ஏது பூர்வீகம் ? எனும் எள்ளி நகையாடல் வலுப்பெறுவதைத் தடுக்க முடியாது.

எனவே, சோனகர், தமது இனத்தின் தனித்துவத்தை இலங்கையின் பூர்வீக வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வதும், தெளிவு பெறுவதும், இந்த சோனக இனம் இஸ்லாமியராக மாறிய சூட்சுமம், சோனக இனத்துக்கும் சைவருக்கும், சோனக இனத்துக்கும் பெளத்தர்களுக்குமிடையிலான தொடர்பு, வரலாற்றுப் பிணைப்புகள், பிணக்குகள் தொடர்பான மேலதிக விடயங்களையம் ஆழ நோக்குவதும் அறிந்து, தெளிவு பெறுவதும் அவசியமாகிறது.

அதன் அடிப்படையில், இலங்கைச் சோனகர்களின் வரலாற்றைக் கீழ்க் காணும் உப தலைப்புகளில் ஆராய நான் விளைகிறேன்.
இலங்கை வரலாற்றில் நாம் எங்கிருந்து கலக்கிறோம்?
உலக வரலாறு இலங்கையில் சோனகர்களை எப்போதிருந்து காண்கிறது? அதற்கு முன் பின் காலங்கள் தொடர்பான விபரங்கள் என்ன ?
தமிழ்,சிங்கள (சங்க) இலக்கியங்கள் நம்மை எவ்வாறு அடையாளங்கண்டிருக்கின்றன?
நமது மூதாதையர்களின் நம்பிக்கை,ஊகங்கள் மற்றும் இன்ன பிற வகையறாக்கள் நம்மை எவ்வாறு நிறுவுகின்றன?

இத்தலைப்புக்களை மிக ஆழமாக நோக்கின் நம் உரைத்தொடர் மிக நீண்டதாக அமையும் என்பதால், முடிந்தளவு இரத்தினச் சுருக்கமாக இதன் சாரம்சங்களை இவ்வுரைத் தொடரில் தொடுப்பதோடு, மேலதிக விபரங்களை, இன்ஷா அல்லாஹ் வெவ்வேறு தலைப்புகளின் தனியாக ஆராய்ந்து தொடர்பு படுத்துவதே சிறந்ததெனக் கருதி, முடிந்தளவு ஆழமாகவும் அதே நேரம் சுருக்கமாகவும் என் சிறு ஆராய்வைத் தொடர்கிறேன்.

இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை நாம் இது வரையும் சோனகர் என்றே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறோம், சோனக இனத்தோடு கலந்தவரும் அவர் வழித்தோன்றல்களும் எப்போதும் சோனகராகவே பார்க்கப்படவும் செய்கின்றனர். எனினும், ஆசிய அரச கழகத்திற்கிருந்த இந்திய – இலங்கையின் ஆளுமையின் நிமித்தம் நமது குடிசனக் கணக்கெடுப்பில் இலங்கையின் பூர்வீகக் குடிகளும், இந்திய பூர்வீகக் குடிகளும் எனும் இரு சாரார் வகைப்படுத்தப்படுகின்றனர்.

இதில் எந்த சாராருக்குள் யார் வர வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கவில்லையாகினும், அந்தந்த சமூகம் சார்ந்த பூர்வீகம் தீர்மானித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, தமிழர் என்று என்னதான் கூறினாலும், மலையகத் தமிழ் பேசும் மக்கள் இன்னும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று பிரித்துப் பார்க்கப்படவே செய்கிறார்கள். அதில் பெரும்பாலும், பழமையான இந்திய வம்சாவழித் தமிழ் பேசும் மக்கள் இந்துக்களாகவும் நிலைத்து நிற்பதனால் அவர்கள் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருக்கும் சைவர்களில் இருந்தும் மத ரீதியாகவும் வித்தியாசப்பட்டே இருக்கிறார்கள். எனவே, இரு சாராருக்கும் இடையில் நிலவும் கலாச்சார வித்தியாசங்களின் மேலாண்மை நிமித்தம் இவர்கள் “தமிழர்கள்” எனும் அடையாளத்திற்குள் இரு வேறு பிரிவினராகவே பார்க்கப்படுகின்றார்கள்.

இதே அடிப்படையில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இருக்கும் வரலாற்று நெருக்கத்தின் விளைவுகள் மூலம் சோனக இனத்தையும் கூட இரு வேறு பிரிவுகளாக அன்றைய கணக்கெடுப்பு காண விளைந்திருப்பதை நாம் அவதானிக்க முடியும். அவையாவன, கரையோர சோனகர்கள் மற்றும் இலங்கைச் சோனகர்கள் என்பனவாகும்.

இதில் கரையோர சோனகர்கள் என்று குறிப்பிடப்படுவோர் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள் என்பதே இதன் மூலம் விளக்கப்படுவதாகும். இதற்கான விபரத்தை எனது கடந்த பதிவில் இணைத்திருந்த திரு ஐ.எல்.எம் அஸீஸ் அவர்களின் விளக்கத்திலும் எம்மால் பார்க்க முடிகிறது. இந்திய கரையோரங்கள், பெரும்பாலும் மலபார்க் (கேரளா) கரையோரங்களிலும், தற்போதைய தமிழகத்தின் கரையோரங்களிலும் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த “சோனக” இனத்தவரின் இலங்கை வருகையில்,கலப்பில் உருவான சமூகமாக இச்சமூகத்தாரை படித்த சைவர் பிரித்துப் பிளவுறச்செய்ய முயன்றாலும், அவர்களும் அடிப்படையில் சோனகர்களாகவே இருந்ததனால் இரு சாராருக்கிடையிலும் காணப்பட்ட வலுவான பிணைப்பு அம்முயற்சியைத் தகர்த்தெறிய துணை நின்றது.

எனினும், மிக நாசுக்காக இயங்கிய சைவர்கள் இலங்கையின் முழு சோனகர்களின் வரலாற்றையும் இந்தியாவிலிருந்து வந்த எம் மூதாதையர்களோடு மாத்திரம் தொடர்பு படுத்தியும், மிகக் குறிப்பாக அன்றைய நாட்களில் முஹம்மதியர் என்று அடையாளங்காணப்பட்ட இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினராகவே மாத்திரம் எமது வரலாற்றைத் திரிபு படுத்தியும், இஸ்லாத்திற்குப் பின்னான அரேபியர் வருகை, அவர்களின் தென் இந்தியக் கரையோர வியாபாரத் தொடர்புகள், அங்கு வாழ்ந்த “தமிழ்” பேசும் பெண்களோடானா திருமணங்கள், அதன் பின்னரான இஸ்லாமிய வளர்ச்சியையும், கலாச்சாரப் பழக்கவழக்கங்களின் பரவலையும் மேற்கோள் காட்டியும் வரையறுத்து நமது பாடப்புத்தகங்களையும், வரலாற்றுப் பதிவுகளையும் சீர் கெடச் செய்வதில் மிகப் பெரும் பங்கை வகித்து வந்தார்கள், வருகிறார்கள்.


எனினும், ஆகக்குறைந்தது திரு ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் அவர்களின் திரு. இராமநாதனின் சோனக இன ஆய்வு மீதான திறனாய்விலிருந்தாவது, இலங்கைக் கரையோரங்களில் குடியேறிய சோனக இனத்தைத் தவிர, இலங்கையின் பூர்வீகத்தில் தொடர்புறக்கூடிய அல்லது அதற்கு ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னரான வரலாற்றிலிருந்தாவது இலங்கையில் ஒரு சோனகக் குடியேற்றம் இருந்தது, சோனகர்கள் எனும் இனம் வாழ்ந்தது என்பது நம் முன் நிறுவப்பட்டது மாத்திரமன்றி ஆதாரபூர்வமாகவும் வரலாற்றோடு தொடர்பு படுத்தி எடுத்தியம்பப் பட்டிருக்கிறது.

இக்கால கட்டத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆங்கிலேய வரலாற்றாசிரியரும், இலங்கையில் நீதிபதியாகவும், பிரித்தானிய அரச பிரதிநிதியாகவும் கடமையாற்றிய Sir Alaxander Johnston (1775-1849) அவர்களின் இலங்கைச் சோனகர்கள் மீதான ஆய்வும், தகவல் தொகுப்பும் முக்கியம் பெறுகிறது. தேவையேற்படும் போது இவரால் முன் வைக்கப்பட்ட ஆதாரங்களை நம் உரைத்தொடரில் இணைத்துச் செல்வோம்.

திரு. ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் மற்றும் அவர்கள் காலத்திற்கு சற்று முன்னரான நூற்றாண்டு வரையிலான கால அளவு வரை நமக்குக் கிடைக்கும் சில உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றுத் தகவல்களும், மற்றும் போர்த்துக்கீயரின் இலங்கை வருகையின் போது பொருளாதார நிலைகளிலும், வியாபாரத்திலும் கொடிகட்டிப் பறந்த எம் சோனக மூதாதையர்களின் வரலாறுகள் மற்றும் ஆங்காங்கு சிதறிக்கிடக்கும் எம் வரலாற்றுச் சிறு குறிப்புகள் மூலமான கி.மு நூற்றாண்டுகளில் இலங்கையில் காணப்பட்ட சோனகரின் குடியிருப்புகள், வளங்கள் தொடர்பான தகவல்கள் போன்ற விடயங்கள் போக, நம் மூதாதையரின் நம்பிக்கை, மற்றும் அதற்கு மேலும் ஒரு படி நகர்ந்து செல்லும் நம்பிக்கைகள் அடிப்படையிலான ஊகங்களும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

அதன் அளவுகோளில், இலங்கையில் சோனகர் என்பார் ஒரு காலத்தில் “சுவனர்” என அறியப்பட்ட இனத்தார் ஆவார் என்று நிறுவ முனையும் திரு. அ.வா. முஹ்சீன் அவர்களின் நிலைப்பாட்டையும், மனிதர்களில் முதல்வர் ஆதாம் (அலை) அவர்கள் இப்பூமியில் தான் வாழ்ந்திருக்க வேண்டும், அவர்கள் நேரடி வழித்தோன்றல்களே சுவனர்களாக முதலில் அறியப்பட்டுப் பின் சோனகரானார்கள் எனும் ஊக அடிப்படையிலான நம்பிக்கையையும் கூட எம்மால் தவிர்க்க முடியாது. அவை தவறு என நிரூபிக்கப்படும் வரை அவற்றின் மீதான ஆய்வுகள் தவறற்றவையாகவே நிலைத்து நிற்கும் எனும் அளவு கோளில் அவ்வாறான நிகழ்வு இத்தீவில் நிகழ்ந்திருக்க முடியாது என்று ஆணித்தரமாக எடுத்தியம்புவதற்குப் போதுமான வரலாற்றுச் சான்றுகளோ அல்லது ஆதாரங்களோ எங்கும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்றே எம்.எஸ்.ஆர். நிஸ்தார் அவர்களின் சோனகர் தனித்துவம் பற்றிய அழுத்தமான கருத்துக்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் குறிப்பிட்ட அளவிலான சோனகர் வரலாற்று ஆவணங்கள் மீதான பார்வைகளும் நியாயமான முறையில் நோக்கப்படுவதும், எம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற ஆதாரங்களை தகுந்த முறையில் அலசி ஆராய்வதும் நமக்கு அவசியமாகிறது.

இலங்கையின் பூர்வீகக் குடிகளில் பங்கெடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் தமிழர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் சைவர்களிடம் காணப்படும் தயக்கமும், தெளிவின்மையும் சோனகருக்கு அவசியமற்றதாகும். அதன் விளைவாக இலங்கை வாழ் சைவத் தமிழர்கள் தம் வரலாற்றையும் தனித்துவத்தையும் எத்தனை தூரம் சீர் கெடச் செய்திருக்கிறார்கள், வரலாற்றை மாற்றியெழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் இன்றளவும் நேரடியாகக் கண்ணுறும் ஒரு விடயமாகும்.

இலங்கையின் பூர்வீகக் குடிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் சிங்களவர்களோடு உயிரியல் தொடர்புகளை வைத்துக்கொண்டு, மொழி ரீதியான தொடர்பையும், பாண்டியர்களால் கட்டியாளப்பட்ட சமூகமாகவும் இருந்து அவர்கள் கலாச்சாரத்தையும், பிளவு படுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட இந்து மதத்தின் ஒரு பிரிவையும் மாத்திரம் தம் சொத்துக்களாகக் கொண்டிருக்கும் சைவத் தமிழர்கள், தமிழகத் திராவிடர்களாகத் தம்மை சித்தரித்துக் கொள்வதன் மூலம், தானாகவே இலங்கைப் பூர்வீகத் தொடர்புகளை அறுத்தெறிந்து கொள்கிறார்கள்.

அப்படி அவர்கள் கூறிக்கொள்வதுதான் உண்மை என்றால், வரலாறு ஓரளவுக்காவது தரும் கி.மு 2ம் நூற்றாண்டைய தொடர்புகளையும் அறுத்து கி.பி. 1215 இலிருந்தே அவர்களது வரலாறு ஆரம்பிக்க வேண்டும்.

ஏனெனில், பெரும்பாலான சைவத் தமிழர்கள் தம்மை யாழ்ப்பாண இராச்சியத்தின் வாரிசுகளாக அல்லது சமூகத்தவராகவே கருதுகின்றனர். அவ்வாறு அவர்கள் கருதுவதாக இருந்தால் யாழ்ப்பாண இராச்சியம் இங்கு நிறுவப்பட்டது ஒரிஸாவைச் சேர்ந்த கலிங்க மகானின் வருகை (1215-1236) யின் பின்னர் தான் என்பதையும், யாழ்ப்பாண இராச்சியமே (ஆரிய சக்கரவர்த்தியின் சாம்ராஜியம்) சுமார் 1215 -1264 வரையான காலப்பகுதி வரையே நிலைத்து நின்றது என்பதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கடுத்ததாக, கலிங்கனின் பின்னர் (1258) பாண்டிய மன்னனிற்குக் கப்பம் கட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே இச்சமூகம் தமிழகத்தின் கலாச்சார, பண்பாட்டு, சமய, பழக்கவழக்கங்களுடனான தம் தொடர்புகளை விஸ்தரித்து, பின்னர் தம்மையும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கலிங்கனுக்குப் பின்னான தொடர்புகள் தமது வரலாற்று இருப்பின் மூலம் இல்லையென்று அவர்கள் கூறுவார்களேயானால், சைவர்களுக்குத் தம்மைத் தமிழர்கள் என்று கூறும் உரிமையும் இல்லாது போகும் அதே நேரம், என்னதான் கூப்பாடு போட்டாலும் தமிழக அரசியல் அரங்கில் எப்போதுமே இலங்கைத் தமிழர்கள் என்று கூறிக்கொள்வோர் மீதான அக்கறையின்மையையும் அவர்களாகவே நியாயப்படுத்திக்கொள்வார்கள்.

ஆம், பெரும்பாலான சைவத் தமிழர்கள் கூறுவது போன்று இதுதான் எமது வரலாறு என்று அவர்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால், சோனகர்களுக்கும் பின் வந்து குடியேறியவர்கள்தான், இலங்கையில் தமிழர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் சைவத் தமிழர்கள் என்று அவர்களாகவே ஒத்துக்கொள்வதோடு, சிங்களவர் கூறுவது போன்று தாம் வந்தேறு குடிகள் தான் என்று தாமாகவே ஏற்றுக்கொள்வார்கள்.

இதில் எந்த நிலையிலும் நிலைத்து நிற்காது, தாம் இலங்கையின் பூர்வீகக் குடிகள்தான் என்ற வாதிட அவர்கள் முன் வருவார்களேயானால், ஒன்றில் அவர்கள் சிங்களவர்களின் உயிரியல் தொடர்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது, சைவர்கள் என்பார் சோனகக் குடிகளிலிருந்து ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து சென்ற ஒரு சமூக வழித்தோன்றல்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், கி.மு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட எந்த ஒரு வரலாற்றிலும் தமிழர் தரப்பு என்று ஒரு தரப்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இது வரை முன் வைக்கப்படவில்லை.

அப்படியாயின் இன்று தமிழர்கள் என்று கூறிக்கொள்வோர், இலங்கையின் பூர்வீக வரலாற்றில் தனித்துவத்தோடு திகழும் இரு வேறு சமூகங்களான சிங்களர், சோனகரிலிருந்து வேறுபட்டவராக மாத்திரமே இருக்க முடியும். இதற்கான அடிப்படை சமய நம்பிக்கை, பழக்கவழக்கம் முதல் அவர்களிடத்திலேயே தனித்துவமாகக் குடியிருக்கும் ஆளும் வர்க்கம் என்ற கோட்பாடும், அதிகார ஆர்வமுமாகக் கூட இருக்கலாம், இது பற்றிய மேலதிக ஆய்வு தேய்வைப்படின் இதை நாம் எடுத்து நோக்குவோம்.

எனவே, தம் வரலாற்றையும் அடையாளத்தையும் தொலைத்து விட்டுக் குழம்பிப்போயிருக்கும் சைவத் தமிழரின் இன்றைய நிலை நாளைய சோனகருக்கு வராமல் தடுப்பதெனின் நம்மிடம் நம் வரலாறு, மேலதிக ஆய்வுகளடிப்படையிலான தெளிவு இருப்பது அவசியமாகிறது. நான் முன்னரே குறிப்பிட்டது போன்று அதற்கான சிறு பயணம் தான் இது, எனவே நான் முன்னெடுத்திருக்கும் உப தலைப்புகள் மீதான தேடலைத் தொடர விளைகிறேன்.

பெரும்பாண்மைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது வரலாறு தொடர்பில் அவர்களிடம் பெரும் குழப்பமே நிலவுகிறது. ஒரு சிலர் சிங்களவரின் வரலாறு விஜயனிலிருந்து ஆரம்பித்ததா? இல்லையா? என்று கேள்வி கேட்டுத் தம் வரலாற்றைத் தொலைக்கிறார்கள் அல்லது பிசுபிசுத்துப் போன பிரபாகரனின் கோழைத்தனம், எல்லாள வரலாறுகளைக் கொண்டு பெருமைப்படுவதோடாவாது நிறுத்திக்கொள்கிறார்கள். எனவே, இவர்களுக்குத் தம் வரலாறு பற்றிய தெளிவு அவசியமற்றதாக இருக்கிறது.

காலத்திற்குக் காலம் படையெடுப்பு, யுத்தம், அதிகாரப் போராட்டம் என்று எப்போது பார்த்தாலும் சிங்களவர்களுடன் முறுகலை வளர்த்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கும் சைவத் தமிழர் போன்றல்லாது, இத்தீவில் எக்காலத்திலும், அமைதியானதும், பொருளாதார வியாபாரத்தின் மீது அதிக கவனங்கொண்டவர்களாகவும், வாழும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, நாட்டின் முன்னேற்றத்தில் எக்காலத்திலும் பங்கெடுப்பவர்களாகவும், தம் அரசியல் உரிமைகளை அமைதியான முறையில் நிலை நாட்டிக்கொள்பவர்களாகவும், அடிப்படையில் இவ்வாறு வேறு குணாதிசயங்கள் கொண்டவராகவும், பண்டைய அரசர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை எம் சமூக உரிமையை மதித்துச் செயற்படும் அளவுக்கு பண்புள்ளவர்களாகவும், ஒரே மொழியைப் பேசிக் கொண்டாலும் கூட இத்தீவின் வரலாற்றில் தனித்துவமாகக் காலூன்றி நிற்கிறார்கள் சோனகர்கள்.

அதற்கு இது வரை வாழ்ந்த நம் முன்னோடிகள் எவ்வாறு துணை நின்றார்களோ, அவ்வாறே இனி வரும் அமைதியானவோர் சமுதாயத்திற்கு நாமும் வழி காட்டிச் செல்ல வேண்டியது நமது கடமையாகும். அதன் அடிப்படையில் நம் மக்களிடம் நம் வரலாற்றுத் தெளிவு மறைக்கப்படக்கூடாத ஒரு விடயமாகும்.

தொடரும்…

இலங்கைச் சோனகரின் வரலாறு. பகுதி - 03 33884_511306742235961_1804658520_n

எழுத்தாளர் 'மானா'
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum